தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
2 posters
Page 1 of 1
பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
சுயசிந்தனை!
அரிஸ்டாட்டிலிடம் அலெக்ஸôண்டர் மாணவராக இருந்த நேரம். அரிஸ்டாட்டில் தமது மாணவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
""நீங்கள் மன்னராக இருந்தால், உங்கள் நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?''
ஒரு மாணவன் சொன்னான், ""ஐயனே, அமைச்சரவையைக் கூட்டி அவர்கள் ஆலோசனைப்படி நடப்பேன்...''
மற்றொரு மாணவன் சொன்னான், ""என் முன்னோர்களின் வழிமுறைகளைக் கேட்டறிந்து அதன்படி நடப்பேன்.''
அடுத்ததாக அலெக்ஸôண்டர் கூறினார்: ""சூழ்
நிலைக்கு ஏற்றபடி முடிவெடுப்பேன்...''
அதைக் கேட்ட அரிஸ்டாட்டில், ""சபாஷ், சரியான முடிவு!'' எனப் புகழ்ந்தார்.
அலெக்ஸôண்டரின் இந்த சுயசிந்தனைதான் அவருக்கு வெற்றிகளைத் தேடித் தந்தது.
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani
அரிஸ்டாட்டிலிடம் அலெக்ஸôண்டர் மாணவராக இருந்த நேரம். அரிஸ்டாட்டில் தமது மாணவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
""நீங்கள் மன்னராக இருந்தால், உங்கள் நாட்டில் குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?''
ஒரு மாணவன் சொன்னான், ""ஐயனே, அமைச்சரவையைக் கூட்டி அவர்கள் ஆலோசனைப்படி நடப்பேன்...''
மற்றொரு மாணவன் சொன்னான், ""என் முன்னோர்களின் வழிமுறைகளைக் கேட்டறிந்து அதன்படி நடப்பேன்.''
அடுத்ததாக அலெக்ஸôண்டர் கூறினார்: ""சூழ்
நிலைக்கு ஏற்றபடி முடிவெடுப்பேன்...''
அதைக் கேட்ட அரிஸ்டாட்டில், ""சபாஷ், சரியான முடிவு!'' எனப் புகழ்ந்தார்.
அலெக்ஸôண்டரின் இந்த சுயசிந்தனைதான் அவருக்கு வெற்றிகளைத் தேடித் தந்தது.
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
படிப்பது எதற்காக?
நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,""படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு லிங்கன்,""நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
நெ.இராமன், சென்னை.
dinamani
-
உழைப்பு...
அமெரிக்காவில் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சில வீரர்கள் ஒரு பெரும் உத்திரத்தை சிரமப்பட்டு நகர்த்திக் கொண்டிருந்தனர்.
அக்குழுவின் தலைவன் குதிரை மீது அமர்ந்து, அவர்களை அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது அவ்வழியே குதிரையில் வந்த மற்றொரு வீரன், அந்தக் குழுத் தலைவனைப் பார்த்து, ""நீயும் இறங்கி இவர்களுக்கு உதவக்கூடாதா?'' என்று கேட்டான்.
""நான் இந்தக் குழுவின் தலைவன், இவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதா?'' என்று உறுமினான்.
வந்த வீரன், தனது குதிரையிலிருந்து இறங்கி, அந்த வீரர்களோடு சேர்ந்து உத்திரத்தை நகர்த்தி வைத்துவிட்டுத் தனது குதிரையில் ஏறிக் கிளம்பினான்.
""நீ யார்?'' என்று அந்தக் குழுத் தலைவன் கேட்டான்.
""என் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன்'' என்று கூறிவிட்டு விரைந்தான்.
அவர்தான் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி.
-வீ.ராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
-
முன்னேற்றம்...
ஐன்ஸ்டீன். நண்பர் பிலிப் பிராங்குடன் பெர்லினில் இருந்த வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குச் செல்ல விரும்பினார்.
இருவரும் போஸ்டாம்ப் என்ற பகுதியிலுள்ள பாலத்தில் சந்தித்துக் கொள்வது என ஏற்பாடு.
பிலிப், பெர்லினுக்குப் புதியவர். அதனால் குறித்த நேரத்துக்குத் தன்னால் வர முடியாதே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
உடனே ஐன்ஸ்டீன், ""பரவாயில்லை. எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்'' என்றார்.
""உங்கள் பொன்னான நேரம் வீணாகுமே?'' என்றார் பிராங்க்.
""நான் செய்யும் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்வேன். வீட்டிலிருந்து செய்யும் ஆராய்ச்சியை பாலத்தின்மீது அமர்ந்து செய்தால் போச்சு'' என்றார் ஐன்ஸ்டீன் அலட்சியமாக.
சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் பொருட்படுத்தாதவர்கள்தான் சாதிக்கிறார்கள்.
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
-
தலைசிறந்தவர்...
எச்.ஏ.ரெüலண்ட் என்ற புகழ்பெற்ற அமெரிக்க பெüதிக விஞ்ஞானி, ஒருமுறை நீதிமன்றம் சென்று சாட்சி சொல்ல வேண்டி வந்தது. அப்போது அரசாங்க வழக்கறிஞர் அவர் ஒரு விஞ்ஞானிதானா என்றறிய அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
""அமெரிக்காவின் மிகச்சிறந்த பெüதிக விஞ்ஞானி யார்?'' என்றார்.
அதற்கு ரெüலண்ட், மிகவும் தெளிவாக ""நான்தான்'' என்று பதிலளித்தார்.
அரசாங்க வக்கீல் அவரை மடக்குவதற்காக ""நீங்கள்தான் அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானி என்று நீங்களே சொல்லிக் கொண்டால் எப்படி?'' என்று கேட்டார்.
அதற்கு விஞ்ஞானி அமைதியாகச் சொன்னார்: ""நான் அவ்வாறு சொல்லிக் கொள்ளும் வழக்கமில்லைதான். ஆனால், சாட்சி கூறுவதற்கு முன் சட்டப்புத்தகத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது, உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை என்று கூற வேண்டியிருந்தது. எனவேதான் இந்த உண்மையை நான் கூற வேண்டி வந்தது.''
-முக்கிமலை நஞ்சன்
dinamani
-
கதர்...
ஒருமுறை கஸ்தூரிபாய் காந்திக்கு காலில் சிறு காயம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. காயத்துக்குக் கட்டுப் போட ஆசிரமப் பெண்மணி ஒருவரிடம் துணி கேட்டார் கஸ்தூரிபாய்.
அதற்கு அப் பெண்மணி மில் துணி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அம்மையாரோ, கதர் துணியைக் கொடுத்தால்தான் கட்டுப் போட்டுக் கொள்வேன் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
அதற்கு அந்தப் பெண், கதர்த் துணி காயத்தின் மீது பட்டால் உறுத்தலாக இருக்கும் என்று கூறினார்.
கதர் துணி உறுத்தத்தான் செய்யும். ஆனால் கதருக்குப் பதிலாக மில் துணியை உபயோகிப்பது காந்திஜியின் கொள்கைகளுக்கு மாறாகப் போய்விடும் என்று கூறிவிட்டு, கதர் துணியாலேயே காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டார்.
-அ.கற்பூரபூபதி, சின்னமனூர்.
dinamani
-
துறவி...
கடவுள் இருப்பதை நம்பாத செல்வந்தர் ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர், ""சுவாமி, தாங்கள் கடவுளுக்காகத் தங்கள் வாழ்க்கையையே துறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே...'' என்றார்.
பரமஹம்சரோ, ""நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட நீர்தான் பெரிய துறவி'' என்றார்.
செல்வந்தருக்கோ அதிர்ச்சியாகப் போய்விட்டது.
""உங்களைவிட நான் பெரிய துறவியா, எப்படி?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
""ஆமாம்... நானோ கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன். நீங்களோ சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்துவிட்டீர்களே. ஆகவே என்னைவிட நீர்தானே பெரிய துறவி...'' என்றார்.
செல்வந்தருக்கு வெட்கமாகப் போய்விட்டது.
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
-
பக்தி...
சர்தார் வல்லபாய் படேல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கைக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலேயரும் ஒரு பிரெஞ்சுக்காரரும் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து படேலை மட்டம் தட்டும் விதமாகப் பேச முயற்சித்தனர்.
ஆங்கிலேயர், ""ஒருவேளை, நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்காவிட்டால் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருப்பேன்'' என்றார்.
அதைக் கேட்ட பிரெஞ்சுக்காரர், ""நான் மட்டும் என்ன... பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயம் ஆங்கிலேயனாகத்தான் பிறந்திருப்பேன்...'' என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த படேல், மெல்லப் புன்னகைத்தவாறே, ""ஒருவேளை நான் இந்தியனாகப் பிறந்திருக்காவிட்டால், அதற்காக வெட்கித் தலைகுனிந்திருப்பேன்'' என்றார்.
அதைக் கேட்ட இருவரும் வாயடைத்துப் போனார்கள். படேலின் தேச பக்தியைக் கண்டு வியந்து போனார்கள்.
-கே.ஆர்.இரமேஷ், கீரனூர்.
dinamani
-
நுண்ணறிவு!
தலைமறைவாகி இருந்த ரஷியப் புரட்சியாளர் லெனினை கைது செய்ய ஜார் அரசு, காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மாஸ்கோ நகரத்தில் அனைத்து தெருக்களிலும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
போலீஸ்காரர்களின் கெடுபிடி நிறைந்த தெரு ஒன்றில், லெனின் ஒரு குடையைப் பிடித்தபடி, ஜாலியாக விசிலடித்துக் கொண்டு மெல்ல நடைபோட்டு வந்து கொண்டிருந்தார்.
""இவரைப் பார்த்தால் லெனின் மாதிரி தெரிகிறதே?'' என்றார் ஒரு போலீஸ்காரர்.
அதற்கு மற்றவர், ""லெனினாக இருந்தால் இப்படி ஜாலியாக விசிலடித்துக் கொண்டு, அதுவும் நம் முன்னே செல்வாரா? அவர் எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறாரோ...? இவர் வேறு யாரோ...'' என்றார்.
அதற்குள் லெனின் அந்தத் தெருவைக் கடந்து வேறு தெருவுக்குச் சென்று தப்பிவிட்டார்.
தைரியம், நுண்ணறிவோடு சமயோசிதமும் வேண்டும்.
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
-
தாய்மண்!
இந்திய விடுதலைப் போராட்ட சமயம். ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் கலந்திருந்தது.
இதைக் கண்ட நேரு, ""ரொட்டியை இப்படிக் கொடுத்தால் எப்படி? சுத்தமான ரொட்டியைக் கொடுங்கள்'' என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டார்.
அதற்கு அதிகாரி ஏளனமாக, ""இதில் இருப்பது உங்கள் தாய்மண்தானே... அதற்காகத்தானே போராடி சிறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இது சுவையாகத்தான் இருக்கும். சாப்பிடுங்கள்...'' என்று சொன்னார்.
உடனே நேரு, ""நாங்கள் போராடுவது மண்ணை மீட்பதற்குத்தானே தவிர, தின்பதற்கு அல்ல'' என்று கோபமாகக் கூறினார்.
சிறை அதிகாரி வாயடைத்துப் போனார்.
-ஆ.விஜயலட்சுமி, பத்தமடை.
dinamani
-
வேலை!
ஹிட்லரின் படைகள் செய்த அட்டூழியங்களை ஓவியமாகத் தீட்டியிருந்தார் பிரபல ஓவியர் பிகாúஸô.
இதையறிந்த ஹிட்லரின் தளபதி ஒருவர் கடும் கோபமடைந்தார்.
பிகாúஸôவிடம் அந்த ஓவியத்தைக் காட்டி, ""இது நீ செய்த வேலைதானே?'' என்று சீறினார்.
அதற்கு, பிகாúஸô அமைதியாக, ""இல்லையில்லை.... எல்லாம் நீங்கள் செய்த வேலை...'' என்றார்.
தளபதி கேட்டது ஓவியத்தைப் பற்றி. பிகாúஸô சொன்னது ஓவியம் சித்திரித்திருந்த சம்பவங்களைப் பற்றி..!
-நெ.இராமன், சென்னை.
dinamani
-
நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,""படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு லிங்கன்,""நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.
நெ.இராமன், சென்னை.
dinamani
-
உழைப்பு...
அமெரிக்காவில் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சில வீரர்கள் ஒரு பெரும் உத்திரத்தை சிரமப்பட்டு நகர்த்திக் கொண்டிருந்தனர்.
அக்குழுவின் தலைவன் குதிரை மீது அமர்ந்து, அவர்களை அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது அவ்வழியே குதிரையில் வந்த மற்றொரு வீரன், அந்தக் குழுத் தலைவனைப் பார்த்து, ""நீயும் இறங்கி இவர்களுக்கு உதவக்கூடாதா?'' என்று கேட்டான்.
""நான் இந்தக் குழுவின் தலைவன், இவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதா?'' என்று உறுமினான்.
வந்த வீரன், தனது குதிரையிலிருந்து இறங்கி, அந்த வீரர்களோடு சேர்ந்து உத்திரத்தை நகர்த்தி வைத்துவிட்டுத் தனது குதிரையில் ஏறிக் கிளம்பினான்.
""நீ யார்?'' என்று அந்தக் குழுத் தலைவன் கேட்டான்.
""என் பெயர் ஜார்ஜ் வாஷிங்டன்'' என்று கூறிவிட்டு விரைந்தான்.
அவர்தான் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி.
-வீ.ராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
-
முன்னேற்றம்...
ஐன்ஸ்டீன். நண்பர் பிலிப் பிராங்குடன் பெர்லினில் இருந்த வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குச் செல்ல விரும்பினார்.
இருவரும் போஸ்டாம்ப் என்ற பகுதியிலுள்ள பாலத்தில் சந்தித்துக் கொள்வது என ஏற்பாடு.
பிலிப், பெர்லினுக்குப் புதியவர். அதனால் குறித்த நேரத்துக்குத் தன்னால் வர முடியாதே என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
உடனே ஐன்ஸ்டீன், ""பரவாயில்லை. எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்'' என்றார்.
""உங்கள் பொன்னான நேரம் வீணாகுமே?'' என்றார் பிராங்க்.
""நான் செய்யும் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்வேன். வீட்டிலிருந்து செய்யும் ஆராய்ச்சியை பாலத்தின்மீது அமர்ந்து செய்தால் போச்சு'' என்றார் ஐன்ஸ்டீன் அலட்சியமாக.
சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் பொருட்படுத்தாதவர்கள்தான் சாதிக்கிறார்கள்.
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
-
தலைசிறந்தவர்...
எச்.ஏ.ரெüலண்ட் என்ற புகழ்பெற்ற அமெரிக்க பெüதிக விஞ்ஞானி, ஒருமுறை நீதிமன்றம் சென்று சாட்சி சொல்ல வேண்டி வந்தது. அப்போது அரசாங்க வழக்கறிஞர் அவர் ஒரு விஞ்ஞானிதானா என்றறிய அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.
""அமெரிக்காவின் மிகச்சிறந்த பெüதிக விஞ்ஞானி யார்?'' என்றார்.
அதற்கு ரெüலண்ட், மிகவும் தெளிவாக ""நான்தான்'' என்று பதிலளித்தார்.
அரசாங்க வக்கீல் அவரை மடக்குவதற்காக ""நீங்கள்தான் அமெரிக்காவின் தலைசிறந்த விஞ்ஞானி என்று நீங்களே சொல்லிக் கொண்டால் எப்படி?'' என்று கேட்டார்.
அதற்கு விஞ்ஞானி அமைதியாகச் சொன்னார்: ""நான் அவ்வாறு சொல்லிக் கொள்ளும் வழக்கமில்லைதான். ஆனால், சாட்சி கூறுவதற்கு முன் சட்டப்புத்தகத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்போது, உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்வதில்லை என்று கூற வேண்டியிருந்தது. எனவேதான் இந்த உண்மையை நான் கூற வேண்டி வந்தது.''
-முக்கிமலை நஞ்சன்
dinamani
-
கதர்...
ஒருமுறை கஸ்தூரிபாய் காந்திக்கு காலில் சிறு காயம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. காயத்துக்குக் கட்டுப் போட ஆசிரமப் பெண்மணி ஒருவரிடம் துணி கேட்டார் கஸ்தூரிபாய்.
அதற்கு அப் பெண்மணி மில் துணி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அம்மையாரோ, கதர் துணியைக் கொடுத்தால்தான் கட்டுப் போட்டுக் கொள்வேன் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
அதற்கு அந்தப் பெண், கதர்த் துணி காயத்தின் மீது பட்டால் உறுத்தலாக இருக்கும் என்று கூறினார்.
கதர் துணி உறுத்தத்தான் செய்யும். ஆனால் கதருக்குப் பதிலாக மில் துணியை உபயோகிப்பது காந்திஜியின் கொள்கைகளுக்கு மாறாகப் போய்விடும் என்று கூறிவிட்டு, கதர் துணியாலேயே காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டார்.
-அ.கற்பூரபூபதி, சின்னமனூர்.
dinamani
-
துறவி...
கடவுள் இருப்பதை நம்பாத செல்வந்தர் ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க வந்து அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர், ""சுவாமி, தாங்கள் கடவுளுக்காகத் தங்கள் வாழ்க்கையையே துறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே...'' என்றார்.
பரமஹம்சரோ, ""நான் ஒரு துறவியாக இருக்கலாம். ஆனால் என்னைவிட நீர்தான் பெரிய துறவி'' என்றார்.
செல்வந்தருக்கோ அதிர்ச்சியாகப் போய்விட்டது.
""உங்களைவிட நான் பெரிய துறவியா, எப்படி?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
""ஆமாம்... நானோ கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன். நீங்களோ சுகபோக வாழ்க்கைக்காக கடவுளையே துறந்துவிட்டீர்களே. ஆகவே என்னைவிட நீர்தானே பெரிய துறவி...'' என்றார்.
செல்வந்தருக்கு வெட்கமாகப் போய்விட்டது.
-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
-
பக்தி...
சர்தார் வல்லபாய் படேல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இருந்த இருக்கைக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலேயரும் ஒரு பிரெஞ்சுக்காரரும் பயணம் செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து படேலை மட்டம் தட்டும் விதமாகப் பேச முயற்சித்தனர்.
ஆங்கிலேயர், ""ஒருவேளை, நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருக்காவிட்டால் பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருப்பேன்'' என்றார்.
அதைக் கேட்ட பிரெஞ்சுக்காரர், ""நான் மட்டும் என்ன... பிரெஞ்சுக்காரனாகப் பிறந்திருக்காவிட்டால் நிச்சயம் ஆங்கிலேயனாகத்தான் பிறந்திருப்பேன்...'' என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த படேல், மெல்லப் புன்னகைத்தவாறே, ""ஒருவேளை நான் இந்தியனாகப் பிறந்திருக்காவிட்டால், அதற்காக வெட்கித் தலைகுனிந்திருப்பேன்'' என்றார்.
அதைக் கேட்ட இருவரும் வாயடைத்துப் போனார்கள். படேலின் தேச பக்தியைக் கண்டு வியந்து போனார்கள்.
-கே.ஆர்.இரமேஷ், கீரனூர்.
dinamani
-
நுண்ணறிவு!
தலைமறைவாகி இருந்த ரஷியப் புரட்சியாளர் லெனினை கைது செய்ய ஜார் அரசு, காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மாஸ்கோ நகரத்தில் அனைத்து தெருக்களிலும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
போலீஸ்காரர்களின் கெடுபிடி நிறைந்த தெரு ஒன்றில், லெனின் ஒரு குடையைப் பிடித்தபடி, ஜாலியாக விசிலடித்துக் கொண்டு மெல்ல நடைபோட்டு வந்து கொண்டிருந்தார்.
""இவரைப் பார்த்தால் லெனின் மாதிரி தெரிகிறதே?'' என்றார் ஒரு போலீஸ்காரர்.
அதற்கு மற்றவர், ""லெனினாக இருந்தால் இப்படி ஜாலியாக விசிலடித்துக் கொண்டு, அதுவும் நம் முன்னே செல்வாரா? அவர் எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிறாரோ...? இவர் வேறு யாரோ...'' என்றார்.
அதற்குள் லெனின் அந்தத் தெருவைக் கடந்து வேறு தெருவுக்குச் சென்று தப்பிவிட்டார்.
தைரியம், நுண்ணறிவோடு சமயோசிதமும் வேண்டும்.
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
-
தாய்மண்!
இந்திய விடுதலைப் போராட்ட சமயம். ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரொட்டியில் மண் கலந்திருந்தது.
இதைக் கண்ட நேரு, ""ரொட்டியை இப்படிக் கொடுத்தால் எப்படி? சுத்தமான ரொட்டியைக் கொடுங்கள்'' என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டார்.
அதற்கு அதிகாரி ஏளனமாக, ""இதில் இருப்பது உங்கள் தாய்மண்தானே... அதற்காகத்தானே போராடி சிறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இது சுவையாகத்தான் இருக்கும். சாப்பிடுங்கள்...'' என்று சொன்னார்.
உடனே நேரு, ""நாங்கள் போராடுவது மண்ணை மீட்பதற்குத்தானே தவிர, தின்பதற்கு அல்ல'' என்று கோபமாகக் கூறினார்.
சிறை அதிகாரி வாயடைத்துப் போனார்.
-ஆ.விஜயலட்சுமி, பத்தமடை.
dinamani
-
வேலை!
ஹிட்லரின் படைகள் செய்த அட்டூழியங்களை ஓவியமாகத் தீட்டியிருந்தார் பிரபல ஓவியர் பிகாúஸô.
இதையறிந்த ஹிட்லரின் தளபதி ஒருவர் கடும் கோபமடைந்தார்.
பிகாúஸôவிடம் அந்த ஓவியத்தைக் காட்டி, ""இது நீ செய்த வேலைதானே?'' என்று சீறினார்.
அதற்கு, பிகாúஸô அமைதியாக, ""இல்லையில்லை.... எல்லாம் நீங்கள் செய்த வேலை...'' என்றார்.
தளபதி கேட்டது ஓவியத்தைப் பற்றி. பிகாúஸô சொன்னது ஓவியம் சித்திரித்திருந்த சம்பவங்களைப் பற்றி..!
-நெ.இராமன், சென்னை.
dinamani
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1
» பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
» வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
» வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|