தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

2 posters

Go down

தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Oct 25, 2014 2:01 pm

தமிழ் இயலன் கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அக்கம்பக்கம் 29/14, நியூ காலனி, 3-வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015.  மின்ன்ஞ்சல்akkampakkam@gmail.com விலை : ரூ. 100
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
       ‘’தென்னாற்காடு மாவட்டம் தந்த ஒரு திறன்மிகு படைப்பாளி தமிழ் இயலன். இவர் முத்தமிழில் மோனையைப் போல் முன்னே எனத் தம் பெயரினைக் கொண்டு கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வருபவர்.  ச. தனசேகரன் என்பது இவரது இயற்பெயர்.  தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளவர்”   இப்படி  நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் பற்றி நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
       சிறப்பான கவிதைகளின் தொகுப்பு.  சிந்திக்க வைக்கின்றன.  சமுதாய அக்கறையுடன் வடித்த கவிதைகள் மிக நன்று.  உள்ளத்து உணர்வுகளை எழுத்துக்களாக்கி, எண்ண விதை விதைத்துள்ளார். பாராட்டுக்கள்.  குழந்தைகள் நேசிப்பு பல கவிதைகளில் உள்ளன.  மனிதநேயம், மனிதாபிமானம் கற்பிக்கும் கவிதைகளும் உள்ளன.
       குழந்தைகள் கிறுக்குவதை ரசிக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும். சிலர் கிறுக்குவதைக் கூட கண்டிப்பார்கள்.  அவர்களுக்கான கவிதை நன்று. 
       சுவர் மறுத்தாலும் 
 தாள் கொடுத்தாவது
       கிறுக்க விடுங்கள் 

 வெளிப்படட்டும் மனம்
       வெற்றியடையட்டும் திறன் 

 குறுக்கே நிற்காதீர்கள்
       கிறுக்கர்களே!

       குழந்தை கை தவறி பொருளை உடைத்து விட்டால் உடன் கடிந்து கொள்பவர்கள்,  குழந்தையை அடிப்பவர்கள் உண்டு.  ஒரு முறை எடிசனின் உதவியாளர் ஒரு பொருளை உடைத்ததற்கு அவர் கடிந்து கொள்ளவில்லை.  ஏன்? என்று கேட்ட போது பொருள் உடைந்தால் செய்து கொள்ளலாம், ஆனால் அவர் மனம் உடைந்தால் ஒட்ட முடியாது என்றார்.  அது போல பிஞ்சுக்-குழந்தைகளைக் கடிந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.  அதற்கு இக்கவிதை உதவும்.

       உடைத்துத் தொலைக்காதீர்!

              கண்ணாடிக் கோப்பை 
 துண்டானதற்காய்த்
       
       திட்டித் தீர்க்காதீர்கள் 
 சுட்டிச் செல்வங்களை
       
       உடையும் பொருள் 
 கைக்கெட்டும் தூரமெனில்
       
       நமக்கும் பங்கு உண்டு 
 நொறுங்காத உண்மை இது.


       தமிழர்களின் திருநாள் தைத்திங்கள் பெருநாள் தான்.  மூடநம்பிக்கை தொடர்பான தீபாவளியை எனக்கு விபரம் தெரிந்த்து முதல் பல வருடங்களாக  நான் கொண்டாடுவதில்லை.  தீபாவளி குறித்த கவிஞர் தமிழ் இயலன் கவிதையில் எனக்கு உடன்பாடு உண்டு.  படித்துப் பார்த்தால் நீங்களும் உடன்படுவீர்கள்.
       தீப’வலி’
 கருகிக் கிடக்கும் 
 சிவகாசி மொட்டுக்கள் 
 மாசு மண்டலம் 

 ஆக்கப்படும் 
 காற்று மண்டலம் 
 உடைகளில் 
 வெளிப்படும் 
 ஏற்றத்தாழ்வு 
 எண்ணெய் பொருள்

 மிகுதியால் 
 நலக்குறைவு 
 வட்டி கடன் 

 மதவாதம் 
 மன அழுத்தம் 
 மதுக்கடை 
 கறிக்கடைகளில் 
 மந்தைக்கூட்டம் 
 இறப்பைக் கொண்டாடும் 

 மாந்தநேய எதிர்ப்பு
 வேண்டாம் நமக்கு.

       மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் திரும்ப வருவது உறுதி இல்லை.  சிலர் பிணமாகவும் வருகின்றனர்.  சிலர் காணாப் பிணமாகவும் போய் விடுகின்றனர்.  சிலர் கைதிகளாகி விடுகின்ற்னர்.  மீனவர் வாழ்க்கையைச் சிதைக்கும் வேலையை தொடர்ந்து சிங்களப்படை செய்து வருகின்றது.  இதற்கு ஒரு முடிவு காண யாராலும் முடியவில்லை. மீனவர்களின் இன்றைய நிலையை உணர்த்திடும் கவிதை ஒன்று 
கப்பல்!.
       முத்தும் மிளகும் 
 அனுப்பி வைத்தோம் அன்று
       குத்தும் கொலையும் 

 திரும்பி வருகின்றன இன்று.


       உலகம் முழுவதும் வன்முறை.  சிலர் ஆயத வியாபாரம் நடத்த வேண்டும் என்பதற்காகவே சில உலக சண்டைகளை மூட்டியும் வருகின்றனர்.  ஆயுதம் அழிய வேண்டும், மனித நேயம் மலர வேண்டும்.கவிஞரின் ஆசை  நிறைவேற வேண்டும் .உலகமே அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்கள் அனைவரின் விருப்பம் 

       துப்பாக்கில் கிடங்குகள் 
 துடைக்கப்பட்டால் அன்றிக்
       குருதி இழப்பு குறையாது 

 உலக உருண்டையில்
       அது வரை 

 துயர நாட்களைக் 
       கடத்த மட்டுமே முடியும் 
வெளிச்சம் அறியாய் 

      பதுங்கு குழிகளில்.
       கையூட்டு எங்கும் எதிலும் என்றாகி விட்டது.  முன்பெல்லாம் கையூட்டு வாங்காதவர்களை நல்ல மனிதர்கள் என்றார்கள்.  ஆனால், தற்போது மக்களே, ‘அவர் மிகவும் நல்லவர், கை நீட்டி வாங்கி விட்டால் காரியத்தை முடித்து விடுவார்’ என்கின்றனர்.  எப்படி வந்த்து இந்த மாற்றம்?

       கையூட்டு!

              வெள்ள நிவாரணம் 
 வேண்டி நிறபவனும்
              கொஞ்சம் தள்ள வேண்டும் 

 கள்ளத்தனமாய்
              உங்களின் 

 இறப்புச் சான்றுக்கு 
              மட்டும் நீங்கள்
 ஏதும் தர வேண்டாம் 

              கறந்து கொள்வார்கள்
 உங்கள் 

              வாரிசுகளிடமிருந்து!
  பூசை ,சடங்கு போன்ற மூடநம்பிக்கைகளைச் சாடியவர் .பசியாற்றி   மகிழ்ந்தவர் . அன்றே பகுத்தறிவு சோதி ஏற்றியவர் .     வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பற்றி கவிதை அவரை படம் பிடித்துக் காட்டும் விதமாக உள்ளது.
       வள்ளலார் !

              மண்ணில் வாழ்ந்தவர்க்கிடையே 
 மண்ணுக்காக வாழ்ந்தவர்
              மனிதர்களை 

 மறந்து துறந்தவரிடையே 
              துறந்தும்
 மனிதர்களை 

              மறக்காதவர்.
 பெருவாழ்வு வாழ்ந்த 

              ஒரு கதிர்தாங்கி 
 உயிர்களுக்கு
              மறு காற்றூட்டம் செய்த 

 வெள்ளைத் தங்கம்.


       காதல் பற்றி பாடாமல் ஒரு கவிஞரால் இருக்க முடியாது.  நூலாசிரியர் தமிழ் இயலன் காதல் கவிதை எழுதி உள்ளார்.  இக்கவிதையை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல், மலரும் நினைவுகளாக மலரும் என்று உறுதி கூறலாம்.

       சிறியதும்  பெரியதும் !

 ஏறக்குறைய 
 ஒரே வயது தான் 
 நான் உன்னைக்
 காதலித்த போதும் 

 நீ என்னை 
 நிராகரித்த போதும்
 சந்திக்கத் துணிந்தில்லை 

 இடையில் ஒரு போதும்
 பயணம் தொடர்கிறது 

 உன்னை விட  மிக மூத்தவனோடு
 நீயும் 

 என்னைவிடச் 
 சிறியவளோடு 
 நானுமாய்!
       மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்தவர், மண்ணின் பெருமையை மண்ணின் மைந்தர்களுக்கு உணர்த்திய மாமனிதர் வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய கவிதை நன்று.

 செயற்கைக்கெல்லாம் 
 தடைகளைப் போட்டு 
 இயற்கை
 உரமெனும் 

 மடையைத் திறந்தவர்
 களையாய் இருக்கும் 

 வேதிப் பொருட்களைக்
 கலைத்துப் போட்டு 

 உண்மைகளை சொன்னவர்
 இனிவரும் நாட்களில்

 நமதுஆழ்வார்  தனித்தமிழ்
 உழவரின் 

 ஏரென வாழ்வார்.


மாறிய போது உணர்ந்தேன் புலம் பெயர்ந்தோர் வலி ! என்று நான் ஒரு ஹைக்கூ எழுதினேன். சொந்த மண்ணை விட்டு விட்டு வேறு மண்ணில் வாழ்பவர்களுக்கு உடல் தான் இங்கு இருக்கும் .உள்ளமோ சொந்த மண்ணை நினைத்துக் கொண்டே இருக்கும் .
       நூலாசிரியர் தமிழ் இயலன் புலம் பெயர்ந்தோர் பற்றி எழுதிய கவிதை.

 புலம் பெயர் வாழ்க்கை!
 வாதிட்டு மடிவது ஏன் 
 வரப்போரச் சண்டைகளில்
 நாட்டைத் துறந்தவனின் ஒரு கேள்வி 

 மொழிக்காக
 விழி பிதுங்கினோம் 

 வெளிக்கடைச் சிறையில் அன்று
 வெளிநாட்டு மண்ணில் இன்று 

 அடிதடி கொலை உறுதி
 அமைதியைச் சொன்ன 

 ஆண்டவன் பெயராலும்.
       இப்படி பல கவிதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன, சிலிர்ப்படைய வைக்கின்றன.  பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் அவர்கள் திரைப்பட இயக்குனர் கவிதைக்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் .

இந்த நூலை விமர்சனம்  எழுதுவதற்காக என்னிடம் வழங்கிய தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கும் நன்றி .
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 28, 2014 9:44 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கண்ணஞ்சல் (ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் மல்லிகை தாசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மழைப் பேச்சு ! இது இன்பத் தமிழ் ! நூல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum