தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

Go down

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி ! Empty தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Sep 17, 2015 12:11 pm

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?    கவிஞர் இரா .இரவி !

அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் !
அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் !

எதையும்  ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? 
என்று கேட்டிடத் துணிவை தந்தவர் !

ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !
அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் !

பிறப்பினில்  பேதம் கற்ப்பிப்பது  மடமை என்றவர் !
பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் !
.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் !
கடவுள்  கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் !

சொல்வது யாராக இருந்தாலும் சரி !
சொல்வது சரியா ? என ஆராயச் சொன்னவர் !

உலகப் பொதுமறைப்  படைத்த  திருவள்ளுவரின் !
ஒப்பற்ற திருக்குறளை வழி  மொழிந்தவர் !

இந்திய  அரசியல் சட்டத்தைத்  திருத்திட வைத்தவர் !
எல்லோருக்கும் கல்வி பதவி கிடைத்திட வைத்தவர் !

மூட நம்பிக்கைகளை வெறுத்து ஒதுககியவர் !
மனதில் நம்பிக்கை விதைத்து மக்களை வளர்த்தவர் !

தன் மானம் இழந்து தமிழர் மானம் காத்தவர் !
தன் மனம் சொன்னதை அப்படியே சொன்னவர் !

சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர் !
சம்மட்டி அடி போல இடி போல முழங்கியவர் !

கடவுளை மற ! மனிதனை நினை !உணர்த்தியவர் !
கடவுளின் பெயரால் நடக்கும் அநீதியைக் கண்டித்தவர் !

சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் !
சகோதர உணர்வினை அனைவருக்கும் போதித்தவர் !

மூளையை சிந்திப்பதற்குப் பயன்படுத்தச் சொன்னவர் !
மூளைச்சலவைக்கு மயங்காதே என அறிவுறுத்தியவர்  !

சாமியார்களின் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டியவர் !
சாமி யாருமில்லை என்று அதட்டி உரைத்தவர் !

பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் !
பெண் போகப் பொருள் அல்ல விளக்கியவர் !

பெண்ணை மதிக்க ஆண்களுக்கு இயம்பியவர் !
பெண் இனம் உயர்ந்திடக்   காரணமானவர் !

பெண் கல்விக்கு நாட்டில் வழி வகுத்தவர் !
பெண்மை ஒளிர்ந்திட அறிவொளி ஏற்றியவர் ! 

தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால் !
தமிழகம் அறியாமை  இருளிலேயே  இருந்திருக்கும் !

தள்ளாத வயதிலும் தளராத தேனீ அவர் !
தாடிக்காரர் தமிழரின் நாடித்  துடிப்பு அறிந்தவர் !

போராட்டம் அறிவித்தால் முதல் நபராய் நின்றவர் !
போராடியே பற்பல வெற்றிகள் கண்ட்வர்  !

கொள்கை எதிரிகளும் மதிக்கும் மாண்பாளர் !
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர் !

கடைசிவரை கறுப்புச் சட்டை அணிந்தவர் !
கருப்பு அறியாமை இருட்டை உணர்த்தியவர் !

பல்லாயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தை !
பரப்புரையால் ஆட்டம் காண வைத்தவர் !

புராணங்களைப் படித்துவிட்டு குறைகளைச் சொன்ன்னவர் !
புராண  கட்டுக்கதைகளை நம்பாதீர் என்றவர் !

பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியல் விரும்பியவர் !
தாழ்த்தப்பட்ட மக்களின் தாழ்மை அகற்றியவர் !

வன்முறையில் என்றுமே விருப்பம் இல்லாதவர் !
நன் முறையில் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் !

பெரியார் அவர் ஒருவர் மட்டுமே பெரியார் !
பெரியாருக்கு முன் மற்ற யாவரும் சிறியார் !

தந்தை பெரியார் அவர் மட்டுமே பெரியார் !
தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ?
----------------------------------------------------------------------
பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! 
கவிஞர் இரா .இரவி .

இறுதி மூச்சு உள்ள வரை உண்மையாக தமிழ்
இனத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் !

ஒளிவு மறைவு என்பது இன்றி என்றும்
மனதில் பட்டதைப் பேசிய நல்லவர் !

வெட்டு ஒன்று ! துண்டு இரண்டு ! என்று
விவேகமாக என்றும் பேசிய வல்லவர் !

ஆறறிவு மனிதனுக்கு அறியும் வண்ணம்
ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் !

தள்ளாத வயதிலும் கொண்ட கொள்கையில்
தளராமல் நின்று வென்ற கொள்கை மறவர் !

பட்டி தொட்டி எங்கும் சளைக்காமல் பயணித்து
பகுத்தறிவை ஊட்டி வளர்த்திட்ட அன்னை அவர் !

மறுக்கப்பட்ட கல்வியை கேள்வி கேட்டு
மறுத்தவர்களிடமிருந்து பறித்துத் தந்தவர் !

உயர் பதவிகளில் ஒப்பற்ற தமிழர்கள்
உடன் அமருவதற்கு வழி வகுத்தவர் !

பெண்ணடிமை விலங்கை அடித்து உடைத்து
பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர் ! 

இல்லாத கடவுளை இருக்கு ! என்றவர்களிடம்
எங்கே காட்டு கடவுளை ! என்று கேட்டவர் !

அறியாமை இருளை அகற்றி விட்டு
அறிவுச்சுடர் ஏற்றிய பகுத்தறிவுப் பகலவர் !

பெரியாரால் வாழ்க்கைப் பெற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்
பெரியாரின் வெற்றியே ! இந்த விமர்சனமும் !


சிந்தனை விதைத்து மனிதனாக மாற்றியவர்
சிந்திக்கச் சொல்லிக் கொடுத்தவர் பெரியார் !

பேச்சுரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார் !
பேசாத புழுவைப் பேசவைத்த மருத்துவர் பெரியார் !


.
----------------------------------------------------------------------------------------------------------
பகுத்தறிவுப் பகலவன் பெரியார்!               
   கவிஞர் இரா .இரவி
 
பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால்
பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள்

சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர்
சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார்

இட ஒதுக்கீட்டிற்காக முதன் முதலாக அன்றே  
இந்திய அரசியல் சட்டம் திருத்திட வைத்தவர் பெரியார்

காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும்
கதராடை சுமந்து விற்றவர் பெரியார்

கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக் 
கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்

விதி என்றும் ஒன்றும் கிடையாது சொந்த
மதியை பயன்படுத்தி வென்றிடச் சொன்னவர் பெரியார்

கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை
கடைக்கோடி மனிதனுக்கு புரியும்படி உரைத்தவர் பெரியார்

பெண் ஏன்? அடிமையானாள் நூலின் மூலம்
பெண்ணின் அடிமை விலங்கை அடித்து நொறுக்கியவர்    பெரியார்

பிள்ளை பெறும் இயந்திரமா ? பெண்கள்
பல கேள்விகளைக் கேட்ட அறிவுச்சுடர் பெரியார்

விதவைகள் மறுமணத்திற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே 
வித்திட்ட புரட்சி வேங்கை பெரியார்

எதையும் என்? எதற்கு? எப்படி? என
எல்லோரையும் கேட்ட வைத்த அறிஞர் பெரியார்

பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் பொதுச்சொத்து
பாமரனுக்கும் புரியும் வண்ணம் உணர்த்தியவர் பெரியார்

போராட்டம் அறிவித்தால் குடும்பத்துடன் வந்து
போராடும் முதல் ஆள் தந்தை பெரியார்

தண்டனைக்குப் பயந்து செய்த செயலை
தீர்ப்பு தருவோரிடம் மறுக்காத சிங்கம் பெரியார்

ஆதிக்கம் எந்தப் பெயரில் வந்தாலும் எதிர்த்தவர் 
ஆதிக்கவாதிகளின் சிம்மச் சொப்பனம் பெரியார்

அமைதிப் பூங்காவாக இன்றும் தமிழகம் திகழ்ந்திட
அறிவு விதையை உள்ளங்களில் விதைத்தவர் பெரியார்

பெரியாருக்கு இணை இவ்வுலகில் பெரியார்
பெரியார் அவர்தான் என்றும் பெரியார்

நான் நேசிக்கும் நல்ல தலைவர் பெரியார்
நான் கவிஞன் ஆகக் காரணமானவர் பெரியார்
------------------------------
------------------------------------------------------------------------

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் !   \
 கவிஞர் இரா .இரவி 

அறிவு பூட்டின் 
திறவுகோல் 
பெரியார் !



எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? 
என்று கேட்க வைத்தவர் 
பெரியார் !



பிள்ளை பெறும் இயந்திரமா? 
பெண்கள் என்று கேட்டவர் 
பெரியார் !



கற்பிக்கப்பட்ட கற்பனை கடவுள் 
என்பதை உணர்த்தியவர் 
பெரியார் !



அடித்து நொறுக்கினார் 
அடிமை விலங்கை 
பெரியார் ! 



அறிஞர் அண்ணா என்ற 
ஆலமரத்தின் விதை 
பெரியார் ! 



ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும் 
கிடைத்திடக் காரணமானவர் 
பெரியார் !



பெண் இனத்தின் 
போர்முரசு விடிவெள்ளி 
பெரியார் !



மூடநம்பிக்கை ஒழித்து 
தன்னம்பிக்கை விதைத்தவர் 
பெரியார் ! 



சமூக நீதியாம் இடஒதுக்கீட்டை 
சாதித்துக் காட்டியவர் 
பெரியார் ! 



மனிதனை நினை ! என்று 
மனிதனுக்கு நினைவூட்டியவர் 
பெரியார் !



தமிழருக்கு தன்மானம் 
கற்பித்த ஆசான் 
பெரியார் !



தள்ளாத வயதிலும் 
தளராத தேனீ 
பெரியார் !

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum