தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்
Page 1 of 1
பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்
தஷி மாலிக் - நுங்ஷி மாலிக்
இமயம் தொட்ட எவரெஸ்ட் இரட்டையர்
எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த உலகின் முதல் இரட்டையர் என்கிற பெருமைக்கு உரியவர்கள் தஷி மாலிக் - நுங்ஷி மாலிக் சகோதரிகள். சாதனையாளர்களை சிஸ்டர்ஸ் ஸ்பெஷல் பேட்டிக்காக அணுகினால், உடனே டபுள் ஓகே. சொல்கிறார்கள். கேள்விகளை உள்வாங்கி இருவரும் தனித்தனியே பதிலளிக்கிற பாங்கு சுவாரஸ்யமாக இருக்கிறது!
``அப்பாவுக்கு ஹரியானாவுல உள்ள சோனிப்பட் கிராமம்தான் பூர்வீகம். அம்மாவுக்கு டேராடூன். நாங்க பிறந்ததும் எங்களுக்கு அகிதா, நிகிதானுதான் பேர் வச்சாங்க. ஸ்கூல் ரெக்கார்டை தவிர வேற எங்கேயும் அந்த பேர் யாருக்கும் தெரியாதுங்கிறதால எங்களோட செல்லப் பேரான தஷி, நுங்ஷியையே மாத்திட்டாங்க...’’ என்கிறார் தஷி.
``தஷின்னா திபெத்தியன்ல அதிர்ஷ்டம்னு அர்த்தம். நுங்ஷின்னா மணிப்புரியில அன்புனு அர்த்தம். பேருக்கேத்த படியே அதிர்ஷ்டமும் அன்பும் சேர்ந்தவங்க நாங்க...’’ என்கிறார் நுங்ஷி. அழகான ஆங்கிலத்தில் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது இரட்டையரின் அரட்டை! ``ட்வின்ஸா இருக்கிறதுங்கிறது ரொம்ப ஸ்பெஷல் ஃபீலிங். பெரிசா எதையும் சாதிக்கலைனாலும் எல்லாரோட பார்வையும் பாராட்டும் நம்ம மேலதான் இருக்கும். பத்தாயிரம் பிறப்புகள்ல ஒண்ணு ட்வின்ஸா இருக்கிறதா சொல்றாங்க.
அந்த வகையில நாங்க ஆசீர்வதிக்கப்பட்டவங்க. அதையும் தாண்டி, ஆண்களோட ஆதிக்கம் நிறைஞ்ச ஒரு சாகசத் துறையில முதல் இரட்டையரா பல சாதனைகளைச் செய்திருக்கோம்கிறது எவ்வளவு பெரிய பெருமை?’’ - இரட்டையராகப் பிறந்ததன் இன்பம் பகிர்கிறவர்கள், தங்களது சாகசப் பயணத்தின் ஆரம்பத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ``ஆரம்பத்துல எங்க ரெண்டு பேருக்குமே மலையேற்ற ஆர்வம்கிறது கனவுலகூட இருந்ததில்லை
இமயம் தொட்ட எவரெஸ்ட் இரட்டையர்
எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த உலகின் முதல் இரட்டையர் என்கிற பெருமைக்கு உரியவர்கள் தஷி மாலிக் - நுங்ஷி மாலிக் சகோதரிகள். சாதனையாளர்களை சிஸ்டர்ஸ் ஸ்பெஷல் பேட்டிக்காக அணுகினால், உடனே டபுள் ஓகே. சொல்கிறார்கள். கேள்விகளை உள்வாங்கி இருவரும் தனித்தனியே பதிலளிக்கிற பாங்கு சுவாரஸ்யமாக இருக்கிறது!
``அப்பாவுக்கு ஹரியானாவுல உள்ள சோனிப்பட் கிராமம்தான் பூர்வீகம். அம்மாவுக்கு டேராடூன். நாங்க பிறந்ததும் எங்களுக்கு அகிதா, நிகிதானுதான் பேர் வச்சாங்க. ஸ்கூல் ரெக்கார்டை தவிர வேற எங்கேயும் அந்த பேர் யாருக்கும் தெரியாதுங்கிறதால எங்களோட செல்லப் பேரான தஷி, நுங்ஷியையே மாத்திட்டாங்க...’’ என்கிறார் தஷி.
``தஷின்னா திபெத்தியன்ல அதிர்ஷ்டம்னு அர்த்தம். நுங்ஷின்னா மணிப்புரியில அன்புனு அர்த்தம். பேருக்கேத்த படியே அதிர்ஷ்டமும் அன்பும் சேர்ந்தவங்க நாங்க...’’ என்கிறார் நுங்ஷி. அழகான ஆங்கிலத்தில் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது இரட்டையரின் அரட்டை! ``ட்வின்ஸா இருக்கிறதுங்கிறது ரொம்ப ஸ்பெஷல் ஃபீலிங். பெரிசா எதையும் சாதிக்கலைனாலும் எல்லாரோட பார்வையும் பாராட்டும் நம்ம மேலதான் இருக்கும். பத்தாயிரம் பிறப்புகள்ல ஒண்ணு ட்வின்ஸா இருக்கிறதா சொல்றாங்க.
அந்த வகையில நாங்க ஆசீர்வதிக்கப்பட்டவங்க. அதையும் தாண்டி, ஆண்களோட ஆதிக்கம் நிறைஞ்ச ஒரு சாகசத் துறையில முதல் இரட்டையரா பல சாதனைகளைச் செய்திருக்கோம்கிறது எவ்வளவு பெரிய பெருமை?’’ - இரட்டையராகப் பிறந்ததன் இன்பம் பகிர்கிறவர்கள், தங்களது சாகசப் பயணத்தின் ஆரம்பத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். ``ஆரம்பத்துல எங்க ரெண்டு பேருக்குமே மலையேற்ற ஆர்வம்கிறது கனவுலகூட இருந்ததில்லை
Last edited by அ.இராமநாதன் on Thu Aug 25, 2016 11:28 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பெண்கள் மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்
-
இத்தனைக்கும் ரெண்டு பேருக்கும் நிறைய ஊர் சுத்தப் பிடிக்கும். ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். முதல்ல படிப்புக்காகவும், எங்களுக்குள்ள ஒரு லீடர்ஷிப் குவாலிட்டியை வளர்த்துக்கவும் உடலளவுலயும் மனசளவுலயும் வலிமையா ஃபீல் பண்ணவும்தான் இதை ட்ரை பண்ணினோம். பல நேரங்கள்ல நமக்குள்ள மறைஞ்சிருக்கிற திறமைகள், யதேச்சையா எதிர்பாராத சில விஷயங்கள் மூலமா வெளியில வரும்னு சொல்வாங்க... அப்படித்தான் எங்க விஷயத்துலயும் நடந்தது.
உத்தர்காஷியில நேரு இன்ஸ்டிடியூட்ல மலையேறுதலுக்கான அடிப்படை பயிற்சியை முடிச்சதும், அந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்சதா மாறிடுச்சு. அதையடுத்து இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸ் வரை வரிசையா முடிச்சிட்டோம். இந்தியாவுல ரொம்ப கம்மியான பெண்கள்தான் இதை முடிச்சிருக்காங்க. இன்னொரு பக்கம் காஷ்மீர்ல பனிச்சறுக்குப் பயிற்சியையும் முடிச்சிட்டோம். எங்கக் குடும்பத்துலயும் நாங்கதான் முதல் சாதனையாளர்கள்...’’ - சகோதரிகளின் வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறது அந்தப் ெபருமிதம்!
உடலளவுல மட்டுமில்லை... மனசளவுலவும் பொருளாதார ரீதியாகவும் சவாலான விஷயம் இது. பனிமலையில ஏறத் தயாரான அளவுக்கு எங்களோட இதய ஆரோக்கியமும் சரியா இருக்கணும். தினமும் எக்சர்சைஸ் பண்றோம். ஆனா, அது சிகரம் தொடறதுக்கெல்லாம் போதாது. மாரத்தான் ஓடறவங்ககூட மலை ஏற முடியாம சிரமப்படறதைப் பார்த்திருக்கோம். 15 கிலோ வெயிட்டை தூக்கிட்டு, 3 ஆயிரம் அடி உயரத்தை ஏறிக் கடக்க என்ன மாதிரியான ஃபிட்னஸ் தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.
[img(451.1875px,226.1875px)]http://kungumam.co.in/Thozhi_images/2016/20160816/8b.jpg[/img]
மனசும் உடம்பும் பலமா இருக்கணும். பிரமாண்டமான மலை... பாறைகளான ஐஸ் கட்டிகள் மேல ஏறிப் போக இந்த ரெண்டும் முக்கியம். மலையில சின்னதா ஒரு அசைவு ஏற்பட்டாகூட, எல்லாம் மறந்துடும். அந்த இடத்துல நிலவற அமைதியும் தனிமையும் ஒருவித அசாதாரண பயத்தைக் கொடுக்கும். எந்த நிமிஷமும் எல்லாம் தப்பிப் போகலாம். ஸோ... மோசமான நிகழ்வுகளுக்குத் தயாராகவும், நல்லதே நடக்கட்டும்கிற நம்பிக்கையோடவும்தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம்.
இத்தனைக்கு இடையிலயும் நாம செய்யற விஷயத்து மேல ஒரு இலக்கோடவும் வெறியோடவும் இருக்கிறபோது மன பலம் தானா வந்துடும். அந்த ஃபீலிங் ரொம்ப ஸ்பெஷல்...’’ - திகில்களும் திருப்பங்களும் நிறைந்த தங்களது சாகச முயற்சிகளை விவரிக்கும் போதே வியர்க்க, வியக்க வைக்கிறார்கள் தஷியும் நுங்ஷியும். ``நாங்க ரெண்டு பேரா இருக்கிறதால மட்டும்தான் எல்லாம் சாத்தியமாச்சு. இதே விஷயத்தை நாங்க தனியாளா பண்றதா இருந்தா எங்க பெற்றோர்கூட சம்மதிச்சிருக்க மாட்டாங்க.
அதுலயும் ட்வின்ஸா இருக்கிறதுங்கிறது எங்களோட சாதனைக்கு மிகப்பெரிய பலம். மலையேற்றத்துல ரெண்டு பேருக்கும் ஆர்வம் இருந்தது பிளஸ்னா, ரெண்டு பேரும் சேர்ந்து சவால்களை சந்திக்கிறதுல ஒரு சுவாரஸ்யமும் இருந்தது. 23 வருஷங்கள்ல நாங்க ரெண்டு பேரும் ஒருநாள்கூட பிரிஞ்சதில்லை. இந்த மலையேற்றமும், அதுல சந்திச்ச சவால்களும் எங்களுக்குள்ள நாங்க ட்வின்ஸா இருக்கிறது எவ்வளவு ஸ்பெஷல்னு உணர்த்தி இருக்கு...’’ - சகோதரிகளின் பேச்சில் வரிக்கு வரி எட்டிப் பார்க்கிறது பாசம்.
``இந்தச் சாதனையை முடிக்கிறதுக்கு 3 வருஷங்களுக்கு முன்னாடி வரை நாங்க விளையாட்டுத்தனமான ஸ்கூல் பொண்ணுங்க. திடீர்னு ஒருநாள் வட துருவத்துலயும் தென் துருவத்துலயும் உள்ள உயரமான சிகரங்களை எட்டிட்டோம்கிற பெருமையோட நின்ன அந்தத் தருணம் மறக்க முடியாதது. மைனஸ் 40 டிகிரி குளிர்ல ஒரு ஃப்ரீசர் பெட்டிக்குள்ள உங்களைப் போட்டு அடைச்சு வச்சா எப்படி இருக்கும்? அதே அனுபவம்தான் எங்களுக்கும் இருந்தது.
வட துருவத்தைப் பொறுத்த வரை நீங்க எந்தத் திசையில அடியெடுத்து வச்சாலும் அது தெற்கு நோக்கிப் போகும். அது மட்டுமில்லாம, வட துருவத்துல நீங்க எங்கே இருக்கீங்கன்றதுக்கான எந்த அடையாளத்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஐஸ் ஷீட்டானது தொடர்ந்து நகர்ந்துக்கிட்டே இருக்கும். ஜிபிஎஸ் இருந்தா மட்டும்தான் நாம எங்கே இருக்கோம்னே தெரிஞ்சுக்க முடியும். ஒவ்வொரு அடி முன்னேற்றமும் எனக்குள்ள எப்படியொரு சந்தோஷத்தைக் கொடுத்ததுனு சொல்லவே முடியலை... அதாவது, இந்தியாவுல சில கிராமங்கள்ல ஆண் குழந்தைகள் பிறந்தா, ஸ்டீல் தட்டை ஸ்பூனால தட்டி அக்கம் பக்கத்தாருக்குச் சொல்லி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவாங்க.
பெண்ணா பிறந்ததை நினைச்சு பெருமையா நாங்களும் அப்படித்தான் எங்க வெற்றியைக் கொண்டாடினோம்...’’ என்கிறவர்களின் வெற்றி ஒட்டுமொத்த பெண் இனத்தையும் பெருமை கொள்ளச் செய்கிறது. இரட்டைச் சகோதரிகளின் எதிர்கால லட்சியங்களும் இவர்களைப் போலவே அவ்வளவு அழகு! இதையே புரொஃபஷனா எடுத்துப்போமாங்கிறது தெரியலை. நாங்க ஏற்கனவே சொன்னது போல செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமா இருக்கு. முதல்ல ஸ்போர்ட்ஸ்ல மேல்படிப்பை முடிக்கணும்.
எவரெஸ்ட்டை எட்டினதுங்கிறது முழுக்க முழுக்க எங்களோட தனிப்பட்ட விருப்பத்தின் பேர்ல நடந்தது. அது மூலமா நாங்க இன்னொரு விஷயத்தையும் பிரகடனப்படுத்த நினைச்சோம். அதாவது, இந்தியப் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளுக்கு எந்த வகையிலும் சளைச்சவங்க இல்லை... அவங்க மனசு வச்சா எதையும் சாதிக்கலாம்னு நிரூபிக்கவும் இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டோம்.
வருஷத்துக்கு ஒருமுறை இது மாதிரி ஒரு சாகசப் பயணம் செய்வோம். இந்த வருஷம் நியூசிலாந்துல உள்ள உயரமான சிகரமான மவுண்ட் குக் போறதா திட்டம். இதை அடையறது உலகத்துலயே ரொம்ப கஷ்டமானதுனு சொல்லப்படுது. உலகத்துலயே முக்கியமான நாலு ice capsக்கு போறதும் ஒரு திட்டம். ஆனா, இதுக்கான ஸ்பான்சர்ஷிப் கிடைச்சா இன்னும் நல்லாருக்கும்...’’ கண்களிலும் மனதிலும் கனவுகள் தேக்கிச் சொல்கிறார்கள்.
எல்லா துறைகளையும் போல இதுலயும் ஆண்களோட எண்ணிக்கைதான் அதிகம். உலகளவுல வெறும் 30 சதவிகிதம் பெண்கள்தான் இதுல இருக்காங்க. இது வாழ்வா, சாவா போராட்டம்தான். ஒவ்வொரு முறை சிகரம் ஏறப்போற ஆணும் பெண்ணும் உயிரைப் பணயம் வச்சு ரிஸ்க் எடுத்துதான் துணியறாங்க. இதுல ஆண்கள் சந்திக்கிற அதே சவால்களைத்தான் பெண்களும் சந்திக்கிறாங்க. மாதவிலக்கு மாதிரியான பெண்களுக்கே உரித்தான உடல் அசவுகரியங்கள் வேணா சிரமங்களைத் தரலாம்...’’ - தன் பார்வையில் சவால்களைச் சொல்கிறார் தஷி.
``ஆதிகாலத்துலேருந்தே விளையாட்டுங்கிறது ஆண்களுகான துறையாகவே பார்க்கப்பட்டிருக்கு. உடலளவுல சிரமமான விளையாட்டுகள் எல்லாம் ஆண்களுக்கானதுனு ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்திட்டாங்க. எங்களைப் பொறுத்த வரை மலையேற்றம்கிறது பெண்களுக்கு ரொம்பவே உகந்தது. ஏன்னா, மனசளவுல அவங்க ரொம்ப பலமானவங்க. இன்னும் சொல்லப் போனா ஆண்களைவிடவும் சிறப்பா இந்தத் துறையில சாதிக்கக்கூடியவங்க பெண்கள்.
ஆனாலும், நம்ம ஒட்டுமொத்த சூழலுமே பெண்களுக்கு எதிரானதாதான் இருக்கு. இந்த மாதிரியான சாகசங்களை முயற்சி செய்யற ஒரு பெண், தனிமனுஷியா பயணம் செய்யறதும், பல ஆண்களுக்கு இடையில ஒருத்தியா நாட்களைக் கடத்தறதும் ஒரே கூடாரத்துக்கு அடியில ஆண்களுக்கு சமமா இடத்தைப் பகிர்ந்துக்கிறதும் அவளுக்கு இன்னும் சவாலாதான் இருக்கு...’’ - உடன்பிறப்பின் கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது நுங்ஷியின் பார்வை.
``ஏப்ரல் 2015ல வட துருவத்தை எட்டிய முதல் தெற்காசிய பெண்கள், அதுலயும் உலகின் முதல் இரட்டையர்னு எங்களுக்கு அங்கீகாரம் கிடைச்சது. ஏழு உச்சி மாநாடுகள் அடங்கின Explorers Grand Slamஐ முழுமையா முடிச்சவங்கன்ற பெருமையும் எங்களுக்கு வந்தது. இதுதான் உச்சம்... இதைத் தாண்டி என்ன இருக்குனு பலரும் வியப்போட கேட்டாங்க. எங்களைப் பொறுத்த வரை சாகசங்களுக்கு எல்லைங்கிறதே இல்லை!
இந்த வருஷம் நியூசிலாந்துல நாங்க ஸ்போர்ட்ஸ் அண்ட் எக்சர்சைஸ்ல எங்களோட பேச்சிலர் டிகிரியை முடிக்கணும். அப்புறம் எங்களோட பயண அனுபவங்களைப் பத்தி புத்தகமா எழுதற முயற்சிகளுக்காக அமெரிக்கா கிளம்பறோம். இதுக்கெல்லாம் இடையில எங்களோட சொந்த ஃபவுண்டேஷன் ஆரம்பிச்சு, மலையேற்றத்துல ஆர்வம் உள்ள பெண்களை ஊக்கப்படுத்தற விஷயங்களைச் செய்யப் போறோம்.
பயணம்... சாகசம்... அர்த்தமுள்ள வாழ்க்கைனு பெரிய திட்டங்களோடவும், டான்ஸ், ஒரு படத்துல நடிக்கிறதுனு சின்ன ஆசைகளோடவும் காத்திட்டிருக்கோம்...’’ அதிர்ஷ்டமும் அன்பும் சேர்ந்து அசத்துகிறார்கள் பாசப் பறவைகள்!
மாரத்தான் ஓடறவங்ககூட மலை ஏற முடியாம சிரமப்படறதைப் பார்த்திருக்கோம். 15 கிலோ வெயிட்டை தூக்கிட்டு, 3 ஆயிரம் அடி உயரத்தை ஏறிக் கடக்க என்ன மாதிரியான ஃபிட்னஸ் தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க.
மலையில சின்னதா ஒரு அசைவு ஏற்பட்டாகூட, எல்லாம் மறந்துடும். அந்த இடத்துல நிலவற அமைதியும் தனிமையும் ஒருவித அசாதாரண பயத்தைக் கொடுக்கும். எந்த நிமிஷமும் எல்லாம் தப்பிப் போகலாம்.
மைனஸ் 40 டிகிரி குளிர்ல ஒரு ஃப்ரீசர் பெட்டிக்குள்ள உங்களைப் போட்டு அடைச்சு வச்சா எப்படி இருக்கும்? அதே அனுபவம்தான் எங்களுக்கும் இருந்தது.
-
நன்றி- குங்குமம் தோழி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» சாதிக்கலாம் என்று நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
» போர்டு வச்சா!
» மௌனமாக இருந்தால் சாதிக்கலாம்.
» மனசு பெரிய மனசு
» எங்கம்மா கையை வச்சா மிச்சம் வைக்கிற பழக்கமே கிடையாது...!!
» போர்டு வச்சா!
» மௌனமாக இருந்தால் சாதிக்கலாம்.
» மனசு பெரிய மனசு
» எங்கம்மா கையை வச்சா மிச்சம் வைக்கிற பழக்கமே கிடையாது...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|