தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

நம்பிக்கை கொடு!   நம்பி கை கொடு   நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sun Jan 21, 2018 12:19 am

நம்பிக்கை கொடு!

நம்பி கை கொடு


நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.
******
      நூலில் முதல் பக்கத்தில், “‘நன்றி’ எனக்கு முதல் வகுப்பு முதல் கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும்” என்று நன்றி சொல்லிய விதத்திலேயே நூலாசிரியர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களின் உயர்ந்த உள்ளம் உணர முடிகின்றது.

இவரது இயற்பெயர் ந.கிருஷ்ணவேணி. ஈரோடு மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளவையில் இருந்து சிறு துளிகள்.

     "தன் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் ரூ.8000 கடன் தவணைத் தொகை செலுத்தி வருகிறார். "

வங்கியில் கடன் பெற்று தன் பள்ளிக்குத் தேவையான பெஞ்சுகள், நாற்காலிகள், கணினி வாங்கித் தந்துள்ளார்.  இவரைப் போன்று பலர் அரசுப் பள்ளிகளுக்கு தன் சொந்தப் பணத்தில் உதவி வருவது நெகிழ்ச்சி, மகிழ்ச்சி.

      எழுத்தாளர் ஈரோடு கதிர், குழந்தை எழுத்தாளர் விழியன், தலைமை ஆசிரியர் வ.பாபு ஆகியோரின் வாழ்த்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்து உள்ளன. பாராட்டுக்கள்.

      அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள் என மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவனுக்கு பாராட்டுக்கள்.

      கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்தாழம் மிக்க வரிகள். தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். படிக்கும் வாசகர் உள்ளத்தில் தன்னம்பிக்கைப் பயிரை நடவு செய்திடும் நல்ல வரிகள்.  பாராட்டுக்கள்.  முதல் கவிதையிலேயே முத்திரை பதித்து உள்ளார்.

      “ஒவ்வொரு நொடியும் நமக்காகத் தான் / அதில்
      உயர்வதும் தாழ்வதும் / நம் கையில் தான்
      திட்டமிட்டு பயன்படுத்தினால் தான் /
            தினம் வெற்றிகள் வந்து மாலை ஆகும்
      வீணாய நாமும் செலவழித்தால் /
            தோல்விகள் தானே துரத்தி வரும்
      செய்வதை முறையாய் செய்யாமல் /
            நேரத்தை குறை சொல்லுதல் சரியாமோ?


      பொன்னை விட மேலானது பொழுது என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார். ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாகச் செலவழித்தால் சாதனைகள் நிகழ்த்தலாம்.  சிகரம் தொடலாம்.

      அளவிற்கதிகமான இன்பத்தை விட
            அளவுக்கதிகமான துன்பமோ
      அளவுக்கதிகமான அவமானமோ
            அளவுக்கதிகமான காயமோ
      நேரும் போது தான்
            மாபெரும் வெற்றி அடைகிறான் மனிதன்!


உண்மை தான். நாம் பட்ட காயங்கள், அவமானங்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியை நமக்குள் உருவாக்கி வெற்றி பெற சாதிக்க உதவிடும் என்பது உண்மை.


      விரும்பிய பூக்களைக் கண்டால்
            கண்களும் காதல் கொள்ளும் !
      விரும்பிய இடம் செல்ல
            தொலைவும் குறைவாகத் தோன்றும் !

      விரும்பி கண்கள் கண்டால்
            மௌனம் மொழியாய் ஆகும் !
      இப்படி விரும்பிச் செய்தால்
            நாம் செய்யும் செயல் எல்லாம்
      எத்தனை எளிமையாய் ஆகும்?


      எந்த ஒரு செயலையும் விருப்பமின்றி, வேண்டா வெறுப்பாக செய்யாமல் விரும்பி செய்தால் வெற்றி பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையே.

      எழுத வருகிறதா / எழுதிப்பாருங்கள் !
      பேச வருகிறதா / பேசிப் பாருங்கள் !
      வரைய வருகிறதா / வரைந்து பாருங்கள் !
      ஓட வருகிறதா / ஓடிப் பாருங்கள் !
      உங்களுக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டறியுங்கள்
      பேராற்றலாக மாற்றுங்கள் / தொடவியலாத சிகரம்   தொடுங்கள்!


      இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய பேராற்றல் மறைந்து இருக்கும். அது, எது, என்று கண்டுபிடித்து செயலாற்றினால் வாழ்க்கை சிறக்கும், சாதனை பிறக்கும், பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல் பிறந்தோம் சாதித்தோம் என்று வாழ வேண்டும். இப்படி பல சிந்தனைகள் விதைக்கும் விதமாக நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன.

      நூலின் பெயருக்கு ஏற்றபடி நூல் படிக்கும் வாசகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் தான் உண்டு, தன் பள்ளி உண்டு என்று சராசரி தலைமையாசிரியர்கள் போல சுருங்கி விடாமல் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதமாக கவிதைகள் எழுதி நூலாக்கி இருப்பது சிறப்பு.

நூலாசிரியர் கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது கணவர் திரு. செல்லப்பன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

காவி ஆடையில் / உலகையே வலம் வந்த / விவேகானந்தர் !
அரையாடையில் / கோடான கோடி மனங்களில் / இடம் பிடித்த காந்தி !
வெள்ளைப் புடவையில் / உலகமே வணங்கும்படி வாழ்ந்த தெரசா!
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உளதென நாமும் வாழப் பழகுவோம்!


எண்ணங்கள் நன்றாக இருந்தால் செயல்கள் நன்றாக இருக்கும்
நன்றாக இருக்கும் செயல் நன்றானால் சிறப்புகள் கிடைக்கும். வண்ணங்களால் ஆவது ஒன்றுமில்லை என்று உணர்த்தியது சிறப்பு.


      வீடு என்பது / உயிரற்ற பொருள் அல்ல
      உணர்வுடன் கலந்து உயிர்ப்புடன் விளங்கும்
      உன்னத உறவில் விடும் ஒன்று
      உறவுகள் சுமந்து உவகையுடன் வாழ்ந்து   
      உள்ளம் மகிழ்ந்து / உற்சாகமாய் உலாவரும்
      அற்புத உலகம் வீடு மட்டுமே / வீடே உலகம்
      என உணர்வாய் தோழா!


குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்.  அன்போடு வாழும் வாழ்க்கை வரம். குடும்பத்தில் மகிழ்வோடு வாழ்வது சுகம். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.  என்னடா வாழ்க்கை என்று வெறுக்காமல், நன்மையடா வாழ்க்கை என்று வாழ வேண்டும்.

கொள்கையில் நெருப்பாய் இருங்கள் /
      பிறர் மரியாதை கொள்வார்கள்
உதடுகளில் / புன்னகையோடு இருங்கள் /
      பிறர் மகிழ்ச்சியோடு அணுகுவார்கள்
உள்ளத்தில் / கருணையொடு உதவுங்கள் /
      பிறர் கைகூப்பித் தொழுவார்கள்
அன்பான / சொற்களை பேசுங்கள்
      பிறர் உங்களை நேசிப்பார்கள் !


வாழ்வியல் தத்துவம் கூறும் விதமாக கவிதைகள் உள்ளன. எப்படியும் வாழலாம் என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறையோடு வாழ்வாங்கு வாழ்ந்திட வழி சொல்லிடும் வைர வரிகள்.

வாசிக்க வாசிக்க / உன் சுவாசம் கூட சுத்தமாகும்
வாசித்தலை நேசித்தால் / உன் வாழ்வு பிரகாசமாகும்
வாசித்தலே தியான உணர்வு தரும் / பேராற்றல் மிளிரும்
வாசித்தால் தவம் போன்றது / தன்நிலை மறக்கச் செய்யும்!


வாசித்தல் தவம் என்றது சிறப்பு. பல சாதனையாளர்களையும், திறமையாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியது வாசிப்பு தான்.  வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் வாசிப்பின் மேன்மையை உணர்த்தியது சிறப்பு, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» வணக்கம் தமிழன்ப ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுவை யுக பாரதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum