தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அண்ணாவின் மொழி ஆளுமை! நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. ரேணுகாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
அண்ணாவின் மொழி ஆளுமை! நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. ரேணுகாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
http://tamilauthors.com/04/522.html
-- அண்ணாவின் மொழி ஆளுமை!
நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. ரேணுகாதேவி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இலக்கிய பதிப்பகம், வெளியிட்டோர் தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 48, வட்டச் சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.
பக்கங்கள் : , விலை : ரூ.120*****நூலாசிரியர் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி அவர்கள் மொழியியல் துறையில் பேராசிரியராகவும், தலைவராகவும் 35 ஆண்டுகள் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தில் பணியாற்றியவர். உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்த முனைவர் க. பசும்பொன் அவர்களின் மனைவி முகநூலிலும் இயங்கி வருபவர்.பேரறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி, ஓர் இரவு என்னும் இரு நாடகங்களும் ஒரு சில சிறுகதைகளையும் கொண்டு ஆய்வுசெய்து ஆய்வேடாக வழங்கி உள்ளார்கள். அண்ணாவின் மொழி ஆற்றலை கோபுரத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள். பாரட்டுக்கள். கடின உழைப்பு, நல்ல ஆய்வு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அழியாப் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அண்ணாவின் அளப்பரிய ஆற்றலுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.6 கட்டுரைகளாக வழங்கி உள்ளார். முன்னுரை, அண்ணா ஓர் அறிமுகம், அண்ணாவின் படைப்புகள், அண்ணாவின் மொழிநடை, அண்ணாவின் ஆளுமைத் தொடர்கள், நிறைவுரை. இறுதியாக ஆய்வுக்கு துணைநின்ற நூல்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து இந்நூலை உருவாக்கி உள்ளார்கள்.குள்ள உருவம், குறும்புப் பார்வை, விரிந்த நெற்றி, பரந்த மார்பு, கறை படிந்த பற்கள், கவலையில்லாத் தோற்றம், நறுக்கப்பட்ட மீசை, நகை தவழும் முகம், சீவாத தலை, சிறிதளவு வெளிவந்த தொப்பை, செருப்பில்லாத கால், பொருத்தமில்லாத உடைகள், இடுப்பில் பொடிமட்டை, கையில் வெற்றிலை பாக்குப் பொட்டலம் – இப்படி பேரறிஞர் அண்ணா அவர்களை நம் கண்முன் காட்சிப்படுத்திய வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன். நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையினர் அண்ணாவை பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வர்ணனையை வைத்தே அவரை உருவகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.பேரறிஞர் அண்ணாவின் பேச்சிலும், எழுத்திலும் எதுகை, மோனை சிறந்து விளங்கும். அவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார்கள்.பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும் நூலில் உள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளோடு ஒப்பிட்டு அவரின் ஆளுமையை விளக்கிய விதம் அருமை. அண்ணாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாள், மாதம், வருடம் என தெளிவான புள்ளி் விவரங்களுடன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்தரும் விதமாக தகவல் களஞ்சியமாக இந்த நூல் உருவாகி உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் வீ. ரேணுகாதேவி அவர்களுக்கு பாராட்டுகள். வாழ்க்கை நிகழ்வு நிரம்ப உள்ளன. பதக்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.11.2.1934 முதல் சிறுகதை ‘கொக்கரக்கோ’ ஆனந்த விகடனில் வெளிவந்தது.11.4.1937 நீதிக்கட்சியின் செயற்குழு உறுப்பினராதல்.10.2.1939 சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்.2.4.1957 தமிழ்நாடு சட்டமன்ற தி.மு.க. தலைமை ஏற்று எதிர்கட்சி தலைவராகுதல்.1.3.1967 அண்ணா முதல்வர் பொறுப்பேற்றல்.14.4.1987 ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமை தரல்.அண்ணா பற்றிய நூல்களில் ஆகச்சிறந்த நூலாக, ஆவணமாக உள்ளது.இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. படித்துவிட்டு வியந்து போனேன். அறிஞர் அண்ணாவின் ஆற்றல், உழைப்பு, பேச்சு, எழுத்து அளப்பரியது. காலத்தால் அழியாத பல சாதனைகளை நிகழ்த்திய செயல்வீரர், பேச்சு, எழுத்து இரண்டிலும் தனிமுத்திரை பதித்த பண்பாளர் என்பதை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் 61 படைப்புகளையும், ஆண்டு, புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உள்ளார்கள். சிறுகதைகள் 108 வரிசைப்படுத்தி உள்ளார் தேதி வாரியாக. நாவல்கள் 5, குறு நாவல்கள் 23, கட்டுரைகள் 84, கதைப் பாடல்கள் என அனைத்தையும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உள்ளார். அறிஞர் அண்ணா பற்றி முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல் இது.பேரறிஞர் அண்ணாவின் உரைநடையை தொல்காப்பியரின் விளக்கத்துடன் ஒப்பிட்டு விளக்கி உள்ளார்கள். சிறப்பு.இயைபு விளையாடும் மொழிநடை எடுத்துக்காட்டு மிகச் சிறப்பு,எதிர்க்கத் தெரியாத கோழை,
இங்கிதம் தெரியாத வாழை
இவள் பெயர் ஏழை. (செவ்வாழை பக். 42)புதுச் சொல்லாட்சியை உரைநடையில் படைப்புகளில் பயன்படுத்தி உள்ளார். வறண்ட மதியினர், காவியுடைக்காரர், கமண்டல மேந்திகள், கிழக்குரங்கு, பணம்பிடுங்கி, காமக்குரங்கு – இப்படி பல புதிய சொற்களைப் பயன்படுத்தி தமிழுக்கு உரம் சேர்த்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.இலக்கண நயம் மிக்க சொற்களை தனது படைப்புகளிலும், பேச்சுக்களிலும் மிக மிகவும் இயல்பாக, எளியவர்களுக்கும் எளிதாக புரியும் விதமாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் பேரறிஞர் அண்ணா என்பது நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்கள்.பேரறிஞர் அண்ணாவின் ஆளுமைத் தொடர்கள், காலத்தால் அழியாதவை, பல மேடைகளில் இன்னும் ஒலிப்பவை. அவற்றில் சில இதோ.விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு. பொதுவாழ்வு புனிதமானது, உண்மையாக விளங்கும் உயர்பண்பு தான் அதற்கு அடித்தளமானது. ஊருக்கு உபதேசம் என்று இல்லாமல், எழுதியபடி, பேசியபடி உண்மையாக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அதனால் தான் இன்றும் மனங்களில் வாழ்கிறார்
-- அண்ணாவின் மொழி ஆளுமை!
நூல் ஆசிரியர் : பேராசிரியர் வீ. ரேணுகாதேவி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இலக்கிய பதிப்பகம், வெளியிட்டோர் தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், 48, வட்டச் சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.
பக்கங்கள் : , விலை : ரூ.120*****நூலாசிரியர் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி அவர்கள் மொழியியல் துறையில் பேராசிரியராகவும், தலைவராகவும் 35 ஆண்டுகள் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தில் பணியாற்றியவர். உலகத் தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்த முனைவர் க. பசும்பொன் அவர்களின் மனைவி முகநூலிலும் இயங்கி வருபவர்.பேரறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி, ஓர் இரவு என்னும் இரு நாடகங்களும் ஒரு சில சிறுகதைகளையும் கொண்டு ஆய்வுசெய்து ஆய்வேடாக வழங்கி உள்ளார்கள். அண்ணாவின் மொழி ஆற்றலை கோபுரத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்துள்ளார்கள். பாரட்டுக்கள். கடின உழைப்பு, நல்ல ஆய்வு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அழியாப் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. அண்ணாவின் அளப்பரிய ஆற்றலுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.6 கட்டுரைகளாக வழங்கி உள்ளார். முன்னுரை, அண்ணா ஓர் அறிமுகம், அண்ணாவின் படைப்புகள், அண்ணாவின் மொழிநடை, அண்ணாவின் ஆளுமைத் தொடர்கள், நிறைவுரை. இறுதியாக ஆய்வுக்கு துணைநின்ற நூல்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து இந்நூலை உருவாக்கி உள்ளார்கள்.குள்ள உருவம், குறும்புப் பார்வை, விரிந்த நெற்றி, பரந்த மார்பு, கறை படிந்த பற்கள், கவலையில்லாத் தோற்றம், நறுக்கப்பட்ட மீசை, நகை தவழும் முகம், சீவாத தலை, சிறிதளவு வெளிவந்த தொப்பை, செருப்பில்லாத கால், பொருத்தமில்லாத உடைகள், இடுப்பில் பொடிமட்டை, கையில் வெற்றிலை பாக்குப் பொட்டலம் – இப்படி பேரறிஞர் அண்ணா அவர்களை நம் கண்முன் காட்சிப்படுத்திய வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன். நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையினர் அண்ணாவை பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வர்ணனையை வைத்தே அவரை உருவகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.பேரறிஞர் அண்ணாவின் பேச்சிலும், எழுத்திலும் எதுகை, மோனை சிறந்து விளங்கும். அவற்றை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார்கள்.பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும் நூலில் உள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளோடு ஒப்பிட்டு அவரின் ஆளுமையை விளக்கிய விதம் அருமை. அண்ணாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாள், மாதம், வருடம் என தெளிவான புள்ளி் விவரங்களுடன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்தரும் விதமாக தகவல் களஞ்சியமாக இந்த நூல் உருவாகி உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் வீ. ரேணுகாதேவி அவர்களுக்கு பாராட்டுகள். வாழ்க்கை நிகழ்வு நிரம்ப உள்ளன. பதக்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.11.2.1934 முதல் சிறுகதை ‘கொக்கரக்கோ’ ஆனந்த விகடனில் வெளிவந்தது.11.4.1937 நீதிக்கட்சியின் செயற்குழு உறுப்பினராதல்.10.2.1939 சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்.2.4.1957 தமிழ்நாடு சட்டமன்ற தி.மு.க. தலைமை ஏற்று எதிர்கட்சி தலைவராகுதல்.1.3.1967 அண்ணா முதல்வர் பொறுப்பேற்றல்.14.4.1987 ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமை தரல்.அண்ணா பற்றிய நூல்களில் ஆகச்சிறந்த நூலாக, ஆவணமாக உள்ளது.இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. படித்துவிட்டு வியந்து போனேன். அறிஞர் அண்ணாவின் ஆற்றல், உழைப்பு, பேச்சு, எழுத்து அளப்பரியது. காலத்தால் அழியாத பல சாதனைகளை நிகழ்த்திய செயல்வீரர், பேச்சு, எழுத்து இரண்டிலும் தனிமுத்திரை பதித்த பண்பாளர் என்பதை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் 61 படைப்புகளையும், ஆண்டு, புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உள்ளார்கள். சிறுகதைகள் 108 வரிசைப்படுத்தி உள்ளார் தேதி வாரியாக. நாவல்கள் 5, குறு நாவல்கள் 23, கட்டுரைகள் 84, கதைப் பாடல்கள் என அனைத்தையும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உள்ளார். அறிஞர் அண்ணா பற்றி முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல் இது.பேரறிஞர் அண்ணாவின் உரைநடையை தொல்காப்பியரின் விளக்கத்துடன் ஒப்பிட்டு விளக்கி உள்ளார்கள். சிறப்பு.இயைபு விளையாடும் மொழிநடை எடுத்துக்காட்டு மிகச் சிறப்பு,எதிர்க்கத் தெரியாத கோழை,
இங்கிதம் தெரியாத வாழை
இவள் பெயர் ஏழை. (செவ்வாழை பக். 42)புதுச் சொல்லாட்சியை உரைநடையில் படைப்புகளில் பயன்படுத்தி உள்ளார். வறண்ட மதியினர், காவியுடைக்காரர், கமண்டல மேந்திகள், கிழக்குரங்கு, பணம்பிடுங்கி, காமக்குரங்கு – இப்படி பல புதிய சொற்களைப் பயன்படுத்தி தமிழுக்கு உரம் சேர்த்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.இலக்கண நயம் மிக்க சொற்களை தனது படைப்புகளிலும், பேச்சுக்களிலும் மிக மிகவும் இயல்பாக, எளியவர்களுக்கும் எளிதாக புரியும் விதமாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் பேரறிஞர் அண்ணா என்பது நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்கள்.பேரறிஞர் அண்ணாவின் ஆளுமைத் தொடர்கள், காலத்தால் அழியாதவை, பல மேடைகளில் இன்னும் ஒலிப்பவை. அவற்றில் சில இதோ.விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு. பொதுவாழ்வு புனிதமானது, உண்மையாக விளங்கும் உயர்பண்பு தான் அதற்கு அடித்தளமானது. ஊருக்கு உபதேசம் என்று இல்லாமல், எழுதியபடி, பேசியபடி உண்மையாக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அதனால் தான் இன்றும் மனங்களில் வாழ்கிறார்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» தொல்காப்பியம் காட்டும் மகளிர் ஆளுமை ! நூல் ஆசிரியர் : பேராசிரியர், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» ஆளுமை வளர்க்க ஆத்திசூடி! நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» ஆளுமை வளர்க்க ஆத்திசூடி! நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|