தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை ஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.

Go down

கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை   ஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் !     நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி. Empty கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை ஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.

Post by eraeravi Wed Mar 04, 2020 11:19 pm

கீழடி’ அகழாய்வு
ஒரு வரலாற்றுப் பார்வை


ஆக்கியோன் : கீழடி வை. பாலசுப்பிரமணியம் ! 


நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி.

வெளியீடு : பாண்டிய நாடு தொன்மைப் பாதுகாப்புச் சங்கம்,
104, ஆசிரியர் தெரு, சிலைமான், மதுரை – 625 201.
பக்கம் : நூற்கொடை : ரூ. 100

*****
‘கீழடி’ என்ற சொல் இன்று உலகம் அறிந்த சொல்லாகி விட்டது. தமிழரின் தொன்மை, தமிழின் தொன்மை உலகிற்கு பறைசாற்றிய அகழாய்வு பற்றிய வரலாற்றுப் பார்வையை நூலாக்கி உள்ளார். தன் பெயரிலேயே ‘கீழடி’யை இணைத்துக்கொண்ட கீழடி வை. பாலசுப்பிரமணியம் அவர்கள் கீழடி பற்றிய வரலாறு உலகிற்கு தெரிய முழுமுதற் காரணமாக இருந்தவர். தொல்லியல் துறைக்கு உதவியவர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி கீழடி பற்றிய உண்மை வெளிவர காரணமாக இருந்துள்ளார் நூலாசிரியர் பாராட்டுகள்.
மேனாள் தலைமையாசிரியர் பி.பழனியப்பன், மேனாள் துணை இயக்குநர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மா. சத்தியமூர்த்தி, முனைவர் வெ. வேதாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளார்கள். திருவாளர்கள் மா. சத்தியமூர்த்தி, வெ. வேதாசலம் இருவரும் நான் பணிபுரிந்த திருமலை மன்னர் அரண்மனையில் பணிபுரிந்தவர்கள். இருவரையும் நன்கு அறிவேன். தொல்லியல் குறித்த புலமை மிக்கவர்கள். பொருத்தமானவர்களிடம் வாழ்த்துரை வாங்கியது சிறப்பு.
ஆய்வு நூலாக உள்ளது. பயன்பட்ட நூல்களின் பட்டியல்கள், கீழடி ஆய்வுக்கு நிலம் தந்த நல் உள்ளங்கள் பெயர் பட்டியல், 5ஆம் கட்ட ஆய்வு வரை பணிபுரிந்த தொல்லியல் அலுவலர்கள் அனைவரின் பெயர் பட்டியலும் நூலில் உள்ளது.
கீழடி பற்றிய நூல்கள் பல வரத் தொடங்கி விட்டன. ஆனால் இந்நூல் ஆய்வு நூலாக, கீழடி ஆய்வு எப்படி தொடங்கியது, யார் யார் நிலம் தந்து உதவினார்கள், ஆய்வில் பணிபுரிந்தவர்கள் என பல புள்ளிவிபரங்களுடன் வந்துள்ள நூலாக உள்ளது.
அகழாய்வு என்றால் என்ன? எப்படி தொடங்குகின்றனர்? இந்திய தொல்லியல் பரப்பியல் துறை A.S.I. என்பதன் விளக்கம், ஆய்வின் வகைகள் என விரிவாக விளக்கம் தந்துள்ளார். தொல்லியல் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
1954-55ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் ஆய்வு தொடங்கி 2017-2018 கொடுமணல் ஆய்வு வரை, வரிசையாக நடந்த தொல்லியல் ஆய்வுகளை பட்டியலிட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அகழாய்வுகள் கொற்கை 1968-1969 தொடங்கி, கீழடி 2017, 2018, 2018-2019 வரை வருடங்களுடன் ஆய்வு நடந்த ஊர்களின் பட்டியல் உள்ளது.
நூலாசிரியரின் பல்லாண்டு உழைப்பு தேனீயைப் போல உழைத்து தேன் சேகரிப்பது போல சேகரித்து, அகழ்வாய்வின் வழிமுறைகள் நோக்கத்தை பயனை மிக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார், பாராட்டுகள்.
கீழடி எங்கு உள்ளது? மதுரையிலிருந்து காமராஜர் சாலை வழியே 12 கி.மீ, தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 49, இராமேசுவரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. வைகையின் தென்கரையில் சுமார் 2 கி.மீ, தொலைவில் இந்தத் தொன்ம மேடு அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், கொந்தகை பிர்காவிற்குள் இது அடங்கும். அருகிலுள்ள பிற ஊர்கள் மதுரை மாவட்ட சிலைமான் – கிழக்கே மணலூர் ஆகும்.
கீழடி எங்குள்ளது என்பதை மிகத் தெளிவாக எழுதிஉள்ளார்? நூலின் மூலம் படிக்கும் வாசகரை கீழடிக்கே அழைத்துச் சென்று காட்டி விடுகிறார். உலகப்புகழ்பெற்ற கீழடி 1974இல் மாணவர் சிலர் அவர்கள் வயலில் கிணறு வெட்டும்போது, பெரும் செங்கற்கள் கிடைப்பதாகச் சொன்னார்கள். கீழடி அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருந்த நூலாசிரியர் வை. பாலசுப்பிரமணியம் அவர்கள், மாணவர்கள் சொன்ன இடத்தில் சென்று பார்த்து சுட்ட செங்கல், கருப்பு சிவப்பு குவளை, சுட்ட மண்ணாலான மனிதத் தலை, ஒரு நாணயம், மண்டை ஓடு, கருப்புமணி ஆகியவற்றைக் கண்டெடுத்து பணியாற்றும் பள்ளியிலேயே காட்சிக்கூடம் அமைத்து காட்சிப்படுத்தி உள்ளார். தலைமையாசிரியரும் அனுமதி வழங்கி உள்ளார்.
தொல்லியல் ஆர்வம் காரணமாக திருமலை மன்னர் அரண்மனையில் நடந்த தொல்லியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பின்னர் கீழடி பற்றிய தகவல் தர் காப்பாட்சியர் வேதாசலம் அவர்கள் கீழடி வந்து பார்க்க, இப்படித்தான் தொடங்கியது கீழடி ஆய்வுக்கான தொடக்கப்புள்ளி. இனிய நண்பர் வேதாசலம் அவர்கள், கண்காணிப்பு தொல்லியலாளர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை நூலாசிரியரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்க 1974ல் தொன்மங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு 201-2014ல் சென்று காட்டி உள்ளார். இப்படி கீழடி ஆய்வு தொடங்கிய வரலாற்றை நம் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர் கீழடி வை. பாலசுப்பிரமணியம்.
கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணங்களில் உள்ளன. சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், விளையாட்டு கருவிகள், இரும்பு ஆயுதங்கள், சங்கு வளையல் துண்டுகள், சிவப்பு வடிகட்டிகள், கருப்பு பாண்டம், சதுரங்கக் காய்கள், வேலைபாடுள்ள பானைகள், முக்குள்ள பானைகள், குழாய் இணைப்பு, பாண்டத்தில் காணப்பெறும் பெயர்கள், தொன்ம அணிகள், நாணயம், முத்திரைகள், தமிழ் பொறிக்கப்ப்ட்ட பானை ஓடுகள், குவளைகள், வட்டச்சில்லுகள், எலும்பினாலான அம்பு முறைகள், அஞ்சனக் கோல், தங்கத்தாலானவை, இரும்புப் பொருட்கள், காளை உருவம் அனைத்தும் புகைப்படங்களுடன் விளக்கங்களுடன் பட்டியலிட்டு எழுதி உள்ளார்.

கீழடியில் தமிழன், தமிழ் எழுத்தறிவோடு அறிவியல் அறிவோடு கட்டிட கலையோடு, தொழில்நுட்ப அறிவோடு அணிகலன்களோடு விளையாட்டு கருவிகளோடு போர்க்கருவிகளோடு பொற்கால வாழ்க்கை வாழ்ந்துள்ளான் என்பதையும்,உலகின் முதல் மொழி தமிழ் என்பதையும் இந்நூல் புலப்படுத்தி உள்ளது. பாராட்டுகள்.
இந்த நூலை மதிப்புரைக்காக என்னிடம் வழங்கிய இனிய நண்பர் சுழற்ச்சங்கம் நாகராசன் அவர்களுக்கு நன்றி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அழகுத்தமிழ் கீழடி! ஆக்கம் : நாகராஜ் முருகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொடுவா மீசை! அருவா பார்வை! நூல் ஆசிரியர் : திருமதி கலா விசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum