தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
Page 1 of 1
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
நாட்டுப் பற்று!
நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.
-மு.சஹானா மர்லியா, கோயம்புத்தூர்.
dinamani
நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.
-மு.சஹானா மர்லியா, கோயம்புத்தூர்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
அறிவுத் தாகம்!
1740-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதான் இருந்ததாம். இங்கிலாந்திலிருந்துதான் அங்கு புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு அமைப்பு இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனத்தில் தோன்றியது.
அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து, இரண்டே ஆண்டுகளில் பெரிய நூலகமாக அது உருவானது. அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள். அதன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன.
நூலகம் தோன்றக் காரணமாக இருந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
-ஆச்சா, செவல்குளம்.
dinamani
1740-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதான் இருந்ததாம். இங்கிலாந்திலிருந்துதான் அங்கு புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு அமைப்பு இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனத்தில் தோன்றியது.
அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து, இரண்டே ஆண்டுகளில் பெரிய நூலகமாக அது உருவானது. அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள். அதன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன.
நூலகம் தோன்றக் காரணமாக இருந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.
-ஆச்சா, செவல்குளம்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
முதல் கடமை!
கொல்கத்தாவில் (அப்போது கல்கத்தா) பிளேக் நோய் பரவி, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருந்தார்கள். விவேகானந்தரும் அவரது சீடர்களும் நோயாளிகளைத் தேடி, ஓடி ஓடி சிகிச்சை செய்து, சேவை செய்து கொண்டிருந்தனர்.
ஒரு சீடர் கவலையுடன் விவேகானந்தரிடம், ""சுவாமி, இந்தத் தொண்டுக்குப் பணம் நிறையச் செலவாகும். நம்மிடம் இருக்கும் பணம் போதாது. பணம் இல்லாமல் இவ்வளவு பெரிய காரியம் எப்படி நடைபெறும்?'' என்று கேட்டார்.
உடனே விவேகானந்தர், ""பணம் தேவைப்பட்டால், பேலூர் மடத்தை விற்று விடுவோம். இந்த சேவைதான் நமது முதல் கடமை! ஊரில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்து விழும்போது, மடத்தில் கைகட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க என்னால் முடியாது...'' என்றார்.
-இ.ராஜு நரசிம்மலு, சென்னை.
dinamani
கொல்கத்தாவில் (அப்போது கல்கத்தா) பிளேக் நோய் பரவி, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருந்தார்கள். விவேகானந்தரும் அவரது சீடர்களும் நோயாளிகளைத் தேடி, ஓடி ஓடி சிகிச்சை செய்து, சேவை செய்து கொண்டிருந்தனர்.
ஒரு சீடர் கவலையுடன் விவேகானந்தரிடம், ""சுவாமி, இந்தத் தொண்டுக்குப் பணம் நிறையச் செலவாகும். நம்மிடம் இருக்கும் பணம் போதாது. பணம் இல்லாமல் இவ்வளவு பெரிய காரியம் எப்படி நடைபெறும்?'' என்று கேட்டார்.
உடனே விவேகானந்தர், ""பணம் தேவைப்பட்டால், பேலூர் மடத்தை விற்று விடுவோம். இந்த சேவைதான் நமது முதல் கடமை! ஊரில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்து விழும்போது, மடத்தில் கைகட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க என்னால் முடியாது...'' என்றார்.
-இ.ராஜு நரசிம்மலு, சென்னை.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
சிக்கனம்!
ஒருமுறை தந்தை பெரியார் கோவையிலிருந்து ஈரோடு வருவதற்காக ஜி.டி.நாயுடு, பெரியாருக்கு முதல் வகுப்பில் ரயிலில் செல்ல டிக்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரும் அதே ரயிலில் வேறு ஒரு பெட்டியில் பயணம் செய்து வந்தார்.
அடுத்த ஸ்டேஷன் வந்ததும், ஜி.டி.நாயுடு, பெரியாரை முதல் வகுப்புப் பெட்டியில் தேடினார். அங்கு அவரைக் காணாமல் அடுத்தடுத்த பெட்டிகளில் தேட ஆரம்பித்தார்.தேடிக் கொண்டு வருகையில், மூன்றாவது வகுப்பு பெட்டியில் பெரியார் இருப்பதைப் பார்த்து, ""ஏன்? முதல் வகுப்பு டிக்கெட்தான் வாங்கிக் கொடுத்தேனே... அதில் வராமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து வருகிறீர்களே!'' என்று ஆச்சரியப்பட்டார்.
""நாயுடு சார், இந்தப் பெட்டியும் நாம் போக வேண்டிய இடத்துக்குத்தானே போகிறது. எதற்கு வீண் செலவு என்று டிக்கெட் பரிசோதகரிடம் முதல் வகுப்பு டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கிக் கொண்டேன்.. மீதிப் பணமும் பெற்றுக் கொண்டேன்! நாமும் சாதாரண மனிதர்கள்தானே சார்...'' என்றார் பெரியார்.
பெரியாரின் சிக்கனத்தைக் கண்டு நாயுடு வியந்து போனார்.
-கலைப்பித்தன், கடலூர்.
dinamani
ஒருமுறை தந்தை பெரியார் கோவையிலிருந்து ஈரோடு வருவதற்காக ஜி.டி.நாயுடு, பெரியாருக்கு முதல் வகுப்பில் ரயிலில் செல்ல டிக்கெட் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரும் அதே ரயிலில் வேறு ஒரு பெட்டியில் பயணம் செய்து வந்தார்.
அடுத்த ஸ்டேஷன் வந்ததும், ஜி.டி.நாயுடு, பெரியாரை முதல் வகுப்புப் பெட்டியில் தேடினார். அங்கு அவரைக் காணாமல் அடுத்தடுத்த பெட்டிகளில் தேட ஆரம்பித்தார்.தேடிக் கொண்டு வருகையில், மூன்றாவது வகுப்பு பெட்டியில் பெரியார் இருப்பதைப் பார்த்து, ""ஏன்? முதல் வகுப்பு டிக்கெட்தான் வாங்கிக் கொடுத்தேனே... அதில் வராமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து வருகிறீர்களே!'' என்று ஆச்சரியப்பட்டார்.
""நாயுடு சார், இந்தப் பெட்டியும் நாம் போக வேண்டிய இடத்துக்குத்தானே போகிறது. எதற்கு வீண் செலவு என்று டிக்கெட் பரிசோதகரிடம் முதல் வகுப்பு டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கிக் கொண்டேன்.. மீதிப் பணமும் பெற்றுக் கொண்டேன்! நாமும் சாதாரண மனிதர்கள்தானே சார்...'' என்றார் பெரியார்.
பெரியாரின் சிக்கனத்தைக் கண்டு நாயுடு வியந்து போனார்.
-கலைப்பித்தன், கடலூர்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
இரக்கம்!
1951-ஆம் ஆண்டு தெலுங்கானா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே பயங்கரமான கலவரம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது வினோபாஜி தெலுங்கானா பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். தெலுங்கானா கலவரத்துக்கு அடிப்படைக் காரணம், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்காததுதான் என்ற உண்மையைக் கண்டார்.
போச்சம்பள்ளி என்ற கிராமத்தில் வினோபாஜி தங்கியிருந்தபோது, பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும், சிலர் அவரைச் சந்தித்து, தாங்கள் விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்கள் என்றும் உழைத்துப் பிழைக்க தங்களுக்கு நிலம் ஏதும் இல்லை என்றும் கூறி வருத்தப்பட்டார்கள்.
வினோபாஜி கூட்டத்தினரை நோக்கி, ""இந்த விவசாயத் தொழிலாளர்களின் தாகம் தீர வழி சொல்லக் கூடியவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
உடனே, ஒரு நில உரிமையாளர் எழுந்து, ""என்னுடைய நிலங்களில் 100 ஏக்கரை நான் உடனடியாகக் கொடுக்கத் தயார்...'' என்றார்.
அவர் தந்த 100 ஏக்கர் நிலமும் உடனடியாக அந்த விவசாயத் தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
வினோபாஜியின் மனதில் அப்போது ஏற்பட்ட அந்த இரக்கம்தான் "பூமிதான இயக்கம்' என்று உருவாகி நாடெங்கும் வளர்ந்தது.
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani
1951-ஆம் ஆண்டு தெலுங்கானா பகுதியில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே பயங்கரமான கலவரம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது வினோபாஜி தெலுங்கானா பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். தெலுங்கானா கலவரத்துக்கு அடிப்படைக் காரணம், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்காததுதான் என்ற உண்மையைக் கண்டார்.
போச்சம்பள்ளி என்ற கிராமத்தில் வினோபாஜி தங்கியிருந்தபோது, பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும், சிலர் அவரைச் சந்தித்து, தாங்கள் விவசாயத் தொழிலை நம்பி வாழ்பவர்கள் என்றும் உழைத்துப் பிழைக்க தங்களுக்கு நிலம் ஏதும் இல்லை என்றும் கூறி வருத்தப்பட்டார்கள்.
வினோபாஜி கூட்டத்தினரை நோக்கி, ""இந்த விவசாயத் தொழிலாளர்களின் தாகம் தீர வழி சொல்லக் கூடியவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
உடனே, ஒரு நில உரிமையாளர் எழுந்து, ""என்னுடைய நிலங்களில் 100 ஏக்கரை நான் உடனடியாகக் கொடுக்கத் தயார்...'' என்றார்.
அவர் தந்த 100 ஏக்கர் நிலமும் உடனடியாக அந்த விவசாயத் தொழிலாளர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
வினோபாஜியின் மனதில் அப்போது ஏற்பட்ட அந்த இரக்கம்தான் "பூமிதான இயக்கம்' என்று உருவாகி நாடெங்கும் வளர்ந்தது.
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
பணம்!
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.
இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், வானெலியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரியான நேரத்துக்கு, உதவியாளருடன் வானொலி நிலையத்துக்குப் புறப்பட்டார் சர்ச்சில். அப்போது அவர் செல்ல இருந்த வாகனம் பழதடைந்திருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்துக்கு வானொலி நிலையம் போய்ச் சேரவேண்டுமே என்ற கவலையில், அந்த வழியே வந்த வாடகைக் கார் ஒன்றைக் கைகாட்டி நிறுத்தினார் சர்ச்சிலின் உதவியாளர்.
டாக்ஸி டிரைவரோ, ""டாக்ஸி வராது சார்... இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்காக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன்...'' என்றார்.
சர்ச்சிலுக்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. அந்த டிரைவருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டுமென்று எண்ணி, தனது பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினார்.
அதை அவசர அவசரமாக வாங்கித் தனது சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்ட டிரைவர், ""சீக்கிரம் வண்டியில் ஏறுங்க... சர்ச்சில் பேச்சாவது ஒண்ணாவது, எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள்... அங்கே கொண்டு போய்விடுகிறேன்'' என்றாரே பார்க்கலாம்!
பணம் படுத்தும் பாட்டைப் பார்த்து, சர்ச்சில் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
-முக்கிமலை நஞ்சன்.
dinamani
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.
இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், வானெலியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரியான நேரத்துக்கு, உதவியாளருடன் வானொலி நிலையத்துக்குப் புறப்பட்டார் சர்ச்சில். அப்போது அவர் செல்ல இருந்த வாகனம் பழதடைந்திருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்துக்கு வானொலி நிலையம் போய்ச் சேரவேண்டுமே என்ற கவலையில், அந்த வழியே வந்த வாடகைக் கார் ஒன்றைக் கைகாட்டி நிறுத்தினார் சர்ச்சிலின் உதவியாளர்.
டாக்ஸி டிரைவரோ, ""டாக்ஸி வராது சார்... இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்காக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன்...'' என்றார்.
சர்ச்சிலுக்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. அந்த டிரைவருக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டுமென்று எண்ணி, தனது பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினார்.
அதை அவசர அவசரமாக வாங்கித் தனது சட்டைப்பைக்குள் திணித்துக் கொண்ட டிரைவர், ""சீக்கிரம் வண்டியில் ஏறுங்க... சர்ச்சில் பேச்சாவது ஒண்ணாவது, எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள்... அங்கே கொண்டு போய்விடுகிறேன்'' என்றாரே பார்க்கலாம்!
பணம் படுத்தும் பாட்டைப் பார்த்து, சர்ச்சில் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
-முக்கிமலை நஞ்சன்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
தமிழ்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
அவருடைய தாத்தா, ""சாமிநாதா, நீ ஆங்கிலம் படிக்க விரும்புகிறாயா, சமஸ்கிருதம் படிக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டார்.
அதற்கு சுவாமிநாதர், ""நான் தமிழ் படிக்க விரும்புகிறேன்..'' என்றார்.
தாத்தா உடனே, ""நீ ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். இரண்டும் இல்லாமல் தமிழ் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறாயே?'' என்று கேட்டார்.
சுவாமிநாதரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது, ""தாத்தா, ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். தமிழ் படித்தால் இரண்டு லோகங்களிலும் பெருமையுடன் வாழலாம்!'' என்று கூறினார்.
இந்தத் தமிழ்ப்பற்றினால்தான் அழியும் நிலையில் இருந்த எண்ணற்ற சாகாவரம் பெற்ற நூல்களை அச்சுப் பதிப்பேற்றி அழியாமல் காப்பாற்றினார் உ.வே.சாமிநாதய்யர்.
-கி.கிருஷ்ணசாமி, தூத்துக்குடி.
dinamani
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
அவருடைய தாத்தா, ""சாமிநாதா, நீ ஆங்கிலம் படிக்க விரும்புகிறாயா, சமஸ்கிருதம் படிக்க விரும்புகிறாயா?'' என்று கேட்டார்.
அதற்கு சுவாமிநாதர், ""நான் தமிழ் படிக்க விரும்புகிறேன்..'' என்றார்.
தாத்தா உடனே, ""நீ ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். இரண்டும் இல்லாமல் தமிழ் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறாயே?'' என்று கேட்டார்.
சுவாமிநாதரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது, ""தாத்தா, ஆங்கிலம் படித்தால் பூலோகத்தில் பெருமையுடன் வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேலோகத்தில் பெருமையுடன் வாழலாம். தமிழ் படித்தால் இரண்டு லோகங்களிலும் பெருமையுடன் வாழலாம்!'' என்று கூறினார்.
இந்தத் தமிழ்ப்பற்றினால்தான் அழியும் நிலையில் இருந்த எண்ணற்ற சாகாவரம் பெற்ற நூல்களை அச்சுப் பதிப்பேற்றி அழியாமல் காப்பாற்றினார் உ.வே.சாமிநாதய்யர்.
-கி.கிருஷ்ணசாமி, தூத்துக்குடி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
பதில்
நேருஜி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தந்தை மோதிலால் நேரு, வாரம் ஒருமுறை அவருக்குப் பணம் அனுப்புவார்.
ஒருமுறை நேரு, மேலும் பணம் தேவை என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார்.
கடிதத்தைக் கண்ட மோதிலால் நேரு, இரண்டாம் முறையாகப் பணம் கேட்கிறானே பிள்ளை, என்ன செலவு செய்கிறானோ? என்ற எண்ணத்தில்,
""முன்பு அனுப்பிய பணத்துக்குக் கணக்கு அனுப்பவும்..'' என்று கடிதம் போட்டார்.
கடிதத்தைப் படித்த நேரு, பதில் கடிதம் அனுப்பினார். அந்தப் பதிலைக் கண்டதும் மோதிலால் நேரு மறுவார்த்தை பேசாமல் மகன் கேட்ட பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தார். தந்தை அப்படிச் செய்வதற்கு நேரு அனுப்பிய பதில் இதுதான் -
""என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னிடம் கணக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்பிக்கையில்லாத பட்சத்தில் நான் அனுப்பும் கணக்கினால் உங்களுக்கு பலனில்லை..!''
-முக்கிமலை நஞ்சன்.
dinamani
நேருஜி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தந்தை மோதிலால் நேரு, வாரம் ஒருமுறை அவருக்குப் பணம் அனுப்புவார்.
ஒருமுறை நேரு, மேலும் பணம் தேவை என்று தந்தைக்குக் கடிதம் எழுதினார்.
கடிதத்தைக் கண்ட மோதிலால் நேரு, இரண்டாம் முறையாகப் பணம் கேட்கிறானே பிள்ளை, என்ன செலவு செய்கிறானோ? என்ற எண்ணத்தில்,
""முன்பு அனுப்பிய பணத்துக்குக் கணக்கு அனுப்பவும்..'' என்று கடிதம் போட்டார்.
கடிதத்தைப் படித்த நேரு, பதில் கடிதம் அனுப்பினார். அந்தப் பதிலைக் கண்டதும் மோதிலால் நேரு மறுவார்த்தை பேசாமல் மகன் கேட்ட பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தார். தந்தை அப்படிச் செய்வதற்கு நேரு அனுப்பிய பதில் இதுதான் -
""என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், என்னிடம் கணக்கு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி நம்பிக்கையில்லாத பட்சத்தில் நான் அனுப்பும் கணக்கினால் உங்களுக்கு பலனில்லை..!''
-முக்கிமலை நஞ்சன்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
நல்ல அரிசி!
காமராசர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
தன்னுடைய உதவியாளர் வைரவனிடம், ""இந்த வீட்ல நாம ரெண்டு பேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேஷன் கடையில வாங்கிக்கோ. ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம்ம சாப்பாடு!'' என்றார்.
""ரேஷன்ல வாங்குற அரிசி ஒரு மாதிரி வாடை வீசுதுய்யா... வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார் வைரவன்.
இதைக் கேட்ட காமராசருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
""முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியைச் சாப்பிடணும்! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ, அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார்.
-ஆச்சா, செவல்குளம்.
dinamani
காமராசர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.
தன்னுடைய உதவியாளர் வைரவனிடம், ""இந்த வீட்ல நாம ரெண்டு பேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேஷன் கடையில வாங்கிக்கோ. ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம்ம சாப்பாடு!'' என்றார்.
""ரேஷன்ல வாங்குற அரிசி ஒரு மாதிரி வாடை வீசுதுய்யா... வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார் வைரவன்.
இதைக் கேட்ட காமராசருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
""முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியைச் சாப்பிடணும்! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ, அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம்!'' என்றார்.
-ஆச்சா, செவல்குளம்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
நாசூக்கு!
ஒருமுறை கலைவாணர் இல்லத் திருமண விழாவில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கலைவாணரின் திரையுலக நண்பர்கள் மற்றும் ஏராளமான பேர் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கலைவாணரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சோற்றில் இருந்த கல்லை நறுக்கென்று கலைவாணர் கடித்துவிட்டார்.
அந்தக் கல்லை கையில் எடுத்துக் கொண்டு, சமையல்காரரைக் கூப்பிட்டார்.
அவர் வந்ததும், ""தம்பி, உன் முதலாளியை மட்டும் தனியாகக் கவனிக்கிறது மத்தவங்களை அலட்சியப்படுத்துவது மாதிரியில்லே இருக்கும்! இப்படிச் செய்யலாமா? ஒரு விருந்துன்னா எல்லோரையும் சமமா, ஒன்னு போலக் கவனிக்கணும். அவங்களுக்கும் ஆளுக்கு இதமாதிரி கல்லைப் போடுப்பா!''
என்று தன் சோற்றில் கிடந்த கல்லைக் காட்டினார்.
நகைச்சுவையோடு நாசூக்காக சமையல்காரரின் தவறை, இப்படிச் சுட்டிக் காட்டினார் கலைவாணர்.
-க.பரமசிவன், மதுரை.
dinamani
ஒருமுறை கலைவாணர் இல்லத் திருமண விழாவில் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கலைவாணரின் திரையுலக நண்பர்கள் மற்றும் ஏராளமான பேர் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கலைவாணரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது சோற்றில் இருந்த கல்லை நறுக்கென்று கலைவாணர் கடித்துவிட்டார்.
அந்தக் கல்லை கையில் எடுத்துக் கொண்டு, சமையல்காரரைக் கூப்பிட்டார்.
அவர் வந்ததும், ""தம்பி, உன் முதலாளியை மட்டும் தனியாகக் கவனிக்கிறது மத்தவங்களை அலட்சியப்படுத்துவது மாதிரியில்லே இருக்கும்! இப்படிச் செய்யலாமா? ஒரு விருந்துன்னா எல்லோரையும் சமமா, ஒன்னு போலக் கவனிக்கணும். அவங்களுக்கும் ஆளுக்கு இதமாதிரி கல்லைப் போடுப்பா!''
என்று தன் சோற்றில் கிடந்த கல்லைக் காட்டினார்.
நகைச்சுவையோடு நாசூக்காக சமையல்காரரின் தவறை, இப்படிச் சுட்டிக் காட்டினார் கலைவாணர்.
-க.பரமசிவன், மதுரை.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - சுவையான சம்பவங்கள்
» பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -சுவையான நிகழ்வுகள் (தொடர் பதிவு)
» புகழ் பொற்றவர்கள் வாழ்வில் ..... (:ஒட
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - சுவையான சம்பவங்கள்
» பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
» அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -சுவையான நிகழ்வுகள் (தொடர் பதிவு)
» புகழ் பொற்றவர்கள் வாழ்வில் ..... (:ஒட
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|