தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்பத் தமிழே இறை!

5 posters

Go down

இன்பத் தமிழே இறை! Empty இன்பத் தமிழே இறை!

Post by Dr Maa Thyagarajan Wed Feb 02, 2011 6:25 pm

இன்பத் தமிழே இறை!

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]


மொழி என்பது................
கருதியதை வெளிப்படுத்த உதவிடும் கருவி!
அந்த வகையில் செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!
சலசலத்து வரும் சங்கீத ஓசையுடன்
தேனின் சுவையையும் சேர்த்துப் பாய்ந்து
செவி வழி நுழையும் வரை அஃது அருவி!
பின்னர்ச் சிந்தையில் நிறைந்து- உறைந்து
நிலைத்திருக்கும்- இனித்திருக்கும்
கடல் அது!
வங்கக்கடல் அன்று தங்கக் கடல்- நம்
மனங்களில் தங்க வந்த கடல்

இனியதாய்- எளியதாய்- எழில்தாய்- நம்
இதயத்தமர்ந்த இன்னொருதாய்- நம்
எல்லார்க்கும் ஒரே தாய்! தமிழ்தாய்!
அன்னை தமிழை ஆயிரம் புலவர்
ஆயிரம் வகையில் ஆயிரம் பாக்களில்
ஏற்றிப் போற்றினும் இன்னும் புதிதாய்ப்
பாடுதற்கு,
வற்றாத சிறப்பு கொள் மாணிக்கப் பேழை!
ஒண்டமிழ் மொழியை உரைப்பவர், கேடபவர்
எல்லாருக்கும்-
வாழும் நாட்கள் வளர்ந்திடும் என்பதால்
தமிழே அமிழ்தம்! அமிழ்தம் என்பதும்
அருந்தமிழ் மொழியே!
அதனால் தான்
திரும்பத் திரும்ப அமிழ்து அமிழ்து என்றால்
தமிழ் தமிழ் என்றே ஒலித்திடும் வகையில்
பெயர் அமையப் பெற்றது, நம்மொழி! – அதுவே
செம்மொழி !
தமிழ்போல் பண்டைய பெருமை வாய்ந்த மொழிகளில்
பல – இன்று,
உலக வழக்கு இழந்து ஒழிந்தன!
அவையெல்லாம்,
பண்டைய செல்வர்! இன்று இல்லாதவர்!
இன்று சிறப்புற இருக்கும் சிலமொழிகளே
பழமையில் இல்லாதோர்! புதிய செல்வர்கள்!
பழய பெருமை – புதிய பொலிவு – எல்லாம் பெற்று
என்றும் செல்வராய் – அழியாச் செல்வராய்
இருப்பது தமிழ்தான்! – இலக்கியவளம்
சிறப்பது தமிழ் தான்!

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என்னும் இலக்கணம் ஐந்தில்
பொருள் இலக்கணம் என்பது
மற்றைய மொழிகளில் இல்லாத – தமிழின் தனி இலக்கணம்
அதனால், தமிழே பொருளுடைய மொழி!
ஏனைய மொழிகள் பொருளற்ற மொழிகள்!
தமிழில் வழிபாடு
கூடாது! எனக் கூறுவோரை – நான்
வெறுப்பதும் இல்லை ! மறுப்பதும் இல்லை !
தமிழால் வழிபடுவதன் மேலாகத்-
தமிழையே வழிபட வேண்டம் என்பதே எனக்குப்
பிடிக்கும் மதம்!
இதனை மறுப்பவர் மதமே! யானைக்குப் பிடிக்கும் மதம்!
அவன் அருளால் தான் அவன் தான் வணங்க முடியும்
-என்பது திருவாசகம்!
தமிழ்மொழியால் தானே தமிழ்மொழி நய வழிபட முடியும்
என்பது ஒரு வாசகம்!
தமிழ் வழிபாடு இறை! – தமிழ் வழிபாட்டு மொழி!
இதனை அறியாதார் – ஏதும் அறியாதார்
அதனால்
அறியாத மானிடரிடம் எனக்கு வியப்பும் இல்லை.
வெறுப்பும் இல்லை!
இரக்கம் மட்டுமே எப்போதும் உண்டு!
அகவிருள் போக்க – அறிவொளி ஆக்க
தகதகத்து வரும் தமிழ் ஒரு ஞாயிறு !
இனிய பால் ஒளியை இதமாய் வழங்கும்
கனிந்த தமிழ் ஒரு கவின் நிலா – திங்கள்!

உணர்வுடன் தமிழை உச்சரிக்கும் உதடுகளை எல்லாம்
செவ்வாயாக்கும் தமிழ் ஒரு செவ்வாய்!
புதுமைக் கெல்லாம் புதுமையாய்ப் பொலியும்
தமிழும் புதன் தான்!

கற்பிக்கும் ஆசானுக்கும் கற்பிக்கின்ற ஆசான்
குருவுக்கும் குரு என்பதால் தமிழ் வியாழன்!
தங்கமும் தமிழ்தான் தங்கத்தை அடுத்து
இங்குச் சிறப்புடன் இயங்கும் வெள்ளியும் தமிழ்தான்

சனியை வெல்லும் ஒளிமிகு தனித்தமிழ்
மொழியைக் கண்டு சனியும் அஞ்சும்
என்ற வகையில் தமிழர்களுக்கு
எல்லா நாட்களும் எப்போதும் தமிழே!

எதனையும் இயம்பும் வகையில்
வேர்ச்சொல் மிகுதியாய்ப் பெற்றதுதமிழே என்பதால்
எதனைக் கூறவும் எந்த நிலையிலும்
பிறமொழிச் சொற்களைப் பிச்சை பெறுவதற்காகக்
கையேந்தியதில்லை.
பிச்சை எடுக்கின்ற பிறமொழிக்கெல்லாம் சொற்களை
வழங்கும் வள்ளல் வண்டமிழ் என்பதால்
என் தமிழ்,
பிச்சை எடுக்காத அட்சய பாத்திரம்!
தழைத்திடும் மொழிப்பயிர் காக்க
இலக்கணவேலி தமிழுக்கு இருப்பது போல்
வேறெந்த மொழிக்கும்
இல்லை என்பதும் என் தமிழின் சிறப்பே!
தமிழில்,
அறம் உண்டு, பொருள் உண்டு, இன்பம் உண்டு

இம்மூன்றையும் விளக்கும் முப்பால் நூல் திருக்குறள் உண்டு!
அகம் உண்டு, புறம் உண்டு அனைத்தும் உண்டு!
இல்லாத சிறப்பில்லை தமிழில்,
என்றாலும் தமிழே! உன்னைப் போற்றிட புகழ்வதற்குச்
சொற்கள் போதவில்லை என்பே குறை!
நாளங்காடி, ஆல்லங்காடி, பேரங்காடி, சிற்றல் காடி என எல்லாக்கடைகளிலும் தேடியும் உன் புகழ் போற்றுதற்குப் போதிய சொற்களை வாங்கவும் இயலவில்லை !
என்னும் இந்தக்குறை தவிர வேறு இல்லை தமிழில் குறை!
தமிழே உன்னிடம் மற்ற அனைத்துமே நிறை; ஏனெனில்
தாயே ! நீயே இறை ! நின்திருக்குறளே எம் மறை!
ஏனைய நின் இலக்கியங்கள் எல்லாம் இன்பத்தேன் – நறை;
என வாழ்வதே எம் வாழ்வியல் முறை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

இன்பத் தமிழே இறை! Empty Re: இன்பத் தமிழே இறை!

Post by கவிக்காதலன் Thu Feb 03, 2011 2:20 am

//செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!//

தமிழ்மொழியின் சிறப்பு அருமை!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்பத் தமிழே இறை! Empty Re: இன்பத் தமிழே இறை!

Post by சிசு Thu Feb 03, 2011 2:33 pm

அருமையான சொல்பிரவாகம்... தமிழன்னைக்கு இன்னுமோர் மணிமாலை.

//அகவிருள் போக்க – அறிவொளி ஆக்க
தகதகத்து வரும் தமிழ் ஒரு ஞாயிறு !//

அதேதான்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

இன்பத் தமிழே இறை! Empty Re: இன்பத் தமிழே இறை!

Post by RAJABTHEEN Thu Feb 03, 2011 7:28 pm

இத்தனை அழகியகருத்துக்களடங்கியவரிகளுக்கும் என்னால் ஒருவரியில் பாராட்டு முடியாது சார் உங்களுக்கு என் ஒரு கோடி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன் தொடர்ந்து தாருங்கள் சார்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இன்பத் தமிழே இறை! Empty Re: இன்பத் தமிழே இறை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 03, 2011 7:29 pm

RAJABDEEN wrote:இத்தனை அழகியகருத்துக்களடங்கியவரிகளுக்கும் என்னால் ஒருவரியில் பாராட்டு முடியாது சார் உங்களுக்கு என் ஒரு கோடி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன் தொடர்ந்து தாருங்கள் சார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்பத் தமிழே இறை! Empty Re: இன்பத் தமிழே இறை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 03, 2011 7:30 pm

கவிக்காதலன் wrote://செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!//

தமிழ்மொழியின் சிறப்பு அருமை!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்பத் தமிழே இறை! Empty Re: இன்பத் தமிழே இறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum