தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

3 posters

Go down

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம் Empty அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

Post by RAJABTHEEN Fri Feb 11, 2011 3:31 am

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம். அதன் அவசியம் அறிந்தே, `இல்லங்கள் தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம்` என்றார் அறிஞர் அண்ணா. இன்று உலகம் முழுவதும் நூலகங்கள் பெருகி உள்ளன. நூலக பெருமையை உலகோர் உணர்ந்ததையே இது காட்டுகிறது.

எகிப்தியர்கள் கி.மு. 300 ஆண்டில் அலக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளை சேகரித்து வைத்திருந்ததே முதல் நூலகமாக அறியப்படுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசர் பல நூலகங்கள் உருவாக பெருமுயற்சி மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.

***

அமெரிக்காவில் உள்ள `லைப்ரரி ஆப் காங்கிரஸ்’ நூலகமே உலகின் மிகப் பெரிய நூலகமாகும். 1800-ல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத்துப் பிரதிகள், லட்சக்கணக்கான நூல்களும், ஒலி- ஒளி நாடாக்களும் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லி நூலகமே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.

இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைய நூலகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் பெரிய கிளை நூலகங்களும், சிறு நூலகங்களும் செயல்படுகின்றன. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஊர்ப்புற நூலகங்களும், ஏராளமான தனியார் நூலகங்களும் உள்ளன.

***

கொல்கத்தாவின் பெல்வேடேர் பகுதியில் உள்ள இந்திய தேசிய நூலகம் இந்தியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பை பெறுகிறது. 1836-ல் பொது நூலகமாக இது செயல்படத் தொடங்கியது. 1903-ம் ஆண்டில் கர்சன்பிரபு இந்த நூலகத்துடன் அபிஷியல் இம்பீரியல் நூலகத்தை இணைத்து நி இம்பீரியல் நூலகத்தை உருவாக்கினார். 1953-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் இது தேசிய நூலகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. 1990 வரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 20 லட்சம் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. ***

கொல்கத்தாவில் இன்னொரு புகழ்பெற்ற நூலகம் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகமான இதுதான் இந்தியாவின் பழமையான நூலகமாக திகழ்கிறது. 12-12-1856-ல் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் செனட் இல்லத்தில் செயல்பட்டு வந்த நூலகம் 1912- ல் தனிகட்டிடத்திற்கு மாறியது. தர்பங்கா மகாராஜா இதற்கு பெரிதும் உதவினார். 1935 வரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்ட இது, தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கும் கைகொடுக்கிறது. இப்போது இங்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. ***

டெல்லியில் பிரசித்தி பெற்ற டெல்லி பொது நூலகம் இருக்கிறது. இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து ஏற்படுத்திய சிறப்புக்குரிய நூலகம் இது. மாதிரி பொது நூலகங்களை உருவாக்கும் திட்டத்தில் 1951-ம் ஆண்டில் இந்த நூலகம் நிறுவப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகம் என்று பெயர் பெற்ற நூலகம் இது. மைய நூலகமான இது சில பெரிய கிளை நூலகங்களையும், சிறு கிளை நூலகங்கள் பலவற்றையும் கொண்டு செயல்படுகிறது. இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது. ***

சென்னையில் உள்ள கன்னிமாரா பொதுநூலகம் சிறப்புக்குரிய நூலகமாகும். இது 1896-ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து வெளியீடுகள், ஐ.நா, யுனெஸ்கோ வெளியீடுகளும் இங்கு சேகரிக்கப்படுகிறது. 1990 வரை இங்கு 2 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 6 லட்சம் நூல்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் சென்னையில் சிறப்பாக இயங்கும் இன்னொரு நூலகமாகும். இவ்விரு நூலகங்களிலும் பல்துறையைச் சேர்ந்த பன்மொழி நூல்கள் நிறைந்து கிடைக்கின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இவற்றை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம் Empty Re: அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

Post by RAJABTHEEN Fri Feb 11, 2011 3:31 am

சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகம் ஆகும். ஸ்டீல் ஆல்காட் என்ற அமெரிக்கர் அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் பழமையான நூல்களை சேகரித்து இந்த நூலகத்தை 28-12-1886-ல் நிறுவினார். சுற்றுலாப்பிரியரான இவர் அடையாறை ஓய்விடமாக பயன்படுத்தினார். அங்கு தனக்காக உருவாக்கிய நூலகத்தை உலகப்புகழ் பெற்றதாக உயர்த்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பயணித்து பயனுள்ள நூல்களை நூலகத்தில் சேர்த்தார். இங்கும் லட்சக்கணக்கான நூல்கள் பராமரிக்கப்படுகிறது. அரிய, பழமையான நூல்களின் கருவூலம் இந்நூலகம்.

***

தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நூலகம் “அண்ணா நூற்றாண்டு நூலகம்”. 2010 செப்டம்பர் 15-ல் இந்நூலகம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 8 மாடி கட்டிடத்தில் செயல்படும் இது கன்னிமாரா நூலகத்தைவிட பெரியது. தெற்கு ஆசியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பையும் இது பெற்றிருக்கிறது. இங்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி நூல்கள் தனித்தனித் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரெய்லி நூலகப் பிரிவும் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான நூல்கள் சேகரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

***

டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்தியன் கவுன்சில் நூலகம் 1 லட்சம் நூல்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் இயங்கி வரும் முக்கிய நூலகமாகும். 1950 முதல் செயல்படும் இந்நூலகம் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். டெல்லி மத்திய தலைமைச் செயலக நூலகம் (21/2 லட்சம் நூல்கள்), உத்தரபிரதேசம் ஆசாத் நூலகம் (5 லட்சம் நூல்), கோவா வரலாற்று ஆவணக்காப்பகம், டெல்லி இண்டியன் நேஷனல் சயின்டிபிக் டாக்மென்ட்டேசன் சென்டர், அகமதாபாத் ஜேத்தாபாய் புத்தகாலயம், டெல்லி நேஷனல் ஆர்ச்சீவ்ஸ் ஆப் இண்டியா போன்றவை இந்தியாவின் குறிப்பிடத்தக்க நூலகங்களாகும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம் Empty Re: அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 11, 2011 11:49 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம் Empty Re: அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

Post by கவிக்காதலன் Sat Feb 12, 2011 12:10 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம் Empty Re: அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum