தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கடன் + முதலீடு
Page 1 of 1
கடன் + முதலீடு
அஸ்ஸலாமு அலைக்கும்.
கீழ்க்கண்ட வியாபார உடன்படிக்கைக்கு இஸ்லாமியச் சட்டங்கள் யாவை?
என் கணவரின் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக என் கணவரின் நண்பரொருவர் 15,575 திர்ஹம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தைக் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் கடனாகக் கொடுத்துள்ளார்:
1.இரு தரப்பினரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டுக் கடனைத் திரும்பப் பெறவோ/தரவோ கூடாது.
2.ஒவ்வொரு மாதமும் அந்த மாத விற்பனையைக் கணக்குப் பார்த்து, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அவருக்குக் கொடுக்க வேண்டும்
3.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் கொடுத்தவரின் முதலீட்டைத் திருப்பிக் கொடுக்கும்போது தங்கத்தின் விலை உயர்ந்திருந்தால் 100 கிராம் தங்கத்திற்கான அப்போதைய சந்தை மதிப்புத் தொகை திருப்பித் தரப்பட வேண்டும். தங்கத்தின் விலை குறைந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் இருந்த ஆரம்ப மதிப்பீடான 15,575 திர்ஹம் திருப்பித் தரப்பட வேண்டும்.
இந்த வியாபார நடவடிக்கை 'ரிபா'வாகக் கருதப்படுமா எனத் தெளிவு படுத்தவும். உடனடியான பதிலை எதிர்பார்க்கிறேன். ஜஸாக்கல்லாஹ்.
- மின்னஞ்சல் வழியாக, சகோதரி கதீஜா.
பதில்:
இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்கப் பட்டிருப்பதால் அவற்றைச் சான்றுகள் மூலம் இங்குப் பார்ப்போம்:
நீண்டகாலக் கடன்/முதலீடு ஆகியவற்றுக்குக் காலவரையறை செய்து கொள்ளுமாறு இறைமறை வசனம் 2:282 வலியுறுத்துகிறது. அதன்படி இரண்டாண்டுகள் காலவரையறை நிர்ணயித்துக் கொண்ட வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உடன்படிக்கையின் முதலாவது விதி இஸ்லாமிய வரையறைக்குட்பட்டதாகும்.
ஆனால், அதே வசனம் கூறும் வேறு அம்சங்களை மீறுவதாக இரண்டாவது மூன்றாவது விதிகள் அமைந்துள்ளன. அவை யாவை எனப் பார்ப்போம்:
"ஓரிறை நம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு உங்களுக்குள் கடன் கொடுத்து-வாங்க நேரும்போது, அதை எழுதிப் பதிந்து கொள்ளுங்கள். எழுத்தர், இருவருக்கும் நீதியாக, அல்லாஹ் அவருக்குக் கற்பித்தவாறு எழுதித்தர மறுக்கக் கூடாது. பதியவேண்டிய சொற்களை, கடன் பெறுபவர் தம்மிறைவனான அல்லாஹ்வின் அச்சத்தோடு கூறவேண்டும். கடன் பெறுபவர் அறிவு முதிர்ச்சியற்றவராகவோ வலுவற்றவராகவோ சொல்லுதிர்க்க இயலாதவராகவோ இருப்பின் அவருடைய பொறுப்பாளர் நீதியுடன் பதிவுச் சொற்களைக் கூறவேண்டும். ... அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். உங்களுக்கு அல்லாஹ்தான் (சீரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுத் தருகிறான். அல்லாஹ் அனைத்தையும் ஆழ்ந்தறிபவன் ஆவான்" (2:281).
ஒரு நடப்பு வணிகத்தின் முதலீட்டை 900 கிராம் தங்கம்/மதிப்பீடு எனக் கொள்வோம். நண்பரின் கடன் முதலீடு 100 கிராம் தங்கம் சேர்த்து 1000 கிராம் தங்கம்/மதிப்பீட்டில் நடைபறும் வணிகத்தில், மாதக்கணக்குப் பார்த்து நிகர இலாபத்தில் 10% கடன் முதலீடு தந்திருப்பவருக்குத் தருவதாக உடன்படிக்கை எழுதிக் கொள்வதிலும் கொடுப்பதிலும் தவறேதுமில்லை. ஆனால், ஒருமாதத்தில் நடைபெற்ற வணிகத்தில் நட்டமாகிவிட்டால் நிகர நட்டத்தில் 10% தொகையை கடன் கொடுத்த முதலீட்டாளர் பொறுப்பேற்றுக் கொள்ள இசைந்தால் மட்டுமே அவர் இஸ்லாமியப் பார்வையில் 'வணிகப் பங்காளி' ஆவார்.
ஏனெனில், வட்டி என்பது 'இலாபம்' எனும் ஒருவாசலை மட்டும் உடையது. வணிகம் என்பது 'இலாபம்-நட்டம்' ஆகிய இருவாசல்களை உடையது. அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்தான் (அல்குர் ஆன் 2:275):
கீழ்க்கண்ட வியாபார உடன்படிக்கைக்கு இஸ்லாமியச் சட்டங்கள் யாவை?
என் கணவரின் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக என் கணவரின் நண்பரொருவர் 15,575 திர்ஹம் மதிப்புள்ள 100 கிராம் தங்கத்தைக் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் கடனாகக் கொடுத்துள்ளார்:
1.இரு தரப்பினரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டுக் கடனைத் திரும்பப் பெறவோ/தரவோ கூடாது.
2.ஒவ்வொரு மாதமும் அந்த மாத விற்பனையைக் கணக்குப் பார்த்து, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை அவருக்குக் கொடுக்க வேண்டும்
3.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் கொடுத்தவரின் முதலீட்டைத் திருப்பிக் கொடுக்கும்போது தங்கத்தின் விலை உயர்ந்திருந்தால் 100 கிராம் தங்கத்திற்கான அப்போதைய சந்தை மதிப்புத் தொகை திருப்பித் தரப்பட வேண்டும். தங்கத்தின் விலை குறைந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குமுன்னர் இருந்த ஆரம்ப மதிப்பீடான 15,575 திர்ஹம் திருப்பித் தரப்பட வேண்டும்.
இந்த வியாபார நடவடிக்கை 'ரிபா'வாகக் கருதப்படுமா எனத் தெளிவு படுத்தவும். உடனடியான பதிலை எதிர்பார்க்கிறேன். ஜஸாக்கல்லாஹ்.
- மின்னஞ்சல் வழியாக, சகோதரி கதீஜா.
பதில்:
இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்கப் பட்டிருப்பதால் அவற்றைச் சான்றுகள் மூலம் இங்குப் பார்ப்போம்:
நீண்டகாலக் கடன்/முதலீடு ஆகியவற்றுக்குக் காலவரையறை செய்து கொள்ளுமாறு இறைமறை வசனம் 2:282 வலியுறுத்துகிறது. அதன்படி இரண்டாண்டுகள் காலவரையறை நிர்ணயித்துக் கொண்ட வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உடன்படிக்கையின் முதலாவது விதி இஸ்லாமிய வரையறைக்குட்பட்டதாகும்.
ஆனால், அதே வசனம் கூறும் வேறு அம்சங்களை மீறுவதாக இரண்டாவது மூன்றாவது விதிகள் அமைந்துள்ளன. அவை யாவை எனப் பார்ப்போம்:
"ஓரிறை நம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு உங்களுக்குள் கடன் கொடுத்து-வாங்க நேரும்போது, அதை எழுதிப் பதிந்து கொள்ளுங்கள். எழுத்தர், இருவருக்கும் நீதியாக, அல்லாஹ் அவருக்குக் கற்பித்தவாறு எழுதித்தர மறுக்கக் கூடாது. பதியவேண்டிய சொற்களை, கடன் பெறுபவர் தம்மிறைவனான அல்லாஹ்வின் அச்சத்தோடு கூறவேண்டும். கடன் பெறுபவர் அறிவு முதிர்ச்சியற்றவராகவோ வலுவற்றவராகவோ சொல்லுதிர்க்க இயலாதவராகவோ இருப்பின் அவருடைய பொறுப்பாளர் நீதியுடன் பதிவுச் சொற்களைக் கூறவேண்டும். ... அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். உங்களுக்கு அல்லாஹ்தான் (சீரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுத் தருகிறான். அல்லாஹ் அனைத்தையும் ஆழ்ந்தறிபவன் ஆவான்" (2:281).
ஒரு நடப்பு வணிகத்தின் முதலீட்டை 900 கிராம் தங்கம்/மதிப்பீடு எனக் கொள்வோம். நண்பரின் கடன் முதலீடு 100 கிராம் தங்கம் சேர்த்து 1000 கிராம் தங்கம்/மதிப்பீட்டில் நடைபறும் வணிகத்தில், மாதக்கணக்குப் பார்த்து நிகர இலாபத்தில் 10% கடன் முதலீடு தந்திருப்பவருக்குத் தருவதாக உடன்படிக்கை எழுதிக் கொள்வதிலும் கொடுப்பதிலும் தவறேதுமில்லை. ஆனால், ஒருமாதத்தில் நடைபெற்ற வணிகத்தில் நட்டமாகிவிட்டால் நிகர நட்டத்தில் 10% தொகையை கடன் கொடுத்த முதலீட்டாளர் பொறுப்பேற்றுக் கொள்ள இசைந்தால் மட்டுமே அவர் இஸ்லாமியப் பார்வையில் 'வணிகப் பங்காளி' ஆவார்.
ஏனெனில், வட்டி என்பது 'இலாபம்' எனும் ஒருவாசலை மட்டும் உடையது. வணிகம் என்பது 'இலாபம்-நட்டம்' ஆகிய இருவாசல்களை உடையது. அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்தான் (அல்குர் ஆன் 2:275):
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கடன் + முதலீடு
"வட்டிப் பொருளை உண்பவர்கள், ஷைத்தானால் பாதிக்கப்பட்டு, பித்துப் பிடித்தவன் தட்டுத் தடுமாறி எழுந்து வருவது போன்றே (மறுமையில்) வருவர். ஏனெனில், 'வணிகம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறி(அல்லாஹ்வின் சட்டத்தை ஏளனமாய்க் கருதி)னர். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்துள்ளான் ..."
இருதரப்பினரும் இணங்கி எழுதிக் கொள்ளும் கணக்குப் பார்ப்பது என்பது, வாரமொருமுறையோ மாதமொருமுறையோ ஆண்டுக்கொருமுறையோ விகிதாச்சாரப் பங்கு என்பது இலாபத்திலும் நட்டத்திலும் இருக்க வேண்டும். இரண்டாவது விதிமுறையில் 'நட்டம்' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.
மாதக்கணக்குப் பார்த்து இலாப-நட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பின்னர், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அசல் முதலீடான 100 கிராம் தங்கத்தை/மதிப்பீட்டை - தொடக்க விலையைக் காட்டிலும் கூடுதலோ குறைதலோ - அன்றைய விலை நிலவரப்படி திரும்பப் பெற்றுக் கொள்வது மட்டுமே கடன் முதலீடு கொடுத்தவரின் உரிமை.
கடன் முதலீட்டில் குறைவு செய்யாமல் திருப்பிக் கொடுக்க வேண்டியது கடன்பெற்ற உங்கள் கணவரின் கடமை. ஏனெனில், கடன் என்பது அமானிதமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
"நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்" அல்குர் ஆன் 4:58
கடன் முதலீட்டோடு சிறிய/பெரிய கூடுதலான தொகை எதையாவது சேர்த்துக் கொடுப்பது கடன் வாங்கியவரின் விருப்பத்தைப் பொருத்தது:
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்: "நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். 'இரண்டு ரக்அத் தொழுவீராக!" என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்" (புகாரீ-443).
எனவே, மூன்றாவது விதிமுறையில் கூறப்பட்டிருப்பதும் இஸ்லாமியக் கொடுக்கல் வாங்கலில் அடங்கவில்லையாதலால்,
இரண்டாவது விதியாக, தொழிலில் மாதக்கணக்குப் பார்த்து இலாபத்திலும் நட்டத்திலும் விகிதாச்சார அடிப்படையில் கடன் முதலீடு கொடுத்தவர் பங்கு பெறுவது என்றும்
மூன்றாவது விதியாக, கடன் முதலீடான 100கிராம் தங்கத்தின் மதிப்பீடு, தொழிலில் முதலீடு செய்யப்படும்போது இருந்த மதிப்பைப் போன்றே திரும்பப் பெறும்போது இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் 100கிராம் தங்கம் அல்லது உடன்படிக்கை முடிவுக்கு வந்து, திருப்பிப் பெறும்போதுள்ள 100கிராம் தங்கத்தின் மதிப்பீடு மட்டுமே கடன் முதலீடு கொடுத்தவரது உரிமை
என்றும் உடன்படிக்கையில் திருத்தம் செய்து கொண்டால் இஸ்லாமிய அடிப்படையில் அனைத்தும் அமைந்துவிடும்.
மேற்காணும் விளக்கம் 100 கிராம் தங்கம், திருப்பிப் பெறத்தக்கக் கடன்+வணிகமுதலீடு எனும் கருத்தில் எழுதப்பட்டது.
முற்றாக அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!
இருதரப்பினரும் இணங்கி எழுதிக் கொள்ளும் கணக்குப் பார்ப்பது என்பது, வாரமொருமுறையோ மாதமொருமுறையோ ஆண்டுக்கொருமுறையோ விகிதாச்சாரப் பங்கு என்பது இலாபத்திலும் நட்டத்திலும் இருக்க வேண்டும். இரண்டாவது விதிமுறையில் 'நட்டம்' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.
மாதக்கணக்குப் பார்த்து இலாப-நட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பின்னர், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அசல் முதலீடான 100 கிராம் தங்கத்தை/மதிப்பீட்டை - தொடக்க விலையைக் காட்டிலும் கூடுதலோ குறைதலோ - அன்றைய விலை நிலவரப்படி திரும்பப் பெற்றுக் கொள்வது மட்டுமே கடன் முதலீடு கொடுத்தவரின் உரிமை.
கடன் முதலீட்டில் குறைவு செய்யாமல் திருப்பிக் கொடுக்க வேண்டியது கடன்பெற்ற உங்கள் கணவரின் கடமை. ஏனெனில், கடன் என்பது அமானிதமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
"நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்" அல்குர் ஆன் 4:58
கடன் முதலீட்டோடு சிறிய/பெரிய கூடுதலான தொகை எதையாவது சேர்த்துக் கொடுப்பது கடன் வாங்கியவரின் விருப்பத்தைப் பொருத்தது:
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்: "நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். 'இரண்டு ரக்அத் தொழுவீராக!" என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்" (புகாரீ-443).
எனவே, மூன்றாவது விதிமுறையில் கூறப்பட்டிருப்பதும் இஸ்லாமியக் கொடுக்கல் வாங்கலில் அடங்கவில்லையாதலால்,
இரண்டாவது விதியாக, தொழிலில் மாதக்கணக்குப் பார்த்து இலாபத்திலும் நட்டத்திலும் விகிதாச்சார அடிப்படையில் கடன் முதலீடு கொடுத்தவர் பங்கு பெறுவது என்றும்
மூன்றாவது விதியாக, கடன் முதலீடான 100கிராம் தங்கத்தின் மதிப்பீடு, தொழிலில் முதலீடு செய்யப்படும்போது இருந்த மதிப்பைப் போன்றே திரும்பப் பெறும்போது இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் 100கிராம் தங்கம் அல்லது உடன்படிக்கை முடிவுக்கு வந்து, திருப்பிப் பெறும்போதுள்ள 100கிராம் தங்கத்தின் மதிப்பீடு மட்டுமே கடன் முதலீடு கொடுத்தவரது உரிமை
என்றும் உடன்படிக்கையில் திருத்தம் செய்து கொண்டால் இஸ்லாமிய அடிப்படையில் அனைத்தும் அமைந்துவிடும்.
மேற்காணும் விளக்கம் 100 கிராம் தங்கம், திருப்பிப் பெறத்தக்கக் கடன்+வணிகமுதலீடு எனும் கருத்தில் எழுதப்பட்டது.
முற்றாக அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» முதலீடு . . .
» உண்டியல்லயும் அந்நிய முதலீடு வந்துருச்சு..!
» சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
» சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
» கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு
» உண்டியல்லயும் அந்நிய முதலீடு வந்துருச்சு..!
» சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
» சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
» கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|