தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது

2 posters

Go down

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது Empty கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது

Post by சங்கவி Mon Oct 18, 2010 11:22 am

எமது நாட்டில் 1872 ஆம் ஆண்டுகளில் உன்னத நிலையை கோப்பிப்பயிர்ச் செய்கை அடைந்திருந்தது- ஆனால் திடீரென ஒருவித வியாதி கோப்பித் தோட்டங்களில் பரவ கோப்பிப்பயிர்ச் செய்கை மெது மெதுவாக குறைய ஆரம்பித்தது.

கோப்பிப் பயிர்ச் செய்கையை கைவிட்ட ஆங்கிலேயர்கள் தேயிலையைப் பயிரிடத் தொடங்கினர். இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கையின் ஆரம்பம் மிகவும் விசித்திரமானது. இதன் முன் புல வரலாறு புதுவிதமானது எனவும் தெரிவிக் கலாம்.

ஆனால் இன்று இலங் கையில் தேயிலை பயிர்ச் செய்கையின் வளர்ச்சி பெரும் விசால தன்மையைக் கொண்டதாக உள்ளது. இன்று உலகில் பெரும் பாலானோர் விரும்பிக் குடிக்கும் பானம் தேநீராகும். இத் தேநீரை தயாரிக்க பயன்படுத்துவது தேயிலையாகும்.

தேயிலைச் செடியை தானாக வளரவிட்டால் எட்டு முதல் பத்து மீற்றர் உயரம் வரை குற்றுயரமாக வளரும். ஆனால் தோட்டங்களில் பயிர் செய்வோர் இதன் இலைகளைப் பறிப்பதற்காக எட்டும் வகையில் தேயிலை மரத்தை மரமாக வளரவிடாது சாதாரணமாக 90 செ. மீற்றர் உயரத்திற்கு வளரக் கூடியதாக வெட்டி வளர விடுகின்றனர். இதன் காரணமாகவே தேயிலை மரம் செடி எனப்படுகிறது.

இந்தத் தேயிலைச் செடியை காலத்துக்குக் காலம் வெட்டி வளர்ந்து வருவதை தடுத்து விடுவர். அந்த வெட்டுதல் ‘கவ்வாத்து’ எனப்படும். தேயிலைச் செடியை வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி கவ்வாத்துக்கத்தி எனப்படும்.

தேயிலைச் செடிக்கு ஆண்டு முழுவதும் சூரிய வெப்பமும், நல்ல மழையும் தேவை. மலைச் சரிவுகள், முகடுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் குன்றுகளில் தேயிலைச் செடி நாட்டப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தைக் கொண்ட இடங்களிலேயே தேயிலை செழித்து வளரும். தேயிலைச் செடியின் பூ வெண்மையாக நல்ல மணத்துடன் இருக்கும்.

இதன் கனி மூன்று சுளைகளை உடையது. அதில் மூன்று விதைகள் இருக்கும். தேயிலைச் செடி தழைத்து வளரும் போது கிளைகளின் நுனியில் உள்ள இரண்டு தளிர்களையும் மொக்கையும் (காம்பு) அவை துளிர்க்கத் துளிர்க்கப் பறித்தது விட வேண்டும். இதுவே இறுதியில் நாம் பருகுவதற்குப் பயன்படுத்தப்படும் தேயிலை ஆகும்.

ளந் தளிர்களைப் பறித்து வெயிலில் பரப்புவார்கள். இலையில் உள்ள நீர் ஆவியாகி இலை வாடிவதங்கும். உரியவகையில் வதக்குவதற்கு இயந்திரங்கள் மூலமாக வதக்கப்படும். இன்று மலையகத்தில் இவ்வாறான ஒரு முறையையே நிர்வாகங்கள் கையாளுகின்றன.

வதங்கிய இலைகளை உருளைகளுக்குள் செலுத்தி மின்சார இயந்திரம் மூலமாக நசுக்கி அதிலுள்ள சாற்றை வெளியேற்றுவார்கள். ஆனால் இவ்வாறான முறை இந்தியாவிலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இயந்திரம் மூலமாக வதங்கிய தேயிலை இலைகளை சிலமணி நேரம் நொதிக்க தூளாகி அதை ஒரு தனிவகை அடுப்பினுள் செலுத்தி சூடான காற்றின் மூலமாக உலர்த்துவார்கள்.

இவ்வாறு உலர்ந்த தேயிலை தரம் பிரிக்கப்பட்டு காற்று புகமுடியாத வகையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு வர்த்தக சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இவ்விதம் பக்குவப்படுத்தப்படும். தேயிலை கறுப்புத் தேயிலை எனப்படுகின்றது.

வதங்கிய தேயிலையை நொதிக்க வைக்காமல் உலர வைத்து காணப்படும் தேயிலை பச்சை நிறத்தில் இருக்கும். இதை பச்சைத் தேயிலை Green Tea எனப்படும். ஜப்பானில் இம்முறையே இன்றும் கையாளப்படுகிறது.

தேயிலைச் செடி முதன் முதலாக சீனாவிலேயே பயிரிடப்பட்டது. பின்னரே இந்தியா, ஜப்பான், இந்தோனேஷியா நாடுகளிலும் பயிரிடப்பட்டன. இந்தியாவிலிருந்தே 17ஆம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்கள் தேயிலையை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனர்.

இன்று உலகில் தேயிலை உற்பத்தி அதிகமாகக் காணப்படும் நாடாக இந்தியா திகழ்கின்றது. இந்திய நாட்டின் பெரும்பகுதி தேயிலை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகிறது. உலகிலேயே அதிகமாக தேநீர் அருந்துபவர்கள் ஆங்கிலேயர்களே.

தேநீரில் காபீன் (Caffeine) டானின் (Tannin) என்ற பொருட்கள் அடங்கியுள்ளன. அளவோடு தேநீர் குடித்து வந்தால் காபீன் புது உத்வேகத்தைத் தரும். அதேவேளை அதிகமாக பாவித்தால் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி நரம்பு மண்டலத்தை கெடுத்துவிடும். டானின் ஓரளவு நச்சுத் தன்மை வாய்ந்தது. அது உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

இலங்கையில் தேயிலை வரலாறு:-


மட்டக்குச்சியின் உதவியோடு கொழுந்து பறித்தல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் அஸ்ஸாமிலுள்ள காடுகளில் தேயிலைச் செடிகள் தானாகவே வளர்ந்து வந்தன. இவ்வாறான சூழ்நிலையில் 1824ஆம் ஆண்டு ஜோர்ஸ் போர்ட் என்பவர் கம்பளை, சிங்காபிட்டியில் கோப்பியை முதன் முதலாக நாட்டி பெரும் வெற்றியைக் கண்டார். இவரைப் பின் தொடர்ந்து மலையகத்து மண்ணில் கோப்பி பயிர்ச் செய்கையை ஐரோப்பியர் மேற்கொண்டனர்.

இதே நேரம் 1866 ஆம் ஆண்டு ஹேவாஹெட்டயைச் சேர்ந்த லூல்கந்தர என்ற தோட்டத்தில் பத்து ஏக்கர் காணியில் பரீட்சார்த்தமாக அஸ்ஸாமிலிருந்து தேயிலைக் கொட்டை (விதை) களைக் கொண்டு வந்து பயிரிட்டுப் பார்த்தார். அதில் மாபெரும் வெற்றியைக் கண்டார் ஜேம்ஸ் டெய்லர். இவர் அன்று பாவித்த அனைத்து உபகரணங்களும் இன்றும் அத்தோட்டத்தில் உள்ளன. இவரது கல்லறை கண்டி மையாவ பொது மயானத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1872 ஆம் ஆண்டு கோப்பி மரங்களை ஒருவித நோய் தாக்கியது. உடனே ஐரோப்பியர்கள் கோப்பி பயிர்ச் செய்கையை கைவிட்டு விட்டு தேயிலையை நாட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதையே இன்றும் கோப்பிக் காலம் என மக்கள் தெரிவிப்பர்.

கோப்பி மரங்களை நோய் தாக்கி இருக்காது போயிருக்மேயானால் இன்று எமது நாட்டில் தேயிலைப் பயிர்ச் செய்கை பெரும் அளவில் மேற்கொள்ள வாய்ப்பே இல்லை. தேயிலைத் தோட்டங்களில் சிங்களவர்கள் வேலை செய்ய மறுத்தமையின் காரணமாகவே தென்னிந்தியாவிவிருந்து வெள்ளைக்காரர்களால் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இம்மக்களின் தேயிலையும் வளர்ச்சி பெற்றதோடு, தேயிலையின் வெளிநாட்டு வர்த்தக சந்தை ஏற்றுமதியால் நாட்டின் வருமானமும் அதிகரித்தது.

இலங்கையில் 1883 இல் 35ஆயிரம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டது. 1884 ஆம் ஆண்டு இது இரு மடங்காகியது. 1889 இல் முன்னூற்று ஐம்பது இலட்சம் இறாத்தல் தேயிலை ஏற்றுமதியாகியது. 1911ஆம் ஆண்டு ஆயிரத்து எண்ணூற்று அறுபது இலட்சம் இறாத்தல் ஏற்றுமதியானது.

1929ஆம் ஆண்டு இத் தொகை இரண்டாயிரத்து ஐந்நூறு இலட்சமக உயர்ந்தது. தேயிலையை ஏற்றுமதி செய்வதற்காக ஆங்கிலேயர் ரயில் பாதையை விஸ்தரித்தனர். தந்தி டெலிபோன் சேவைகளை ஏற்படுத்தினர். 1873ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி செய்ய கொழும்பு துறைமுகத்தை பயன்படுத்த திருத்த வேலைகளை ஆரம்பித்தனர். தோட்ட ஐரோப்பிய முதலாளிமார்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவ்வேலைகள் ஆரம்பமாகின.

1875 ஆம் ஆண்டு இளவரசர் ஏழாம் எட்வேர்ட்டினால் அத்திவாரக்கல் நாட்டப்பட்டது., ஏழு இலட்சம் பவுண்கள் செலவில் 4000 அடி நீளமான சுவர் எழுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் காலிமுகத்திடலுக்கு அப்பாலிருந்து மோதர டிலாசால் வரையிலான இச்சுவர் இன்றும் எமது கண்களுக்குத் தெரிகிறது.

415 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட கொழும்புத்துறைமுகம் கப்பல்கள் தரித்து நிற்பதற்கு இலகுவான வகையில் 600 ஏக்கராக வியாபிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்துக்கு பத்து ஆண்டுகள் கழிந்தன. 1885ஆம் ஆணடு முதல் துறைமுக வசதிகள் காரணமாக கொழும்பு 30 இலட்சம் ரூபாவை வருமானமாகப் பெறலாயிற்று.

தேயிலை வருகையின் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் இலங்கை விரைவாக பல துறைகளிலும் முன்னேற்றமடைந்தது. அதற்கு முக்கிய காரணமாக தேயிலையை கூறினாலும் ஊக்கம் படைத்த தேசாதிபதிகளுமே காரணம் எனலாம் இலங்கையின் நிருவாக அபிவிருத்திக்கு கெர்குலிசு றொபின்சன் (1865- 1872) வில்லியன் கிறிகரி (1873- 1877) ஆர்தர் கோர்டன் (1883- 1890) ஜோசப் றிட்ச்வே (1896- 1908), கென்ரி பிளேக் (1908- 1907) கென்ரி மெக்கலம் (1907- 1912) ஆகிய தேசாதிபதிகள் பெரும் பங்களிப்பை வகித்தனர்.

தேயிலைக் கொழுந்து பராமரிப்பு

ஒவ்வொரு முறையும் கொழுந்தெடுக்கும் முறைகளால் தேயிலைச் செடியின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் பாதிப்பை அடையக் கூடாது. முழு வருடமும் அதிகப்படியாக கிலோ கொழுந்து பெறக்கூடிய வகையில் கொழுந்து எடுக்கப்பட வேண்டும்.

தேயி¨லைச் செடியின் மட்டத்திற்கு மேல் ஒரு திரியுடன் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று விரிந்த இலைகள் மற்றும் ஓரிரு இலைகளுடன் சேர்ந்த வங்கிக் கொழுந்தை ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் வெளியில் எடுப்பதையே கொழுந்து எடுத்தல் என்கின்றோம்.

தேயிலைச் செடியின் மட்டத்திற்கு மேல் எடுக்கத் தகுதியான கொழுந்துகளை கிள்ளி எடுக்க வேண்டும். கிள்ளி எடுக்கப்பட்ட கொழுந்தின் 65 வீதமான கொழுந்து திரியுடன் மூன்று இலைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

தேயிலைச் செடியின் மட்டத்திற்கு மேலுள்ள வங்கிகள் முழுவதையும் கிள்ளி எடுக்க வேண்டும். மீண்டும் அடுத்த தவணைக்கு தேவையான அரும்புகளை (இரண்டு இலைதிரி மற்றும் ஒரு இலை திரி தேயிலைச் செடியில் விட வேண்டும். தேயிலைச் செடியின் மட்டத்திலுள்ள முடிச்சுகள் ஒவ்வொரு தவணையிலும் சரியான முறையில் ஒடிக்கப்பட வேண்டும். மட்டத்திற்கு கீழ் உள்ள முற்றிய இலைகளைப் பறிக்கக் கூடாது.

வங்கிகளை (வங்கி என்பது காம்பு) எடுக்காவிட்டால் புதிய அரும்புகள் உண்டாக காலதாமதமாகும். தேயிலை கொழுந்தை உருவி எடுக்கக் கூடாது. மென்மையான கொழுந்துகள் சேதமாகிவிடும்.

கொழுந்து எடுக்கும் முறைகள்

1. தாய் தலையை விட்டுக் கொழுந்து எடுத்தல். ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை (வரட்சிக்காலம்) தாய் இலையை விட்டு கொழுந்து எடுக்க வேண்டும்.

இம்முறையில் கொழுந்து எடுப்பதால் செடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான உணவு விடப்பட்ட (உரம்) தாயிலைகளில் தயாரிக்கப்பட்டு, செடிகளின் வேர்களில் சேர்த்து வைக்கப்படுகின்றது. இவ்வாறு வேர்களில் சேர்த்து வைக்கப்பட்ட உணவை பின்வரும் காலங்களில் நல்ல விளைச்லைத் தருகின்றது.

2. மட்டத்திற்கு கொழுந்து எடுத்தல்.

ஏப்ரல் மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை தேயிலைச் செடியின் மட்டத்திற்கு கொழுந்து எடுக்க வேண்டும். செடியின் மட்டத்தில் உள்ள தாயிலை மற்றும் கட்டிலைக்கு கொழுந்து வரை எடுக்க வேண்டும். மட்டத்திற்கு கீழ் கொழுந்து எடுக்கக் கூடாது.

கொழுந்து எடுக்கும் போது மட்டக்குச்சியை (வரிச்சி) பாவிக்க வேண்டும். எடுக்கப்பட்ட கொழுந்தை அதிக அளவில் கையில் வைத்திருக்கக் கூடாது. கொழுந்தை கூடையில் வைத்து அமுக்கவும் கூடாது. இதனால் பொழுந்து அவிந்து போய்விடும்.

பச்சைத் தேயிலை

மிஞிரிரினி ஹிரிதி எனப்படும் பச்சைத் தேயிலை விலை அதிகமாகும். நீரிழிவு §ந்ய் கொண்டவர்கள் கிரீன் டீயை தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் அவர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும் கால் அடிப்பாத வலி, நரம்புகளில் இரத்தம் செல்லாது வலி எடுத்தல் குறைந்து குணமாகும். பச்சைத் தேயிலை கொழுப்பைக் குறைக்கும். உணவை ஜீரணிக்க செய்யும். உணவிலிருந்து கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. பச்சைத் தேயிலை நீரிழிவு நோயாளர்களுக்கு சிறந்த பாணமாகும்.

இலங்கையின் தேயிலை பயிர்ச் செய்கைக்கு ஜேம்ஸ் டெய்லர் முன்னோடியாக இருப்பது போல் உலகத் தேயிலை நிபுணத்துவதிற்கு டச்சுக்காரரான விஞ்ஞானி பேனாட் மிகவும் உதவினார். இவர் 1880க்கும் 1930க்கும் உட்பட்ட காலகட்டத்தில் தேயிலை பற்றி ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் 1928 இல் இலங்கையின் தேயிலை ஆய்வு நூலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காய வைத்து, அரைத்து, உலர்த்தி, சலித்து முறுக வைத்து, காற்று புகாத வகையில் அடைத்து வர்த்தக சந்தையை எட்டுமட்டும் அனைத்து செயல்களும் ஒரு அறியாத, தெரியாத விஞ்ஞான முறையிலான செயல்பாடுகளே. தேயிலை செடிக்குள் எவ்வளவு விடயங்கள் மறைந்துள்ளன.

இவையெல்லாம் தீவிரமாக விஞ்ஞானம் வளர்வதற்கு முன் சாதாரண மனிதர்கள் கண்டுபிடித்த 8qனிபிடிப்புகளே.
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது Empty Re: கோப்பிச் செய்கையின் வீழ்ச்சி தேயிலை செய்கைக்கு வித்திட்டது

Post by சூரியன் Mon Oct 18, 2010 3:01 pm

தகவலுக்கு நன்றி அக்கா
சூரியன்
சூரியன்
மல்லிகை
மல்லிகை

Posts : 143
Points : 277
Join date : 04/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum