தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:49 pm

First topic message reminder :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Netaji10நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.


சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார். (விக்கிபீடியா)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 10:29 pm

இந்த விஷயங்களால் எல்லாம் நாம் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் ஒன்று இருக்கிறது. நாம் ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தால் அதற்காகக் கூரை மேல் ஏறிக்கொண்டு கூச்சல் போட வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களிடம் நமது கொள்கையை நிலை நாட்ட ஆக்ரோஷமாகச் சண்டை போட வேண்டும் என்பது இல்லை. உறுதியாக நம் நிலையில் நின்று செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து கொண்டிருந்தாலே போதும். எதிர்த்தவர்களும் தடுத்தவர்களும், விலகிப் போவது மட்டுமல்ல, கூடவே இணைந்து பணி செய்வதற்கான வாய்ப்பும் உண்டு. அது மட்டுமின்றி, நல்ல காரியத்துக்காக முனைந்து செயல் படும்போது, தெய்வம் நமக்கு முன்னால் போய் நின்று நமது காரிய சித்திக்கு உதவும். வள்ளுவரின் வார்த்தையில், 'தெய்வம் மடி செற்றுத் தான் முந்துறும்.'

இந்த சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தினர் மறுப்பு சொல்லாதிருந்தால் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு இருக்கும் என்று சுபாஷ¤க்குத் தெரிய வந்தது. சுபாஷ் நேராகக் கல்கத்தா சென்று ஸ்காட்டிஷ் கல்லூரி முதல்வரான வெள்ளையரைச் சந்தித்துத் தம்மைப் பற்றிய அத்தனை விவரங்களையும் ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். முதல்வர் நல்ல மனிதர். பழைய கல்லூரி முதலில் தடையின்மை சான்றிதழ் அளித்தால் தாம் தமது கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாக வாக்களித்தார். சுபாஷின் அண்ணன் சரத் சந்திர போஸ் பழய கல்லூரி முதல்வரிடம் சென்று பேசி அவ்வாறே சான்றிதழ் வாங்கித் தந்ததில் சுபாஷ் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். முழு அக்கரையுடன் படித்து முதல் மாணவராகத் தேறினார். அதே நேரத்தில் பிரதேச ராணுவத்திலும் சேர்ந்து தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களும் சா'ன்றும் பெற்றார். தொடர்ந்து படிக்க எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.

அப்போது அவசர அவசரமாகத் தந்தையார் கூப்பிடுவதாக சுபாஷ¤க்கு ஓர் அழைப்பு வந்தது. என்னவேன்று புரியாமல் அவர் வீட்டுக்குச் சென்றபோது, தந்தையாரும், அண்ணன் சரத் சந்திர போசும் அருகருகே உட்கார்ந்திருந்திந்தார்கள். 'ஐ.சி.எஸ். படிக்க வேண்டும். உடனடியாக இங்கிலாந்து செல்ல வேண்டும். சரி தானே' என்று கேட்டார் தந்தையார். ஒன்றும் புரியாமல் நின்றர் சுபாஷ்.' இருபத்து நா‎ன்கு மணி நேரம் அவகாசம். யோசித்துப் பதில் சொல்' என்றார் தந்தையார்.

ஏன் இந்த அவசர அழைப்பு? காரணமிருக்கிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 10:29 pm

நாட்டில் கொந்தளிப்பு - நாயகனின் மனத் தவிப்பு

அவசரம் அவசரமாக சுபாஷின் தந்தை அவரை அழைத்து ஐ.சி.எஸ். படிப்புக்காக லண்டன் அனுப்பத் துடித்ததற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது.

அன்றைய அரசியல் சூழலைப் பற்றிக் கொஞ்சம் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் அரசு ரவுலட் சட்டம் என்று சொல்லப்பட்ட ஓர் அடக்கு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இன்றைக்கு நாம் கண்ட தடா, பொடா சட்டங்களுக்கெல்லாம் முன்னோடி அந்தச் சட்டம். அதன்படி, யாரையும் விசாரணையின்றிக் கைது செய்து உள்ளே தள்ளலாம். அப்பீல் கிப்பீல் ஒன்றும் கிடையாது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தி இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் ஹர்த்தால் என்ற அமைதிப் போராட்ட முறையை உருவாக்கினார். நாடு முழுவதும் ஒரு நாள் இந்த சட்டத்தை எதிர்த்து உண்ணா விரதம் இருக்க வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். மக்கள் நலன் சம்பந்தப்பட்ட அத்தியாவசிய வேலைகள் தவிர மற்ற எல்லாப் பணிகளும் நிறுத்தப்பட வேண்டும், தடை செய்யப்பட்ட புத்தகங்களை அச்சிட்டு வினியோகிக்க வேண்டும். முதலில் இதற்கான தேதி 1919 மார்ச் 30 என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல பகுதிகளுக்கும் செய்தி தெரிந்து தயார் செய்து கொள்ள அவகாசம் வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதிக்கு இது ஒத்தி வைக்கப்பட்டது. (இப்போது போல அப்போதெல்லாம் என்ன இண்டர்நெட்டா இருந்தது, உடனுக்குடனே தொடர்பு கொள்ள?) பல இடங்களில் ஹர்த்தால், தேதி மாற்றியது தெரியாமல், மார்ச் 30ஆம் தேதியே இது அனுஷ்டிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் ஹர்த்தால் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் ஏப்ரல் 6ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அமிர்தசரஸில் மார்ச் 30ஆம் தேதியும் ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். ஏப்ரல் 9ஆம் தேதி இந்துக்களும் முஸ்லிம்களும், ஒர்றுமையுடன் கூடி ராமநவமி ஊர்வலத்தை பிரம்மாண்டமாக நடத்தினார்கள். மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட மைக்கேல் ஓ ட்வையர் என்ற லெ·ப்டினண்ட் கவர்னர், சத்யபால், கிச்லூ என்ற இரண்டு தலைவர்களைக் கைது செய்து நாடு கடத்தினார். இது பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பிலும் வன்முறைகள் இருந்தன. ஏப்ரல் 12ஆம் தெதி ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெனரல் டயர் என்ற அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டைத் தன் வசம் வைத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நடந்த இடத்துக்கு துருப்புகளுடன் அவன் விரைந்தான். அந்த மைதானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். உள்ளே வரவும், வெளியே போகவும் ஒரே குறுகிய வழிதான். 10000 பேர் அந்த மைதானத்தில் இருக்கிறார்கள். குருவிகளை சுட்டுத் தள்ளுவது போல் சடசடவென்று1650 ரவுண்டுகள் சுட்டான். ரவைகள் தீர்ந்தவுடன்தான் நிறுத்தினான். ஓடவோ, ரவைகளிலிருந்து தப்பிக்கவோ முடியாமல் மக்கள், மிதி பட்டு, அடி பட்டு, குண்டடி பட்டு செத்த காட்சி, மனித குல வரலாற்றிலேயே மறக்க முடியாத ஈனமான செயல். இறப்பு எண்ணீகை 379, காயம் பட்டவர்கள் 200 என்று அரசாங்கமே கூறியது. அவ்வளவுதானா இருக்கும்? நாமே முடிவு கட்டிக் கொள்ளலாம். "துப்பாக்கி ரவைகள் தீர்ந்து விட்டன. இல்லாவிட்டால் ,மேலும் சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்." என்று கொக்கரித்தான் டயர். இவனுக்கு, பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டு தெரிவித்தது. அந்த நாட்டில் பண முடிப்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.

அதை விடக் கொடுமை என்னவென்றால், இதன் பின், ராணுவச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. குழந்தைகள், பல மைல் தூரம், நடக்க வைத்து, பிரிட்டிஷ் கொடிக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டார்கள். மக்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுக் காட்சிப் பொருள் ஆக்கப்பட்டார்கள். சரமாரியாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது. இன்னும் கேளுங்கள், ஒரு ஆங்கிலேய மாதை இந்தியர்கள் அவமதித்து விட்டார்கள் என்பதற்காக, அந்த வீதியில் செல்லும் இந்தியர்கள் அத்தனை பேரும், வயிற்றைத் தேய்த்து ஊர்ந்து செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது.

இந்த அரசோடு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவே முடியாது என்று காந்தி திடமாகத் தெரிந்து கொண்டது இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான். அந்த வகையில் 1919ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு watershed எனலாம்.

இவை பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு மனம் கொந்தளித்துப் போயிருந்தார் சுபாஷ். தமது சகோதரர்களுடன் தீவிரமாகப் பேசியிருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட அவர் தந்தையார், சுபாஷ் இந்தியாவில் இருந்தால் அவரது உணர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்த முடியாது, அவரது எதிர்காலமே பாழாகி விடும் என்பதற்காகவே, அவரை அவசரம் அவசரமாக லண்டனுக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 10:29 pm

ஐ.சி.எஸ். மாணவர் சுபாஷ்

என்ன முடிவு செய்வது?

குழப்பமாகத்தான் இருந்தது சுபாஷ¤க்கு. ஐ.சி.எஸ். படித்து அன்னியர் ஆட்சியில் வேலை பார்க்க வேண்டுமா என்று தயக்கம். சிறந்த நிர்வாகத் திறமை பெற்று, தாய்நாட்டுக்குப் பணி புரிய முடியுமோ என்ற ஓர் ஆசை. தேர்வில் பிரிட்டிஷாருடன் போட்டி போட்டு வென்றால் இந்தியர்களின் திறமையை எடுத்துக்காட்ட முடியுமே என்றும் ஒரு எண்ணம். இவற்றுக்கிடையே ஊசலாடிய சுபாஷ், 24 மாதங்கள் படிக்க வேண்டிய ஐ.சி.எஸ். படிப்புக்கு நமக்குக் கிடைத்திருப்பதோ எட்டே மாதங்கள். கேம்பிரிட்ஜில் சேர்ந்து படித்து, பரீட்சை தேறிய பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம், இப்போதைக்கு அப்பா சொல்வதைக் கேட்டு லண்டன் போகலாம் என்று முடிவு எடுத்தார். இந்த முடிவை சில மணி நேரங்களிலேயே எடுத்து, தந்தையிடம் சொல்லிவிட்டார்.

1915 செப்டம்பர் 15ஆம் தேதி கப்பலில் லண்டனுக்குப் பயணமானார் சுபாஷ். அவர் லண்டன் சென்றடைந்தது அக்டோபர் 25ம் தேதி வாக்கில். ("நான் பிரயாணம் செய்த கப்பலை விட மெதுவாகச் செல்லும் கப்பல் வேறு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்."). படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவருக்கு அங்கு மாணவர்களுக்கு இருந்த சுதந்திரம் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. நேரத்தை வீணடிக்காமல், கவனத்தைச் சிதற விடாமல், முழு முனைப்புடன் படிப்பில் ஈடுபட்டார் அவர். அவரது ஐ.சி.எஸ். நாட்களில் நடந்த சில முக்கிய விஷயங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை, பிரிட்டனில் வகுப்புக் கலவரம் என்பது போலத் திரித்துக் கூறப் பட்டிருந்தது. பிரிட்டிஷ் பொது மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் இந்த பஞ்சாப் படு கொலையைச் செய்த டயரிடம் பெரு மதிப்பு இருந்தது சுபாஷ¤க்கு சினத்தையும் வருத்தத்தையும் அளித்தது. இந்த சந்தர்ப்பத்தில், இந்தியர்கள் பால் பரிவு கொண்ட பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த தலைவர் சர் ஆஸ்வால்டு மோஸ்லே இந்தப் படு கொலையைக் கண்டித்துப் பேசியது, அந்த நாட்டில் பரபரப்பையும், சுபாஷ¤க்கு மகிழ்ச்சியையும் அளித்தது.

லோகமான்ய பால கங்கதர திலகர் இந்தக் கால கட்டத்தில் கேம்பிரிட்ஜுக்கு விஜயம் செய்தார். இதைத் தடுக்க பிரிட்டிஷ் இந்திய மந்திரி அலுவலகமும், வெளிநாட்டுத் துறையும் எடுத்த முயற்சிகள் எவையும் பலிக்கவில்லை. சிறப்பான ஆங்கிலத்தில் இந்திய தேசிய உணர்வுகள் பற்றியும், பிறப்புரிமையான சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசிய உரை, மாணவர்க¨ளை மட்டுமல்லாது கல்லூரி நிர்வாகிகளையும் கவர்ந்தது.

லண்டனுக்கு சரோஜினி தேவி வருகை தந்து, இந்திய சமூகத்தினரின் வரவேற்பைப் பெற்றதும் இந்தத் தருணத்தில்தான். அவர் ஆற்றிய வீர உரை, சுபாஷை ஊக்குவித்ததில் வியப்பில்லை. இத்தகைய அறிவும் ஆற்றலும் பெற்ற இந்தியப் பெண்மணி ஒருவர் இருப்பது அவருக்குப் பெரிதும் பெருமை தந்தது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 10:29 pm

கருத்தூன்றிப் படித்த சுபாஷ் எட்டு மாதப் படிப்பிலேயே, ஈராண்டுகள் தொடர்ந்து படித்தவர்கள் போட்டியிட்ட தேர்வில் வென்று விட்டார். அதுவும் எப்படி? அந்த ஆண்டுத் தேர்விலேயே 4-வது மாணவராக!

ஐ.சி.எஸ். பரீட்சை தேறிய மாணவர்களுக்கு இந்தியாவில் நடைமுறைப் பயிற்சி உண்டு. அதற்காக விவரங்கள் அடங்கிய தாள் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்படும். அத்தகைய தாள் ஒன்று சுபாஷ¤க்கும் கொடுக்கப்பட்டது. அதனைப் படித்த அவர் கொதித்தெழுந்தார். அப்படி என்ன இருந்தது அந்தத் தாளில்?

'இந்தியாவில் குதிரைகளைப் பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியக் குதிரைக்காரர்கள் குதிரைக்குப் போடும் உணவையே தின்று விடுவார்கள். இந்திய வர்த்தகர்கள் மோசமானவர்கள். நாணயம் அற்றவர்கள். சொன்னதை நிறைவேற்ற மாட்டார்கள்".

சினம் கொண்ட சுபாஷ் மற்ற இந்திய ஐ.சி.எஸ். வெற்றியாளர்களை சேர்த்துக் கொண்டு ஒரு மறுப்புக் கடிதம் தயார் செய்தார். இந்தக் கருத்தைக் கண்டித்தும், ஆட்சேபகரமான பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால், மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக சாக்கு போக்கு சொல்லி, கையெழுத்து போடாமல் நழுவி விட்டார்கள். ஐ.சி.எஸ். கனி கைக்கெட்டிய தருணத்தில் நழுவிப் போய்விட்டால் என்ன செய்வது என்ற சாதாரணர்களுக்கே உரிய பயம். நம் நாயகர் அசாதாரணமனவர். துணிந்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். பலன்? அந்த அறிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

மிகக் கடினமான தேர்வில் குறுகிய காலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ரேங்க்கில் தேறிய சுபாஷை வாழ்த்தி நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வாழ்த்துகள் வந்து குவிந்தன
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 10:30 pm

பதவி வேண்டாம்-உதறித் தள்ளினார்!

லண்டனில் உள்ள இந்திய மந்திரி மாண்டேகுவின் அறை.
தள்ளுகதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் நம் நாயகன். ஏற்கெனவே அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது.
பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளிலிருந்து தலையை நிமிர்த்தி “யெஸ், கம் இன்" என்றார் மாண்டேகு. அமரச்சொன்னார். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் தாங்கி நிற்கப்போகும் ஒரு தூண் - ஐ.சி.எஸ். அதிகாரி ஆயிற்றே? மரியாதை உண்டுதான்.

மவுனமாகத் தன் கையில் கொண்டு வந்திருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சுபாஷ்.

அதில் கண்டது:

“முப்பது கோடி இந்தியர்கள் அடிமைத்தளையில் உழலும்போது நான் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் செய்ய விரும்பவில்லை. ஆகவே என் ஐ.சி.எஸ் பதவியிலிருந்து விலகுகிறேன்."

கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டு சுபாஷை வியப்பு விரியப் பார்த்தார் மந்திரி. இந்திர போகப் பதவி ஆயிற்றே? அதை விடுவார்களா, நம்ப முடியவில்லை அவருக்கு. நமது நாயகரோ இந்திய விடுதலையைத் தவிர எச்சுவை பெறினும் வேண்டாதவர் என்பது அவருக்குத் தெரியாது.

“அவசரப் படாதே. டயம் தருகிறேன். யோசித்து முடிவு எடு." என்றார் பிரபு.

நிதானமாகப் பதில் சொன்னார் சுபாஷ். “நன்றாக யோசித்துத்தான் முடிவு எடுத்திருக்கிறேன். எங்கள் நாட்டில் காந்திஜியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. பதவிகளையும் விருதுகளையும் இந்தியர்கள் துச்சமெனத் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் எதிர்காலத்தைத் தியாகம் செய்து பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நான் அதிகர பீ¢டத்தில் அடிவருடியாக அமர்ந்திருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் முடிவு எடுத்தது எடுத்ததுதான்" என்று சொல்லி விட்டு விருட்டென்று வெளியேறினார் சுபாஷ்.

நம்பமுடியாமல் அவர் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மாண்டேகு.

தமது முடிவு குறித்து அன்பு மனம் கொண்ட சகோதரர் சரத் சந்திர போசுக்கு சுபாஷ் எழுதிய கடிதங்களிலிருந்து சில வரிகளை இங்கே தருவது அவரது எண்ணப் போக்கை நாம் புரிந்து கொள்ள உதவும். (சக்தி மோகன் தமிழாக்க நூலிலிருந்து.)

“ஐ.சி.எஸ்.பட்டம் என்னை ஒரு கமிஷனராக்கும். ஒரு தலைமைச் செயலராக்கும். மேலும் பல உயர் பதவிகளில் என்னைத் தூக்கி வைக்கும். வாழ்நாள் முழுக்க அதிகார பாக்கியங்களோடு களிக்கலாம். இதில் ஐயமே இல்லை. இப்பதவி என் புற வாழ்வை மேம்பட வைக்கும். அக வாழ்வை மேம்பட வைக்குமா? ஒருபோதும் கிடையாது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 10:30 pm

உள்ளுணர்ச்சிக்கு ஒவ்வாத, தேச உணர்ச்சியைக் கொழுந்து விட்டு எரியச்செய்யாத ஒரு பதவியை அன்னிய ஆட்சியில் வகிப்பது என்பதை விட மனத் துரோகம் என்பது வேறு இருக்க முடியாது.

நான் தேசியத் தொண்டனாக இருப்பதற்குப் பெற்ற தகுதியை, ஐ.சி.எஸ். பதவியை வகிக்கப் பெறவில்லை..

அரசாங்கப் பதவியில் இருந்து கொண்டே “முடிந்ததைச்" செய்யலாம்தான். அந்த “முடிந்தது" என்பதற்கு நிலைத்தன்மை எதுவும் கிடையாது.

பிறந்த நாட்டின் எதிர்காலத்தை விடுதலையில் நிலைநாட்டிக் குதூகலிக்க வைக்க நான் செய்ய விரும்பும் காணிக்கையாக ஐ.சி.எஸ். பட்டத்தையும் அது அளிக்கும் பெரும் பதவியையும் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.

குறிப்பாக சி.ஆர்.தாசைப் பாருங்கள். அவர் படிப்பென்ன, வருமானம் என்ன, புகழ் என்ன, குடும்பப் பொறுப்புகள் எவ்வளவு, கொஞ்சமா? அவரே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு தாய்நாட்டுக்கான பணியை மேற்கொண்டு விட்டபோது எந்தவித சொந்தப் பொறுப்பும் இல்லாத என் போன்ற இளைஞர்கள் தியாகம் செய்வது பெரிதோ பெருமையானதோ அல்ல..

தேசியக் கல்லூரியும் புதிதாகத் தோன்றியுள்ள ஸ்வராஜ் தினசரிப் பத்திரிகையும் எனது சேவையை ஏற்கக் காத்திருப்பதாகவே நம்புகிறேன்..

வறுமையும் தேச சேவையும் குரூரமானவை என்று எல்லாருமே ஒதுங்கியிருந்தால் ஒரு பரமஹம்சரையோ, விவேகானந்தரையோ, திலகரையோ, அரவிந்தரையோ பெற்றிருக்க முடியுமா?

இப்படி ஒரு முக்கிய காலக் கட்டத்தில் பிரிட்டிஷ் அரசில் கவர்னர் பதவி வகிப்பவனும் சரி, பியூன் வேலை பார்ப்பவனும் சரி, இருவருமே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பலப்பட உதவி செய்கிறவர்களே..."

தந்தைக்கு இதில் விருப்பமில்லை என்று தெரியும். இருந்தும் நாட்டின் சுதந்திரத்தைப் பொறுத்த இந்த விஷயத்தில் தந்தை சொல்லை மீறுவதுதான் சரி என்று திடமான முடிவு எடுத்தார் சுபாஷ்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 01, 2011 11:40 pm

அறிந்து கொள்ள தந்தமைக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 2 Empty Re: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum