தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
3 posters
Page 1 of 1
அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
ஒரு சோதிட ஆராய்ச்சி
ஆடையணிகள் மீது ஆவல் கொண்ட
ஆண்கள் அபூர்வமாகத் தான் காணப்படுகிறார்கள்.அதிலும் தத்தம் அந்தஸ்துக்கும்
தொழிலுக்கும் ஏற்றவாறு உடையணிய வேண்டிய நிர்ப்பந்தம்தான் இவ்விதம் நவம்
நவமான ஆடையணிகளின் பக்கம் அவர்களது கவனத்தைத் திரும்ப வைக்கிறது. ஆனால்
பெண்கள் விடயம் அப்படியல்ல. விதம் விதமாய் வண்ண வண்ணமாய் சந்தர்ப்ப
சூழ்நிலைக்குத்தக்கவாறு நாளுக்கொன்றாய், அல்லது ஒரே நாளில் பலவிதமாய்
ஆடையணிந்து விதம் விதமான அழகோடு அசத்துவதில் அல்லது இவ்விதமான ஆடைகளின்
மூலமாக தங்கள் அழகை விதம் விதமாய்க் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர்
அவர்கள்தான். ஆடையணியும் விடயத்தில் அடுத்தவரை மிஞ்ச வேண்டுமென்றே ஒவ்வொரு
பெண்ணும் விரும்புகிறாள்.
இவ்விதம் பெண்கள் அவரவர் அழகுக்கு
,உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடம்பரமாகவோ, எளிமையாகவோ உடையணிவதை சோதிடக்
கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களையறியாமலேயே தங்கள் பிறந்த ராசியின்
இயல்புக்கேற்பவே அணிகிறார்கள் என்பதை அறியலாம். இதனால் சோதிடத்தின் உண்மைத்
தன்மையில் நமது நம்பிக்கை வலுவடைகிறது. இக்கட்டுரை ஒவ்வொரு ராசிப்
பெண்ணும் எந்த விதத்தில் எப்படிப் பட்ட உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிகிறாள்
என்பதை ஆராய்கிறது.
ஆடையணிகள் மீது ஆவல் கொண்ட
ஆண்கள் அபூர்வமாகத் தான் காணப்படுகிறார்கள்.அதிலும் தத்தம் அந்தஸ்துக்கும்
தொழிலுக்கும் ஏற்றவாறு உடையணிய வேண்டிய நிர்ப்பந்தம்தான் இவ்விதம் நவம்
நவமான ஆடையணிகளின் பக்கம் அவர்களது கவனத்தைத் திரும்ப வைக்கிறது. ஆனால்
பெண்கள் விடயம் அப்படியல்ல. விதம் விதமாய் வண்ண வண்ணமாய் சந்தர்ப்ப
சூழ்நிலைக்குத்தக்கவாறு நாளுக்கொன்றாய், அல்லது ஒரே நாளில் பலவிதமாய்
ஆடையணிந்து விதம் விதமான அழகோடு அசத்துவதில் அல்லது இவ்விதமான ஆடைகளின்
மூலமாக தங்கள் அழகை விதம் விதமாய்க் காட்டிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர்
அவர்கள்தான். ஆடையணியும் விடயத்தில் அடுத்தவரை மிஞ்ச வேண்டுமென்றே ஒவ்வொரு
பெண்ணும் விரும்புகிறாள்.
இவ்விதம் பெண்கள் அவரவர் அழகுக்கு
,உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடம்பரமாகவோ, எளிமையாகவோ உடையணிவதை சோதிடக்
கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களையறியாமலேயே தங்கள் பிறந்த ராசியின்
இயல்புக்கேற்பவே அணிகிறார்கள் என்பதை அறியலாம். இதனால் சோதிடத்தின் உண்மைத்
தன்மையில் நமது நம்பிக்கை வலுவடைகிறது. இக்கட்டுரை ஒவ்வொரு ராசிப்
பெண்ணும் எந்த விதத்தில் எப்படிப் பட்ட உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிகிறாள்
என்பதை ஆராய்கிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
மேடம்
மேடராசியில் பிறந்த பெண்களுக்கு
மிடுக்கும் முரட்டுத் தனம் இயல்பானவை. தங்கள் உணர்வுகள் சீண்டப்படும்.
அல்லது சுய கௌரவத்திற்குப் பங்கம் வரும் தருணங்களில் இந்த இயல்புகள்
வெளிப்பட்டு இவர்களது சுய ரூபங்களை இனங்காட்டுகின்றன. ஆயினும் அந்தந்த
சூழ்நிலைக்குத்தக்கவாறு நாசூக்காக நடக்கும் சமயோகிதம் மிக்கவர்கள். தங்கள்
தோற்றம் குறித்து அதிகமாகவே சிரத்தையெடுத்துக் கொள்ளும் இவர்கள் விசேட
வைபவங்களுக்கோ, முக்கிய அலுவல்களுக்கோ செல்லும்போது பழசாயினும்
விலையுயர்ந்த அப்போதுதான் சலவை செய்யப்பட்டு வந்தது போன்ற மடிப்புக்குலையாத
ஆடைகளையே அணிந்து செல்வார்கள். காலத்துக்குக் காலம் புழக்கத்துக்கு வரும்
நவீன நாகரிக உடைகளை மற்றவர்களுக்கு முன் உடுத்தி அறிகப்படுத்துவதில் அலாதி
விருப்பம் கொண்டவர்கள்.
எங்கே போனாலும் சுற்றியிருப்பவர்களை ஆடைகளாலும்
நகைகளாலும் வசீகரிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். வாங்கின உடுப்புகளை
எவ்வளவு காலம் சென்றாலும் புதுமை குலையாமல் பெட்டியில் பத்திரமாகப் பூட்டி
வைத்து ஒரு புதையல் போலப் பாதுகாப்பார்கள். மற்றப்படி தாங்கள் உடுத்துக்
கழித்ததை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு வரவே
வராது.
எங்கே போனாலும் ஆடையணி விடயத்தில் தங்களை பார்த்து மற்றப்
பெண்கள் பொறாமைப்பட வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு நிரந்தரமானது. செந்நிறம்
அதன் பல்வேறு வகைகளும் கொண்ட ஆடைகளையே பிரதானமாக தெரிவு செய்வர். இந்த
ராசியில் பிறந்த நாட்டுப் புறப் பெண்கள் கண்களை உறுத்துகிற மிட்டாய்க்
கலர்ச்சிவப்பில் சேலையுடுத்துத் திரிவதில் அதிக விருப்பம் காட்டுவர்.
மேடராசியில் பிறந்த பெண்களுக்கு
மிடுக்கும் முரட்டுத் தனம் இயல்பானவை. தங்கள் உணர்வுகள் சீண்டப்படும்.
அல்லது சுய கௌரவத்திற்குப் பங்கம் வரும் தருணங்களில் இந்த இயல்புகள்
வெளிப்பட்டு இவர்களது சுய ரூபங்களை இனங்காட்டுகின்றன. ஆயினும் அந்தந்த
சூழ்நிலைக்குத்தக்கவாறு நாசூக்காக நடக்கும் சமயோகிதம் மிக்கவர்கள். தங்கள்
தோற்றம் குறித்து அதிகமாகவே சிரத்தையெடுத்துக் கொள்ளும் இவர்கள் விசேட
வைபவங்களுக்கோ, முக்கிய அலுவல்களுக்கோ செல்லும்போது பழசாயினும்
விலையுயர்ந்த அப்போதுதான் சலவை செய்யப்பட்டு வந்தது போன்ற மடிப்புக்குலையாத
ஆடைகளையே அணிந்து செல்வார்கள். காலத்துக்குக் காலம் புழக்கத்துக்கு வரும்
நவீன நாகரிக உடைகளை மற்றவர்களுக்கு முன் உடுத்தி அறிகப்படுத்துவதில் அலாதி
விருப்பம் கொண்டவர்கள்.
எங்கே போனாலும் சுற்றியிருப்பவர்களை ஆடைகளாலும்
நகைகளாலும் வசீகரிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். வாங்கின உடுப்புகளை
எவ்வளவு காலம் சென்றாலும் புதுமை குலையாமல் பெட்டியில் பத்திரமாகப் பூட்டி
வைத்து ஒரு புதையல் போலப் பாதுகாப்பார்கள். மற்றப்படி தாங்கள் உடுத்துக்
கழித்ததை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு வரவே
வராது.
எங்கே போனாலும் ஆடையணி விடயத்தில் தங்களை பார்த்து மற்றப்
பெண்கள் பொறாமைப்பட வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு நிரந்தரமானது. செந்நிறம்
அதன் பல்வேறு வகைகளும் கொண்ட ஆடைகளையே பிரதானமாக தெரிவு செய்வர். இந்த
ராசியில் பிறந்த நாட்டுப் புறப் பெண்கள் கண்களை உறுத்துகிற மிட்டாய்க்
கலர்ச்சிவப்பில் சேலையுடுத்துத் திரிவதில் அதிக விருப்பம் காட்டுவர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
இடபம்
இடபராசிப் பெண்கள் கலைப் பியர்கள்.
விதவிதமான
அலங்காரப் பொருட்களை வாங்குவதிலும் வீடு நிறைய அடுக்கி அழகு பார்ப்பதிலும்
ஆர்வமுள்ளவர்கள். ஆடைகள் மீதுள்ள ஆசையும் அப்படித்தான். அவர்களைப்
பொறுத்தவரை ஆடை என்பது ஒரு வெற்றிச் சின்னம்! சமூக மதிப்போ, வியாபார
வெற்றியோ தங்கள் திறமையால் மாத்திரமல்ல, அணியும் ஆடைகளிலும் தான்
தங்கியுள்ளது என்பதை நம்புகிறவர்கள்.
அதற்காக விலை குறைந்தவைகளை
அணிவது தங்கள் தரத்திற்குப் பொருத்தமல்ல என்று எண்ணுவார்கள். கடன்
பட்டேனும் தரமான ஆடம்பர ஆடைகளையே வாங்குவார்கள்.
ஆடைகளுக்கு ஏற்ற
விதத்தில் நகைகளும் அணிவதில் நாட்டமிருக்கும். இந்த ராசிக்கு அதிபதி
அழகிற்குக்காரகனான சுக்கிரன் என்பதால் இவர்களது உடலமைப்பில் ஏதோவொரு அம்சம்
சிறப்பாக அமைந்து கவர்ச்சி காட்டும். இளமையில் இவர்கள் ஆடையில் காட்டும்
ஆர்வம் வயதாக ஆக உணவு விடயத்திற்கு மாறிவிடுகிறது.
உலகிலேயே
செக்ஸியான உடையலங்காரம் சாறியும் பிளவுஸும் தான் என்பதை உலகிற்கு
உணர்த்தியவர்கள் இந்த ராசிக்காரப் பெண்கள்தான்! உலகிலேயே திறமையான நவீன ஆடை
வடிவமைப்பாளர்களும் அழகு நிலையம் நடத்துபவர்களும் இவர்களில் தான் அதிகமாக
உள்ளனர். தங்களை இளமையாகவும் எடுப்பாகவும் காட்டக் கூடி சல்வார் கம்மீஸ்,
மக்ஸி, பிஜாமா போன்ற உடைகளில் அதிக பிரியம் காட்டுவர். மங்கலத்தைக்
குறிக்கும் குங்குமச் சிவப்பு இவர்களுக்கு மிகவும் பிடித்த நிறம்.
எந்த
உடையணிந்தாலும் அதிலொரு பகுதியாக இந்நிறம் இருந்தே தீரும். பொதுவாக
இடபராசி, பொருள் சேகரம், பணம், போசனம் போன்வற்றின் நிறைவைக் குறிப்பதாலும்
இதன் அதிபதியான சுக்கிரன் அழகிற்கும் சுகபோகத்திற்கும் காரகனாவதாலும்
இவர்கள் போக்கு இப்படியிருக்கிறது.
இடபராசிப் பெண்கள் கலைப் பியர்கள்.
விதவிதமான
அலங்காரப் பொருட்களை வாங்குவதிலும் வீடு நிறைய அடுக்கி அழகு பார்ப்பதிலும்
ஆர்வமுள்ளவர்கள். ஆடைகள் மீதுள்ள ஆசையும் அப்படித்தான். அவர்களைப்
பொறுத்தவரை ஆடை என்பது ஒரு வெற்றிச் சின்னம்! சமூக மதிப்போ, வியாபார
வெற்றியோ தங்கள் திறமையால் மாத்திரமல்ல, அணியும் ஆடைகளிலும் தான்
தங்கியுள்ளது என்பதை நம்புகிறவர்கள்.
அதற்காக விலை குறைந்தவைகளை
அணிவது தங்கள் தரத்திற்குப் பொருத்தமல்ல என்று எண்ணுவார்கள். கடன்
பட்டேனும் தரமான ஆடம்பர ஆடைகளையே வாங்குவார்கள்.
ஆடைகளுக்கு ஏற்ற
விதத்தில் நகைகளும் அணிவதில் நாட்டமிருக்கும். இந்த ராசிக்கு அதிபதி
அழகிற்குக்காரகனான சுக்கிரன் என்பதால் இவர்களது உடலமைப்பில் ஏதோவொரு அம்சம்
சிறப்பாக அமைந்து கவர்ச்சி காட்டும். இளமையில் இவர்கள் ஆடையில் காட்டும்
ஆர்வம் வயதாக ஆக உணவு விடயத்திற்கு மாறிவிடுகிறது.
உலகிலேயே
செக்ஸியான உடையலங்காரம் சாறியும் பிளவுஸும் தான் என்பதை உலகிற்கு
உணர்த்தியவர்கள் இந்த ராசிக்காரப் பெண்கள்தான்! உலகிலேயே திறமையான நவீன ஆடை
வடிவமைப்பாளர்களும் அழகு நிலையம் நடத்துபவர்களும் இவர்களில் தான் அதிகமாக
உள்ளனர். தங்களை இளமையாகவும் எடுப்பாகவும் காட்டக் கூடி சல்வார் கம்மீஸ்,
மக்ஸி, பிஜாமா போன்ற உடைகளில் அதிக பிரியம் காட்டுவர். மங்கலத்தைக்
குறிக்கும் குங்குமச் சிவப்பு இவர்களுக்கு மிகவும் பிடித்த நிறம்.
எந்த
உடையணிந்தாலும் அதிலொரு பகுதியாக இந்நிறம் இருந்தே தீரும். பொதுவாக
இடபராசி, பொருள் சேகரம், பணம், போசனம் போன்வற்றின் நிறைவைக் குறிப்பதாலும்
இதன் அதிபதியான சுக்கிரன் அழகிற்கும் சுகபோகத்திற்கும் காரகனாவதாலும்
இவர்கள் போக்கு இப்படியிருக்கிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
மிதுனம்
எதிலும் பரபரப்புக் காட்டுபவர்கள்
மிதுனராசிப் பெண்கள். தங்கள் வேகத்துடன் ஈடுகொடுக்க அல்லது ஒத்துழைக்க
டியாதவர்களால் தங்களது ன்னேற்றம் பாதிக்கப்படுவதாகக் குறை கூறுபவர்கள், ஒரு
விடயத்தில் எந்தளவு தீவிரமாகக் கவரப்படுகிறார்களோ, அந்தளவு விரைவாகச்
சலித்தும் விடுவார்கள்.
நல்ல நண்பர்கள் இவர்களுக்கு
வாய்க்காமலிருப்பதற்கும் நட்பாக இருந்தவர்கள் நாளடைவில் விரோதிகளாக மாறிப்
போவதற்கும் இவர்களது இந்த மனோ நிலைதான் காரணம்.
நட்பே இப்படியென்றால்
காதல் விடயம் எப்படியிருக்கும்? இதனால்தான் மிதுன ராசிப் பெண்கள் மண
வாழ்விலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்.
கூட்டங்களிலும்
வைபவங்களிலும் தாமாகவே விரும்பிச் சென்று கலந்து கொள்ளும் சுபாவங் கொண்ட
இவர்கள், அங்கு பலரின் கண்ணையும் கருத்தையும் ஒழுங்கே கவர்வதற்கு ஒரு
பம்பரச் சுழற்சியோடு ஓடியாடிக் காரிய மாற்றும் குணம் அந்தந்த வேளைக்குத்
தக்கவாறு அணியும் ஆடையணிகளுமே காரணம். எந்தச் சந்தர்ப்பத்துக்கும் அணி
வேண்டிய எல்லா விதமான ஆடைகளும் இவர்களிடமிருக்கும் தத்தம் உடலமைப்புக்குப்
பாந்தமானவையாக, தங்களது ஓட்ட ஆட்டங்களுக்கு இடைஞ்சல் பண்ணாதவையாக இவர்களது
ஆடைத் தெவு இருக்கும். எந்த ரகத்திலும் இரு சோடி ஆடைகள் வைத்திருப்பரே
தவிர, அளவுக்கதிகமாக வாங்கிக் குவிக்க மாட்டார்கள். மஞ்சள் நிறத்தில் தனிப்
பிரியம். கடும் நிறங்கள், கட்டோடு பிடிக்காது. நகைப்பித்துக் கொண்ட
பெண்களை எள்ளி நகையாடுவதுபோல் உடைக்கேற்ற வண்ணங்களில் பிளாஸ்டிக் காதணிகள்,
போலி முத்து மாலைகள் அணிந்து கலக்குவர். அழகின் எளிமையை கவர்ச்சிகரமாக
காட்டுவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை எனலாம்
எதிலும் பரபரப்புக் காட்டுபவர்கள்
மிதுனராசிப் பெண்கள். தங்கள் வேகத்துடன் ஈடுகொடுக்க அல்லது ஒத்துழைக்க
டியாதவர்களால் தங்களது ன்னேற்றம் பாதிக்கப்படுவதாகக் குறை கூறுபவர்கள், ஒரு
விடயத்தில் எந்தளவு தீவிரமாகக் கவரப்படுகிறார்களோ, அந்தளவு விரைவாகச்
சலித்தும் விடுவார்கள்.
நல்ல நண்பர்கள் இவர்களுக்கு
வாய்க்காமலிருப்பதற்கும் நட்பாக இருந்தவர்கள் நாளடைவில் விரோதிகளாக மாறிப்
போவதற்கும் இவர்களது இந்த மனோ நிலைதான் காரணம்.
நட்பே இப்படியென்றால்
காதல் விடயம் எப்படியிருக்கும்? இதனால்தான் மிதுன ராசிப் பெண்கள் மண
வாழ்விலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள்.
கூட்டங்களிலும்
வைபவங்களிலும் தாமாகவே விரும்பிச் சென்று கலந்து கொள்ளும் சுபாவங் கொண்ட
இவர்கள், அங்கு பலரின் கண்ணையும் கருத்தையும் ஒழுங்கே கவர்வதற்கு ஒரு
பம்பரச் சுழற்சியோடு ஓடியாடிக் காரிய மாற்றும் குணம் அந்தந்த வேளைக்குத்
தக்கவாறு அணியும் ஆடையணிகளுமே காரணம். எந்தச் சந்தர்ப்பத்துக்கும் அணி
வேண்டிய எல்லா விதமான ஆடைகளும் இவர்களிடமிருக்கும் தத்தம் உடலமைப்புக்குப்
பாந்தமானவையாக, தங்களது ஓட்ட ஆட்டங்களுக்கு இடைஞ்சல் பண்ணாதவையாக இவர்களது
ஆடைத் தெவு இருக்கும். எந்த ரகத்திலும் இரு சோடி ஆடைகள் வைத்திருப்பரே
தவிர, அளவுக்கதிகமாக வாங்கிக் குவிக்க மாட்டார்கள். மஞ்சள் நிறத்தில் தனிப்
பிரியம். கடும் நிறங்கள், கட்டோடு பிடிக்காது. நகைப்பித்துக் கொண்ட
பெண்களை எள்ளி நகையாடுவதுபோல் உடைக்கேற்ற வண்ணங்களில் பிளாஸ்டிக் காதணிகள்,
போலி முத்து மாலைகள் அணிந்து கலக்குவர். அழகின் எளிமையை கவர்ச்சிகரமாக
காட்டுவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை எனலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
கடகம்
கடகராசிப் பெண்களுக்கு
ஆடையணியும் விடயத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. பாரம்பரிய
கலாசார பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
இவர்கள், அன்னிய கலாசாரத்தின் வழி வந்த புரட்சிகரமான ஆடை மாற்றங்களை
எதிர்ப்பவர்கள். பகட்டு, படாடோபம் பிடிக்காது. எளிமையான சாதாரண உடைகளையே
விரும்புவார்கள். நகைகள் அணியும் விடயத்திலும் எளிமையாக இருப்பார்களே தவிர,
கிலோ கணக்கில் நகை சுமந்து கொலுப் பொம்மைபோல் பிறர் பொறாமைப் படத் திரிவதை
விரும்ப மாட்டார்கள். திருமண வைபவங்களிலோ, கோயில் திருவிழாக்களிலோ, பொது
வைபவங்களிலோ சாஸ்திரத்திற்கு விரோதமாகச் சொல்லப்பட்டவைகளை இவர்கள் அணிவதை
நாம் பார்க்க முடியாது. பச்சைப் பசேலென்ற பசும் வண்ணத்தின் பற்பல வகைகள்
இவர்களுக்குப் பிடிக்கும். வெள்ளையில் பச்சைக்கரை வைத்த அல்லது பச்சையில்
வெள்ளைப் பூக்கள் இறைத்த உடைகளில் தனி விருப்பம் காட்டுவர்.
கடகராசிப் பெண்களுக்கு
ஆடையணியும் விடயத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. பாரம்பரிய
கலாசார பண்பாட்டுப் பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
இவர்கள், அன்னிய கலாசாரத்தின் வழி வந்த புரட்சிகரமான ஆடை மாற்றங்களை
எதிர்ப்பவர்கள். பகட்டு, படாடோபம் பிடிக்காது. எளிமையான சாதாரண உடைகளையே
விரும்புவார்கள். நகைகள் அணியும் விடயத்திலும் எளிமையாக இருப்பார்களே தவிர,
கிலோ கணக்கில் நகை சுமந்து கொலுப் பொம்மைபோல் பிறர் பொறாமைப் படத் திரிவதை
விரும்ப மாட்டார்கள். திருமண வைபவங்களிலோ, கோயில் திருவிழாக்களிலோ, பொது
வைபவங்களிலோ சாஸ்திரத்திற்கு விரோதமாகச் சொல்லப்பட்டவைகளை இவர்கள் அணிவதை
நாம் பார்க்க முடியாது. பச்சைப் பசேலென்ற பசும் வண்ணத்தின் பற்பல வகைகள்
இவர்களுக்குப் பிடிக்கும். வெள்ளையில் பச்சைக்கரை வைத்த அல்லது பச்சையில்
வெள்ளைப் பூக்கள் இறைத்த உடைகளில் தனி விருப்பம் காட்டுவர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
சிம்மம்
சிம்ம ராசிப் பெண்கள் சர்வாலங்கார பூஜிதைகளாக சிங்காரப்
பதுமைகளாக விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அழகைப்
பார்த்துவிட்டு பின்னால் அவர்களது காரியாலயங்களிலோ அன்றி வீடுகளிலோ
அவர்களைக் காண நேர்ந்தால் அதிசயப்பட்டுத்தான் போவீர்கள்! ஆமாம். அங்கே
ஆடம்பரத்தின் உச்சியில் இருந்தவர்கள் இங்கே சாதாரணத்தின் அடிமட்டத்தில் மிக
எளிமையாகக் காட்சி தருவார்கள். வீட்டிலென்றால் பெண்கள் எல்லோரும்
சாதாரணமாகத்தானே இருப்பார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டாம்! வீட்டில்
பட்டுப் புடவையைக் கழற்றாமல் பகட்டோடு அர்த்தராத்தியிலும் குடைபிடித்து
உலாவுகிற எத்தனையோ பெண்களைத்தான் நாம் பார்க்கிறோமே?
ஆடையலங்காரம்,
ஆடம்பரம் என்பதெல்லாம் அவ்வப்போது நாம் போடுகிற வேஷங்கள் என்று சொல்வது
போலிருக்கும். இந்த சிம்மராசிப் பெண்களின் நடவடிக்கைகள் சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்றவாறு கம்பீரமாக படாடோபமாக நளினமாக அந்தஸ்தை எடுத்துக்
காட்டும்படியான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு கூட்டத்தையே ஒரு
கலக்குக் கலக்கிவிட்டு வெளியேறுவார்கள். தாம் கலந்து கொண்டு விட்டு வெளியேற
நேர்ந்தால் அக் கூட்டத்தில் தன் வெறுமையை உணரவைக்கிற தன்மை மற்ற ராசிப்
பெண்கள் மத்தியில் சிம்ம ராசிப் பெண்களுக்கு மட்டுமே உண்டு.
அப்படிப்பட்டதொரு ஆளுமையைக் கொண்டவர்கள் அவர்கள்.
இந்த ஆளுமை
இருவகைப்படும்! ஒன்று எல்லையற்ற கருணையால் உள்ளங்களைக் கட்டிப் போடுகிற
ஆளுமை; அதாவது அன்னை தெரேசா போல;அவரும் சிம்மராசி! மற்றது அகந்தையால்
மற்றவர்களைத் தன்னடிமைப்படுத்துகிற ஆளுமை! அதாவது முன்னாள் தமிழக தல்வர்
ஜெயலலிதாபோல! இவரும் சிம்மராசி! ஆடையணிகளால் இவர்களுக்கு கிடைக்கும்
மதிப்பும் பெருமையும் மற்றவர்கள் மனங்களில் பொறாமையைத் தூண்டுவதாக
இருக்கும்; ஆடைகள் மாத்திரமல்ல, அவற்றிற்குப் பொருத்தமான ஒளி வீசும்
வைரங்கள் இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வதிலும் பெரு
விருப்பம் காட்டுவர். ஆடம்பரமான பாதணிகளையும் விதம் விதமாய் வைத்திருப்பர்.
இவர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது வடிவமைக்கும் டிசைன்களில் இவர்களது
சுயத்தன்மை, தனித்தன்மை வெளிப்படும். பளபளக்கும் பொன் நிறம ஒரேஞ், சிவப்பு
நிறச் சாறிகள், சட்டை கள் மீது தனிப் பிரியம் காட்டுவர்.
சிம்ம ராசிப் பெண்கள் சர்வாலங்கார பூஜிதைகளாக சிங்காரப்
பதுமைகளாக விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அழகைப்
பார்த்துவிட்டு பின்னால் அவர்களது காரியாலயங்களிலோ அன்றி வீடுகளிலோ
அவர்களைக் காண நேர்ந்தால் அதிசயப்பட்டுத்தான் போவீர்கள்! ஆமாம். அங்கே
ஆடம்பரத்தின் உச்சியில் இருந்தவர்கள் இங்கே சாதாரணத்தின் அடிமட்டத்தில் மிக
எளிமையாகக் காட்சி தருவார்கள். வீட்டிலென்றால் பெண்கள் எல்லோரும்
சாதாரணமாகத்தானே இருப்பார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டாம்! வீட்டில்
பட்டுப் புடவையைக் கழற்றாமல் பகட்டோடு அர்த்தராத்தியிலும் குடைபிடித்து
உலாவுகிற எத்தனையோ பெண்களைத்தான் நாம் பார்க்கிறோமே?
ஆடையலங்காரம்,
ஆடம்பரம் என்பதெல்லாம் அவ்வப்போது நாம் போடுகிற வேஷங்கள் என்று சொல்வது
போலிருக்கும். இந்த சிம்மராசிப் பெண்களின் நடவடிக்கைகள் சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்றவாறு கம்பீரமாக படாடோபமாக நளினமாக அந்தஸ்தை எடுத்துக்
காட்டும்படியான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு கூட்டத்தையே ஒரு
கலக்குக் கலக்கிவிட்டு வெளியேறுவார்கள். தாம் கலந்து கொண்டு விட்டு வெளியேற
நேர்ந்தால் அக் கூட்டத்தில் தன் வெறுமையை உணரவைக்கிற தன்மை மற்ற ராசிப்
பெண்கள் மத்தியில் சிம்ம ராசிப் பெண்களுக்கு மட்டுமே உண்டு.
அப்படிப்பட்டதொரு ஆளுமையைக் கொண்டவர்கள் அவர்கள்.
இந்த ஆளுமை
இருவகைப்படும்! ஒன்று எல்லையற்ற கருணையால் உள்ளங்களைக் கட்டிப் போடுகிற
ஆளுமை; அதாவது அன்னை தெரேசா போல;அவரும் சிம்மராசி! மற்றது அகந்தையால்
மற்றவர்களைத் தன்னடிமைப்படுத்துகிற ஆளுமை! அதாவது முன்னாள் தமிழக தல்வர்
ஜெயலலிதாபோல! இவரும் சிம்மராசி! ஆடையணிகளால் இவர்களுக்கு கிடைக்கும்
மதிப்பும் பெருமையும் மற்றவர்கள் மனங்களில் பொறாமையைத் தூண்டுவதாக
இருக்கும்; ஆடைகள் மாத்திரமல்ல, அவற்றிற்குப் பொருத்தமான ஒளி வீசும்
வைரங்கள் இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து கொள்வதிலும் பெரு
விருப்பம் காட்டுவர். ஆடம்பரமான பாதணிகளையும் விதம் விதமாய் வைத்திருப்பர்.
இவர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது வடிவமைக்கும் டிசைன்களில் இவர்களது
சுயத்தன்மை, தனித்தன்மை வெளிப்படும். பளபளக்கும் பொன் நிறம ஒரேஞ், சிவப்பு
நிறச் சாறிகள், சட்டை கள் மீது தனிப் பிரியம் காட்டுவர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
கன்னி
கன்னிராசிப் பெண்கள் நிறத்தையும் பகட்டையும் பொருட்படுத்தாமல் துணியின் தரத்தைப் பார்த்தே ஆடையைத் தேர்ந்தெடுப்பர்.
தேவைப்பட்டால்தான் வாங்குவார்கள்.
தேவைக்கு
மேல் ஆடைகளை வாங்கி அடுக்கும் ஆசையெல்லாம் கிடையாது. டாம்பீகச்
செலவுகளுக்கும் இடம் வைப்பதில்லை. கடன் வாங்கி உடுக்கும் பழக்கமிராது.
தையல் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவர். காலத் துக்கேற்ற பாஷன்கள், விதம்
விதமான பூ வேலைப் பாடுகள் கொண்ட ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
இவர்களில் பெரும்பாலோர் திறமையான தையற்காகளே! அந்தந்த வைபவங்கள்,
விசேடங்களுக்கு ஏற்ற ஆடையணிகள் கைவசமில்லாவிட்டால் அவற்றில் கலந்து
கொள்வதைத் தவிர்ப்பார்கள்.
ஆடையை விட கூந்தலை விதம் விதமாய்
அலங்கரித்துக் கொள்வதில் அலாதி விருப்பமிருக்கும். பச்சையும் அதன் பல்வேறு
விதங்களுமே பிடித்தமானவை. ஒரு துணிக்காக ஒன்பது கடைகள் ஏறியிறங்குவர்.
ஆடைகளை பேரம்பேசி பாதி விலைக்கே வாங்கிவிடும்சாமர்த்தியத்தை இவர்களிடம்தான்
மற்றவர்கள் கற்க வேண்டும். கூடியவரை தங்களுடையதை தாங்களே தைத்துக்
கொள்வார்கள்.
கன்னிராசிப் பெண்கள் நிறத்தையும் பகட்டையும் பொருட்படுத்தாமல் துணியின் தரத்தைப் பார்த்தே ஆடையைத் தேர்ந்தெடுப்பர்.
தேவைப்பட்டால்தான் வாங்குவார்கள்.
தேவைக்கு
மேல் ஆடைகளை வாங்கி அடுக்கும் ஆசையெல்லாம் கிடையாது. டாம்பீகச்
செலவுகளுக்கும் இடம் வைப்பதில்லை. கடன் வாங்கி உடுக்கும் பழக்கமிராது.
தையல் விடயத்தில் அதிக கவனம் செலுத்துவர். காலத் துக்கேற்ற பாஷன்கள், விதம்
விதமான பூ வேலைப் பாடுகள் கொண்ட ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
இவர்களில் பெரும்பாலோர் திறமையான தையற்காகளே! அந்தந்த வைபவங்கள்,
விசேடங்களுக்கு ஏற்ற ஆடையணிகள் கைவசமில்லாவிட்டால் அவற்றில் கலந்து
கொள்வதைத் தவிர்ப்பார்கள்.
ஆடையை விட கூந்தலை விதம் விதமாய்
அலங்கரித்துக் கொள்வதில் அலாதி விருப்பமிருக்கும். பச்சையும் அதன் பல்வேறு
விதங்களுமே பிடித்தமானவை. ஒரு துணிக்காக ஒன்பது கடைகள் ஏறியிறங்குவர்.
ஆடைகளை பேரம்பேசி பாதி விலைக்கே வாங்கிவிடும்சாமர்த்தியத்தை இவர்களிடம்தான்
மற்றவர்கள் கற்க வேண்டும். கூடியவரை தங்களுடையதை தாங்களே தைத்துக்
கொள்வார்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
துலாம்
துலா ராசிப் பெண்களுக்கு ஆடைத் தெவு விடயத்தில் நிறம்
பொருத்தந்தான் பிரதானம் (Matching) இயற்கையிலேயே கலையுள்ளம் படைத்தவர்கள்.
சங்கீதம், நடனம், நடிப்பு என்று இவ்வுலகில் பிரபலம் பெற்ற பெண்மணிகள்
பெரும்பாலும் துலா ராசிக்காரர்களாகவே இருப்பர். அழகுணர்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு அந்தந்த கால கட்டத்திற்கேற்ற பாஷன்
ஸ்டைல் என்பன இரண்டாம் பட்சமானவை. சீராக, அழகாக ஒழுங்காக அதுவும் "மாட்சாக'
அணிவதே இவர்களுக்கு திருப்தியளிக்கக் கூடியது. ஏனென்றால் பிறவியிலேயே அழகு
இவர்களுடன் ஒட்டிப் பிறந்தது. அழகுக்கு உதாரணமாக கும்பராசிப் பெண்களையே
கூறுவார்கள்; பெரும்பாலும் அவர்கள் மாதிரி இவர்களும் கட்டுடலும் காந்தப்
பார்வையும் கொண்டிருப்பர். அழகே வடிவமாக இருக்கையில் அதனை கவர்ச்சிகரமாக
வெளிக்காட்டும் ஆடையில் அலட்சியம் காட்டலாமா? இவர்களில் தனிக் கறுப்பிகள்
கூட கருங்காலிக் கட்டையில் கடைந்தெடுத்த சிற்பங்கள் மாதிரி தனிக்
கவர்ச்சியோடு விளங்குவர். ஒரு சமயம் உடுத்த ஆடையை மறுபடியும் உடுக்க
மாட்டார்கள்.
உடம்பிலும் உடையிலும் அடிக்கடி சுத்தம் பேணுவர். ஆடைகள்
சிறிதுகூட கசங்கியோ கறை படிந்தோ, மடிப்புக் குலைந்தோ இருக்கக் கூடாது.
ஆபரணங்களைக் கூட உடையலங்காரத்திற்குப் பொருத்தமாக எளிமையாக அணிவர்.
இவர்களது ஒப்பனைகள்கூட இயற்கை எழுதுவித்த சித்திரம் போல அழகாக, இயல்பாக
இருக்கும். சிவப்பும் பச்சையும் பிடித்த நிறங்கள். இவற்றினுடைய ஒரு
மாறுதலுக்காக இவர்கள் விரும்பும் நிறம் கறுப்பு. ஏனென்றால் கறப்பு நிறம்
கொண்ட சனி, துலா ராசிக்கு அதிபதி சுக்கிரனுக்கு நெருக்கமான நட்புக்
கிரகமாகி, துலாவில் உச்சம் பெறுகிறதல்லவா? அதுதான் காரணம்! விருச்சிகம்
விருச்சிக ராசிப் பெண்கள்அணியும் ஆடையணிகளில் அவர்களது தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும் காணமுடியும். ஒரு காலத்தில் மொழுமொழுவென்று ஒரு சாணுக்கு
மேல் தொடைகள் தெரிய அணியும் "மினிஸ்கேட்' என்ற ஆடையை உலகிற்கு
அறிகப்படுத்திய துணிச்சல்காரிகள் இந்த ராசிப் பெண்களாகவே இருக்க வேண்டும்!
அந்தளவுக்கு வீட்டினுள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களை
தலைகுனிய வைக்கும் புரட்சிகர சிந்தனையுடையவர்கள்! கலாசார பண்பாடுகள்
குறித்த மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுகளுக்குப் பயப்படாமல் பகட்டான, வாசனைத்
திரவியங்கள் கமகமக்க, குதியுயர்ந்த செருப்புகள் குதிரையின் குளம் பொலிபோல்
சப்திக்க, ஒரு துச்சமான பார்வையுடன் மிடுக்காக வலம் வருவார்கள். ஆடைகளை
விட ஒரு சுயமான காந்த சக்தியாலே ஆண்களை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள்.
உதாரணம்:
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், நடிகை ஸ்ரேயா ரெட்டி, இவர்களெல்லாம்
விருச்சிக ராசியினர். இவர்கள் அணிந்து திரியும் விதவித வடிவமைப்பிலான
ஆடைகளைக் கவனித்தால் அவற்றைத் தைக்க தையல்காரர்களை எவ்வளவு பாடுபடுத்தி
வேலை வாங்கியிருப்பார்களோவென்று மலைக்கத் தோன்றும்! கூட்டங்களில்,
வைபவங்களில் கலந்து கொள்கையில் யாரிடமும் ஒட்டாமல் தனித்திருப்பதை தங்களது
தனித்த ஆளுமையாகக் கருதுவர். யாரையோ குறிப்பாகத் தேடுவதுபோல் சுழலும்
அவர்களது விழிகளில் ஒரு புத்திசாலித்தனம் தெரியும்.
சிவப்பு, மரூன்,
கறுப்பு நிற ஆடைகளையே அதிகமாக விரும்பி அணிவர். போலி முத்துக்கள், பிளாஸ்க்
நகைகள் தாம் பிறவியெடுத்த பயனை எய்து வது இவர்கள் அணிவதால் தான்.
மற்றப்படி தங்க, வைர நகைகளில் ஆர்வம் குறைவு.
துலா ராசிப் பெண்களுக்கு ஆடைத் தெவு விடயத்தில் நிறம்
பொருத்தந்தான் பிரதானம் (Matching) இயற்கையிலேயே கலையுள்ளம் படைத்தவர்கள்.
சங்கீதம், நடனம், நடிப்பு என்று இவ்வுலகில் பிரபலம் பெற்ற பெண்மணிகள்
பெரும்பாலும் துலா ராசிக்காரர்களாகவே இருப்பர். அழகுணர்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு அந்தந்த கால கட்டத்திற்கேற்ற பாஷன்
ஸ்டைல் என்பன இரண்டாம் பட்சமானவை. சீராக, அழகாக ஒழுங்காக அதுவும் "மாட்சாக'
அணிவதே இவர்களுக்கு திருப்தியளிக்கக் கூடியது. ஏனென்றால் பிறவியிலேயே அழகு
இவர்களுடன் ஒட்டிப் பிறந்தது. அழகுக்கு உதாரணமாக கும்பராசிப் பெண்களையே
கூறுவார்கள்; பெரும்பாலும் அவர்கள் மாதிரி இவர்களும் கட்டுடலும் காந்தப்
பார்வையும் கொண்டிருப்பர். அழகே வடிவமாக இருக்கையில் அதனை கவர்ச்சிகரமாக
வெளிக்காட்டும் ஆடையில் அலட்சியம் காட்டலாமா? இவர்களில் தனிக் கறுப்பிகள்
கூட கருங்காலிக் கட்டையில் கடைந்தெடுத்த சிற்பங்கள் மாதிரி தனிக்
கவர்ச்சியோடு விளங்குவர். ஒரு சமயம் உடுத்த ஆடையை மறுபடியும் உடுக்க
மாட்டார்கள்.
உடம்பிலும் உடையிலும் அடிக்கடி சுத்தம் பேணுவர். ஆடைகள்
சிறிதுகூட கசங்கியோ கறை படிந்தோ, மடிப்புக் குலைந்தோ இருக்கக் கூடாது.
ஆபரணங்களைக் கூட உடையலங்காரத்திற்குப் பொருத்தமாக எளிமையாக அணிவர்.
இவர்களது ஒப்பனைகள்கூட இயற்கை எழுதுவித்த சித்திரம் போல அழகாக, இயல்பாக
இருக்கும். சிவப்பும் பச்சையும் பிடித்த நிறங்கள். இவற்றினுடைய ஒரு
மாறுதலுக்காக இவர்கள் விரும்பும் நிறம் கறுப்பு. ஏனென்றால் கறப்பு நிறம்
கொண்ட சனி, துலா ராசிக்கு அதிபதி சுக்கிரனுக்கு நெருக்கமான நட்புக்
கிரகமாகி, துலாவில் உச்சம் பெறுகிறதல்லவா? அதுதான் காரணம்! விருச்சிகம்
விருச்சிக ராசிப் பெண்கள்அணியும் ஆடையணிகளில் அவர்களது தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும் காணமுடியும். ஒரு காலத்தில் மொழுமொழுவென்று ஒரு சாணுக்கு
மேல் தொடைகள் தெரிய அணியும் "மினிஸ்கேட்' என்ற ஆடையை உலகிற்கு
அறிகப்படுத்திய துணிச்சல்காரிகள் இந்த ராசிப் பெண்களாகவே இருக்க வேண்டும்!
அந்தளவுக்கு வீட்டினுள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களை
தலைகுனிய வைக்கும் புரட்சிகர சிந்தனையுடையவர்கள்! கலாசார பண்பாடுகள்
குறித்த மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுகளுக்குப் பயப்படாமல் பகட்டான, வாசனைத்
திரவியங்கள் கமகமக்க, குதியுயர்ந்த செருப்புகள் குதிரையின் குளம் பொலிபோல்
சப்திக்க, ஒரு துச்சமான பார்வையுடன் மிடுக்காக வலம் வருவார்கள். ஆடைகளை
விட ஒரு சுயமான காந்த சக்தியாலே ஆண்களை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள்.
உதாரணம்:
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், நடிகை ஸ்ரேயா ரெட்டி, இவர்களெல்லாம்
விருச்சிக ராசியினர். இவர்கள் அணிந்து திரியும் விதவித வடிவமைப்பிலான
ஆடைகளைக் கவனித்தால் அவற்றைத் தைக்க தையல்காரர்களை எவ்வளவு பாடுபடுத்தி
வேலை வாங்கியிருப்பார்களோவென்று மலைக்கத் தோன்றும்! கூட்டங்களில்,
வைபவங்களில் கலந்து கொள்கையில் யாரிடமும் ஒட்டாமல் தனித்திருப்பதை தங்களது
தனித்த ஆளுமையாகக் கருதுவர். யாரையோ குறிப்பாகத் தேடுவதுபோல் சுழலும்
அவர்களது விழிகளில் ஒரு புத்திசாலித்தனம் தெரியும்.
சிவப்பு, மரூன்,
கறுப்பு நிற ஆடைகளையே அதிகமாக விரும்பி அணிவர். போலி முத்துக்கள், பிளாஸ்க்
நகைகள் தாம் பிறவியெடுத்த பயனை எய்து வது இவர்கள் அணிவதால் தான்.
மற்றப்படி தங்க, வைர நகைகளில் ஆர்வம் குறைவு.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
தனு
தனுராசிப் பெண்களுக்கு ஆடைகள் பற்றிய எல்லா விடயங்களும் அத்துப்படி.
அவர்களது
பீரோக்களில் சேலைகளும் ரவிக்கைகளும் பாவாடை தாவணிகளும் தான்
நிறைந்திருக்கு மென எதிர்பார்த்தால் ஏமாந்து தான் போவீர்கள்! அவைகளும்
இருக்கும்; அவற்றுக்குச் சமமாக நிறைய சேர்ட்டுகளும் காற் சட்டைகளும்
கவுண்களுமே காணப்படும். விதம் விதமான பாதணிகளும் வைத்திருப்பர்.
அவைகளெல்லாம் விளையாட்டு வீரர்களுக்குரியவை. இவர்களும் அப்படித்தான். இந்த
உடையலங்காரங்களுடன் தான் அன்றாடக் கடமைகளோ, கல்வியோ, தொழிலோ நடக்கும்.
இன்னேரமானால் பாடசாலையிலோ, வீதியிலோ, மைதானத்திலோ ஓட்டம் பழகிக்
கொண்டிருப்பார்கள். டென்னிஸ், கூடைப்பந்தாட்டமென்று பயிற்சிகளில்
ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
பெண் பிள்ளைகளுக்குய அடக்கவொடுக்க மின்றி
வீதியிலும் வெளியிலும் கவடிப் பாய்ந்து திரிவதால் தான் இவர்களுக்கு
"ஆண்மாகள்' என்ற செல்லப் பெயர் ஊருக்குள் இருக்கும். சுதந்திர உணர்வு
மிகுந்தவர்கள்.
துணிச்சல் கூடப் பிறந்தது. ஓட்டம், நீச்சல், உயரப்
பாய்தல் போன்ற விளையாட்டுகளில் முன்னணி வகிப்பவர்களும், ஜூடோ, கராட்டி
பயிற்சிகளில் ஈடுபடுபவர்களும் பெரும்பாலும் தனுராசிப் பெண்களாகவே இருப்பர்.
(இந்திய
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, விண்கலம் வெடித்து உயிழந்த அமெக்க
விஞ்ஞானி கல்பனா சாவ்லா, இலங்கையின் ஒட்ட வீராங்கனை சுசந்திகா ஆகியோர்
தனுராசிக் காரரர்கள்) இவர்களது உறுதியான உடலமைப்பையும் கம்பீரத்தையும்
பார்த்தாலே இது விளங்கிவிடும்.
தனுராசிப் பெண்களுக்கு ஆடைகள் பற்றிய எல்லா விடயங்களும் அத்துப்படி.
அவர்களது
பீரோக்களில் சேலைகளும் ரவிக்கைகளும் பாவாடை தாவணிகளும் தான்
நிறைந்திருக்கு மென எதிர்பார்த்தால் ஏமாந்து தான் போவீர்கள்! அவைகளும்
இருக்கும்; அவற்றுக்குச் சமமாக நிறைய சேர்ட்டுகளும் காற் சட்டைகளும்
கவுண்களுமே காணப்படும். விதம் விதமான பாதணிகளும் வைத்திருப்பர்.
அவைகளெல்லாம் விளையாட்டு வீரர்களுக்குரியவை. இவர்களும் அப்படித்தான். இந்த
உடையலங்காரங்களுடன் தான் அன்றாடக் கடமைகளோ, கல்வியோ, தொழிலோ நடக்கும்.
இன்னேரமானால் பாடசாலையிலோ, வீதியிலோ, மைதானத்திலோ ஓட்டம் பழகிக்
கொண்டிருப்பார்கள். டென்னிஸ், கூடைப்பந்தாட்டமென்று பயிற்சிகளில்
ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
பெண் பிள்ளைகளுக்குய அடக்கவொடுக்க மின்றி
வீதியிலும் வெளியிலும் கவடிப் பாய்ந்து திரிவதால் தான் இவர்களுக்கு
"ஆண்மாகள்' என்ற செல்லப் பெயர் ஊருக்குள் இருக்கும். சுதந்திர உணர்வு
மிகுந்தவர்கள்.
துணிச்சல் கூடப் பிறந்தது. ஓட்டம், நீச்சல், உயரப்
பாய்தல் போன்ற விளையாட்டுகளில் முன்னணி வகிப்பவர்களும், ஜூடோ, கராட்டி
பயிற்சிகளில் ஈடுபடுபவர்களும் பெரும்பாலும் தனுராசிப் பெண்களாகவே இருப்பர்.
(இந்திய
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, விண்கலம் வெடித்து உயிழந்த அமெக்க
விஞ்ஞானி கல்பனா சாவ்லா, இலங்கையின் ஒட்ட வீராங்கனை சுசந்திகா ஆகியோர்
தனுராசிக் காரரர்கள்) இவர்களது உறுதியான உடலமைப்பையும் கம்பீரத்தையும்
பார்த்தாலே இது விளங்கிவிடும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
திருவோணம்
Tryme, Pressure, Touch me dare You (துணிவிருந்தால்
என்னைத்தொடு) என்ற வாசகங்கள் மார்பில் பொறிக்கப்பட்ட பனியன்களை அணிந்து
கொண்டு நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுமாக இளைஞர் மத்தியில்
உலாவரும் துணிவு இவர்களுக்குத் தான் உண்டு. இது விடயத்தில் பெயவர்களின்
புத்திமதி, கண்டிப்பு எல்லாம் இவர்களுக்குத் துச்சம்! சேலை, பாவாடை
தாவணியெல்லாம் இவர்களுக்கு கோயிலுக்கும் கல்யாணத்திற்கும் போவதற்குத்தான்.
வீட்டிலிருக்கப் பிரியப்படாமல் சைக்கிளில் ஊர் சுற்றுவதும், பிக்னிக்
சுற்றுலா என்று ஊருக்கு ஊர் அலைந்து திரிவதும் இவர்களுக்கு மிகவும்
பிடிக்கும். விதம் விதமான பிரயாணப் பைகள், பீரீவ் கேசுகள் சேகரிப்பதிலும்
ஆர்வம் காட்டுவர். நீல நிறத்தின் பலவிதங்கள், ஊதா (Purple) நிறம்
ஆகியவற்றில் பிரதானமாக இவர்களது ஆடைத் தெரிவுகள் இருக்கும்.
Tryme, Pressure, Touch me dare You (துணிவிருந்தால்
என்னைத்தொடு) என்ற வாசகங்கள் மார்பில் பொறிக்கப்பட்ட பனியன்களை அணிந்து
கொண்டு நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுமாக இளைஞர் மத்தியில்
உலாவரும் துணிவு இவர்களுக்குத் தான் உண்டு. இது விடயத்தில் பெயவர்களின்
புத்திமதி, கண்டிப்பு எல்லாம் இவர்களுக்குத் துச்சம்! சேலை, பாவாடை
தாவணியெல்லாம் இவர்களுக்கு கோயிலுக்கும் கல்யாணத்திற்கும் போவதற்குத்தான்.
வீட்டிலிருக்கப் பிரியப்படாமல் சைக்கிளில் ஊர் சுற்றுவதும், பிக்னிக்
சுற்றுலா என்று ஊருக்கு ஊர் அலைந்து திரிவதும் இவர்களுக்கு மிகவும்
பிடிக்கும். விதம் விதமான பிரயாணப் பைகள், பீரீவ் கேசுகள் சேகரிப்பதிலும்
ஆர்வம் காட்டுவர். நீல நிறத்தின் பலவிதங்கள், ஊதா (Purple) நிறம்
ஆகியவற்றில் பிரதானமாக இவர்களது ஆடைத் தெரிவுகள் இருக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
மகரம்
இயல்பிலேயே தங்களில் ஏதோவொரு திறமையை வைத்துக் கொண்ட
மக்கள்மத்தியில் அசத்துபவர்கள் மகரராசிப் பெண்கள். சமையலோ, எழுத்தோ, நடனமோ,
நடிப்போ, அரசியலோ, எதில் ஈடுபட்டாலும் இவர்களுக்கென்று தனி
முத்திரையிருக்கும். அன்றைய இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்தியப்
பிரதமர் இந்திரா காந்தி, இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்
முதற்கொண்டு இன்றைய சின்னக் குயில் சித்ரா, நடிகைகள் கலா ஜோதிகா, சினேகா
ஆகியோரெல்லாம் மகர ராசியினரே. இவர்களெல்லாம் அந்தந்தத் துறைகளில்
எப்படியெல்லாம் அசத்தினார்களென்பது உங்களுக்குத் தெயும். கர்வம் இவர்கள்
கூடம் பிறந்தது.
எதிர்ப்புகள், பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இவர்களது திறமையும் தைரியமும் பிரகாசித்து இவர்களை இனம் காட்டியது.
ஆடை
விடயத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இவர்களுக்குக் கிடையாது.
அந்தந்த வேளையில் எது தயாராக உள்ளதோ, எது வசதியாகப் படுகிறதோ, அதையே
அணிந்து தயாராகி விடுவார்கள். இவர்களில் பிரபலமான ஒருவர் சாதாரணமாக அணிந்து
தோன்றும் ஆடையணியே அந்தக்கால கட்டத்தில் பெண்கள் மத்தியில் பாஷன்
ஆகிவிடுவது தான் வேடிக்கை! இவர்களில் நடுத்தரவர்க்க அல்லது
அடித்தட்டுவர்க்கப் பெண்களுக்கு மற்றவர்கள் முன் தங்களை அந்தஸ்தில்
உயர்ந்தவர்களென்று காட்ட வேண்டுமென்ற ஆசையுண்டு. அதற்காக அன்றாட வருவாயில்
மிச்சம் பிடித்து சிறுகச் சிறுகச் சேமித்து உயர்ரக ஆடைகளை வாங்கி
விடுவார்கள். கடனுக்கு ஆடை வாங்கி, பின்னர் தவணை முறையில் பணம் கட்டும்
வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் இந்த ராசிக்காரப் பெண்களென்றே கூற வேண்டும்.
அணியும்
ஆடை அமைப்புகளில் இவர்களின் புத்திசாலித்தனம் தெரியும். எதிலும் எளிமையாக
விளங்குவது இவர்களிடமிருந்து இதர பெண்கள் படிக்க வேண்டிய விடயம்.
ஆடையணியும்
விடயத்தில் பிறர் தமக்குப் புத்திமதி கூறுவது பிடிக்காது. இவர்களும்
புத்தி சொல்லப் போக மாட்டார்கள். ஆபரணங்கள் அணிவதில் அக்கறை காட்டுவதில்லை.
சீதோஷ்ண
நிலைக்கேற்ப கம்பளி, சுவெட்டர் ஆடைகள் அணியும் வழக்கம் இதர
ராசிக்காரர்களில் இவர்களிடம் மட்டுமேயுண்டு. அரக்கு பச்சை வெள்ளை, கறுப்பு
நிற ஆடைகளே இவர்களிடம் அதிகமிருக்கும் அவைகளிலேயே அலாதிப்பியம்.
இயல்பிலேயே தங்களில் ஏதோவொரு திறமையை வைத்துக் கொண்ட
மக்கள்மத்தியில் அசத்துபவர்கள் மகரராசிப் பெண்கள். சமையலோ, எழுத்தோ, நடனமோ,
நடிப்போ, அரசியலோ, எதில் ஈடுபட்டாலும் இவர்களுக்கென்று தனி
முத்திரையிருக்கும். அன்றைய இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்தியப்
பிரதமர் இந்திரா காந்தி, இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்
முதற்கொண்டு இன்றைய சின்னக் குயில் சித்ரா, நடிகைகள் கலா ஜோதிகா, சினேகா
ஆகியோரெல்லாம் மகர ராசியினரே. இவர்களெல்லாம் அந்தந்தத் துறைகளில்
எப்படியெல்லாம் அசத்தினார்களென்பது உங்களுக்குத் தெயும். கர்வம் இவர்கள்
கூடம் பிறந்தது.
எதிர்ப்புகள், பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இவர்களது திறமையும் தைரியமும் பிரகாசித்து இவர்களை இனம் காட்டியது.
ஆடை
விடயத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இவர்களுக்குக் கிடையாது.
அந்தந்த வேளையில் எது தயாராக உள்ளதோ, எது வசதியாகப் படுகிறதோ, அதையே
அணிந்து தயாராகி விடுவார்கள். இவர்களில் பிரபலமான ஒருவர் சாதாரணமாக அணிந்து
தோன்றும் ஆடையணியே அந்தக்கால கட்டத்தில் பெண்கள் மத்தியில் பாஷன்
ஆகிவிடுவது தான் வேடிக்கை! இவர்களில் நடுத்தரவர்க்க அல்லது
அடித்தட்டுவர்க்கப் பெண்களுக்கு மற்றவர்கள் முன் தங்களை அந்தஸ்தில்
உயர்ந்தவர்களென்று காட்ட வேண்டுமென்ற ஆசையுண்டு. அதற்காக அன்றாட வருவாயில்
மிச்சம் பிடித்து சிறுகச் சிறுகச் சேமித்து உயர்ரக ஆடைகளை வாங்கி
விடுவார்கள். கடனுக்கு ஆடை வாங்கி, பின்னர் தவணை முறையில் பணம் கட்டும்
வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் இந்த ராசிக்காரப் பெண்களென்றே கூற வேண்டும்.
அணியும்
ஆடை அமைப்புகளில் இவர்களின் புத்திசாலித்தனம் தெரியும். எதிலும் எளிமையாக
விளங்குவது இவர்களிடமிருந்து இதர பெண்கள் படிக்க வேண்டிய விடயம்.
ஆடையணியும்
விடயத்தில் பிறர் தமக்குப் புத்திமதி கூறுவது பிடிக்காது. இவர்களும்
புத்தி சொல்லப் போக மாட்டார்கள். ஆபரணங்கள் அணிவதில் அக்கறை காட்டுவதில்லை.
சீதோஷ்ண
நிலைக்கேற்ப கம்பளி, சுவெட்டர் ஆடைகள் அணியும் வழக்கம் இதர
ராசிக்காரர்களில் இவர்களிடம் மட்டுமேயுண்டு. அரக்கு பச்சை வெள்ளை, கறுப்பு
நிற ஆடைகளே இவர்களிடம் அதிகமிருக்கும் அவைகளிலேயே அலாதிப்பியம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
கும்பம்
கும்பராசிப் பெண்கள்
பிறவியிலேயே வசீகரமான முகம் உடலழகும் அமையப் பெற்றவர்கள். அதனால் இவர்கள்
ஆடைகளைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஓர் ஆடையோ, புடைவையோ அழகு பெறுவதும்
தமது பிறவிப் பயனை அடைவதும் தாங்கள் அணிவதால் தான் என்ற இறுமாப்பு
இவர்களிடமுண்டு. கூடுமானவரை தங்களுடையதை தாங்களே தைத்துக் கொள்வார்கள்.
ஸ்வெட்டர்
பின்னுவது ஆடைகள் தலையணை உறைகள், கைக் குட்டைகள், நாற்காலி உறைகள்
போன்றவற்றில் பூவேலைப்பாடுகள் செய்வது என்று வீட்டிலிருக்கும் பொழுதெல்லாம்
சதா ஊசி நூலும் கையுமாகவே இவர்களைக் காணலாம். இவர்களது வீட்டின் உள்ளக
அலங்காரங்கள், கலைப் பொருட்கள் மற்றும் பூச்சாடி அலங்காரங்கள்
பிரமாதமாகவிருக்கும். விருந்தினன் பாராட்டுக்களைப் பெறும்.
நைச்சியமாய்ப் பேசி ஆடைகளை விலை குறித்து வாங்குவதில் இவர்கள் சமர்த்தர்கள்.
அதற்காக எத்தனை கடைகளும் ஏறியிறங்குவார்கள். ஒரு துணியைத் தெவு செய்வதற்காக ஒரு கடையையே தடம் புரட்டுவார்கள்.
அதிக
விலை கொடுத்து சேலை சட்டைகளை வாங்கி பீரோவில் அடுக்கி வைப்பார்களே தவிர,
அவற்றை அணிவது எப்போதாவது ஒரு தடவை தான். புடைவை நகைகளை பல நாட்கள் வரை
புதையல் போல் பூட்டி வைத்து அழகு பார்ப்பதில் இவர்கள் மேடராசிப்
பெண்களையும் மிஞ்சி விடுவார்கள்.
தங்கள் அழகு குறித்து
அகந்தையடையவர்களே தவிர, இவர்கள் ஆடையணியும் விதம் மற்றப் பெண்களால்
விமர்சிக்கப்படும். என்ன இருந்தாலும் ஒரு இளம் பெண் அணியும் ஆடை, ஒரு
வயதானவர்களுக்குப் பொருந்துமா? அதுபோலத்தான் இவர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை
தெரியாமல் தங்கள் வயதுக்கோ, உடலமைப்புக்கோ பொருத்தமற்ற உடைகளை அணிந்து
கேலிக்கு உள்ளாகின்றனர். இன்ன சேலைக்கு இன்ன பிளவுஸ்தான் பொருத்தமென்று
அணியும் ஒருவரைறையும் இவர்களிடமில்லை. அத்துடன் நகைகளுக்கு க்கியத்துவம்
கொடுத்து அணியும் பழக்கம் கிடையாது. கடும் நீலத்திலிருந்து Sky blue, Royal
blue வண்ணங்களும் நரை நிறங்களும் (Grey) ஆடைத் தெவுகளில் இவர்களுக்கு
விருப்பமான நிறங்களாக இருக்கும். பரவலாக இந்நிறங்கள் யாவும் கலந்த ஆடைகளில்
பெரு விருப்பம் காட்டுவர்.
கும்பராசிப் பெண்கள்
பிறவியிலேயே வசீகரமான முகம் உடலழகும் அமையப் பெற்றவர்கள். அதனால் இவர்கள்
ஆடைகளைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஓர் ஆடையோ, புடைவையோ அழகு பெறுவதும்
தமது பிறவிப் பயனை அடைவதும் தாங்கள் அணிவதால் தான் என்ற இறுமாப்பு
இவர்களிடமுண்டு. கூடுமானவரை தங்களுடையதை தாங்களே தைத்துக் கொள்வார்கள்.
ஸ்வெட்டர்
பின்னுவது ஆடைகள் தலையணை உறைகள், கைக் குட்டைகள், நாற்காலி உறைகள்
போன்றவற்றில் பூவேலைப்பாடுகள் செய்வது என்று வீட்டிலிருக்கும் பொழுதெல்லாம்
சதா ஊசி நூலும் கையுமாகவே இவர்களைக் காணலாம். இவர்களது வீட்டின் உள்ளக
அலங்காரங்கள், கலைப் பொருட்கள் மற்றும் பூச்சாடி அலங்காரங்கள்
பிரமாதமாகவிருக்கும். விருந்தினன் பாராட்டுக்களைப் பெறும்.
நைச்சியமாய்ப் பேசி ஆடைகளை விலை குறித்து வாங்குவதில் இவர்கள் சமர்த்தர்கள்.
அதற்காக எத்தனை கடைகளும் ஏறியிறங்குவார்கள். ஒரு துணியைத் தெவு செய்வதற்காக ஒரு கடையையே தடம் புரட்டுவார்கள்.
அதிக
விலை கொடுத்து சேலை சட்டைகளை வாங்கி பீரோவில் அடுக்கி வைப்பார்களே தவிர,
அவற்றை அணிவது எப்போதாவது ஒரு தடவை தான். புடைவை நகைகளை பல நாட்கள் வரை
புதையல் போல் பூட்டி வைத்து அழகு பார்ப்பதில் இவர்கள் மேடராசிப்
பெண்களையும் மிஞ்சி விடுவார்கள்.
தங்கள் அழகு குறித்து
அகந்தையடையவர்களே தவிர, இவர்கள் ஆடையணியும் விதம் மற்றப் பெண்களால்
விமர்சிக்கப்படும். என்ன இருந்தாலும் ஒரு இளம் பெண் அணியும் ஆடை, ஒரு
வயதானவர்களுக்குப் பொருந்துமா? அதுபோலத்தான் இவர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை
தெரியாமல் தங்கள் வயதுக்கோ, உடலமைப்புக்கோ பொருத்தமற்ற உடைகளை அணிந்து
கேலிக்கு உள்ளாகின்றனர். இன்ன சேலைக்கு இன்ன பிளவுஸ்தான் பொருத்தமென்று
அணியும் ஒருவரைறையும் இவர்களிடமில்லை. அத்துடன் நகைகளுக்கு க்கியத்துவம்
கொடுத்து அணியும் பழக்கம் கிடையாது. கடும் நீலத்திலிருந்து Sky blue, Royal
blue வண்ணங்களும் நரை நிறங்களும் (Grey) ஆடைத் தெவுகளில் இவர்களுக்கு
விருப்பமான நிறங்களாக இருக்கும். பரவலாக இந்நிறங்கள் யாவும் கலந்த ஆடைகளில்
பெரு விருப்பம் காட்டுவர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
மீனம்
மீனராசிப் பெண்களுக்கு எதிலும் கொஞ்சம் ஆழமாக யோசித்து
நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை குறைவு. எதிலும் உணர்ச்சிக்குத்தான்
முதலிடம்.
அறிவு இரண்டாம் பட்சமே. அதனாற்றான் சண்டைக்காரிகள் என்று பேரெடுக்கிறார்கள்.
எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தாங்கள் தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
மீனத்துக்கு அதிபதி ஆண் கிரகமான வியாழன், பூரண சுபக் கிரகம்.
இணைந்து நின்றும் பார்வையாலும் பாவக் கிரகங்களின் தோஷங்களைப் போக்குகிறவன்.
வியாழன்
நல்லாசியனாகவும் மீனம் பெண் ராசியாகவும் இருப்பதால் இந்த ராசிப் பெண்கள்
இயல்பிலேயே பெண்மையின் அழகு, நளினம், எளிமை, பணிவு போன்றவைகளை
வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
என்னதான் வீராப்புக்
கதைத்தாலும் அடுத்தவன் துன்ப துயரங்களில் உருகிப் போகிற மனம் இவர்களுடையது.
உதவியென்று கேட்டு இவர்கள் காலடிக்குப் போய்விட்டால், அவர் எத்தகைய
வேண்டாதவராக இருப்பினும் குற்றங்களை மறந்து ஒடியோடி உதவுவார்கள்.
ஆடையணிகளில்
விசேடமான ஆர்வமெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. மற்றவர்கள் மத்தியில்
மதிப்போடு நடமாட என்னென்ன ஆடையணிகள் தேவையோ, அவைகளை மாத்திரம் சேகத்து
வைத்திருப்பர். குடும்பத்தலைவிகளாயின் கலாசார சின்னங்களான கூறை, தாலி,
மோதிரம், வளையல்கள், கொலுசு, மெட்டி என்பன இவர்களுக்கு முக்கியம்.
பளபளக்கும்
சரிகை வேலை செய்த, Batik வேலைப்பாடு கொண்ட ஆடைகள் அணிவதில் வெகு பிரியம்
காட்டுவர். வானவில்லின் வர்ணங்கள் கலந்த ஆடைகளிலும் தனி மஞ்சள், சிவப்பு,
ஊதா நிற உடைகளிலும் ஆர்வம் காட்டுவர். மற்றப்படி இன்ன நிறம் மட்டும்தான்
முக்கியம் என்ற நிலைப்பாடெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. விதம் விதமான
காலணிகளிலும் பல சோடிகள் வைத்திருப்பர்.
மீனராசிப் பெண்களுக்கு எதிலும் கொஞ்சம் ஆழமாக யோசித்து
நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை குறைவு. எதிலும் உணர்ச்சிக்குத்தான்
முதலிடம்.
அறிவு இரண்டாம் பட்சமே. அதனாற்றான் சண்டைக்காரிகள் என்று பேரெடுக்கிறார்கள்.
எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினையிலும் அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தாங்கள் தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
மீனத்துக்கு அதிபதி ஆண் கிரகமான வியாழன், பூரண சுபக் கிரகம்.
இணைந்து நின்றும் பார்வையாலும் பாவக் கிரகங்களின் தோஷங்களைப் போக்குகிறவன்.
வியாழன்
நல்லாசியனாகவும் மீனம் பெண் ராசியாகவும் இருப்பதால் இந்த ராசிப் பெண்கள்
இயல்பிலேயே பெண்மையின் அழகு, நளினம், எளிமை, பணிவு போன்றவைகளை
வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
என்னதான் வீராப்புக்
கதைத்தாலும் அடுத்தவன் துன்ப துயரங்களில் உருகிப் போகிற மனம் இவர்களுடையது.
உதவியென்று கேட்டு இவர்கள் காலடிக்குப் போய்விட்டால், அவர் எத்தகைய
வேண்டாதவராக இருப்பினும் குற்றங்களை மறந்து ஒடியோடி உதவுவார்கள்.
ஆடையணிகளில்
விசேடமான ஆர்வமெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. மற்றவர்கள் மத்தியில்
மதிப்போடு நடமாட என்னென்ன ஆடையணிகள் தேவையோ, அவைகளை மாத்திரம் சேகத்து
வைத்திருப்பர். குடும்பத்தலைவிகளாயின் கலாசார சின்னங்களான கூறை, தாலி,
மோதிரம், வளையல்கள், கொலுசு, மெட்டி என்பன இவர்களுக்கு முக்கியம்.
பளபளக்கும்
சரிகை வேலை செய்த, Batik வேலைப்பாடு கொண்ட ஆடைகள் அணிவதில் வெகு பிரியம்
காட்டுவர். வானவில்லின் வர்ணங்கள் கலந்த ஆடைகளிலும் தனி மஞ்சள், சிவப்பு,
ஊதா நிற உடைகளிலும் ஆர்வம் காட்டுவர். மற்றப்படி இன்ன நிறம் மட்டும்தான்
முக்கியம் என்ற நிலைப்பாடெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. விதம் விதமான
காலணிகளிலும் பல சோடிகள் வைத்திருப்பர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:துலாம்
துலா ராசிப் பெண்களுக்கு ஆடைத் தெவு விடயத்தில் நிறம்
பொருத்தந்தான் பிரதானம் (Matching) இயற்கையிலேயே கலையுள்ளம் படைத்தவர்கள்.
சங்கீதம், நடனம், நடிப்பு என்று இவ்வுலகில் பிரபலம் பெற்ற பெண்மணிகள்
பெரும்பாலும் துலா ராசிக்காரர்களாகவே இருப்பர். அழகுணர்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு அந்தந்த கால கட்டத்திற்கேற்ற பாஷன்
ஸ்டைல் என்பன இரண்டாம் பட்சமானவை. சீராக, அழகாக ஒழுங்காக அதுவும் "மாட்சாக'
அணிவதே இவர்களுக்கு திருப்தியளிக்கக் கூடியது. ஏனென்றால் பிறவியிலேயே அழகு
இவர்களுடன் ஒட்டிப் பிறந்தது. அழகுக்கு உதாரணமாக கும்பராசிப் பெண்களையே
கூறுவார்கள்; பெரும்பாலும் அவர்கள் மாதிரி இவர்களும் கட்டுடலும் காந்தப்
பார்வையும் கொண்டிருப்பர். அழகே வடிவமாக இருக்கையில் அதனை கவர்ச்சிகரமாக
வெளிக்காட்டும் ஆடையில் அலட்சியம் காட்டலாமா? இவர்களில் தனிக் கறுப்பிகள்
கூட கருங்காலிக் கட்டையில் கடைந்தெடுத்த சிற்பங்கள் மாதிரி தனிக்
கவர்ச்சியோடு விளங்குவர். ஒரு சமயம் உடுத்த ஆடையை மறுபடியும் உடுக்க
மாட்டார்கள்.
உடம்பிலும் உடையிலும் அடிக்கடி சுத்தம் பேணுவர். ஆடைகள்
சிறிதுகூட கசங்கியோ கறை படிந்தோ, மடிப்புக் குலைந்தோ இருக்கக் கூடாது.
ஆபரணங்களைக் கூட உடையலங்காரத்திற்குப் பொருத்தமாக எளிமையாக அணிவர்.
இவர்களது ஒப்பனைகள்கூட இயற்கை எழுதுவித்த சித்திரம் போல அழகாக, இயல்பாக
இருக்கும். சிவப்பும் பச்சையும் பிடித்த நிறங்கள். இவற்றினுடைய ஒரு
மாறுதலுக்காக இவர்கள் விரும்பும் நிறம் கறுப்பு. ஏனென்றால் கறப்பு நிறம்
கொண்ட சனி, துலா ராசிக்கு அதிபதி சுக்கிரனுக்கு நெருக்கமான நட்புக்
கிரகமாகி, துலாவில் உச்சம் பெறுகிறதல்லவா? அதுதான் காரணம்!
விருச்சிகம்
விருச்சிக ராசிப் பெண்கள்அணியும் ஆடையணிகளில் அவர்களது தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும் காணமுடியும். ஒரு காலத்தில் மொழுமொழுவென்று ஒரு சாணுக்கு
மேல் தொடைகள் தெரிய அணியும் "மினிஸ்கேட்' என்ற ஆடையை உலகிற்கு
அறிகப்படுத்திய துணிச்சல்காரிகள் இந்த ராசிப் பெண்களாகவே இருக்க வேண்டும்!
அந்தளவுக்கு வீட்டினுள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களை
தலைகுனிய வைக்கும் புரட்சிகர சிந்தனையுடையவர்கள்! கலாசார பண்பாடுகள்
குறித்த மற்றவர்களின் ஏச்சுப் பேச்சுகளுக்குப் பயப்படாமல் பகட்டான, வாசனைத்
திரவியங்கள் கமகமக்க, குதியுயர்ந்த செருப்புகள் குதிரையின் குளம் பொலிபோல்
சப்திக்க, ஒரு துச்சமான பார்வையுடன் மிடுக்காக வலம் வருவார்கள். ஆடைகளை
விட ஒரு சுயமான காந்த சக்தியாலே ஆண்களை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள்.
உதாரணம்:
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், நடிகை ஸ்ரேயா ரெட்டி, இவர்களெல்லாம்
விருச்சிக ராசியினர். இவர்கள் அணிந்து திரியும் விதவித வடிவமைப்பிலான
ஆடைகளைக் கவனித்தால் அவற்றைத் தைக்க தையல்காரர்களை எவ்வளவு பாடுபடுத்தி
வேலை வாங்கியிருப்பார்களோவென்று மலைக்கத் தோன்றும்! கூட்டங்களில்,
வைபவங்களில் கலந்து கொள்கையில் யாரிடமும் ஒட்டாமல் தனித்திருப்பதை தங்களது
தனித்த ஆளுமையாகக் கருதுவர். யாரையோ குறிப்பாகத் தேடுவதுபோல் சுழலும்
அவர்களது விழிகளில் ஒரு புத்திசாலித்தனம் தெரியும்.
சிவப்பு, மரூன்,
கறுப்பு நிற ஆடைகளையே அதிகமாக விரும்பி அணிவர். போலி முத்துக்கள், பிளாஸ்க்
நகைகள் தாம் பிறவியெடுத்த பயனை எய்து வது இவர்கள் அணிவதால் தான்.
மற்றப்படி தங்க, வைர நகைகளில் ஆர்வம் குறைவு.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
பகிர்வுக்கு நன்றி
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அணியும் ஆடைகள் தெரிவில் அவரவர் ராசியை வெளிப்படுத்தும் பெண்கள்
ராசிப்பலனுக்கு நன்றி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» விருது பெறும் நடிப்பை வெளிப்படுத்தும் வேடம் வேண்டும்..!
» போதைப்பொருள் பாவனை: ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்
» கடதாசி ஆடைகள்
» அழகழகான வித விதமான ஆடைகள்
» அவரவர் விதி !
» போதைப்பொருள் பாவனை: ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்
» கடதாசி ஆடைகள்
» அழகழகான வித விதமான ஆடைகள்
» அவரவர் விதி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|