தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

5 posters

Go down

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா? Empty தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Post by kingmaker Thu Apr 28, 2011 2:39 pm

நீர்பாசனம் குறித்து நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ள சிவனப்பன், 25க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நீர் நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குனர்; தமிழ்நாடு திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினர்; சொட்டுநீர் பாசன முறையின் தந்தை என்று அழைக்கப்படும் இவர், நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து விளக்குகிறார்.

இந்தியா, நீர்வளம் நிறைந்த நாடு. ஆனால், தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம். நாட்டில், ஆண்டுக்கு மழை அளவு சராசரியாக, 1,150 மி.மீ., தமிழகத்தில், 925 மி.மீ., நாட்டில், ஒருவருக்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவு, 2,000 கன மீட்டர். ஆனால், தமிழகத்தில் கிடைக்கும் தண்ணீரின் அளவு, 750 கன மீட்டர் தான். அதாவது, நாட்டில் உள்ள மற்றவர்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு நீரைத் தான் வழங்க முடிகிறது.இந்நிலையில், தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையை எப்படி போக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, நீர் சேமிப்பு, அறுவடை, மேலாண்மை ஆகியவை தான் முக்கிய வழியாக இருக்கின்றன. நாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாசன முறையைத் தான் கடைபிடித்து வருகிறோம். இந்த பாசன முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்தது, மழையால் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும். குறிப்பாக கடலில் கலக்கும் நீரை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கடலுக்குச் செல்லும் நீரின் அளவு ஆண்டுக்கு, 150 முதல், 200 டி.எம்.சி., நீர் என்று கணக்கிடப்படுகிறது. இதை, சிறு அணைகள் கட்டி, ஆறுகளில் சேமிக்கவேண்டும். நீர்பிடிப்புப் பகுதிகளில், மேலாண்மைத் திட்டங்களை அறிவியல் ரீதியாக செயல்படுத்த வேண்டும். விவசாய பயிர்களில் நெல்லுக்கு, 72 சதவீதமும், கரும்புக்கு, 12 சதவீதமும், பிற பயிர்களுக்கு, 10 சதவீதமும் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை மீதப்படுத்துவதற்கு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை நாம் தொடர்ந்து கையாள வேண்டும். இதன் மூலம், ஒரு எக்டேருக்கு செய்யப்படும் சாகுபடியில், பெரும்பகுதி நீரை சேகரிக்க முடியும்.

இதை தவிர, கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவையெல்லாம், நமக்கு தற்போது கிடைக்கும் நீரை சேமிக்க எடுத்துவரும் நடவடிக்கைகள். ஆனால், இவற்றையெல்லாம் விட, இயற்கையாக கிடைக்கும் நீரை, சேமிப்பது தான் மிக முக்கியமான பணி. இயற்கையாக மழை மூலம் கிடைக்கும் நீர், பெருமளவு கடலில் தான் கலக்கிறது. இந்நிலையில், ஆற்றிலிருந்து கடலுக்கு சென்று கலக்கும் நீரையாவது நாம் சேமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆறுகளிலிருந்து கடலுக்குச் சென்று கலக்கும் நீரை சேமிக்க, தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். அடுத்தகட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.

கேரளாவில் பெய்யும் மழையில், 250 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்குத் தான் செல்கிறது. அங்கு பெய்யும் மழையில், 10 சதவீத நீரைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். கேரளாவில் கடலுக்கு செல்லும் நீரை திருப்பி, தமிழகத்திற்கு கொண்டு வந்தால், நம்முடைய நீர் தேவை பெருமளவு சரிகட்டப்படும்.இதற்காக, "பம்பா-அச்சன்கோவில் திட்டம்' தேசிய நீர் மேலாண்மை முகமை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பு, 1,500 கோடி ரூபாய் என வரையறுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் இதுவரை நிறைவேற்றும் நிலைக்கு வரவில்லை.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து, கர்நாடக மாநிலத்தின் வழியாக அரபிக் கடலில் கலக்கும் நீரின் அளவு, 2,000 டி.எம்.சி., இந்த நீரை காவிரி வழியாக திருப்பி, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு, திட்டங்கள் உருவாக்கப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அடுத்ததாக, ஒடிசாவில் உள்ள மகாநதி, ஆந்திராவில் கோதாவரி ஆகிய நதிகளின் வழியாக கடலில் கலக்கும் நீர், 800 டி.எம்.சி., ஆகும். இந்த இரு நதிகளையும் இணைத்து, கிருஷ்ணா நதி வழியாக, காவிரி ஆற்றுக்கு நீரை கொண்டு வந்து, அதிலிருந்து வைகை ஆற்றுக்கு நீரை கொண்டு வருவது மற்றொரு திட்டம். இதற்கான, ஆய்வுகள் நடந்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகளை இணைப்பது மற்றொரு பெரிய திட்டமாக உள்ளது.பொதுவாக, நதிகள் இணைப்பு என்பதற்கு தைரியமும், பொறுப்பு எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்றும் உறுதியும் தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால், நதிகள் இணைப்பு சாத்தியமில்லை.

இத்திட்டங்களை நிறைவேற்ற பணம் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு, பணத்தை திரட்டுவது ஒரு மிகப்பெரிய காரியமல்ல. வருங்காலத்தில் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், நதிகள் இணைப்பு இன்றியமையாதது என்பதை உணர்ந்து, 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நதிகள் இணைப்பை சேர்த்து, செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
kingmaker
kingmaker
மல்லிகை
மல்லிகை

Posts : 81
Points : 167
Join date : 06/04/2011

Back to top Go down

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா? Empty Re: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Post by பட்டாம்பூச்சி Thu Apr 28, 2011 5:34 pm

உண்மையே
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா? Empty Re: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Post by கவிக்காதலன் Sun May 01, 2011 7:49 pm

உண்மைதான்... நதிகள் இணைக்கப்பட வேண்டும்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா? Empty Re: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Post by அ.இராமநாதன் Sun May 01, 2011 8:05 pm


[You must be registered and logged in to see this image.]

-
மத்தியில் வலிமையான அரசு (கூட்டணியில்லாத
ஒரே கட்சியின் ஆட்சி) அமையும்போது, சாத்தியமாகலாம்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா? Empty Re: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 01, 2011 11:40 pm

பார்போம் எதிர் வரும் காலங்களிலாவது நடக்குமா என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா? Empty Re: தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum