தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Yesterday at 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Yesterday at 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Yesterday at 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Yesterday at 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
மனம் என்னும் இயங்குதளம்.
4 posters
Page 1 of 1
மனம் என்னும் இயங்குதளம்.
http://gunathamizh.blogspot.com/2011/05/blog-post.html
மனம் இருப்பதாலேயே நாமெல்லாம் மனிதரானோம்.
மனிதனை மாதிரியாகக் கொண்டே கணினியின் ஒவ்வொரு பகுதிகளும் உருவாக்கப்பட்டன. நாளுக்கு நாள் கணினி புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும்...
மனிதனுக்கு இணையான, மனிதனை விட அதிக கொள்திறனும், செயல்திறனும் கொண்ட கணினியை இனி வரும் காலங்களிலும் கூட உருவாக்க இயலாது என்பது என் கருத்து.
மனமானது இயங்குதளம் (ஆப்ரேட்டிங் சிசுடம்) போன்றது. இயங்குதளம் என்றதும் ஒவ்வொருவருக்கும் தாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளங்கள் நினைவுக்கு வரும்.
லினெக்சு, விண்டோசு என ஒவ்வொரு மனிதக் கணினிகளும் ஒவ்வொரு இயங்குதளங்களைக் கொண்டு இயங்குகின்றன.
சில இயங்குதளங்கள் சில மென்பொருள்களை ஏற்றுக்கொள்ளாது.
சில இயங்குளங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடன்படாது.
என இந்த இயங்குதளங்களைப் போலவே..
மனித மனங்களும் சில புதிய மரபுகளையும், நாகரீகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
புதிய தலைமுறையின் எண்ணங்களுடன் உடன்பாடாது நிற்கின்றன.
எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதில் வேறுபட்டுநிற்கின்றன.
கண்ணுக்குத் தெரியும் கணினி என்னும் வன்பொருள் கண்ணுக்குத் தெரியாத இயங்குதளத்தோடு ஒத்து செயல்பாட்டால் தான் கணினி நன்கு செயல்படும்.
அதுபோல கண்ணுக்குத் தெரியாத மனம் என்னும் இயங்குதளம் மனித உடல் என்னும் கணினியுடன் (வன்பொருளுடன்) இணைந்து செயல்பட்டால்தான் மனிதன் மனிதன் என்னும் பெயர் பெறமுடியும்.
ஒரு நகைச்சுவை..
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.
இதோ இந்த இயங்குதளம் இயங்குவதில் மனித வன்பொருளோடு வேறுபட்டு நிற்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் பலநேரங்களில் நாம் இயங்குதளங்கள் இருப்பதையே மறந்துபோவோம்.
பழைய கணினி – பழங்கால மனிதன் – செயல்திறன்
புதிய கணினி – இக்கால மனிதன் – செயல்திறன்
என ஒப்பிட்டு நோக்கினால் ஒரு உண்மை புரியும்.
ஆம் மனம் என்னும் இயங்குதளம் பெற்றதாலேயே விலங்குகளிலிருந்து நாம் இன்று வரை வேறுபட்டு வாழ்கிறோம்.
இந்த உண்மை, இதனை,
இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல, உங்கள் மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''
இந்தக் காட்சி அறிவுறுத்தும். இங்கு மனம் – இயங்குதளத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
சங்கக் காட்சி ஒன்று....
தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணினான் தலைவன். ஆனால் பாலைநிலத்தின் கொடுமை தலைவி அதனைத் தாங்க மாட்டாள் என்பதை அறிவுறுத்தியது. அதனால் வழியருமை கூறித் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தான்.
உன்னை நீங்கித் தலைவி தனித்து இருந்து படும் துன்பத்தைவிட பாலை நிலம் அத்தகைய கொடுமையானதன்று என்பதைத் தலைவனுக்குப் புரியவைக்கிறாள் தோழி....
தலைவ!!
உன்னுடன் வந்தால் கொடிய பாலை வழி கூட தலைவிக்கு இனிமையுடையதாகும். அவளும் விழாக் கோலம் கொண்டவளாக மகிழ்ந்திருப்பாள்.
ஆனால் உன்னை நீங்கி அவள் தனித்திருந்தால்,
உமணர்கள் தங்கி்ச சென்ற பாழ்பட்ட ஊர்போலக் காட்சியளிப்பாள்.
(தங்கள் பொருள்களுடன் கூட்டம் கூட்டமாகப் பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வர். உப்பு வண்டிகளைத் தாம் தங்கும் .இடத்தில் நிறுத்துவர். எருதுகளைத் தறிகளில் கட்டுவர். இரவு தங்கி உணவு உண்டு மகிழ்ந்து பிற இடங்களை நாடிச் செல்வர். அவர்கள் நீங்கிச் சென்ற பின் அவர்கள் தங்கிய இடமானது, பாழ்பட்ட ஊர்போலக் காட்சிதரும்.)
பாடல் இதோ..
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!
124 குறுந்தொகை (பாலை)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
(தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணிய தலைவன் பாலைநிலத்தின் கொடுமை எண்ணி அஞ்சிய சூழலில், தோழி சொல்லியது.)
பாடலின் நுட்பம்
இங்கு கொடிய பாலை நிலம் இனிமையுடையதாகவும்.
இனிய வீடு கொடிய பாலை நிலத்தின் தன்மைகொண்டதாகவும்.
உணர்ந்துகொள்ளப்படுகிறது.
மனம் என்னும் இயங்குதளம் இங்கு சூழல் என்னும் மென்பொருளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்றிப்புரிந்துகொள்கிறது.
இயங்குதளத்தோடு ஒவ்வாத மென்பொருள்களை நாம் கணினியில் நிறுவக்கூடாது அதுபோல மனதுக்கு ஒவ்வாத செயல்களை நாம் செய்யக் கூடாது. சில நேரங்களில் நாம் மனம் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இங்கு உண்மை என்னவென்றால் பாலை கொடுமையானது.
வீடு இனிமையானது என்பதுதான்.
ஆனால் மனமோ (இயங்குதளம்) தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது பாலை இனிமையானது என்று சொல்கிறது.
இங்கு மனம் என்னும் இயங்குதளம் சொல்லும்படி கேட்டால்தான் உடல் என்னும் வன்பொருள் செயல்படமுடியும். இல்லாவிட்டால் இவ்வியங்குதளம் வன்பொருளை (உடல்) முடக்கிவிடும்.
பாடல் வழியே..
மனம் – இயங்குதளம் ஆகியன ஒப்புநோக்கியரைக்கப்பட்டுள்ளன.
உடன்போக்கு – தலைவன் தலைவியை பெற்றோர் அறியாது கூட்டிச் செல்வது என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
உமணர்களின் பழக்கவழக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
பாலை நிலத்தின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது.
ஆழ்மனதின் நுட்பமான நிலைகள் இயம்பப்பட்டுள்ளன.
தமிழ்சசொல் அறிவோம்
உமணர் – உப்பு வணிகர்
கழிந்த – நீங்கிய.
தமியர் – தனித்திருப்போர்
மனம் இருப்பதாலேயே நாமெல்லாம் மனிதரானோம்.
மனிதனை மாதிரியாகக் கொண்டே கணினியின் ஒவ்வொரு பகுதிகளும் உருவாக்கப்பட்டன. நாளுக்கு நாள் கணினி புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும்...
மனிதனுக்கு இணையான, மனிதனை விட அதிக கொள்திறனும், செயல்திறனும் கொண்ட கணினியை இனி வரும் காலங்களிலும் கூட உருவாக்க இயலாது என்பது என் கருத்து.
மனமானது இயங்குதளம் (ஆப்ரேட்டிங் சிசுடம்) போன்றது. இயங்குதளம் என்றதும் ஒவ்வொருவருக்கும் தாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளங்கள் நினைவுக்கு வரும்.
லினெக்சு, விண்டோசு என ஒவ்வொரு மனிதக் கணினிகளும் ஒவ்வொரு இயங்குதளங்களைக் கொண்டு இயங்குகின்றன.
சில இயங்குதளங்கள் சில மென்பொருள்களை ஏற்றுக்கொள்ளாது.
சில இயங்குளங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடன்படாது.
என இந்த இயங்குதளங்களைப் போலவே..
மனித மனங்களும் சில புதிய மரபுகளையும், நாகரீகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
புதிய தலைமுறையின் எண்ணங்களுடன் உடன்பாடாது நிற்கின்றன.
எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதில் வேறுபட்டுநிற்கின்றன.
கண்ணுக்குத் தெரியும் கணினி என்னும் வன்பொருள் கண்ணுக்குத் தெரியாத இயங்குதளத்தோடு ஒத்து செயல்பாட்டால் தான் கணினி நன்கு செயல்படும்.
அதுபோல கண்ணுக்குத் தெரியாத மனம் என்னும் இயங்குதளம் மனித உடல் என்னும் கணினியுடன் (வன்பொருளுடன்) இணைந்து செயல்பட்டால்தான் மனிதன் மனிதன் என்னும் பெயர் பெறமுடியும்.
ஒரு நகைச்சுவை..
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.
இதோ இந்த இயங்குதளம் இயங்குவதில் மனித வன்பொருளோடு வேறுபட்டு நிற்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் பலநேரங்களில் நாம் இயங்குதளங்கள் இருப்பதையே மறந்துபோவோம்.
பழைய கணினி – பழங்கால மனிதன் – செயல்திறன்
புதிய கணினி – இக்கால மனிதன் – செயல்திறன்
என ஒப்பிட்டு நோக்கினால் ஒரு உண்மை புரியும்.
ஆம் மனம் என்னும் இயங்குதளம் பெற்றதாலேயே விலங்குகளிலிருந்து நாம் இன்று வரை வேறுபட்டு வாழ்கிறோம்.
இந்த உண்மை, இதனை,
இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல, உங்கள் மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''
இந்தக் காட்சி அறிவுறுத்தும். இங்கு மனம் – இயங்குதளத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
சங்கக் காட்சி ஒன்று....
தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணினான் தலைவன். ஆனால் பாலைநிலத்தின் கொடுமை தலைவி அதனைத் தாங்க மாட்டாள் என்பதை அறிவுறுத்தியது. அதனால் வழியருமை கூறித் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தான்.
உன்னை நீங்கித் தலைவி தனித்து இருந்து படும் துன்பத்தைவிட பாலை நிலம் அத்தகைய கொடுமையானதன்று என்பதைத் தலைவனுக்குப் புரியவைக்கிறாள் தோழி....
தலைவ!!
உன்னுடன் வந்தால் கொடிய பாலை வழி கூட தலைவிக்கு இனிமையுடையதாகும். அவளும் விழாக் கோலம் கொண்டவளாக மகிழ்ந்திருப்பாள்.
ஆனால் உன்னை நீங்கி அவள் தனித்திருந்தால்,
உமணர்கள் தங்கி்ச சென்ற பாழ்பட்ட ஊர்போலக் காட்சியளிப்பாள்.
(தங்கள் பொருள்களுடன் கூட்டம் கூட்டமாகப் பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வர். உப்பு வண்டிகளைத் தாம் தங்கும் .இடத்தில் நிறுத்துவர். எருதுகளைத் தறிகளில் கட்டுவர். இரவு தங்கி உணவு உண்டு மகிழ்ந்து பிற இடங்களை நாடிச் செல்வர். அவர்கள் நீங்கிச் சென்ற பின் அவர்கள் தங்கிய இடமானது, பாழ்பட்ட ஊர்போலக் காட்சிதரும்.)
பாடல் இதோ..
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!
124 குறுந்தொகை (பாலை)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
(தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணிய தலைவன் பாலைநிலத்தின் கொடுமை எண்ணி அஞ்சிய சூழலில், தோழி சொல்லியது.)
பாடலின் நுட்பம்
இங்கு கொடிய பாலை நிலம் இனிமையுடையதாகவும்.
இனிய வீடு கொடிய பாலை நிலத்தின் தன்மைகொண்டதாகவும்.
உணர்ந்துகொள்ளப்படுகிறது.
மனம் என்னும் இயங்குதளம் இங்கு சூழல் என்னும் மென்பொருளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்றிப்புரிந்துகொள்கிறது.
இயங்குதளத்தோடு ஒவ்வாத மென்பொருள்களை நாம் கணினியில் நிறுவக்கூடாது அதுபோல மனதுக்கு ஒவ்வாத செயல்களை நாம் செய்யக் கூடாது. சில நேரங்களில் நாம் மனம் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இங்கு உண்மை என்னவென்றால் பாலை கொடுமையானது.
வீடு இனிமையானது என்பதுதான்.
ஆனால் மனமோ (இயங்குதளம்) தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது பாலை இனிமையானது என்று சொல்கிறது.
இங்கு மனம் என்னும் இயங்குதளம் சொல்லும்படி கேட்டால்தான் உடல் என்னும் வன்பொருள் செயல்படமுடியும். இல்லாவிட்டால் இவ்வியங்குதளம் வன்பொருளை (உடல்) முடக்கிவிடும்.
பாடல் வழியே..
மனம் – இயங்குதளம் ஆகியன ஒப்புநோக்கியரைக்கப்பட்டுள்ளன.
உடன்போக்கு – தலைவன் தலைவியை பெற்றோர் அறியாது கூட்டிச் செல்வது என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
உமணர்களின் பழக்கவழக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
பாலை நிலத்தின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது.
ஆழ்மனதின் நுட்பமான நிலைகள் இயம்பப்பட்டுள்ளன.
தமிழ்சசொல் அறிவோம்
உமணர் – உப்பு வணிகர்
கழிந்த – நீங்கிய.
தமியர் – தனித்திருப்போர்
Last edited by gunathamizh on Tue May 24, 2011 3:46 pm; edited 1 time in total
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: மனம் என்னும் இயங்குதளம்.

புணர்நதுடன் போக என்பது புணர்ந்து என திருத்துக..
-
பாலை பாடிய பெருங்கடுங்கோ:-
இவர் ஒரு சேர மன்னன்...
-
தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது,
அதை விட பாலை இனிமையானது...
விளக்கங்கள் அருமை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31641
Points : 69585
Join date : 26/01/2011
Age : 79
Re: மனம் என்னும் இயங்குதளம்.
பதிவிட்டரால் சொற்பிழையை சரி செய்ய
வசதி உள்ளது...
வசதி உள்ளது...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31641
Points : 69585
Join date : 26/01/2011
Age : 79
Re: மனம் என்னும் இயங்குதளம்.
நல்ல வசதி
திருத்திக்கொண்டேன் ஐயா
நன்றி.
திருத்திக்கொண்டேன் ஐயா
நன்றி.
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: மனம் என்னும் இயங்குதளம்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது

kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 43
Location : Nagercoil
Re: மனம் என்னும் இயங்குதளம்.
அ.இராமநாதன் wrote:பதிவிட்டரால் சொற்பிழையை சரி செய்ய
வசதி உள்ளது...
பதிவிட்டரால் புரியவில்லை இது எந்த தளத்தின் சுட்டி?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 65
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

» 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம் (Operating System)
» Android KitKat இயங்குதளம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை உயர்வு
» சோகம் என்னும்...
» அழகு என்னும் நீ !!!
» புகை என்னும் பகை
» Android KitKat இயங்குதளம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை உயர்வு
» சோகம் என்னும்...
» அழகு என்னும் நீ !!!
» புகை என்னும் பகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|