தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Yesterday at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm

» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm

» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm

» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm

» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm

» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm

» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரத்தில் ஏறிய நடிகையும் மலைத்துப்போன இயக்குனரும்!

2 posters

Go down

மரத்தில் ஏறிய நடிகையும் மலைத்துப்போன இயக்குனரும்! Empty மரத்தில் ஏறிய நடிகையும் மலைத்துப்போன இயக்குனரும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 24, 2011 3:48 pm

[You must be registered and logged in to see this image.]

பொட்டலமும்
பெரிசில்ல, பட்சணமும் ருசியில்ல என்கிற மாதிரிதான் இருக்கிறது தற்போது
வருகிற அநேக படங்கள். அடடா என்று ஆச்சர்யப்பட வைக்கிற ஒன்றிரண்டு படங்களும்
கூட "அண்டை வீட்டு நெய்யே" கதையாக திருட்டுப் பல் காட்டி சிரிக்கிறது.

பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், அன்னக்கிளி என்று தமிழ்சினிமா
வாழ்வாங்குவாழ்ந்த காலத்தை இப்போது நினைத்தாலும் அடிவயிற்றில் ஐஸ் மழை
பொழிகிறது. ஆஹா... அதுதானே நிஜமான மழைக்காலம் தமிழ்சினிமா ரசிகனுக்கு.
அப்படியெல்லாம் சொந்த கற்பனையில் சோறு பொங்கிய ஜாம்பவான்களை இப்போது
நினைத்தாலும் நெஞ்சம் மகிழ்கிறதே... ஆர்.செல்வராஜ், பாரதிராஜா, இளையராஜா
கூட்டணி இருக்கிறதே, அது தமிழ்சினிமாவில் பொற்காலத்தை தந்த கூட்டணி.
இப்போது இவர்கள் தனித்தனியாக படைப்புலகத்தை உருவாக்கிக் கொண்டாலும், அவரவர்
சாம்ராஜ்யம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான்
ஆர்.செல்வராஜின் தற்போதைய படைப்பான பச்சைக் குடை.

இந்திய மொழிகள்
அத்தனையிலும் சுமார் 154 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார்
ஆர்.செல்வராஜ். அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள்,
புதுமைப்பெண், சின்னக்கவுண்டர், அலைபாயுதே, முதல் மரியாதை, என்று போய்
கொண்டே இருக்கிறது இவரது கதை வசனங்களுக்கான வெற்றியும், மரியாதையும்.
இப்போதும் கூட சின்னத்திரை சீரியல்களை மண் மணக்க வைத்துக் கொண்டிருக்கிறார்
ஆர்.செல்வராஜ். சரி, பச்சைக்குடைக்கு வருவோம்.

தலக்கோணம்
காடுகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் பசுமையின் அவசியத்தை
உணர்த்துகிற படம். காட்டிலிருக்கும் மரங்களையே தெய்வமாக வழிபடும்
காட்டுவாசிகள் கூட்டத்தில் எங்கிருந்தோ தொலைந்து போன குழந்தையாக வந்து
சேர்கிறாள் ஒருத்தி. அவளை பள்ளிக்கு அனுப்பி பட்டதாரியாக்குகிறான்
வனங்களின் தலைவன். இருவருக்குமான அண்ணன் தங்கை உறவு நாளுக்கு நாள் மரங்களை
போலவே வளர்ந்து உயர்ந்து நிற்கிறது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு
போக வேண்டிய அவளோ, ஒரு நாள்தன்னுடைய சர்டிபிகேட்டையெல்லாம் கிழித்து
எறிந்துவிட்டு, இங்கேயே இருந்து மரங்களையும் உங்களையும் காப்பேன் என்று
கூறிவிடுகிறாள் அந்த காட்டுவாசிகளிடம்.

அந்த ஊருக்கு
பச்சிலைகளால் ஓவியம் வரைவதற்காக வரும் ஓவியன் ஒருவனுக்கும், இவளுக்கும்
காதல் வருகிறது. இந்த ஓவியனை சாக்காக வைத்துக் கொண்டு காட்டுக்குள்
நுழையும் ஒரு கும்பல் வனங்களின் ராணியான அவளை கொன்றுவிட்டு அந்த துயரத்தில்
மக்கள் தவித்துக் கொண்டிருக்கிற நேரம் பார்த்து விலை உயர்ந்த மரங்களை
வெட்டி கடத்தவும் திட்டமிடுகிறது. மரங்களை காப்பாற்ற அவள் என்ன செய்தாள்
என்பதுதான் க்ளைமாக்ஸ். கேரள அழகி நித்யாதாஸ் தான் இந்த படத்தின் நாயகி.
கேரவேன் கொடு, வேளா வேளைக்கு ஜுஸ் கொடு என்று அலட்டும் நடிகைகளுக்கு
மத்தியில், காட்டிலும் முள்ளிலும் கிடந்து உழைத்திருக்கிறார் நித்யா. "இவரே
மரத்தில் ஏறி தேன்கூட்டை எடுக்கிற அளவுக்கு காடு அவருக்கு பழகிப்
போய்விட்டது" என்கிறார் ஆர்.செல்வராஜ்.

பச்சைக்குடை படத்திற்கு
இசையமைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரை திரையுலகத்திற்கு கொண்டு
வந்தவரே ஆர்.செல்வராஜ்தான். இருவரும் பால்யகால நண்பர்களும் கூட. படத்தின்
பிரதியை இளையராஜாவிடம் கொடுத்துவிட்டு வந்தமறுநாளே ராஜா அழைத்தாராம். சில
நிமிடங்கள் மவுனமாக அமர்ந்திருந்தவர், உதிரிப்பூக்கள் படத்திற்கு பிறகு
நான் கண்கலங்கிய படம் இதுதாண்டா என்றாராம். அதோடு மட்டுமல்ல, இந்த
படத்திற்கு பின்னணி இசையமைத்து தர வேண்டியது என்னோட கடமை. ஒரு பைசா கூட
எனக்கு வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்றாராம். சொன்னார் போல, இந்த
படத்தில் ராஜாவின் இசை இதுவரை நீங்கள் அனுபவித்திராத சொர்க்கமாக இருக்கும்
என்றார் ஆர்.செல்வராஜ். மற்றொரு நண்பரான பாரதிராஜாவும் படப்பிடிப்பு நடந்து
கொண்டிருந்த காட்டுக்குள்ளேயே வந்து வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

விரைவில் பச்சை குடையை பார்க்க சம்மதித்திருக்கிறாராம் இந்திய
ஜனாதிபதிபிரதீபா பாட்டீல். அதன்பின் இந்த படத்தை ஐநா சபை
உறுப்பினர்களுக்காக திரையிடும் நோக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்
ஆர்.செல்வராஜ்.

பத்து கிணறு சேர்ந்தது ஒரு குளம், பத்து குளம்
சேர்ந்தது ஒரு ஏரி, பத்து ஏரி சேர்ந்தது ஒரு மகன், பத்து மகன் சேர்ந்தது
ஒரு மரம்! -இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட "விருஷ ஆயுர்வேதா"
என்ற நு�லில் இருந்த இந்த வாசகங்கள்தான் என்னை இந்த கதையை எழுதவே
து�ண்டியது என்கிறார் ஆர்.செல்வராஜ். இதுவரை எத்தனையோ படங்களுக்கு கதை
எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த கதைதான் என் உயிர் என்றார் உணர்ச்சி
பிழம்பாக. உண்மைதான். மரங்கள்தானே மனிதனின் உயிர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மரத்தில் ஏறிய நடிகையும் மலைத்துப்போன இயக்குனரும்! Empty Re: மரத்தில் ஏறிய நடிகையும் மலைத்துப்போன இயக்குனரும்!

Post by அ.இராமநாதன் Wed Aug 24, 2011 9:50 pm

[You must be registered and logged in to see this image.]
-
:héhé:
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31943
Points : 70349
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum