தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நிலவே கலங்காதே!

4 posters

Go down

நிலவே கலங்காதே!  Empty நிலவே கலங்காதே!

Post by thaliranna Tue Oct 25, 2011 9:29 pm


நிலவே கலங்காதே!



[You must be registered and logged in to see this link.]



நிலவே கலங்காதே!

[You must be registered and logged in to see this link.]




விடிந்தாள் தீபாவளி. இது எனது தலை
தீபாவளியாக இருந்திருக்க வேண்டும் ரத்னா மட்டும் சம்மதித்து இருந்தால். மனோகர்
சற்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தான். அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதை அந்த
நினைவுகள் சற்றுக் கட்டிப் போட்டன.


ரத்னா அவனது அத்தை மகள் மனோகருக்கென்றே
நிச்சயமானவள். அவளும் மனோகரை மிகவும் நேசித்தாள். எது வரை? வெளியூருக்கு கல்லூரி
படிப்பிற்கு செல்லும் வரை! கல்லூரி படிப்பு அவளை மாற்ற்விட்டதா இல்லை மனோகரை
அவளுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை! இப்போதெல்லாம் அவள் மனோகரிடம் முகம்
கொடுத்தும் பேசுவதில்லை!. மனோகரை மணக்கவும் மறுத்துவிட்டாள்.


சொல்லப் போனால் அவள் யாரையுமே மணக்க
விரும்பவில்லை என்று கூறினாள். அவளின் கல்லூரி படிப்புக்கு அச்சாரம் போட்டதே
மனோகர்தான்.அதுவே அவனுக்கு பாதகமாகிவிட்டது. மூன்று வருடங்கள் முன் அவளது அப்பா
ஏன் மாப்ள? இந்த வருசத்தோட ஸ்கூல் படிப்பு முடியுது வர்ர ஆவணியில உனக்கும்
ரத்னாவுக்கும் கல்லாணத்த முடிச்சிப் போடலாமுன்னு நினைக்கேன் நீ என்ன சொல்ற? என்று
நேரடியாகவே கேட்டுவிட்டார். வெள்ளை மனதுக்காரர் அவர். சூது வாது தெரியாதவர். அவர்
கேட்கும் பொழுது உடனிருந்த ரத்னாவைன் முகம் சிவப்பதற்கு பதில் வாடிப் போனது. பள்ளி
இறுதியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அவள். படிப்பை மிகவும்
நேசிப்பவள்.அவளைப் போல் படிக்க வேண்டாம் என்றால்... வாடிய பயிராய் நின்றாள்.


மனோகர் யோசித்தான். மாமா கிணற்று தண்ணியை ஆற்று
வெள்ளமா கொண்டு போயிடப் போகுது என்னிக்கு இருந்தாலும் ரத்னா எனக்குத் தான்னு
முடிவு ஆகிப் போச்சு பாவம் சின்ன பொண்ணு படிக்கணும்னு ஆசைப்படுது அது படிச்சி
பட்டம் வாங்கினா நம்ம குடும்பத்துக்குதானே பெருமை படிச்சிட்டு வரட்டும் மாமா!
இன்னும் மூணு வருஷம் தானே! மூணே நிமிஷமா கரைஞ்சி போயிடும் என்று வாதாடி சென்னையில்
ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துவிட்டான்.


இரண்டு வருடங்கள் வரை அவல் அவனுடன்
சகஜமாகத்தான் எப்பொழுதும் போல் பழகி வந்தாள்.இந்த கடைசி வருடத்தின் போதுதான்
அவனைப் பார்த்தால் ஒதுங்கி ஒதுங்கி போக ஆரம்பித்தாள். ஏதோ வெட்கம் போல
பட்டணத்திற்கு சென்று படிக்கிறாள் அல்லவா என்று இவனும் சும்மா இருந்து விட்டான்.
ஆனால் கல்லூரி படிப்பு முடிந்துவந்ததும் திருமண ஏற்பாட்டை தொடங்கும் சமயம் அவள்
தடுத்து விட்டாள்.



வேண்டாம் எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லை!என்னை கட்டாயப் படுத்தாதீங்க
என்றபோது பெற்றவர்கள் முதலில் அதிர்ந்துதான் போனார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லிப்
பார்த்தார்கள் அவள் வழிக்கு வரவில்லை. மீறினால் இறந்து போவேன் என்று மிரட்டவே வேறு
வழியில்லாமல் மனதை தேற்றிக் கொண்டார்கள்.அவளை சரமாறியாக தூற்றவும் செய்தார்கள்
ஆனால் அவள் அதற்கெல்லாம் கலங்கினாள் இல்லை!.


மனோகருக்குக் கூட முதலில் அதிர்ச்சியாகத்தான்
இருந்தது. ஆனாலும் மனதைத் தேற்றிக் கொண்டான்.கல்லூரிக்கு சென்றவள் ஆயிற்றே! வேறு
யாரையாவது மனதில் வைத்துள்ளாள் போலும். அதனால்தான் நம்மிடம் கூட சரியாக பேசாமல்
ஒதுங்கினாலோ என்னவோ அப்படி ஏதாவது இருந்தாலும் அவனை கட்டி வைக்கலாம் என்று அவள்
பெற்றோரை கேட்டுப் பார்க்க சொன்னான்.



ஆனால் அவள் மனோகரை மட்டுமல்ல வேறு யாரையும் மணக்க மறுத்துவிட்டாள்.எனக்குத்
திருமணமே வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.அவளின் இந்த முடிவால் பெற்றவர்கள் மனம்
கலங்கினர். அவர்களை பார்க்கவே மனோகருக்கு வருத்தமாக இருந்தது.



பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டான் மனோகர்.அதோ ரத்னா வெளியே
கிளம்புகிறாள். அனேகமாக ஆற்றங்கரைக்குத் தான் இருக்கும். மாலை வேளைகளில் அவள்
இவ்வாறு உலாவுவது வழக்கம் தான். ஆனால் இரவு வேளையில் இவள் செல்வது எங்கே? இன்று
இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தான். தீபாவளி ஊரெங்கும்
உற்சாகமாக கொண்டாடும் வேளையில் இவர்கள் மட்டும் மூலையில் முடங்கி கிடக்கும்
சூழலாகிவிட்டதே இதை மாற்ற வேண்டும் என்று ரத்னாவை தொடர்ந்தான் மனோகர்.


ரத்னா வேகமாக நடந்தாள். ஊரின் ஒதுக்குப் புறமான
அந்த பாழுங்கிணற்றை வேகமாக நெருங்கினாள். அதில் குதிக்க முயன்ற போது மனோகர்
விரைந்து வந்து தடுத்தான். ரத்னா என்ன இது? ஏன் இப்படி நடந்துக்கிற? சாகிற
அளவுக்கு அப்படி என்ன நடந்து போச்சு? உன் மனசில என்ன இருக்கு என்கிட்ட தைரியமா
சொல்லு! வேற யாரையாவது காதலிக்கிறையா? அப்படி எதுவானாலும் தயங்காமல் சொல்லு நான்
உன்னை அவனுக்கே கல்யாணம் செய்து வைக்கிறேன். உன் பெற்றோர் என்ன சொல்வார்களோ என்ற
பயம் வேண்டாம்! நான் பார்த்துக்கிறேன். இந்த முடிவு வேண்டாம் ரத்னா! என்றான்
மனோகர்.


ரத்னா! விக்கி விக்கி அழுதாள். மாமா நீங்க
எவ்வளவு நல்லவர்? ஆனா நான் உங்களுக்குச் சிறிதும் அருகதையற்றவள்! நான் சாக
வேண்டும் இதே மாதிரி போன வருட தீபாவளியில் தான் நான் கெட்டுப் போனேன்! ஆம் நான்
சுத்தமானவள் இல்லை! என் கற்பை இழந்து நிற்கிறேன் மாமா! ஐயோ நான் ஏன் தான்
கல்லூரிக்கு போனேனோ என்று குலுங்கி அழுதாள் ரத்னா.



ரத்னா! அழாதே! நடந்தது என்ன? நீ நீ கெட்டுப் போனாயா? என்னால்
நம்பமுடியவில்லை! என் காதுகளில் தானா இந்த சொற்கள் விழுந்தது! என்றான் மனோகர்.



ஆம் மனோ இது உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும் சென்ற தீபாவளிக்கு
நான் விடுமுறையில் ஊர் வரவில்லை! தோழிகளோடு கொண்டாடினோம் தீபாவளியை ஒரு தோழியின்
வீட்டில் அங்குதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஆண் பெண் நண்பர்கள் கலந்து கொண்ட
அந்த விருந்தில் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை சீரழித்து
விட்டான் ஒருவன். சினேகிதன் என்ற போர்வையில் ஒரு காம வெறியன் என்னை
கலங்கபடுத்திவிட்டான் மாமா. நான் சுயநினைவில்லா சமயத்தில் இந்த விபரீதம் நடந்து
விட்டது. நான் அப்போதே இறந்திருக்க வேண்டும். ஆனால் தோழிகள் தடுத்து விட்டார்கள்.



நான் எப்படி மாமா உங்களை மணப்பேன்? அந்த நிகழ்வு என் மனதை குத்திக்
கொண்டிருக்கிறது? என்னால் பெற்றவர்களுக்கும் கஷ்டம்? அன்றே இறந்து போயிருந்தால்
சில நாள் துக்கத்தில் மறந்திருப்பார்கள். உயிரோடு இருந்து நான் வதை படுவதோடு
அவர்களையும் வதைக்கிறேனே! என்றவள் அழ ஆரம்பித்தாள்.


மனோகர் மௌனித்தான். நிதானமாக அவள் கண்களை
துடைத்தேன்.ரத்னா! கலங்காதே! நீ என் நிலவு உன் களங்கம் யாரையும் பாதிக்காது! நீ
இதை எப்பொழுதோ சொல்லியிருக்கலாம்! ஆகட்டும் விடு நான் உன்னை மணக்க ஆவலாக உள்ளேன்
உன் விருப்பம் என்ன? என்றான் மனோகர்.



மாமா என்ன சொல்கிறீர்கள்! நடந்ததுஅனைத்தும் தெரிந்துமா?


மனோகர் அவள் வாயைப் பொத்தினான்.
இதை மீண்டும்மீண்டும் சொல்லி வேதனைப்படாதே! அன்று நடந்தது ஒரு விபத்து! நீயாக தவறு
செய்யவில்லையே? பெண்களுக்கு கற்பு அவர்களின் மனதில் இருந்தால் போதும் உடலில்
அல்ல.நீ குற்ற உணர்ச்சியால் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை! உன் மீது தவறு ஏதும்
இல்லை! இந்த விஷயம் நமக்குள் இருக்கட்டும் பெரியவர்களை சங்கடப்படுத்த வேண்டாம்.
சேற்றில் தவறி விழுந்தாள் கழுவிக் கொள்வதில்லையா? அதே போல நினைத்துக் கொள் அதுகூட
நீயாக விழவில்லை! தள்ளிவிடப்பட்டுள்ளாய்! கலங்காதே! உன் விருப்பத்தைச் சொல் எனக்கு
உன்னை மணக்க சம்மதம் உன் பதில் என்ன கண்மணி என்றான் மனோகர்.


அவள் அத்தான் என்றவாறு ஓடி வந்து அவனை அணைத்துக்
கொள்ள அப்போது திருமணத்திற்கு நாள்
பார்க்க சொல்ல வேண்டியதுதான்! என்று அவள் தலை வருடினான் மனோகர்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நிலவே கலங்காதே!  Empty Re: நிலவே கலங்காதே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 9:34 pm

அருமையான கதை பாரட்டுக்கள் தளிர் அண்ணே ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நிலவே கலங்காதே!  Empty Re: நிலவே கலங்காதே!

Post by நிலாமதி Tue Oct 25, 2011 9:53 pm

அருமையான கதை இக்காலதிலிப்ப்டி நல்ல் இளைஞ்சர்கள் இருக்க் மாடார்கள். மனோகர் மாணிக்கம் பாராட்டுக்கள் தளிர் அண்ணா .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நிலவே கலங்காதே!  Empty Re: நிலவே கலங்காதே!

Post by தங்கை கலை Tue Oct 25, 2011 10:08 pm

நல்ல இருக்கு அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நிலவே கலங்காதே!  Empty Re: நிலவே கலங்காதே!

Post by thaliranna Thu Oct 27, 2011 5:40 pm

[You must be registered and logged in to see this image.]நன்றி கலை நிலாமதி அக்கா!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நிலவே கலங்காதே!  Empty Re: நிலவே கலங்காதே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum