தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி.

4 posters

Go down

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி. Empty தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” CHANNEL4முழுமையான காணொளி.

Post by aarul Fri Mar 16, 2012 10:15 am

m

[You must be registered and logged in to see this image.]
லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன்
பாலச்சந்திரன் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய இரண்டாவது
வீடியோ தொகுப்பை, பிரிட்டனில் இயங்கி வரும் சேனல் 4 செய்தி நிறுவனம்,
நேற்று வெளியிட்டது. போர் விலக்களிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் மீது
நடந்த தாக்குதல்களை, இந்த வீடியோ அப்பட்டமாகக் காட்டுவதால், இலங்கைக்கு
மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின்,
19வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், கடந்த 7ம் தேதி, இலங்கைக்கு
எதிரான தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்தது. 22 நாடுகள், இதற்கு
ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்தை முறியடிக்க, பல
முயற்சிகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே
அறிவித்தபடி, சேனல் 4 செய்தி நிறுவனம், "இலங்கையின் கொலைக் களங்கள்:
தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பிலான, இரண்டாவது வீடியோ
தொகுப்பை நேற்று வெளியிட்டது.

என்னென்ன காட்சிகள்? இந்த வீடியோ, போர் விலக்களிக்கப்பட்ட
பகுதியாக, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் பகுதியின்
வரைபடத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, புதுமாத்தளன் பகுதியில் உள்ள
மருத்துவமனையில் குண்டுகள் வீசப்பட்ட பின் இருந்த நிலை, மக்கள் பாதுகாப்பான
இடங்களைத் தேடி, கூட்டம் கூட்டமாக செல்வது, குண்டு வீச்சில் குழந்தைகள்
பலியாகிக் கிடப்பது, அக்குழந்தைகளைப் பார்த்து பெற்றோர் கதறி அழுவது,
பிணங்களை அடுக்குவது என, கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் இடம்
பெற்றுள்ளன.

உணவு, மருந்தின்றி பலியான அவலம்: அதேபோல், போர்
விலக்களிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள், உணவின்றி சாவின் விளம்பில்
துடிப்பது, தற்காலிக மருத்துவக் கூடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும்
இன்றி, மருத்துவ சேவைகள் தொடர்வது போன்றவையும் காட்டப்பட்டுள்ளன. முள்ளி
வாய்க்கால் பகுதியை, போர் விலக்களிக்கப்பட்ட பகுதியாக அறிவித்த இலங்கை
அரசு, ராணுவத்தின், 55, 57, 58வது படைப் பிரிவுகளை படிப்படியாக உள்ளே
அனுப்பி, மக்களை வெளியே விரட்டியதையும், இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.

பிரபாகரன், பாலச்சந்திரன் மரணம்: வீடியோவின் மையப் பகுதியில்,
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுடப்பட்டுக் கிடப்பது, அவர் அருகில்,
அவரது பாதுகாவலர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டுக் கிடப்பது ஆகியவையும் இடம்
பெற்று உள்ளன. போரின் போது அங்கு இருந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என,
சிலரிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளும் இதில் உள்ளன. பிரபல தடயவியல் நிபுணர்
டெர்ரிக் பவுண்டர், பாலச்சந்திரன் மற்றும் பிரபாகரனின் சடலங்களின்
புகைப்படங்கள் மூலம், அவர்கள் எவ்விதம் கொல்லப்பட்டிருப்பர் என்பதை
விவரிக்கிறார். இந்தத் தொகுப்பில், பிரிட்டன் முன்னாள் வெளியுறவு அமைச்சரான
டேவிட் மிலிபேண்ட், ஐ.நா., மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர்
சர் ஜான் ஹோம்ஸ், மனித உரிமைகள் வழக்கறிஞரும் போராளியுமான பேராசிரியர்
வில்லியம் சாபாஸ், இலங்கை பத்திரிகையாளர் அபயவர்த்தன ஆகியோர் பேசியுள்ளனர்.

டேவிட் மிலிபேண்ட் குற்றச்சாட்டு: இவர்களில், டேவிட்
மிலிபேண்டும், ஜான் ஹோம்சும், இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை
முன்வைக்கின்றனர். என்ன விலை கொடுத்தாவது, விடுதலைப் புலிகளை அழித்தே
தீருவது என்று, இலங்கை அரசு செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் போர்க் குற்றங்கள் செய்திருந்தாலும் கூட, சட்டப்படி
அமைந்துள்ள ஓர் அரசு, அதே குற்றங்களை செய்வது எவ்விதத்தில் நியாயம்? எனக்
கேள்வி எழுப்பியுள்ளார் டேவிட் மிலிபேண்ட். போர் விலக்களிக்கப்பட்ட
பகுதியில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு, உணவு, மருத்துவ
வசதிகள் வழங்கப்படாதது உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு, இலங்கை அரசு, ராணுவம்,
குறிப்பாக அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தான் காரணம் என,
வீடியோ குற்றம் சாட்டுகிறது. இந்த வீடியோவின் இறுதிப் பகுதியில், நேற்று
முன்தினம் வெளியான இலங்கை அரசின் மறுப்பு செய்தியும் இடம் பெற்றுள்ளது.

பிரபாகரன் மகன் கொல்லப்பட்ட காட்சி: "சேனல் 4' டிவி, வீடியோ காட்சியை சிறப்பு நிருபர் ஜான் ஸ்நோ தொகுத்து வழங்கினார்.

அதில் இடம் பெற்ற காட்சிகள்:

* போர் நடக்கும் நேரத்தில், இரண்டாவது மகன் பாலசந்திரன் (வயது 12)க்கு
ஐந்து பாதுகாவலர்களை பிரபாகரன் நியமித்திருந்தார். அந்த பாதுகாவலர்களையும்
அவரது மகனையும் ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கின்றனர்.

* பாதுகாவலர்களின் உள்ளாடையை தவிர மற்றவை களையப்பட்டன.

* அவர்களின் கைகள் பின்னால் முறுக்கி கயிறால் கட்டப்பட்டு, கண்கள் துணியால் மூடப்பட்டன.

* சுற்றியிருந்த ராணுவ வீரர்களில் ஒருவர், அனைவரது பின் மண்டையிலும் துப்பாக்கியை வைத்து சுடுகிறார். அனைவரும் இறக்கின்றனர்.

* இந்த காட்சிகள் அனைத்தும், பாலச்சந்திரன் கண் எதிரிலேயே நடந்தது.

* இதை பார்க்கும் போதே அவனுக்கு தனது நிலை புரிந்து விட்டது.

* சுடப்பட்டு வீழ்ந்தவர்களை, ராணுவ வீரர்கள் "ஷூ' கால்களால் மிதிக்கின்றனர்.

* பாலச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்படுகிறான்.

* அவனது மார்புப் பகுதியை சுற்றி 5 குண்டுகள் பாய்ந்தன. அவன்
கொல்லப்படுவதற்கு முன் மன ரீதியான தொல்லைகளுக்கு தள்ளப்பட்டார் என லண்டன்
தடயவியல் நிபுணர் டெர்ரிக், ஆய்வறிக்கையில் தெரிவித்தார்.

இலங்கை மறுப்பு: சேனல் 4ன் புதிய வீடியோ தொகுப்பிற்கு
பதிலளிக்கும் வகையில், இலங்கை ராணுவ அமைச்சகம், தனது இணையதளத்தில், பல்வேறு
வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "மனித
உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை, ராணுவம் நிராகரிக்கிறது.
அதேநேரம், விடுதலைப் புலிகள் தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை
நிரூபிக்க, ராணுவத்திடம் ஆதாரங்கள் உள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாவுக்கு வரவேற்பு: இலங்கை விவகாரம் குறித்து, நேற்று
முன்தினம் பார்லிமென்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
அளித்த பதிலை வரவேற்றுள்ள இலங்கை அரசு, "தமிழகம் கொடுத்து வரும்
அழுத்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் நிலையை இலங்கை புரிந்து
கொண்டிருக்கிறது. அமைச்சரின் விளக்கத்தை, மதிப்புமிக்கதாகக் கருதுகிறது' என
கூறியுள்ளது.