தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து

Go down

ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து Empty ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 07, 2012 5:35 pm


[You must be registered and logged in to see this image.]
மேலை நாட்டு பாடகிகளும், நம் நாட்டு நடிகைகளும், டீன்ஏஜ் பெண்களும் ஜீன்ஸ் அணிந்து செல்வதை பார்க்கும்போது, சில நேரங்களில் `இவர்களுக்கு மூச்சு முட்டுமே’ என்று நினைக்கத் தோன்றும். இவ்வளவு இறுக்கமாக போட்டுக்கொண்டு எப்படி வாகனங்களில் ஏறி இறங்குவார்கள்? மாடிப்படிகளில் ஏறுவார்கள்? என்றெல்லாம் கேட்கத்தான் தோன்றும்.

ஆனால் ஜீன்ஸ் கன்னியர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட் டில்லை. அது அவர்கள் பேஷன்.. அது அவர்கள் உலகம்..! அது உடலை இறுக்கினால்தான், தாங்களும் பேஷனில் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை காட்ட முடியும் என்றுகூறி, சரும நிறத்தில் ஜீன்ஸ் அணிந்துகொண்டு, உடை இருக்கிறதா? இல்லையா என்று தேடும் அளவுக்கு நாகரீகத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். ஸ்கின் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கலக்கும் பெண்கள் அதற்கு `ஸ்கின்னி’ என்றொரு பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.

ஸ்கின்னி அணியும் பெண்கள் பற்றி அமெரிக்காவில் ருசிகரமாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு.

மிக இறுக்கமான புதிய ஸ்கின்னி ஜீன்சை அணிந்துகொண்டு, அப்படியே குளியல் தொட்டிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொள்வார்களாம். அப்போது ஜீன்ஸ் நன்றாக தண்ணீரில் ஊறி விடும். பின்பு அது காயும் வரை அப்படியே வெளியே இறங்கி நடப்பார்களாம். உடலை நன்றாக இறுக்கிப்பிடிக்கவேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்களாம்.


[You must be registered and logged in to see this image.]
17-ம் நூற்றாண்டில் பிரான்சின் ஆதிக்கத்தில் இத்தாலி இருந்தது. அப்போது இத்தாலியில் உள்ள ஒரு நகரத்தின் பெயர், ஜெனோவா. அங்குள்ள படை வீரர்கள் பாதுகாப்புக்காக கெட்டி யான துணியால் பேண்ட் அணியத் தொடங்கினார்கள். அந்த உடை அப்போது வித்தியாசமாக இருந்ததால், ஜெனோவா என்ற நகரத்தோடு இணைத்து ஜீன்ஸ் என்று அந்த உடைக்கு பெயரிட் டார்கள். 20-ம் நூற்றாண்டில் பேஷன் உலகம் அதை தத்து எடுத்துக்கொண்ட பிறகுதான் இந்த ஜீன்ஸ் உலகம் பிரசித்தி பெறத் தொடங்கியது.

முதலில் காட்டன், லினன், கம்பளி போன்ற துணிகளை பயன் படுத்தி ஜீன்ஸ் தயாரித் தார்கள். அடர்த்தி கூடிய துணியாக அது இருந்ததால் 19-ம் நூற்றாண்டில் கலிபோர் னியாவில் உள்ள தங்க சுரங்க பணியாளர்கள், வேலை நேரத்தில் அதனை அணிந்தார்கள். பின்பு தொழிற்சாலை பணியாளர்கள் அதை அணிந்தனர். அப்படி, இப்படி அது வளர்ச்சி பெற்றுக்கொண்டி ருந்தாலும் அமெரிக்காவில் `கவுபாய்’ சினிமா நடிகர்கள் அதை அணிய ஆரம்பித்த பிறகுதான் ஜீன்ஸ் புகழின் உச்சிக்கு சென் றது. அந்த காலகட்டத்தில் அழகான வர்கள், ஆண்மை மிக்க வர்கள், சாகசம் நிறைந்தவர்கள் அணியும் ஆடையாக ஜீன்ஸ் கருதப்பட்டது. அப்போது ஜீன்ஸ் ஆண்கள் அணியும் உடையாக மட்டுமே இருந்தது.

கெட்டியான, பாதுகாப்பான உடையாக அது இருந்ததால் விவசாய வேலை பார்க்கும் பெண்களும், பண்ணைகளில் வேலை பார்க்கும் பெண்களும் முதலில் ஜீன்ஸ் அணியத் தொடங்கினார்கள். அப்படியே மெல்ல மெல்ல எல்லா பெண்களும் அணியலாம் என்ற நிலை ஏற்பட்டதும் ஜீன்ஸ் புரட்சி தொடங்கிவிட்டது.


[You must be registered and logged in to see this image.]
இப்போது ஆண்களும், பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ஜீன்ஸ் அணிகிறார்கள். அதனை விரும்பி அணிய என்ன காரணம்? என்று அவர்களிடம் கேட்டால்..

- `தன்னம்பிக்கை தருவதாக’ சிலர் சொல்கிறார்கள்.

- `சவுகரியமான உடையாக இருக்கிறது’ என்று பலர் சொல்கிறார்கள்.

- `அழகு அதிகரிக்கிறது.. எடுப்பாக இருக்கிறது’ என்பவர்களும் உண்டு.

- `எங்கள் வருமானத்திற்கு ஏற்ற தரமான உடை’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி எல்லோரும் ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி ஜீன்ஸ் களை அணிந்தாலும், இறுக்க மான ஜீன்ஸ்களை தொடர்ச்சி யாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.

தோழியர் குழு ஒன்று பஸ், ரெயில் என்று மாறிமாறி மூன்று நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டது. பயணத்தின் முடி வில் குறிப்பிட்ட இடம் சென்றடைந்ததும், அவர்களில் டீன்ஏஜ் பெண் ஒருவருக்கு காலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. பயணத்தில் ஏற்பட்ட அசவுகரியத்தால் அது ஏற்பட்டிருக்கும் என்று முதலில் அவள் நினைத்தாள். ஆனால் மறுநாள் வலி அதிகரித்துவிடவே, டாக்டரிடம் சென்றபோதுதான் அவளால் உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.


[You must be registered and logged in to see this image.]
பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை அவள் தொடர்ச்சியாக பயன் படுத்திவிட்டாள். ஏற்கனவே அது உடலை இறுக்கிப்பிடித்திருக்க, அதற்கு மேல் இறுக்கிப்பிடிக்கும் பெல்ட்டும் அணிந்திருக்கிறாள். அது அவளுக்கு `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா’ என்ற பாதிப்பை உருவாக்கிவிட்டது.

பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக மெல்லிய நரம்பு ஒன்று செல்கிறது. அதை ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்கியது, கடுமையான கால் வலியை உருவாக்கிவிட்டது. இந்த வலி யும், அவஸ்தையும் முழுமையாக நீங்க வேண்டும் என்றால் சில மாதங் களாகும். அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகிவிட்டால், ஆபரேஷன் தேவைப்படும்.

நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக் கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.

ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது. அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம். `ஆண்களின் இனப் பெருக்க திறன் குறைய என்ன காரணம்?’ என்பது பற்றிய ஆராய்ச்சி, சுவீடனில் நடந்தது. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்’ என்று கண்டறிந்தார்கள். அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி’ என்ற ஒரு கொள்கையை உருவாக்கினார்கள்.

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விரைப்பைகள் இயற்கையாகவே உடலில் இருந்து வெளியே தொங்குகின்றன. உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே உயிரணு உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால்தான், உடலுக்கு வெளியே அது அமைந்திருக்கிறது.

இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.

சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம். அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர் களாக ஆகக்கூடும்.

ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். `ஸ்கின் பிட்’ ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவை களை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்’ என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது.

பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும்.

தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள். தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum