தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
வேண்டாம் மெக்காலே...! வரட்டும் கல்விப் புரட்சி...!!
2 posters
Page 1 of 1
வேண்டாம் மெக்காலே...! வரட்டும் கல்விப் புரட்சி...!!
இந்தியாவில் பிரிட்டிஷாரின் கல்விக் கொள்கையை அமல் செய்த மெக்காலே, பிரிட்டிஷ் பார்லிமென்டில் 1835 பிப்.2ம் தேதி ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.
அதில் அவர், "நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை. அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு. கலாசாரம் மற்றும் ஆன்மிக நெறி எனும் முதுகெலும்பை நாம் உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.
ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களை விட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும் பாரம்பரிய கலாசாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன். அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள்' என்றார்.
இவ்வாறு புகுத்தப்பட்ட மெக்காலேயின் கல்வித் திட்டம் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில் கலாசாரம், மதிப்பீடுகள் மற்றும் ஆன்மிக நெறிகளுக்குப் பெயர் எடுத்த இந்தியாவின் கல்வி முதுகெலும்பை முறிப்பதாக இருந்தது. நவீன கல்வி, நவீன தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவை நவீனம் என்ற பெயரில் இங்கு புகுத்தப்பட்டன. தற்போது அது "உலகமயமாக்கல்' என்று புதுப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இயற்கையான பலத்தை மீட்கவும், அதே சமயம் உயர்கல்வியில் நவீனத் தேவைகளை பூர்த்தி செய்யவும், 21ம் நூற்றாண்டில் அமல் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக 11வது திட்ட காலத்தில் மத்திய அரசு கல்விக்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியது. எனினும் இன்னும் சில விஷயங்களில் நாம் எதிர்பார்த்த தகுதியைப் பெறவில்லை.
2009 ஜூலையில் 483 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரத்து 918 கல்லூரிகள் இருந்தன. 2009-10ல் 96 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியக் கல்வி நிறுவனங்களும், 3 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிவாய்ந்த திறன் அடிப்படையிலான ஆசிரியர்கள் கிடைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
2007-08ம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவினரால் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 46 பல்கலைக்கழகங்களில் 44 சதவீத பேராசிரியர் 51 சதவீத இணைப்பேராசிரியர் மற்றும் 53 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தெரியவந்தது. அதே போல், 985 கல்லூரிகளில் 18 சதவீத இணைப்பேராசிரியர்கள் மற்றும் 41 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது உள்ள நிலையில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவற்றை சேர்த்து 4.41 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். தற்போது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 5.1 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் படி, 12 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் தேவையும் உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது.
இந்தியாவில் நாக் தரமதிப்பீடு தான் கல்வி நிறுவனங்களின் தகுதியை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. இதுவரை நாக், 159 பல்கலைக்கழகங்கள் மற்றும் 4171 கல்லூரிகளையும் மட்டுமே தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 60 பல்கலைக் கழகங்கள் ( 37.7 சதவீதம்) மற்றும் 1796 கல்லூரிகள் (43சதவீதம்) மட்டுமே "ஏ' கிரேடு அந்தஸ்தை பெற்றுள்ளன. "ஏ' கிரேடு பெற்றபல்கலைக்கழகங்களில் 40 சதவீதம் மத்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
29.4 சதவீதம் மாநில பல்கலைக்கழகங்கள். மற்றவை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகத்தின் தரம், பல்கலைக்கழக ஆசிரியரின் தரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. உயர் கல்வியில் திறமையான, தகுதி வாய்ந்த ஆசிரியர்களாலேயே பாடத்திட்டம் மற்றும் துணைப்பாடத் திட்டங்களில் சிறந்து விளங்க முடியும்.
இது போன்ற சிறப்பான உயர் கல்வியால் மட்டுமே சிறப்பான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் ஆகியவற்றை இளைஞர்களிடையே உருவாக்கும். இது தான் உலகமயமாக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் கலாசார பாரம்பரியம் மற்றும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும். கல்லூரி ஆகட்டும்; பல்கலைக்கழகமாகட்டும். உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை விட ஆசிரியர்களே முக்கியமானவர்கள்.
பேராசிரியர் எஸ்.பி. தியாகராஜன்
தினமலர்-கல்விமலர்
சோர்ஸ்: http://groups.yahoo.com/group/K-Tic-group/message/258
அதில் அவர், "நான் குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். இதுவரை ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் பார்க்கவில்லை. அவ்வளவு வளம் நிறைந்தது அந்நாடு. கலாசாரம் மற்றும் ஆன்மிக நெறி எனும் முதுகெலும்பை நாம் உடைக்காதவரை நல்ல ஒழுக்கம், நல்ல பண்பு இருக்கும் அந்நாட்டின் மக்களை நாம் எப்போதும் வெற்றி பெறுவது கடினம்.
ஆகவே, பழைய கல்வி அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றை மாற்றி, தங்களை விட வெளிநாடு மற்றும் ஆங்கிலம் ஆகியனதான் உயர்வானது என்பதை மனதில் புகுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டையும் பாரம்பரிய கலாசாரத்தையும் இழக்கும் படியான கல்வித் திட்டத்தை நான் பரிந்துரைக்கிறேன். அதன் மூலம் நாம் எது போன்று அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோல் ஆதிக்கத்துக்குட்பட்டவர்களாக அவர்கள் மாறுவார்கள்' என்றார்.
இவ்வாறு புகுத்தப்பட்ட மெக்காலேயின் கல்வித் திட்டம் 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில் கலாசாரம், மதிப்பீடுகள் மற்றும் ஆன்மிக நெறிகளுக்குப் பெயர் எடுத்த இந்தியாவின் கல்வி முதுகெலும்பை முறிப்பதாக இருந்தது. நவீன கல்வி, நவீன தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவை நவீனம் என்ற பெயரில் இங்கு புகுத்தப்பட்டன. தற்போது அது "உலகமயமாக்கல்' என்று புதுப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இயற்கையான பலத்தை மீட்கவும், அதே சமயம் உயர்கல்வியில் நவீனத் தேவைகளை பூர்த்தி செய்யவும், 21ம் நூற்றாண்டில் அமல் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக 11வது திட்ட காலத்தில் மத்திய அரசு கல்விக்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியது. எனினும் இன்னும் சில விஷயங்களில் நாம் எதிர்பார்த்த தகுதியைப் பெறவில்லை.
2009 ஜூலையில் 483 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரத்து 918 கல்லூரிகள் இருந்தன. 2009-10ல் 96 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியக் கல்வி நிறுவனங்களும், 3 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. இந்நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிவாய்ந்த திறன் அடிப்படையிலான ஆசிரியர்கள் கிடைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
2007-08ம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவினரால் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 46 பல்கலைக்கழகங்களில் 44 சதவீத பேராசிரியர் 51 சதவீத இணைப்பேராசிரியர் மற்றும் 53 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தெரியவந்தது. அதே போல், 985 கல்லூரிகளில் 18 சதவீத இணைப்பேராசிரியர்கள் மற்றும் 41 சதவீத விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது உள்ள நிலையில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவற்றை சேர்த்து 4.41 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். தற்போது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 5.1 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் படி, 12 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் தேவையும் உள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்ய, மத்திய அரசு ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை ஏற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு வர்த்தக மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது.
இந்தியாவில் நாக் தரமதிப்பீடு தான் கல்வி நிறுவனங்களின் தகுதியை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. இதுவரை நாக், 159 பல்கலைக்கழகங்கள் மற்றும் 4171 கல்லூரிகளையும் மட்டுமே தரமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 60 பல்கலைக் கழகங்கள் ( 37.7 சதவீதம்) மற்றும் 1796 கல்லூரிகள் (43சதவீதம்) மட்டுமே "ஏ' கிரேடு அந்தஸ்தை பெற்றுள்ளன. "ஏ' கிரேடு பெற்றபல்கலைக்கழகங்களில் 40 சதவீதம் மத்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
29.4 சதவீதம் மாநில பல்கலைக்கழகங்கள். மற்றவை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகத்தின் தரம், பல்கலைக்கழக ஆசிரியரின் தரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. உயர் கல்வியில் திறமையான, தகுதி வாய்ந்த ஆசிரியர்களாலேயே பாடத்திட்டம் மற்றும் துணைப்பாடத் திட்டங்களில் சிறந்து விளங்க முடியும்.
இது போன்ற சிறப்பான உயர் கல்வியால் மட்டுமே சிறப்பான வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கான திறன் ஆகியவற்றை இளைஞர்களிடையே உருவாக்கும். இது தான் உலகமயமாக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் கலாசார பாரம்பரியம் மற்றும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்யும். கல்லூரி ஆகட்டும்; பல்கலைக்கழகமாகட்டும். உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை விட ஆசிரியர்களே முக்கியமானவர்கள்.
பேராசிரியர் எஸ்.பி. தியாகராஜன்
தினமலர்-கல்விமலர்
சோர்ஸ்: http://groups.yahoo.com/group/K-Tic-group/message/258
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கல்விப் பொன்மொழிகள்
» காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
» குழந்தையும் வேண்டாம், மாதவிலக்கும் வேண்டாம்.
» காலம் வரட்டும் உன் மடி சேர
» முடிவுக்கு வரட்டும் முதுகுவலி
» காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
» குழந்தையும் வேண்டாம், மாதவிலக்கும் வேண்டாம்.
» காலம் வரட்டும் உன் மடி சேர
» முடிவுக்கு வரட்டும் முதுகுவலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|