தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm
தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
2 posters
Page 1 of 1
தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
கற்காலத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். பழைய கற்காலம், புதிய கற்காலம், பழைய கற்காலக் கருவிகள் மதுரை பகுதியில் கிடைக்கவில்லை.இடை கற்காலக் கருவிக் மதுரையி;ல் கிடைத்துள்ளது. மதுரை என்றால், மதுரையின் மையப்பகுதி இதுவரை அகழவாராய்ச்சி செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. மதுரையைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று உள்ளது. மதுரையின் மையப்பகுதியில் எதிர்க்காலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதால் இன்னும் பல வரலாற்று சான்றுகளைப் பெற முடியும் என்பது உண்மை.
உலகின் மூத்த குடி தமிழ்க்குடி மதுரையில் வாழந்துள்ளான். மதுரை மனிதன் ப+மியில் புதைந்து கிடந்துள்ள கற்களை சிறுசிறு கருவியாகப் பயன்படுத்தி இருக்கின்றான். கி.மு 4000 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி துவரிமான், அரிட்டாபட்டி, மாங்குளம் போன்ற பகுதிகளில் கிடைத்தது. நாடோடி வாழ்க்கையில் இருந்து மாறி, ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுகிறான். கற்காலத்திற்குப் பின் இரும்பு காலம் வருகின்றது. கி.மு. 1000 இரும்பு உருவாகின்றது. இரும்பு கண்டுபிடிப்பிற்கு பின் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது. மதுரையின் புறப்பகுதியில் இரும்புக்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் மனிதன் இறந்ததும் எரிக்கும் பழக்கம் இல்லை. சுமாதிகள் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. சமாதியைச் சுற்றி கல்வட்டம் அமைத்தல், ப+மிக்கு மேல் கல்லறை கல்திட்டு அமைத்துள்ளனர். இடு துளை வழியாக படையல் பொருட்கள் ஆண்டுதோறும் போடும் பழக்கம் இருந்துள்ளது. பின் குத்துக்கல் வைத்து நடும் முறை, பின் எழுதி வைக்கும் கல்வெட்டு முறை, முதுமக்கள் தாழிகள் இட்டு புதைக்கும் முறை வந்தது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள் மலை அருகே ஆயிரக்கணக்கான கல்லறைகள் இன்றும் உள்ளது. சில அழிந்து விட்டது.
மதுரையில் � கோவலன் பொட்டல்� என்ற பகுதியில் கல்லறைக்ள உள்ளது. இறந்தவர்களை புதைத்தல் பின்னர் அவர்களது எலும்புகளை எடுத்து கலயத்தில் வைத்துள்ளனர். மண்ணோடு புதைக்கப்பட்ட எலும்புகள் 200 வருடத்திற்குள் அழிந்து விடும். தூழிகளில் வைக்கப்பட்ட எலும்புகள் ஆயிரம் வருடங்களானாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அந்த ஆற்றல் உள்ள கலயத்தை அன்றே கண்டுபிடித்து உள்ளான். இன்றைக்கு மதுரையில் ஆவின் பால் நிறுவனம் உள்ள சாத்தமங்கலம் பகுதியில் கல்லறைகள் நிறைய இருந்தன. கி.மு 400 ஆண்டில் மதுரையின் நாகரிக வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது. கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. மதிரை என்பது ஒரு பெண் தெய்வத்தின் பெயராக இருந்திருக்கலாம். ஆதிரை என்பது போல மதிரை என்பது மதுரையாக பிறகுதான் மாறுகின்றது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் பாண்டி நெடுஞ்செழியன் முனிவர்களுக்கு கல் படுகை அமைத்துக் கொடுத்ததற்கான சான்று உள்ளது. மதுரையில் பௌத்தம், சமணம் என பல்வேறு சமயங்களும் இருந்துள்ளது. மதுரையைச் சுற்றி 13 இடங்களில் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
புலிமான் கொம்பு என்ற இடத்தில் நடுகற்கள் கிடைத்தது.இந்தியாவிலேயே தொன்மையான சான்றாக அசோகர் காலச் சான்று சொல்லப்படுகின்றது. அதற்கும் முந்திய சான்றுகள் மதுரையில் உள்ளது. ப+லாங்குறி என்ற ஊரில் மதுரையைப் பற்றிய சாசனம் கிடைத்தது. சேந்தன், சேந்தன்குட்டன் என்ற மன்னர்கள் வரலாற்றில் மதுரையைப் பற்றி வருகின்றது. சங்க காலத்திற்கு பிறகான கல்வெட்டு நிறைய கிடைத்துள்ளது. சமண மதத்தில் வாசுதேவன் என்ற கடவுள் இருந்தது. குளக்கரையில் முனிவர்கள் வசித்த இடம். இப்படி பல்வேறு சான்றுகள் பல்வேறு சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளது.
மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வருகின்றது. கடுங்கோன் என்ற மன்னன் கைப்பற்றுகின்றான். இதற்கான செப்பேடு உள்ளது. குருவிக்காரன்சாலை பகுதியில் வைகை ஆற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லை எடுத்துப் பார்த்த போது வட்டெழுத்து கல்வெட்டாக இருந்தது. கிபி.7ம் நூற்றாண்டு கல்வெட்டு தடுப்பணை, மதகு அமைத்து வாய்க்கால் வெட்டி நீர் பாசனம் நடந்ததை தெரிவிக்கின்றது.அடுத்தவர்களை பாதிக்கும் வண்ணம் பெரிய அணைகள் அன்று கட்டப்படவில்லை. இந்த கல்வெட்டு மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் இன்றும் உள்ளது. மதனகோபால் சாமி கோவிலில் கிடைத்த வட்டெழுத்து கல்வெட்டு மதுரை வரலாற்றை பதிவு செய்துள்ளது. நெடுமாறன் காலத்து செப்பேடு கிடைத்தது. சோழர்கள் வருகிறார்கள். யானைமலை கல்வெட்டு கிடைத்தது.ராஜராஜன் ஆட்சி பற்றியும் உள்ளது. இஸ்லாமியர் வருகை அவர்களது ஆட்சியும் மதுரையில் நடைபெற்றுள்ளது. விஜயநகர ஆட்சி நாயக்கர்கள் ஆட்சி இப்படி பல ஆட்சி மாற்றங்களை மதுரை சந்தித்து உள்ளது. நாயக்கர்கள் ஆட்சியின் போது கிராம ஆட்சி ஒழிக்கப்பட்டு பாளையக்காரர்கள் ஆட்சி வருகின்றது. சமுதாய மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளது.
மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தொல்லியல் ஆய்வின் போது மதுரை வரலாற்றை அறிவியல் ரீதியாக அறியக்கூடிய பல சான்றுகள் கிடைத்துள்ளன. பாண்டிய மன்னர்களின் சதுர வடிவ நாணயங்கள் 2ம் நூற்றாண்டு நாணயங்கள், யானை,மீன் சின்னம் இருக்கும். ரோமானியர்கள் வெளியிட்ட செப்புக் காசுகள் சோழர் நாணயம், பிற்காலப் பாண்டியர்கள் நாணயம், பானை ஓடுகள் உள்ளது. ரோமானியர்கள் உறவை உறுதிப்படுத்தும் மது ஜாடிகள் கிடைத்து உள்ளது. சுட்ட மண்ணால் ஆன ஆபரணங்கள் இப்படி பல சான்றுகள் கிடைத்தது. �மாடக்குளம்� என்ற குளத்திலிருந்து வந்த நீரின் மூலம் மதுரையில் பெருமளவில் விவசாயம் அன்றே நடந்துள்ளது. மாடக்குளம் கீழ்மதுரை என்று வருகின்றது.
தொல்லியல் அறிஞர் திரு.வேதாட்சலம் அவர்கள் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் என்னுடன் பணிபுரிந்தவர். அவரது தொல்லியல் தொடர்பான கடின உழைப்பை ஈடுபாட்டை நான் நன்கு அறிவேன். அவரது உரையை கேட்டு முடித்த பின், மதுரையில் பிறந்ததற்காக பெருமை கொண்டேன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் மிக தொன்மையான நகரம் மதுரை. உலகின் முன்மொழி தமிழ்மொழி என அறிஞர்கள் மெய்ப்பித்து விட்டார்கள். உலகின் முதல் மனிதன் மதுரையில் வாழ்ந்தான் என்ற சான்றும் விரைவில் கிடைக்கும். நகைச்சுவையாக ஒரு பழமொழி உண்டு. �மதுரையைச் சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது� என்று கழுதையே அப்படி என்றால், மனிதனைச் சொல்லவும் வேண்டுமோ? நான் பல நட்சத்திர விடுதிகளில் பல ஊர்கள் பல்வேறு வசதிகளுடன் தங்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறேன். ஆனால் உலகின் எந்த மூலையில் எத்தனை வசதிகளுடன் தங்கினாலும் மதுரைக்கு ஈடான ஊரை நான் எங்கும் கண்டதில்லை. பிறந்த மண் பாசமாகக் கூட இருக்கலாம். எனக்கு மட்டுமல்ல, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண் பாசம் அவசியம் இருக்க வேண்டும். நான் பிறந்த மண் மதுரை வரலாறு கேட்டு அதனை பதிவு செய்ததை பெருமையாகக் கருதுகின்றேன். உலகம் உள்ளவரை மதுரையின் புகழ் நிலைக்கும்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010
Re: தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் உரை (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
தொன்மை மிகு தமிழின் சான்றுகள் இந்த மண்ணில் நிறையவே மறைந்துள்ளன முறயாக தேடினால் நிறையவே கிட்டும் தமிழ் மற்றும் தமிழனின் வரலாறு.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010
Similar topics
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி தலைப்பு நாமும் நம் மொழியும்
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி தலைப்பு நாமும் நம் மொழியும்
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|