தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னை கண் தேடுதே...

Go down

உன்னை கண் தேடுதே...  Empty உன்னை கண் தேடுதே...

Post by udhayam72 Fri May 10, 2013 1:38 pm

உன்னை கண் தேடுதே...
(புவனா கோவிந்த்)




"சிவா... கொஞ்சம் ஆபீஸ்ல டிராப் பண்றீங்களா?"

"வெளயாடாத திவ்யா. எனக்கு இன்னைக்கி கிளையன்ட் சைட்ல எட்டரை மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு"

"ஊர்ல இருக்கறவங்களுக்கெல்லாம் ரைடு குடுப்பீங்க... நான் கேட்டா மட்டும் முடியாதா?"

"ஏண்டி நேரம் காலம் தெரியாம உயிர வாங்கற?"

"நான் என்ன தினமுமா கேக்கறேன்... என்னோட கார் சர்வீஸ்'க்கு விட்டிருக்கறதால தான..."


"அது மொதலே தெரியாதா? நேரத்தோட கெளம்ப வேண்டியது தான. கடைசி நிமிசத்துல உயிர வாங்கணுமா?"


"என் கலீக் ஒருத்தி லிப்ட் தரேனு சொல்லி இருந்தா... இப்ப தான் அவகிட்ட இருந்து போன் வந்தது சிக் லீவ்னு"

"அப்ப நீயும் லீவ் போடு"


"இன்னைக்கி நீங்க கிளையன்ட் சைட்டுக்கு போற வழில தான எங்க ஆபீஸ். எனக்காக தனியா காஸ் பில் பண்ண போறதில்ல"


"உன்கிட்ட பேச முடியாது"


"உங்களுக்கு நான் முக்கியமா ஆபீஸ் முக்கியமா சிவா?"


"இப்படி லூசு மாதிரி கேள்வி கேக்கதேனு எவ்ளோ வாட்டி சொல்லி இருக்கேன்"


"இப்ப உங்களால டிராப் பண்ண முடியுமா முடியாதா?"


"டிராப் பண்ணி தொலைக்கிறேன்... சீக்கரம் கெளம்பி தொல"


"தொலைஞ்சா எப்படி கெளம்பறது?"


"....."


"ஜோக் சொன்னா சிரிக்கணும்... மொறைக்க கூடாது... ஹ்ம்ம்"


"உனக்கு காமடி பண்றதுக்கு வேற நேரம் கிடைக்கிலையா?"


"ம்... ஒரு டைம் டேபிள் போட்டு குடுங்க சார், காலை ஏழு மணி முதல் ஏழரை மணி வரை காமெடி டைம்னு... அதுபடி இனிமே காமெடி பண்றேன்"


"...."


"ஹும்க்கும்...இதுக்கும் மொறைப்பா... நான் போய் ரெடி ஆகறேன்"


**************************


"பாரு எவ்ளோ டிராபிக்னு...ச்சே... எல்லாம் உன்னால தான்..."


"இங்க பாருங்க... நீங்க எப்பவும் கெளம்பற டைம்க்கு அஞ்சு நிமிசம் முன்னாடியே கெளம்பி இருக்கோம்... நீங்க நெனச்ச டைம் விட முன்னாடியே கிளையன்ட் சைட்டுக்கு போய்டலாம். சும்மா எதாச்சும் சொல்லனும்னே சொல்லாதீங்க"


"எது தெரியுதோ இல்லையோ... நல்லா பேச்சுக்கு பேச்சு பேச கத்து வெச்சுருக்க"


"அங்க மட்டும் என்ன வாழுதாம்?"


"குடும்ப குத்துவிளக்குனு சர்டிபிகேட் குடுத்த எங்க அம்மாவ சொல்லணும்... இங்க குத்தறது மட்டும் தான் நடக்குது, விளக்க காணோம்..."


"எங்கிட்டயும் தான் சொன்னாங்க... ஸ்ரீராமர்னு, உங்க கிருஷ்ணா லீலை எல்லாம் இங்க வந்து தானே தெரிஞ்சுது"


"...."


"பேச தெரியலைனா உடனே மொறைக்க வேண்டியது...ஹ்ம்ம்"


சற்று நேரம் மௌனம்


"ஆபீஸ் வந்தாச்சில்ல... எறங்கு சீக்கரம்..."


"சரியான சிடுமூஞ்சி. கொஞ்சம் சிரிச்சுட்டு பை சொன்னா என்னவாம்" என்றாள் திவ்யா


"உனக்கு இந்த மூஞ்சியே போதும்..."


"ஹாய் ஷிவ்" என திவ்யாவுடன் பணி புரியும் ஹெலன் சிரித்தபடி கார் அருகில் வர, திவ்யா ஒன்றும் பேசாமல் இறங்கினாள்


"ஹாய் ஹெலன்" என்றவன், திவ்யாவிடம் திரும்பி "பை ராட்சசி" என குறும்பாய் கண்சிமிட்டி சிரித்தபடி காரை கிளப்பினான்

"Oh my god. This can't be true" என அலறினாள் ஹெலன்

அவளுக்கு அடுத்த கேபினில் இருந்த திவ்யா "What's wrong Helen?"


தன் கேள்விக்கு பதில் இல்லாமல் போக, எழுந்து ஹெலன் அருகே சென்றவள், கம்ப்யூட்டர் திரையில் தெரிந்த காட்சியில் ஒன்றும் புரியாமல் விழித்தாள்


"What is that? Something burning? Where is this?" என குழப்பமாய் கேட்டாள் திவ்யா


"Div... open your eyes... That's twin towers" என்றாள் ஹெலன்


உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் பற்றி எரிந்து கொண்டு இருந்தது


எல்லோரும் விரைவாய் தங்கள் குடும்பத்தினரின் நலத்தை அறிய போன் செய்து கொண்டிருந்தனர்


திவ்யாவிற்கு சட்டென ஏதோ நினைவு வர "நோ நோ நோ..." என அலறினாள்


"Div... Are you okay?" என எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்


"சிவா...சிவா..." என அவள் பிதற்ற


"Div... please calm down... I know Shiv doesn't work anywhere near twin towers" என்றாள் ஹெலன் சமாதானமாய்


"No... he is got a client meeting in twin towers today... சிவா... சிவா" என பதறியவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் விழித்தனர் சக ஊழியர்கள்


"Don't panic Div, call his cellphone" என்றாள் ஹெலன்


உடனே செல்போனை எடுத்து அழைத்தாள், அழைப்பு சென்று கொண்டே இருக்க, எந்த நொடியும் அவன் குரல் கேட்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்


"ப்ளீஸ் சிவா... போன் எடு சிவா ப்ளீஸ்... ஒரே ஒரு வார்த்தை சிவா.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சிவா... ப்ளீஸ் சிவா... என்னை அழ வெக்காத சிவா... ப்ளீஸ்" என பதிலில்லாத போனில் பேசிகொண்டிருந்தாள் திவ்யா


பதிலின்றியே அழைப்பு முற்றுபெறவும், அவன் அலுவலகத்திற்கு அழைத்து சிவாவின் மேலதிகாரியிடம் பேசினாள். அவரும் சிவாவை தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருப்பதாய் கூறினார்


அதற்குள் கான்பரன்ஸ் ஹாலின் டிவி ஒலி கேட்க, வேகமாய் எழுந்து உள்ளே சென்றாள் திவ்யா, பின்னோடு ஹெலனும் மற்றவர்களும்


அங்கு மரியா என்ற மூத்த பெண்மணி கண்ணில் உணர்ச்சியற்ற பார்வையுடன் டிவியின் அருகில் நின்றிருந்தாள்


"Maria's Son works in Twin towers" என அதற்கு விளக்கம் தந்தாள் கார்லா


டிவி திரையில் இரட்டை கோபுரங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த காட்சி நெஞ்சை உலுக்குவதாய் இருந்தது


செய்தி வாசிப்பாளரின் குரல் பின்னணியில் கேட்டது "....Nineteen hijackers took control of four commercial airliners en route to San Francisco and Los Angeles from Boston, Newark, and Washington, D.C. Planes with long flights were intentionally selected for hijacking because they would be heavily fueled. At 8:46 a.m, American Airlines Flight 11 crashed into the World Trade Center's North Tower, followed by United Airlines Flight 175, which hit the South Tower at 9:03 a.m..."


அதற்கு பின் பேசிய எதுவும் திவ்யாவின் காதில் விழவில்லை. மௌனமாய் எழுந்து தன் கேபினுக்கு வந்தவள், பிரமை பிடித்தவள் போல் கம்ப்யூட்டர் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்


"Div...." என ஹெலன் அவள் தோள் தொட, அழக்கூட தெம்பில்லாமல் பலவீனமாய் விழித்தாள் திவ்யா


"Don't give up Div... Just think he'll be safe" என்றாள் ஆறுதலாய்


"அப்படியும் இருக்குமோ" என ஒரு கணம் நினைத்தவளுக்கு மறுகணமே நம்பிக்கையின்மை தலை தூக்கியது


"எட்டரை மணிக்கு மீட்டிங்னு சொன்னாரே. கெளம்பின நேரத்துக்கு கண்டிப்பா எட்டரைக்கு போய் இருக்கணும்... மொதல் பிளைட் எட்டே முக்காலுக்கு தானே... ஐயோ அம்மா... நான் என்ன பண்ணுவேன்... எதுவும் இல்லைனா இதுக்குள்ள சிவா போன் பண்ணி இருக்கணுமே" என தனக்குள்ளேயே பலவாறு யோசித்து மன வேதனையில் உழன்றாள்


சிறிது நேரம் அப்படியே இருந்தவள், திடீரென "I should go home now" என எழுந்தாள், ஏதோ தீர்மானம் செய்தவள் போல்


"Div... I hear its crazy outside... my advise is to stay in" என தடுத்தாள் ஹெலன்


"No Helen... I just...I... please... call me a cab" என்றாள், வந்து விடுவேன் என பயமுறுத்திய கண்ணீரை உள்ளிழுத்தபடி


அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமின்றி "Okay... I will give you a ride" என எழுந்தாள்

வீட்டுக்கு வந்து சிறிது நேரம் கழித்து ஹெலன் விடை பெற்று செல்ல, திவ்யாவிற்கு ஒரு ஒரு நொடியும் ஒரு யுகமாய் நகர்ந்தது

மீண்டும் சிவாவின் செல்போனுக்கு முயன்ற போதும் எந்த பதிலும் இருக்கவில்லை


கண்ணை மூடினாலும் திறந்தாலும், காலையில் சிவா "பை ராட்சசி" என குறும்பாய் கண்சிமிட்டிய முகமே கண்ணில் தோன்றி, மறுபடியும் அந்த குறும்பையும் சிரிப்பையும் காண்போமா என தவிப்பை கூட்டியது


நேரத்தை கொல்ல தொலைக்காட்சியை உயிர்பித்தாள், அதில் காட்டப்பட்ட காட்சிகளும் செய்தியும் மேலும் நம்பிக்கையை குலைக்க, அதை அணைத்து விட்டு படுக்கை அறைக்குள் சென்றாள்


அங்கிருந்த டிரஸ்ஸர் மேல் கிடந்த சிவாவின் இள நீல வண்ண சட்டையை பார்த்ததும், மௌனமாய் அதை எடுத்து நெஞ்சோடு அணைத்தபடி படுக்கையில் சரிந்தாள்


முட்டிக்கொண்டு வந்த அழுகைக்கு அணை போட்டாள். "நான் எதுக்கு அழனும். சிவாவுக்கு எதுவும் ஆகி இருக்காது. நான் அழக்கூடாது. என் சிவா என்னை விட்டு எங்கயும் போக மாட்டாரு. எனக்கு தெரியும். நான் அழுதா சிவாவுக்கு புடிக்காது. நான் அழ மாட்டேன்" என வைராக்கியமாய் கண் மூடி மௌனியானாள்


எத்தனை நேரம் அப்படியே கடந்ததோ, அதை உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை


திடீரென "திவ்வி..." என யாரோ மென்மையாய் தோள் தொட விழித்தவள், நம்ப இயலாமல் கண்ணை கசக்கி பார்த்தாள்


துக்கமும் தவிப்பும் சுமந்த விழிகளுடன் அவள் ஆராய "திவ்விம்மா... நான் தான்... பயந்துட்டயாடா?" என சிவா அவளை அருகே இழுத்தபடி கேட்க, அவனிடமிருந்து விலகி இன்னும் நம்பாத பாவனையுடன் கண் விரித்து பார்த்தாள் திவ்யா


"திவ்வி..." என சிவா மீண்டும் அருகில் வர


"சிவா...சி... நா... நான்... சி... சிவா...எ... எனக்கு... சி...சிவா..." என அவள் ஏதேதோ சொல்ல வந்து எதுவும் சொல்ல இயலாமல் அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்


அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய், அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன் "திவ்வி... இங்க பாரு... எனக்கு ஒண்ணும் ஆகல..." என்றவன், அதை புரியவைக்க முயல்பவன் போல் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்


அவனின் அந்த ஒற்றை செய்கையில், அத்தனை நேரம் அவளிடமிருந்த உறுதி மொத்தமும் குலைய, கதறலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள்


வெகு நேர சமாதானத்திற்கு பின் ஒருவாறு தேறியவள் "உங்களுக்கு எதாச்சும் ஆயிருந்தா... எ...என்னால... நெனச்சே பாக்க முடியல சிவா. நான்..." என தடுமாறியவளை


"என்னை காப்பாத்தரதுக்கு நீ இருக்கும் போதும் எனக்கொண்ணும் ஆகாது திவ்விம்மா" என்றான் சிரிப்புடன்


அவள் புரியாமல் விழிக்க "புரியலையா? உன்னை ஆபீஸ்ல டிராப் பண்ணனும்னு இன்னிக்கி ப்ரீவே எடுக்காம வேற ரூட் எடுத்தேன். உன்னை டிராப் பண்ணிட்டு போனா, கொஞ்ச தூரத்துல ஏதோ கன்ஸ்ட்ரக்சன்னு ரெண்டு லேனை க்ளோஸ் பண்ணிட்டான். ஒரே லேன் தான், செம டிராபிக். போதாதக்குறைக்கு வழில ஏதோ ஏக்சிடன்ட் வேற. கொஞ்ச நேரம் அப்படியே டோட்டல் பிளாக். அதுக்குள்ள ட்வின் டவர் நியூஸ் ரேடியோல சொல்ல ஆரம்பிச்சுட்டான். எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சு இருக்கேனு அப்பத்தான் புரிஞ்சது. நடக்கறதெல்லாம் நல்லதுக்கு தான்னு சொல்றது சரிதான்னு தோணுது திவ்வி. ஒருவேள நேரா ப்ரீவேல போய் இருந்தா எட்டரைக்கே ட்வின் டவர்ஸ் போய் இருப்பேன்..." என்றவன்


அதன் விளைவை எண்ணி பயந்த பிரதிபலிப்பாய் அவள் கண்ணில் நீர் நிறைய கண்டதும், சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி "ஆனா விஷயம் தெரியறதுக்கு முன்னாடி, உன்னை ஆபீஸ்ல விட வந்து தான் லேட் ஆச்சுனு உன்னை கன்னா பின்னானு திட்டிட்டு இருந்தேன். சாரி ஸ்வீட்டி" என கண்சிமிட்டி சிரிக்க


இனி இந்த சிரிப்பை பார்ப்போமோ மாட்டோமோ என தவித்தது நினைவுக்கு வர, மீண்டும் அவள் கண்ணில் நீர் நிறைந்தது


"ஏய்... " என செல்லமாய் அதட்டி அவள் கண்ணீரை துடைத்தான்


"ஒரு போன் பண்ணி இருக்கலாமே... நான் போன் பண்ணப்பவும் எடுக்கல" என்றாள் தவிப்பில் விளைந்த கோபத்துடன்


"உடனே உனக்கு ட்ரை பண்ணினேன் திவ்வி. செல்போன் லைன்ஸ் எல்லாம் ஜேம் ஆய்டுச்சு... அப்புறம் வெளிய எங்கயாச்சும் நிறுத்தி பேசறதை விட நேர்ல வந்து சொல்றதே பெட்டர்னு தோணுச்சு. அந்த டிராபிக்ல இருந்து வெளிய வர்றதுக்கு இவ்ளோ நேரமாய்டுச்சுடா" என்றான்


அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமாய் அவன் அணைப்பில் ஒடுங்கிக்கொண்டாள். இன்னும் அவள் உடல் நடுங்கி கொண்டிருப்பதை உணர்ந்தான் சிவா


அதிலிருந்து அவள் மனதை திசை மாற்றும் பொருட்டு "அது சரி... காலைல என்ன சொன்ன? சிடுமூஞ்சியா? இப்ப இந்த மூஞ்சிக்கு என்ன பேரு வெக்கறதாம்?" என சீண்டலாய் சிரித்தபடி அவள் தாடையை பற்றி கேட்க, சற்றும் எதிர்பாராத நொடியில் இதழ் பதித்தாள்


"ஆஹா... இப்படியெல்லாம் நடக்கும்னா தினமும் உயிர் பொழச்சு வரலாம் போல இருக்கே" என அவன் மையலாய் சிரிக்க


"ப்ளீஸ் சிவா... விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. ஜென்மத்துக்கும் இந்த ஒரு நாள் போதும்" என்றவள் கூற, மனைவியின் அன்பில் மனம் நெகிழ அணைத்து கொண்டான் சிவா

(முற்றும்)
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 42
Location : bombay

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum