தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
காசியானந்தன் கதைகள்
3 posters
Page 1 of 1
காசியானந்தன் கதைகள்
இலையுதிர்காலம்.
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
"உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன..."
என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது:-"நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்
" நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது:-விழுவதெற்கெல்லாம்
அழுவதற்கில்லை"
நன்றி தமிழ் ஒளி 2000 ச. கஜன்
மரம் மொட்டையாக நின்றது.
புல்மேய்ந்த மாடுகள் மரத்தை இரக்கத்தோடு நோக்கின.
"உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன..."
என்று ஒரு மாடு தழுதழுத்த குரலில் கூறியது.
மரம் சொன்னது:-"நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும்
" நிமிர்ந்தே நின்றது மரம்.
அது சொன்னது:-விழுவதெற்கெல்லாம்
அழுவதற்கில்லை"
நன்றி தமிழ் ஒளி 2000 ச. கஜன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காசியானந்தன் கதைகள்
பாய்ச்சல்
மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு கோடரியும்,கயிறும் விறகு வெட்டிக்குக்குப்பக்கத்தில் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களை தன் அலகால் கொத்திவிட்டுப்பறந்து போனது.
"இந்த மரங்கொத்தியைப்பார்த்தாயா? நான்கு மரங்களையும் மாறி மாறித்தன் அலகால் வெட்டியது--ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்தமுடிந்ததா? என்று கயிற்றைப்பார்த்து கேட்டது கோடரி.
"மரங்கொத்தியால் அது முடியாது என்றது கயிறு."
ஏன் அப்படிச்சொல்கிறாய்??
கயிறு சொன்னது:-
"நாலு மரத்தையும் வெட்டுகிறவன்
ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை"
மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு கோடரியும்,கயிறும் விறகு வெட்டிக்குக்குப்பக்கத்தில் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களை தன் அலகால் கொத்திவிட்டுப்பறந்து போனது.
"இந்த மரங்கொத்தியைப்பார்த்தாயா? நான்கு மரங்களையும் மாறி மாறித்தன் அலகால் வெட்டியது--ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்தமுடிந்ததா? என்று கயிற்றைப்பார்த்து கேட்டது கோடரி.
"மரங்கொத்தியால் அது முடியாது என்றது கயிறு."
ஏன் அப்படிச்சொல்கிறாய்??
கயிறு சொன்னது:-
"நாலு மரத்தையும் வெட்டுகிறவன்
ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை"
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: காசியானந்தன் கதைகள்
நகைக்கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக்கல்லைப்
பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.
"எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஓர் கல்தானே...." என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.
'ஏ குறுணி! காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு
பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய்.
ஆனால், இரத்தினக்கல் அப்படியா! நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை
வெளியே தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே
உருவாக்கிக் கொண்டு இருந்தது.
'அப்படியென்றால்...... ?'என்று இழுத்தது குறுணிக்கல்.
கடப்பாறை சொன்னது--
" நிறைவாகும் வரை
மறைவாக இரு"
ஆக்கம் -சாம் கஜன்
புத்தகம்-காசி ஆனந்தன் கதைகள்
பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.
"எனக்கு ஏன் மதிப்பில்லை? நானும் ஓர் கல்தானே...." என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.
'ஏ குறுணி! காலம் முழுவதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு
பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய்.
ஆனால், இரத்தினக்கல் அப்படியா! நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை
வெளியே தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே
உருவாக்கிக் கொண்டு இருந்தது.
'அப்படியென்றால்...... ?'என்று இழுத்தது குறுணிக்கல்.
கடப்பாறை சொன்னது--
" நிறைவாகும் வரை
மறைவாக இரு"
ஆக்கம் -சாம் கஜன்
புத்தகம்-காசி ஆனந்தன் கதைகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காசியானந்தன் கதைகள்
குருவிக்கூடு.
சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன.
மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,
“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.
குஞ்சுகள் கவனிக்கவில்லை.
பாம்புக்கு இது வாய்ப்பானது.
குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்
நுழைந்தது.
நொடிப்பொழுதில்-
பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின்.
அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.
அது மீண்டும் இரைந்து கத்தியது.
[b style="font-weight: bold;"]“சிறகு விரி[/b]
பிறகு சிரி”
சிறகு முளைக்காத குருவிக்குஞ்சிகள் சிரித்து ஆரவாரித்தன.
மரத்தில் இருந்த அணில்,குருவிக்கூட்டுக்குத்தாவி,
“ உங்களுக்கு இன்னும் சிறகு முளைக்க வில்லை-சுதந்திரம் இல்லாத உங்களுக்கு என்ன சிரிப்பு?” என்று கேட்டது.
குஞ்சுகள் கவனிக்கவில்லை.
பாம்புக்கு இது வாய்ப்பானது.
குஞ்சிகளின் சிரிப்பொலி கேட்டு,பாம்பு கூட்டுக்குள்
நுழைந்தது.
நொடிப்பொழுதில்-
பாம்பின் வாயில் குஞ்சிகள் பலியாகிப் போயின்.
அணிலுக்கோ துயரம் தாங்கவில்லை.
அது மீண்டும் இரைந்து கத்தியது.
[b style="font-weight: bold;"]“சிறகு விரி[/b]
பிறகு சிரி”
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காசியானந்தன் கதைகள்
காற்றாடி நூலின் துணையோடு உயர்ந்து உயர்ந்து வானின் உச்சியில் ஏறியது.
'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....'
என்று தன் பெருமையை பறைசாற்றியது.
பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.
'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.
கொஞ்ச நேரத்தில்
ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.
உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.
காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..
"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன்
இறக்கி வைக்கப்படுவான்.!! !"
'பார்த்தீர்களா.....? நான் எவ்வளவு உயர்த்தில் இருக்கிறேன்.....'
என்று தன் பெருமையை பறைசாற்றியது.
பழைய வரலாற்றை அடியோடு மறந்தது காற்றாடி.
'நூல் இனி எதற்கு..? என்று கூறிக்கொண்டே நூலைப்பட்டென்று அது அறுத்துக்கொண்டது.
கொஞ்ச நேரத்தில்
ஊரின் மூலையில்--ஒரு முள் மரத்தில் விழுந்து.
உருக்குலைந்து கிடந்தது காற்றாடி.
காற்றாடியின் கதை தெரிந்த முள்மரம் சொன்னது..
"ஏற்றி வைத்தவனை மறக்கிறவன்
இறக்கி வைக்கப்படுவான்.!! !"
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காசியானந்தன் கதைகள்
கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாப் போயின.
மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
'இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன்- இங்கே எனக்கு வரவேற்பிருக்கும்.....'
என்றது கழுதை.
அது பாடத் தொடங்கியது.
என்ன கொடுமை.......கழுதைக்கச்சேரி--கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது.
அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன.
கழுதைக்கு ஒரே கொண்டாட்டம்.
ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன.
கழுதை மகிழ்ச்சியோடு பாடத்தொடங்கியது.
என்ன ஆச்சரியம்!
தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு 'ஒன்றும் வியப்படையாதே.....' இங்கே அப்படித்தான் ' என்று கூறியது.
சுருக்கமக அது சொன்னது----
"ஓணான்களின் ஊரில்
கழுதைகளும் வித்துவான்களே"
மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
'இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன்- இங்கே எனக்கு வரவேற்பிருக்கும்.....'
என்றது கழுதை.
அது பாடத் தொடங்கியது.
என்ன கொடுமை.......கழுதைக்கச்சேரி--கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது.
அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன.
கழுதைக்கு ஒரே கொண்டாட்டம்.
ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன.
கழுதை மகிழ்ச்சியோடு பாடத்தொடங்கியது.
என்ன ஆச்சரியம்!
தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு 'ஒன்றும் வியப்படையாதே.....' இங்கே அப்படித்தான் ' என்று கூறியது.
சுருக்கமக அது சொன்னது----
"ஓணான்களின் ஊரில்
கழுதைகளும் வித்துவான்களே"
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: காசியானந்தன் கதைகள்
நன்றி ஐயா ...
[b style="margin: 0px; padding: 0px;"][You must be registered and logged in to see this link.]..................[/b] படம் போட்டதற்கு
[b style="margin: 0px; padding: 0px;"][You must be registered and logged in to see this link.]..................[/b] படம் போட்டதற்கு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: காசியானந்தன் கதைகள்
நன்றிகள் ..
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|