தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ரசித்த சில கவிதைகள்...
2 posters
Page 1 of 1
ரசித்த சில கவிதைகள்...
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
(பாரதியார் கவிதைகள்)
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
(பாரதியார் கவிதைகள்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :
இதம்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத்து இழிவுற் றாலும்
விதம்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதம்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத்து இழிவுற் றாலும்
விதம்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்தர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே
(இதம் = மகிழ்ச்சி; பதம் = பதவி; திரு = செல்வம்; விதம் = வகை)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
- மீரா
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி. . .
ஓ இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று !
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி. . .
ஓ இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று !
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
ஏழைப்பெண் - தலையில்
எப்போதும் பூப்பாரம்
இவளோ தகப்பனுக்கு
எப்போதும் மனப்பாரம்
- சிற்பி
எப்போதும் பூப்பாரம்
இவளோ தகப்பனுக்கு
எப்போதும் மனப்பாரம்
- சிற்பி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
எழுத்துச் சுமைக்காரர்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?
-நா.காமராசன்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?
-நா.காமராசன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது !
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது !
-நெல்லை ஜெயந்தா
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது !
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது !
-நெல்லை ஜெயந்தா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
தீப்பெட்டியைத்
திறந்து பார்த்தால்
பிஞ்சு விரல்கள் - (ஸ்ரீகுமாரன்)
திறந்து பார்த்தால்
பிஞ்சு விரல்கள் - (ஸ்ரீகுமாரன்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
அரண்மனைத் தட்டில்
பிரியாணி - (லிங்கு)
அரண்மனைத் தட்டில்
பிரியாணி - (லிங்கு)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
அணிலே ! நகங்களை வெட்டு
பூவின் முகங்களில்
காயங்கள் - - (மித்ரா)
பூவின் முகங்களில்
காயங்கள் - - (மித்ரா)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
வேலப்பனுக்குப்
பெண் பிறந்ததாகத்
தகவல் வந்தது
ஊர்க்கவுண்டர் கேட்டார்
இழவு இன்றைக்கா?
நாளைக்கா? (கவிஞர் பால்ராஜ்)
பெண் பிறந்ததாகத்
தகவல் வந்தது
ஊர்க்கவுண்டர் கேட்டார்
இழவு இன்றைக்கா?
நாளைக்கா? (கவிஞர் பால்ராஜ்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
கல்வியில் விடி
அரசியல் தெளி
சட்டங்கள் செய்
ஊர்வலம் போ
முழக்கமிடு
பெண்ணைப் பேசப்
பெண்ணே எழு - (அறிவுமதி)
அரசியல் தெளி
சட்டங்கள் செய்
ஊர்வலம் போ
முழக்கமிடு
பெண்ணைப் பேசப்
பெண்ணே எழு - (அறிவுமதி)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரம்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
- பாரதிதாசன்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நன்மது ரம்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
- பாரதிதாசன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
மன்னும் இமயமலை எங்கள் மலையே !
மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே !
இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே !
இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே !
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே !
பார்மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே !
-பாரதியார்
மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே !
இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே !
இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே !
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே !
பார்மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே !
-பாரதியார்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
கஞ்சி குடிப்பதற்கு
வசதியில்லை
காரணங்கள் என்னவென்று
தெரியவில்லை. . .
உழைப்புதான் இவர்களின்
உயிர்மூச்சு
உற்பத்திப்பயன் முதலாளியின்
உடைமை ஆச்சு . . . .
- (கவிஞர் தமிழ்ப்பித்தன்)
வசதியில்லை
காரணங்கள் என்னவென்று
தெரியவில்லை. . .
உழைப்புதான் இவர்களின்
உயிர்மூச்சு
உற்பத்திப்பயன் முதலாளியின்
உடைமை ஆச்சு . . . .
- (கவிஞர் தமிழ்ப்பித்தன்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
இறைவா !
நீ
எங்கே இருக்கிறாய்?
இந்துவின் கோயிலிலா?
முஸ்லீமின் மசூதியிலா?
என்றேன்.
இறைவன் சொன்னான்
இந்த இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துப்
புன்னகைத்துக் கொள்ளும்
புன்னகையில் நான் இருக்கிறேன்
என்று !
- பா.விஜய்
நீ
எங்கே இருக்கிறாய்?
இந்துவின் கோயிலிலா?
முஸ்லீமின் மசூதியிலா?
என்றேன்.
இறைவன் சொன்னான்
இந்த இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துப்
புன்னகைத்துக் கொள்ளும்
புன்னகையில் நான் இருக்கிறேன்
என்று !
- பா.விஜய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
ஆயுதம் அழிந்து
மானுடம் மிஞ்சுமா?
இல்லை
மானுடம் அழிந்து
ஆயுதம் மிஞ்சுமா?
-வைரமுத்து
மானுடம் மிஞ்சுமா?
இல்லை
மானுடம் அழிந்து
ஆயுதம் மிஞ்சுமா?
-வைரமுத்து
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
மழைக்கால நரகம்
மாலைநேரச் சொர்க்கம்
ஏழைகள் உறங்கிட இயற்கையால்
ஏற்படுத்தப்பட்ட புழுதிக் கட்டில்
-காமராசன்
மாலைநேரச் சொர்க்கம்
ஏழைகள் உறங்கிட இயற்கையால்
ஏற்படுத்தப்பட்ட புழுதிக் கட்டில்
-காமராசன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
விதைக்குள் தவமிருக்கும் - உயிர்
விளக்கே . . . தரையுள்ளே
புதைத்துன்னை மூடிவிட்டார் - இனிப்
புதுவாழ்வைச் சாதிப்பாய் !
- ஈரோடு தமிழன்பன்
விளக்கே . . . தரையுள்ளே
புதைத்துன்னை மூடிவிட்டார் - இனிப்
புதுவாழ்வைச் சாதிப்பாய் !
- ஈரோடு தமிழன்பன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
தட்டுங்கள் திறக்கப்படும்
~~~~~~~~~~~~~~~
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றுதான் சொல்லப்பட்டது,
திறந்தேயாகும் என்றல்ல.
உன்செய்கை எனக்குச்
சிரிப்பையே தந்தது.
காதலென்று அதற்குப்
பெயர் சொன்னது
கவலையே தந்தது!
என்னுள்ளத்தை உணர்த்த
உனக்கோ வலிவந்தது,
வார்த்தையில்
வன்மம் வந்தது,
இரக்கமற்றவள்
இருமாப்பு, ஏமற்றுக்காரி
இப்படி ஏதேதோ.
எனினும்
இதயம் நுழைந்து
என்னுள் வர
உனக்கனுமதி இல்லை
என்பதே உண்மை.
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றது என்
இதயத்திற்கு மட்டுமல்ல!
~~~~~~~~~~~~~~~~- murugavelswaminathan
~~~~~~~~~~~~~~~
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றுதான் சொல்லப்பட்டது,
திறந்தேயாகும் என்றல்ல.
உன்செய்கை எனக்குச்
சிரிப்பையே தந்தது.
காதலென்று அதற்குப்
பெயர் சொன்னது
கவலையே தந்தது!
என்னுள்ளத்தை உணர்த்த
உனக்கோ வலிவந்தது,
வார்த்தையில்
வன்மம் வந்தது,
இரக்கமற்றவள்
இருமாப்பு, ஏமற்றுக்காரி
இப்படி ஏதேதோ.
எனினும்
இதயம் நுழைந்து
என்னுள் வர
உனக்கனுமதி இல்லை
என்பதே உண்மை.
தட்டுங்கள் திறக்கப்படும்
என்றது என்
இதயத்திற்கு மட்டுமல்ல!
~~~~~~~~~~~~~~~~- murugavelswaminathan
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
அவள் என்னை நேசித்திருக்கவில்லை
இன்னும் நிச்சயமாய்
அவள் என்னை நேசித்திருக்கவில்லை
என்றாலும்
ஞாபகப்படுத்தக்கூடிய நினைவுகளை
கருக்கொள்ளச்செய்தவள் அவள்தானே
கருக்கொள்ளச்செய்ததன் பாவக்கறைகளை
களைந்திடும் முகமாக
தேர்ச்சிபெற்ற மருத்துவிச்சியாய்
கருக்கலைப்புச்செய்ய முயல்கிறாள்
அய்யோ பாவம்!
அவள் முயற்சிகள் தோற்றுப்போய்
தினமும் திடகாத்திரமான
காதல் சிசுக்களை
பிரசவிக்கச்செய்கிறேன் நான்
பிரசவ வேளைகளில்
பெரும்பிரளயமான
என் காதல் சிசுக்களில்
அழுகுரல்,
முறையற்ற விதத்தில்
கருவுற்ற எம்மை
காலம் ஏற்றிடுமா?
என்ற ஏக்கத்தின்
பீறிட்ட புலம்பல்
இவையாவற்றையும் இரும்புமனம் கொண்டு
ஏற்க மறுக்கும் இயல்பற்ற ஓர் பெண்யியம்
காரணம் கற்பிக்கின்றது
"அவள் என்னை நேசிக்கவில்லை" என்பதை
-மீராறதீப்
இன்னும் நிச்சயமாய்
அவள் என்னை நேசித்திருக்கவில்லை
என்றாலும்
ஞாபகப்படுத்தக்கூடிய நினைவுகளை
கருக்கொள்ளச்செய்தவள் அவள்தானே
கருக்கொள்ளச்செய்ததன் பாவக்கறைகளை
களைந்திடும் முகமாக
தேர்ச்சிபெற்ற மருத்துவிச்சியாய்
கருக்கலைப்புச்செய்ய முயல்கிறாள்
அய்யோ பாவம்!
அவள் முயற்சிகள் தோற்றுப்போய்
தினமும் திடகாத்திரமான
காதல் சிசுக்களை
பிரசவிக்கச்செய்கிறேன் நான்
பிரசவ வேளைகளில்
பெரும்பிரளயமான
என் காதல் சிசுக்களில்
அழுகுரல்,
முறையற்ற விதத்தில்
கருவுற்ற எம்மை
காலம் ஏற்றிடுமா?
என்ற ஏக்கத்தின்
பீறிட்ட புலம்பல்
இவையாவற்றையும் இரும்புமனம் கொண்டு
ஏற்க மறுக்கும் இயல்பற்ற ஓர் பெண்யியம்
காரணம் கற்பிக்கின்றது
"அவள் என்னை நேசிக்கவில்லை" என்பதை
-மீராறதீப்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: ரசித்த சில கவிதைகள்...
தனது புதிய காதலனை
அறிமுகப்படுத்துகிறாள்
என்காதலி
அவர்களது ஆரம்ப சம்பாசனையில்
அதிகமாக பேசப்பட்டது
என் பெயர்தானாம்
என்னாலான காயங்களுக்கு
மருத்துவக்குறிப்புத்தந்த
அவனது இனிமையான அரவணைப்பு
பிடித்துப்போக
என் இன்னாள் காதலியின்
முன்நாள் காதலன்
ஆகிவிட்டேன் நான்.
தோற்றத்தில் என்னை விட
அழகானவன்தான்
தொழிலிலும் சற்று உயர் பதவிதான்
ஆற்றமைகொண்டு நான் ஏங்கவில்லை
நான் ஆடிய களத்திற்கு அவனை
வரவேற்கிறேன்
ஏதே அரிய ஒன்றை இழந்திட்டதாக
என்னைப்பார்த்து
ஓர் ஏளனச்சிரிப்பு அவனிடமிருந்து
என் மேல் பிரியம் வைக்க
ஏராளம் பேர் என்று பெருமைகொண்ட
புருவ உயர்த்தல் அவளிடமிருந்து
நான் விட்டதை தொட்டவன் தான்
நீயென்றும்
நான் தொடாததால் விட்டவள் தான்
நீயென்றும்
மனதுக்குள் நினைத்துக் கொண்டு
அங்க அசைவின்றி
அங்கிருந்து நகர்ந்து சென்றேன்
-மீராறதீப்
அறிமுகப்படுத்துகிறாள்
என்காதலி
அவர்களது ஆரம்ப சம்பாசனையில்
அதிகமாக பேசப்பட்டது
என் பெயர்தானாம்
என்னாலான காயங்களுக்கு
மருத்துவக்குறிப்புத்தந்த
அவனது இனிமையான அரவணைப்பு
பிடித்துப்போக
என் இன்னாள் காதலியின்
முன்நாள் காதலன்
ஆகிவிட்டேன் நான்.
தோற்றத்தில் என்னை விட
அழகானவன்தான்
தொழிலிலும் சற்று உயர் பதவிதான்
ஆற்றமைகொண்டு நான் ஏங்கவில்லை
நான் ஆடிய களத்திற்கு அவனை
வரவேற்கிறேன்
ஏதே அரிய ஒன்றை இழந்திட்டதாக
என்னைப்பார்த்து
ஓர் ஏளனச்சிரிப்பு அவனிடமிருந்து
என் மேல் பிரியம் வைக்க
ஏராளம் பேர் என்று பெருமைகொண்ட
புருவ உயர்த்தல் அவளிடமிருந்து
நான் விட்டதை தொட்டவன் தான்
நீயென்றும்
நான் தொடாததால் விட்டவள் தான்
நீயென்றும்
மனதுக்குள் நினைத்துக் கொண்டு
அங்க அசைவின்றி
அங்கிருந்து நகர்ந்து சென்றேன்
-மீராறதீப்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» ரசித்த கவிதைகள்
» ரசித்த கவிதைகள் - அமுதபாரதி
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - அமுதபாரதி
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|