தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
என் நண்பனின் கவிதைகள்
Page 1 of 1
என் நண்பனின் கவிதைகள்
அபலையின் அடுத்த அத்தியாயம்
************************************************
விலகி சென்றவனை நெஞ்சில் ஏந்தி
விட்டுச் சென்ற மகனை கையில் ஏந்தி
வாழ்ந்த நினைவுகள் மனதில் மோதிட
வாழப் போகும் நிலையை நினைத்து
வீதியில் நிற்கிறாள் மங்கை ஒருத்தி !
வழியே வந்தாள் வயதில் முதிர்ந்தவள்
விழிகள் பிதுங்க வினவினாள் காரணம் !
வழிந்த விழிகளுடன் செப்பினாள் அவளும்
வாழ்வின் நிலையை விளக்கினாள் அபலை
வருத்தம் தெறித்தது கேட்டவள் கண்ணில் !
முதியவள் தேற்றினாள் முதல் உதவியாய்
முதுமை முற்றியதால் அனுபவம் பேசியது
முழுமதியாள் முகமும் மாறியது ஆறுதலால் !
முழுகதையும் சொல்லியதால் முன்னவளின்
முற்காலம் மறந்தது தற்கால நொடிப்பொழுது !
அழைத்து சென்றாள் வயதில் தழைத்தவள்
அன்புடன் சொன்னாள் தங்கிடுக என்னுடனே
அரைவயிறு நிறையும் அன்றாடம் நமக்கும்
அடுப்படி நடக்கும் தினப்படி கிடைத்திட்டால்
அடுத்த நாளை நினையாமல் இருந்திட்டால் !
மகனையும் வளர்த்திடு மறுவாழ்வு பெற்றிட
மனதையும் ஆற்றிடு மறு உலகம் கண்டிட !
மறவாமல் சொல்லிடு விட்டவனின் கதையை
மனதிலும் ஏற்றிடு தந்தையின் பாதையை
மனதாலும் நினையாதே மாசில்லாமல் வாழ்ந்திட !
கோதிய தலையுடன் கோதையவள் எழுந்தாள்
கோமகள் அவள் அடுத்த அத்தியாயம் தொடங்க !
பழனி குமார் -சென்னை
எழுத்து .கொம்
************************************************
விலகி சென்றவனை நெஞ்சில் ஏந்தி
விட்டுச் சென்ற மகனை கையில் ஏந்தி
வாழ்ந்த நினைவுகள் மனதில் மோதிட
வாழப் போகும் நிலையை நினைத்து
வீதியில் நிற்கிறாள் மங்கை ஒருத்தி !
வழியே வந்தாள் வயதில் முதிர்ந்தவள்
விழிகள் பிதுங்க வினவினாள் காரணம் !
வழிந்த விழிகளுடன் செப்பினாள் அவளும்
வாழ்வின் நிலையை விளக்கினாள் அபலை
வருத்தம் தெறித்தது கேட்டவள் கண்ணில் !
முதியவள் தேற்றினாள் முதல் உதவியாய்
முதுமை முற்றியதால் அனுபவம் பேசியது
முழுமதியாள் முகமும் மாறியது ஆறுதலால் !
முழுகதையும் சொல்லியதால் முன்னவளின்
முற்காலம் மறந்தது தற்கால நொடிப்பொழுது !
அழைத்து சென்றாள் வயதில் தழைத்தவள்
அன்புடன் சொன்னாள் தங்கிடுக என்னுடனே
அரைவயிறு நிறையும் அன்றாடம் நமக்கும்
அடுப்படி நடக்கும் தினப்படி கிடைத்திட்டால்
அடுத்த நாளை நினையாமல் இருந்திட்டால் !
மகனையும் வளர்த்திடு மறுவாழ்வு பெற்றிட
மனதையும் ஆற்றிடு மறு உலகம் கண்டிட !
மறவாமல் சொல்லிடு விட்டவனின் கதையை
மனதிலும் ஏற்றிடு தந்தையின் பாதையை
மனதாலும் நினையாதே மாசில்லாமல் வாழ்ந்திட !
கோதிய தலையுடன் கோதையவள் எழுந்தாள்
கோமகள் அவள் அடுத்த அத்தியாயம் தொடங்க !
பழனி குமார் -சென்னை
எழுத்து .கொம்
Last edited by கே இனியவன் on Fri Sep 27, 2013 10:03 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
புரிந்தவர் சொல்லுங்கள்
***********************
பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !
சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை
வளைந்திடும் காவலரும் மாறவில்லை !
குடியால் விளையும் விபத்துகள் அதிகம்
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !
விதியை மீறுகின்றனர் விளையாட்டாய்
வீதியில் நிற்கின்றனர் பின் விழுதுகளும் !
படித்தவரே செய்கின்றனர் பாரினிலே
படித்து சொன்னாலும் கேட்பதில்லே !
தெரிந்தும் புரிகின்றனர் குற்றமதை
தெளிந்ததும் மீண்டும் செய்கின்றனர் !
அறிந்தும் செய்பவர்கள் அறிவாளிகளா
அறியாமல் செய்பவர் அறிவிலிகளா !
புரிந்தவர் சொல்லுங்கள்
புரியாத உள்ளங்களுக்கு !
பழனி குமார்-சென்னை
எழுத்து.காம்
***********************
பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !
சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை
வளைந்திடும் காவலரும் மாறவில்லை !
குடியால் விளையும் விபத்துகள் அதிகம்
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !
விதியை மீறுகின்றனர் விளையாட்டாய்
வீதியில் நிற்கின்றனர் பின் விழுதுகளும் !
படித்தவரே செய்கின்றனர் பாரினிலே
படித்து சொன்னாலும் கேட்பதில்லே !
தெரிந்தும் புரிகின்றனர் குற்றமதை
தெளிந்ததும் மீண்டும் செய்கின்றனர் !
அறிந்தும் செய்பவர்கள் அறிவாளிகளா
அறியாமல் செய்பவர் அறிவிலிகளா !
புரிந்தவர் சொல்லுங்கள்
புரியாத உள்ளங்களுக்கு !
பழனி குமார்-சென்னை
எழுத்து.காம்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
உலகமும் வாழ்த்திடும்
சிந்தையில் ஊற்றெடுக்கும்
சீர்மிகு சிந்தனைகளை
தீந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் பாமாலையாய்
வாசமிகு பூமாலையாய்
சமுதாய அக்கறையுடன்
சீர்திருத்தும் எண்ணமுடன்
பகுத்தறிவுடன் தொகுத்திட்டு
எண்ணத்தில் எழுபவைகளை
ஏர்பூட்டிய காளைகளாய்
எழுத்து தளத்தில் உழுதிட்டால்
விந்தைமிகு விளைச்சலால்
சந்தையில் விலைபோகும்
வியத்தகு பயனும்தரும்
உள்ளமும் குளிர்ந்திடும்
உலகமும் வாழ்த்திடும்
பிறந்திட்ட பயன்தன்னை
நாமும் அடைந்திடலாம் !
பழனி குமார்
சிந்தையில் ஊற்றெடுக்கும்
சீர்மிகு சிந்தனைகளை
தீந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் பாமாலையாய்
வாசமிகு பூமாலையாய்
சமுதாய அக்கறையுடன்
சீர்திருத்தும் எண்ணமுடன்
பகுத்தறிவுடன் தொகுத்திட்டு
எண்ணத்தில் எழுபவைகளை
ஏர்பூட்டிய காளைகளாய்
எழுத்து தளத்தில் உழுதிட்டால்
விந்தைமிகு விளைச்சலால்
சந்தையில் விலைபோகும்
வியத்தகு பயனும்தரும்
உள்ளமும் குளிர்ந்திடும்
உலகமும் வாழ்த்திடும்
பிறந்திட்ட பயன்தன்னை
நாமும் அடைந்திடலாம் !
பழனி குமார்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
மயான பூமி
பிறக்கும் மனிதரின் இறுதி இருப்பிடம்
இறக்கும் மாந்தரின் இலவச உறைவிடம் !
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணையுமிடம்
ஏழை பணக்காரன் ஒன்றாய் படுக்குமிடம் !
சாதிகள் அறிந்திடா உண்மை சமத்துவபுரம்
சச்சரவே எழாத அமைதியே உறங்குமிடம் !
நண்பர் பகைவர் இணைந்திடும் ஒரேஇடம்
அனைத்துக் கட்சிகள் கூட்டணி சேருமிடம் !
நிரந்தர ஓய்வுடன் நிம்மதி கிடைக்குமிடம்
பிறந்தவர் எவரும் தவறாமல் செல்லுமிடம் !
மாளிகையில் வாழ்ந்தவனும் மண்ணாக
வீதியில் வாழ்ந்தவனும் இணையாக !
வாழ்க்கை பயணத்தின் இறுதி இலக்கு
வாழ்பவர் அனைவரும் அறிந்த ஒன்று !
இன்பம் துன்பம் உணர்ந்திடா உலகமது
பாவம் புண்ணியம் அறிந்திடா பூமியது !
வயது வரம்பே இல்லாத அனுமதி அங்கு
பார்வையாளரே இல்லாத அரங்கமது !
வாழ்ந்து முடிந்தவர் சென்றிடும் புதிய பூமி
வாழும் மனிதர் வழியனுப்பும் மயான பூமி !
பழனி குமார்
பிறக்கும் மனிதரின் இறுதி இருப்பிடம்
இறக்கும் மாந்தரின் இலவச உறைவிடம் !
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணையுமிடம்
ஏழை பணக்காரன் ஒன்றாய் படுக்குமிடம் !
சாதிகள் அறிந்திடா உண்மை சமத்துவபுரம்
சச்சரவே எழாத அமைதியே உறங்குமிடம் !
நண்பர் பகைவர் இணைந்திடும் ஒரேஇடம்
அனைத்துக் கட்சிகள் கூட்டணி சேருமிடம் !
நிரந்தர ஓய்வுடன் நிம்மதி கிடைக்குமிடம்
பிறந்தவர் எவரும் தவறாமல் செல்லுமிடம் !
மாளிகையில் வாழ்ந்தவனும் மண்ணாக
வீதியில் வாழ்ந்தவனும் இணையாக !
வாழ்க்கை பயணத்தின் இறுதி இலக்கு
வாழ்பவர் அனைவரும் அறிந்த ஒன்று !
இன்பம் துன்பம் உணர்ந்திடா உலகமது
பாவம் புண்ணியம் அறிந்திடா பூமியது !
வயது வரம்பே இல்லாத அனுமதி அங்கு
பார்வையாளரே இல்லாத அரங்கமது !
வாழ்ந்து முடிந்தவர் சென்றிடும் புதிய பூமி
வாழும் மனிதர் வழியனுப்பும் மயான பூமி !
பழனி குமார்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
தமிழர் கூட்டமைப்பு வெற்றி ஈழத்தில் ...
வெற்றி செய்தி கிட்டியதால்
இன்பம் இமயத்தை எட்டியது !
சிங்களவனின் ஆட்டத்தை அடக்கிய
சிங்கத் தமிழனின் கொண்டாட்டம் !
இடைக்கால வெற்றிதான் எனினும்
இறுதிக்கால துவக்கமே ராஜபக்சேவிற்கு
துள்ளிடும் தமிழனின் நிலைஅங்கு
துயர்களை மறந்திடும் நிகழ்வானது !
மகிழும் எம்இனத்தவரின் மனமும்
நிலைத்திட விழைகிறேன் அங்கே !
முடிவல்ல இதுவேஎன அறிவோம்
முடிவின் தொடக்கம் ஆரம்பமே !
தலைமை ஏற்பவரும் மாறாது தமிழன்
நிலையை மாற்ற வேண்டுகிறேன் !
வேண்டியதும் மாகாணத் தேர்தலைதானே
வேங்கையவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
உரிமைதானே கேட்டான் தமிழன் அன்றும்
உயிர்களை பறித்தானே வெறிநாய் வென்றிட !
விவேகம் வேண்டும் விக்னேஸ்வரருக்கு
வீரமும் விளைந்திட வேண்டும் அவருக்கு !
சிங்களவனின் கைப்பாவையாக ஆகாமல்
சீறிடும் தமிழனாய் ஆண்டிட வேண்டும் !
ஈழத் தமிழனின் இரண்டாம் அத்தியாயம்
வேழ பலத்துடன் துவங்கிட வேண்டும் !
தமிழனின் கொடி நிலையாய் பறந்திட
தமிழர்கள் நாங்கள் வேண்டுகிறோம் !
வாழ்த்துக்கள் ஈழத்தமிழர்க்கு
தொடங்கிடுக புது வாழ்வை !
நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !
பழனி குமார்
வெற்றி செய்தி கிட்டியதால்
இன்பம் இமயத்தை எட்டியது !
சிங்களவனின் ஆட்டத்தை அடக்கிய
சிங்கத் தமிழனின் கொண்டாட்டம் !
இடைக்கால வெற்றிதான் எனினும்
இறுதிக்கால துவக்கமே ராஜபக்சேவிற்கு
துள்ளிடும் தமிழனின் நிலைஅங்கு
துயர்களை மறந்திடும் நிகழ்வானது !
மகிழும் எம்இனத்தவரின் மனமும்
நிலைத்திட விழைகிறேன் அங்கே !
முடிவல்ல இதுவேஎன அறிவோம்
முடிவின் தொடக்கம் ஆரம்பமே !
தலைமை ஏற்பவரும் மாறாது தமிழன்
நிலையை மாற்ற வேண்டுகிறேன் !
வேண்டியதும் மாகாணத் தேர்தலைதானே
வேங்கையவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் !
உரிமைதானே கேட்டான் தமிழன் அன்றும்
உயிர்களை பறித்தானே வெறிநாய் வென்றிட !
விவேகம் வேண்டும் விக்னேஸ்வரருக்கு
வீரமும் விளைந்திட வேண்டும் அவருக்கு !
சிங்களவனின் கைப்பாவையாக ஆகாமல்
சீறிடும் தமிழனாய் ஆண்டிட வேண்டும் !
ஈழத் தமிழனின் இரண்டாம் அத்தியாயம்
வேழ பலத்துடன் துவங்கிட வேண்டும் !
தமிழனின் கொடி நிலையாய் பறந்திட
தமிழர்கள் நாங்கள் வேண்டுகிறோம் !
வாழ்த்துக்கள் ஈழத்தமிழர்க்கு
தொடங்கிடுக புது வாழ்வை !
நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !
பழனி குமார்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
துப்பாதீர் பொது இடங்களில்
பரிணாம வளர்ச்சி பல்துறையில் இன்று
பரிதாப நிலையோ பலஇடங்கள் இன்றும் !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு இன்று
வியத்தகு அஞ்ஞானம் வீதிகளில் இன்றும் !
சுற்றிலும் நம்மை சுத்தமாய் வைத்திட
சுயமாக நினைப்பவர் பூமியில் உள்ளோர்
அதிகமாக இல்லை அகிலத்தில் என்பதால்
அறிவுறுத்த காரணம் கவிதையாய் இங்கு !
காற்றிலும் தூசு அருந்தும் நீரிலும் மாசு
கடலிலும் மாசு கங்கையிலும் தூசு !
தூய்மை இடத்திலும் நாக்கை சுழற்றி
துப்பிடும் எச்சிலால் பரவிடும் மாசு !
நினைப்பதில்லை விளையும் தீமையை
உரைப்பதில்லை உலவிடும் சிலருக்கு !
வெள்ளை சுவற்றையும் மாற்றிடுவர்
வண்ண மயமாக்குவர் மதியற்றோர் !
திரும்பிப் பார்க்காமலே துப்பிடுவர்
அருகில் வருபவன் அழுக்காவான் !
அடுத்தவர் பற்றி கவலையில்லை
அசுத்தம் செய்வது கைவந்தகலை !
பொது இடங்களில் துப்பும் அறிவிலிகள்
ஆறறிவு இல்லாத ஐந்தாம் படைகள் !
சொல்லியும் திருந்திடா திருந்தாதவர்
எல்லாம் இருந்தும் இல்லாத இதயங்கள் !
பழனி குமார்
பரிணாம வளர்ச்சி பல்துறையில் இன்று
பரிதாப நிலையோ பலஇடங்கள் இன்றும் !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு இன்று
வியத்தகு அஞ்ஞானம் வீதிகளில் இன்றும் !
சுற்றிலும் நம்மை சுத்தமாய் வைத்திட
சுயமாக நினைப்பவர் பூமியில் உள்ளோர்
அதிகமாக இல்லை அகிலத்தில் என்பதால்
அறிவுறுத்த காரணம் கவிதையாய் இங்கு !
காற்றிலும் தூசு அருந்தும் நீரிலும் மாசு
கடலிலும் மாசு கங்கையிலும் தூசு !
தூய்மை இடத்திலும் நாக்கை சுழற்றி
துப்பிடும் எச்சிலால் பரவிடும் மாசு !
நினைப்பதில்லை விளையும் தீமையை
உரைப்பதில்லை உலவிடும் சிலருக்கு !
வெள்ளை சுவற்றையும் மாற்றிடுவர்
வண்ண மயமாக்குவர் மதியற்றோர் !
திரும்பிப் பார்க்காமலே துப்பிடுவர்
அருகில் வருபவன் அழுக்காவான் !
அடுத்தவர் பற்றி கவலையில்லை
அசுத்தம் செய்வது கைவந்தகலை !
பொது இடங்களில் துப்பும் அறிவிலிகள்
ஆறறிவு இல்லாத ஐந்தாம் படைகள் !
சொல்லியும் திருந்திடா திருந்தாதவர்
எல்லாம் இருந்தும் இல்லாத இதயங்கள் !
பழனி குமார்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
சங்கமிக்கும் வண்ணங்கள்
தங்க மணற் பரப்பும்
நீல கடல் விரிப்பும்
கைக் கோர்க்கும்
அருமை காட்சியிது !
விழிகளுக்கு விருந்து
விந்தையான மருந்து
களைத்த இதயங்களுக்கு
களிப்பூட்டும் காட்சியிது !
சரியான நிறங்கள்
சங்கமிக்கும் சான்று
பூமியில் நிகழ்ந்திடும்
இயற்கை காட்சியிது !
பாலையும் சோலையும்
பார்வையில் இணையும்
அரிதான நிலைபோல
அழகான காட்சியிது !
பழனி குமார்
தங்க மணற் பரப்பும்
நீல கடல் விரிப்பும்
கைக் கோர்க்கும்
அருமை காட்சியிது !
விழிகளுக்கு விருந்து
விந்தையான மருந்து
களைத்த இதயங்களுக்கு
களிப்பூட்டும் காட்சியிது !
சரியான நிறங்கள்
சங்கமிக்கும் சான்று
பூமியில் நிகழ்ந்திடும்
இயற்கை காட்சியிது !
பாலையும் சோலையும்
பார்வையில் இணையும்
அரிதான நிலைபோல
அழகான காட்சியிது !
பழனி குமார்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: என் நண்பனின் கவிதைகள்
இல்லறத்தின் நல்லறம்
இருமனங்கள் இணைந்து ஒருமனமாய்
இதயங்கள் இணைவது திருமணமாய் !
கரம்பிடிக்கும் மனைவியை காப்பதும்
கரம்பற்றிய கணவனுடன் வாழ்வதும்
உள்ளங்களில் எழுதிடும் ஒப்பந்தம் !
குடும்பத்தின் சுமைகளை சுமப்பதும்
சுமைகளை சுகமாய் மாற்றுவதும்
இணைந்த இதயங்களின் கையிலே !
நம்பி வந்தவளை சுமப்பதும் சுகமே
சொல்லாமல் விளங்குவதும் இங்கே !
தான் நடந்தாலும் பரவாயில்லை என
தாரம் அமர்ந்த தள்ளு வண்டியினை
பாரம் பார்க்காமல் பால் மனதுடனே
விரைந்து செல்லும் விவேகி இவரே
திருமணத்தால் விளைந்த நன்மகன் !
வாழ்க இவர்களின் இல்லறம் என்றும்
வளர்க இதயத்தின் நல்லறம் என்றும் !
பழனி குமார்
இருமனங்கள் இணைந்து ஒருமனமாய்
இதயங்கள் இணைவது திருமணமாய் !
கரம்பிடிக்கும் மனைவியை காப்பதும்
கரம்பற்றிய கணவனுடன் வாழ்வதும்
உள்ளங்களில் எழுதிடும் ஒப்பந்தம் !
குடும்பத்தின் சுமைகளை சுமப்பதும்
சுமைகளை சுகமாய் மாற்றுவதும்
இணைந்த இதயங்களின் கையிலே !
நம்பி வந்தவளை சுமப்பதும் சுகமே
சொல்லாமல் விளங்குவதும் இங்கே !
தான் நடந்தாலும் பரவாயில்லை என
தாரம் அமர்ந்த தள்ளு வண்டியினை
பாரம் பார்க்காமல் பால் மனதுடனே
விரைந்து செல்லும் விவேகி இவரே
திருமணத்தால் விளைந்த நன்மகன் !
வாழ்க இவர்களின் இல்லறம் என்றும்
வளர்க இதயத்தின் நல்லறம் என்றும் !
பழனி குமார்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» நண்பனின் அறிவுரை
» நண்பனின் கவிதை
» என் நண்பனின் தமிழ் தோட்டம் செழித்து வளர நல் வாழ்த்துக்களும் அறிமுகமும்
» சுனாமி பேரலையில் சிக்கி காயமடைந்த நண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய் (வீடியோ இணைப்பு)
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» நண்பனின் கவிதை
» என் நண்பனின் தமிழ் தோட்டம் செழித்து வளர நல் வாழ்த்துக்களும் அறிமுகமும்
» சுனாமி பேரலையில் சிக்கி காயமடைந்த நண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய் (வீடியோ இணைப்பு)
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|