தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மயிலாக ஆசை...! - சிறுவர் கதை

Go down

மயிலாக ஆசை...! - சிறுவர் கதை Empty மயிலாக ஆசை...! - சிறுவர் கதை

Post by அ.இராமநாதன் Thu May 29, 2014 7:48 am

ஆற்றங்கரையின் அருகே அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. ஆல மரத்தில் ஏராளமான காகங்கள் கூடுகட்டி வசித்து வந்தன. ஒருநாள் அந்த மரத்தின் பக்கமாக மயில் ஒன்று பறந்து வந்தது. அந்த மயில் ஆலமரக் கிளையில் அமர்ந்ததும் காகங்கள் எல்லாம் மயிலை அதிசயமாகப் பார்த்தன. மயில் தோகையுடன் அழகாக இருக்கவே, தங்களுக்கும் தோகைகள் எதுவும் இல்லையே என்று காகங்கள் வருத்தமடைந்தன.

உடனே அவைகள் அந்த மயிலை சூழ்ந்து கொண்டன. ""மயிலே! உன்னிடம் அழகான தோகை இருக்கிறதே! உன்னைப்போன்று எங்களுக்கும் தோகை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கும் தோகை கிடைக்க வேண்டுமென்றால் நாங்கள் என்னச் செய்ய வேண்டும்?'' என்று காகங்கள் கேட்டன.

மயிலோ அந்தக் காகங்களை எல்லாம் முட்டாள்தனமாக்க வேண்டும் என்று மனதுள் நினைத்தது.

""காகங்களே நீங்கள் என்னிடம் விரும்பிக் கேட்கிற காரணத்தால், நான் இந்த உண்மையை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். காகங்களே! நான் மலை உச்சியில் நின்ற வேப்பமரத்தில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு இந்தத் தோகையில்லை.
அச்சமயம் மலையிடுக்கில் என்னைப் போன்ற மயில் ஒன்று வசித்து வந்தது. ஆனால், அதற்கு தோகையிருந்தது.

""நான் உடனே அந்த மயிலிடம் சென்று, "நண்பனே! உனக்கு மட்டும் அழகிய தோகையிருக்கிறதே... எனக்கு அந்தத் தோகையில்லையே. அது எதனால்?' என்று கேட்டேன்.

உடனே அந்த மயில், "நீ எனக்கு மூன்று வேளையும் நேரம் தவறாமல் இரையினைச் சேகரித்துக் கொண்டு வந்தால் உனக்கு தோகை வளர்ந்து விடும்' என்றது.

""உடனே நானும் தினமும் என் பசியை மறந்து அந்த மயிலுக்கு மூன்று வேளையும் இரை தேடிக் கொடுத்தேன். இப்படியே ஒரு மாதம் முடிவடைந்தன. அதன் பிறகு ஒருநாள் இரவு நேரம் நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். அதிகாலை நேரத்தில் நான் கண் விழித்துப் பார்த்தபோது எனக்குப் பெரியத் தோகை வளர்ந்திருப்பதைக் கண்டேன். உடனே மகிழ்ச்சியில் ஆடிப்பாடினேன்!'' என்றது மயில்.

உடனே ஒரு காகம், ""மயிலே! நாங்களும் உனக்கு மூன்று வேளையும் இரை தேடித் தந்தால், ஒரு மாதத்திற்குப் பின்னர் எங்களுக்கும் தோகை வளர்ந்து விடுமல்லவா?'' என்று கேட்டது.

""அதிலென்ன சந்தேகம். உடனேயே தோகை முளைத்து விடும்!'' என்றது மயில். அதனைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தன.

மயிலின் பேச்சைக் கேட்டதும் காகங்களும் மகிழ்ச்சியோடு இரை தேடச் சென்றன. இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலமாக காகங்கள் எல்லாம் தங்களின் பசியையே மறந்து, மயிலுக்கு மூன்று வேளையும் உணவுத் தேடிக் கொடுப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தன. இதன் காரணமாக சில காகங்கள் சோர்வடைந்தன. இன்னும் சில காகங்கள் மயங்கி விழுந்தன.

ஆனால், மயிலோ அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. "நாம் இந்தக் காகங்களை ஏமாற்றி ஒரு மாத காலம் உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்தபடி மூன்று வேளையும் உணவைத் தேடிக் கொண்டோம். இந்த முட்டாள் காகங்கள் நம் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டன!' என்று மனதுக்குள் நினைத்தபடி மகிழ்ச்சியுடன் இருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வேடன் ஒருவன் வந்தான். அவன் மரத்தில் நின்று கொண்டிருக்கும் மயிலைப் பார்த்தான். நெடு நாட்களாகவே மயில் தோகை கிடைக்க வேண்டி முயற்சித்து வந்தான் அந்த வேடன். இப்போது தோகைகளுடன் கூடிய மயிலைப் பார்த்ததும் அதன் மீது அம்பினை எய்தான். அம்பு பட்ட மயிலும் பொத்தென்று தரையில் விழுந்தது.

தரையில் விழுந்த மயிலை வேடன் தூக்கிச் சென்றான். உடனே மயில், "காகங்களுக்கு நாம் செய்த துரோகத்திற்குத்தான், வேடனால் நமக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது' என்று மனதுள் நினைத்துக் கொண்டது.
***

[You must be registered and logged in to see this image.]தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum