தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயர் இரத்த அழுத்தமும் சீறுநீரக வியாதியும்-அறிமுகம் Blood pressure and Kidney - Introduction

Go down

உயர் இரத்த அழுத்தமும் சீறுநீரக வியாதியும்-அறிமுகம் Blood pressure and Kidney - Introduction  Empty உயர் இரத்த அழுத்தமும் சீறுநீரக வியாதியும்-அறிமுகம் Blood pressure and Kidney - Introduction

Post by RAJABTHEEN Wed Dec 22, 2010 2:56 am

சிறுநீரக வியாதியும் உயர் இரத்த அழுத்தமும்

நாம் அனைவரும் அவரவரது இரத்த அழுத்தத்தின் அளவைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம் முக்கியமான உறுப்புகளான இதயம், மூளை, சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றிற்கு செல்லும் இரத்தக் குழாய்களைப் பாதித்தால் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். ஆனால் தற்போது உயர் அழுத்தத்தை எளிதில் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் உள்ளன.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறுநீரக வியாதி உள்ளவர்கள் அனைவரும் தங்கள் இரத்த அழுத்தத்தையும் பரிசோதிக்க வேண்டும். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.


1.பலவகை சிறுநீரக பாதிப்புகளில் உயர் இரத்த அழுத்தம் வரலாம். சிறுநீரக வியாதி உள்ளவர்களுக்கு 70 – 100% வரை உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
2. உயர் இரத்த அழுத்தம் பாதித்த சிறுநீரகங்களை மேலும் பாதித்து வேகமாக செயலிழக்கச் செய்யும்.
3. சிறுநீரக செயலிழப்பும் உயர் இரத்த அழுத்தமும் உள்ளவர்கள் மாரடைப்பு, மூளை இரத்தக்குழாய் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளவர்கள்.




உயர் இரத்த அழுத்தத்தால் என்ன ஆபத்து ?

உயர் இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தால் ஒழிய உடலிற்கு எந்த தொந்திரவையும் தருவதில்லை. இருப்பதே தெரியாது. ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாரடைப்பு, மூளை இரத்த குழாய் பாதிப்பு (வாத நோய்), சிறுநீரக செயலிழப்பு (கிட்னி ஃபெயிலியர்) போன்ற இரத்தக்குழாய்களைப் பாதிக்கும் நோய்களுக்கு பல மடங்கு அதிகமாக உள்ளாகின்றனர். அதிலும் இந்தியர்களுக்கு மற்ற இனத்தவர்களை விட அதிக வாயப்பு உள்ளது.

உயர் இரத்த அழுத்தத்தின் காரணம் என்ன?

90% உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு காரணம் ஏதும் தெரிவதில்லை. மீதமுள்ள10% பேரில் பெருபாலானவர்களுக்கு சிறுநீரகங்களில் ஏதேனும் பாதிப்போ அல்லது சிறுநீரகங்களில் தமனிகளில் சுருக்கமோ (அடைப்போ) இருக்க வாய்ப்புள்ளது. சுமார் 1% பேருக்கு அபூர்வமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவைகளும் சிறுநீரகங்கள் மூலமே உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குகின்றன. சிறு வயதிலேயே (40 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் வந்தவர்கள், மிக அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கட்டுப்படுத்த மிகவும் சிரமமாக உள்ள உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சிறுநீரக பாதிப்பு மூல காரணமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அனைவரும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா ?

சில எளிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. லேசான உயர இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த மாற்றங்களே கூட போதுமானதாக இருக்கலாம் மேலும் இந்த மாற்றங்கள் இரத்த அழுத்த மருந்துகளின் எண்ணிக்கையையும், அளவையும் குறைக்க உதவும்.

1. உணவில் உப்பு- நம் பாரம்பரிய உணவுகளில் அவ்வளவு உப்பு கிடையாது. ஆனால் மாறி வரும் கலாட்சார சூழலில் நாம், முக்கியமாக இளைய தலைமுறையினர், அதிக அளவு மேற்கத்திய உணவுவகைகளை எடுத்துக்கொள்கிறோம். உப்பு அதிகமுள்ள துரித உணவுகளை (fast food) பீட்சா போன்ற இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் நம்மையறியாமலே அதிக உப்பு உடலிற்குள் சென்று விடுகின்றன. இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் உணவை சமைக்கும் போதே உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

2. அதிக எடை – உடல் குண்டாக இருப்பவர்கள் எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தமும் குறையும்.

3. உடற்பயிற்சி – தினமும் அரை மணி நேரப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இரத்த அழுத்தம் குறைவது மட்டுமின்றி உடல் பல வகைகளில் ஆரோக்யம் பெறும்.

4. புகையிலையை தவிர்த்தல் - புகை பிடிப்பது மட்டுமல்லாமல், முக்குப் பொடி, பான்பராக் போன்ற பல வழிகளிலும் புகையிலையை உபயோகித்தல் நம் இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் எலாஸ்டிக் தன்மையை பாழ்படுத்தி விடுகின்றன. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது மட்டுமின்றி, இரத்தக் குழாய்கள் அடைத்து கொள்வதால் மாரமைப்பு, வாத நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைத்தல், அதிகக் கொழுப்பைக் குறைத்தல், உடல் எடையைக் குறைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், புகை பிடித்தலைக் கைவிடுதல் ஆகிய ஆரோக்கியமான மாற்றங்கள் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி அதனால் வரும் சிக்கல்களையும் தவிர்க்கலாம்.

எனக்கு மாத்திரைகள் தேவைப்பட்டால்

உங்கள் உயர் இரத்த அழுத்தம் கடுமையானதாக இருந்தால் மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டி வரும். கடந்த 20 வருடங்களில் உயர் இரத்த அழுத்த மருத்துவத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது 8 குழுமங்களைச் சேர்ந்த மருத்துகள் கிடைக்கின்றன இன்னும் பல நவீன வகை மருந்துகளும் வரப்போகின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது மற்ற பாதிப்புகள், வயது ஆகியவற்றைக் கணித்து இரத்த அழுத்த மருந்துகளை அவரது மருத்துவர் முடிவு செய்வார்.

இரத்த அழுத்தம் எவ்வளவிற்கு இருக்க வேண்டும்.

தற்போது உள்ள கோட்பாடுகளின்படி இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்றே சொல்லபடுகின்றது. அதிலும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். இதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட மருந்துகள் தேவைப்படலாம். சிறுநீரக செயலிழப்பு உள்ள சிலருக்கு 4 - 6 மருந்துகள் கூட தேவைப்படலாம். சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களின் இரத்த அழுத்தம் 130 / 80க்குள் இருக்க வேண்டும். அதிலும் அதிக புரத ஒழுக்கு (protein in urine) உள்ளவர்களுக்கு 120 / 75க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஒருவரின் வயது, மருந்துகள் ஒத்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சில சமயம் இவை தளர்த்தப்படலாம்.

இரத்த அழுத்த மருந்துகள் ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?

தற்போதுள்ள பல வகை நவீன இரத்த அழுத்த மருந்துகள் பாதுகாப்பானவை. எந்த ஒரு தனி நபருக்கும் பொருந்தக் கூடிய வகையில் இரத்த அழுத்த மருந்துகளை தேர்ந்தெடுப்பது இப்போது எளிது. சில சமயம் மருந்துகளால் வரும் சிறிய தொந்திரவுகளை அதனால் கிடைக்கும் பெரிய நன்மைகளை கருதி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது தான் நல்லது. எதுவானாலும் மருந்துகளால் ஏதேனும் தொந்திரவு உள்ளதாக தோன்றினால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.

இரத்த அழுத்த மருந்துகளை பின்னாளில் நிறுத்த முடியுமா?

பொதுவாக இரத்த மருந்துகள் ஆயுட்காலம் வரை எடுக்க வேண்டியவை. ஆனால் காலாப்போக்கில் பல விஷயங்கள் பின்னாளில் மாறலாம். உங்கள் மருந்துகளைக் குறைக்கவோ, கூட்டவோ அல்லது மாற்றவோ வேண்டி வரலாம்.

சிறுநீரக செயலிழப்பு உள்ள சிலருக்கு அது படிப்படியே அதிகரித்து கடைசியில் டயாலிசிஸ் சிகிச்கை தொடங்க வேண்டி வரலாம். அப்போது சிலருக்கு இரத்த அழுத்தம் நன்கு குறைத்து இரத்த அழுத்த மருந்துகளையே நிறுத்த வேண்டி வருவதுண்டு. ஆனால் இந்த டயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்க்கவே நாம் இவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதை நினைவில் வைத்திருந்து ஆரம்பத்திலிருந்தே உயர் இரத்த




RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum