தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
உடல்பருமன் ஒரு நோயா?
2 posters
Page 1 of 1
உடல்பருமன் ஒரு நோயா?
பொதுவாக உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல்
எடையேயாகும். நாம் உண்ணும் உணவில் கலோரித்திறன் அதிகமாக இருக்கும். அந்த
கலோரிகள் முழுமையாகப் பயன்படுத்தாமல் அப்படியே உடலில் தங்கி விடுவதால் உடல்
எடை அதிகரிக்கிறது.
ஒருவர் உண்ணும் உணவில் 2500 கலோரிகள் இருக்கிறது. இவற்றில் 2000
கலோரிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது நடத்தல், ஓடுதல், போன்ற
உடல் உழைப்புகளால் 2000 கலோரிகள் மட்டுமே செலவழிக்கப்படுகின்றன. மீதமுள்ள
500 கலோரிகள் அப்படியே உடலில் தங்கிவிடுகிறது. இவ்வாறு தினமும் கலோரிகள்
சேர்வதால் அவை கொழுப்புப் பொருட்களாக மாற்றப்பட்டு வயிற்றின் அடிப்பகுதி,
பக்கவாட்டுப்பகுதி, தொடையின் இரு புறங்களில் சேமிக்கப்படுகிறது. இதனால்
உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
இந்த உடல் பருமனால் ஆண், பெண் இருபாலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு
ஆளாகின்றனர். சிறு குழந்தை முதல் முதியவர் வரை இந்த அவஸ்தைக்கு ஆளாக
நேரிடுகிறது.
சிலர் உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடக்கிறார்கள். அல்லது பசிக்கேற்ற
உணவு சாப்பிட மறுக்கிறார்கள். மேலும் ஒரு சிலர் இவர்களின் உடல் எடையை
காசாக்க பல பகட்டு விளம்பரங்களை செய்து உடல் எடையைக் குறைக்க கருவிகள்,
மாத்திரைகள் என விற்பனை செய்கின்றனர். முப்பதே நாளில் உடல் எடையைக்
குறைக்கிறோம் என்று விளம்பரம் செய்கின்றனர். இவர்களை நாடிச் சென்றவர்கள்
அனைவருக்கும் உடல் எடை குறைந்திருக்கிறதா என்று பார்த்தோமானால் இல்லை,
பணத்தை இழப்பதுதான் மிச்சம்.
உடல் பருமன் என்பது திடீரென்று உண்டாவது அல்ல, பல மாதங்களாக, பல
வருடங்களாக உடலில் சேர்ந்த கொழுப்பு பொருட்கள் எடையை அதிகரிக்கச்
செய்கின்றன. இதை எப்படி 30 நாட்களில் குறைக்க முடியும்.
பொதுவாக உடல் பருமனை வெறும் மருந்துகள் கொடுத்துக் குறைக்க இயலாது.
மருந்தோடு சேர்த்து உணவுக் கட்டுப்பாடு, உழைப்பு, பயிற்சி ஆகியவற்றை
சேர்த்துச் செய்ய வேண்டும். அதற்காக ஒரேயடியாக 10 கிலோ குறையும் என்று
எதிர்பாக்க முடியாது.
பொதுவாக உடல் பருமன் இரண்டு வகைப்படுகிறது. ஆண்களைச் சார்ந்த உடல்
பருமன் அன்ராஸ்ட் என்றும் பெண்களைச் சார்ந்த உடல் பருமன் கைனாய்ட் எனவும்
கூறப்படுகிறது.
ஆண்களுக்கு வயிற்றின் மேல் பகுதியில் கொழுப்புப் பொருட்கள்
சேமிக்கப்பட்டு, வயிறு பருத்துக் காணப்படுகிறது. பெண்களுக்கு இடுப்பு,
தொடை, கால், வயிறு பகுதிகளில் சேமிக்கப்படுகிறது.
உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?
* அதிக உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை.
* இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற
உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத்
தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள்
உள்ளனர்.
* உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
* அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை
சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல்
எடைக்கு முக்கியக் காரணம்.
* சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.
* நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
* ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
* அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.
* உடம்பில் அதிக வியர்வை காணுதல்.
* நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.
* அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:
* இரத்த அழுத்த நோய்
* இருதய படபடப்பு
* கல்லீரல் பாதிப்பு
* பித்தக் குறையாடு
* நீரிழிவு நோய்
* மூட்டு வலி
* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
* பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.
* மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:
* உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.
* அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.
* பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.
* எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.
* மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
* பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.
* மது பானங்கள் சாப்பிடக் கூடாது.
* குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
* பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.
* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.
* யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.
* உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமன் குறைய மருத்துவம்:
சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல்
பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.
அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,
உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ
கொத்தமல்லி விதை - 1\4 கிலோ
சீரகம் - 25 கிராம்
இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு
தினமும் அரை லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க
வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன்
குறையும்.
அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள்
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை
சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உடல்பருமன் ஒரு நோயா?
மிகவும் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|