தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தத்துபித்துவம் ! நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

தத்துபித்துவம் ! நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty தத்துபித்துவம் ! நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Tue Oct 28, 2014 11:45 pm

தத்துபித்துவம் !
நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

விழிகள் பதிப்பகம், 8/எம்/39, 7ஆம் குறுக்குத் தெரு, !திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை –
600 041.  94426 51520  விலை : ரூ. 60
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
      ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் அண்ணன் திரு. தங்கவேல் அவர்கள் சகலகலா வல்லவர்.குடும்பத்திற்காக திருமணம் புரியாமல் வாழ்ந்தவர்.  அவரது மரணம் தந்த வலியின் காரணமாக வடித்த நூல் இது.  தத்துபித்துவம் நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  இதன் விளக்கம், அவரது மொழியிலேயே காண்போம்.

      ‘’இந்நூலில் தத்துவம் போலச் சில உண்மைகள் உளவாகலாம்.  அவ்வாறே பித்துற்ற தன்மையில் பிறந்த காரணத்தால் சில பித்துவங்கள் போல உளவாகலாம்.  எனவே தத்துபித்துவம் எனப் பெயரிட்டுள்ளேன்”.

      ஒவ்வொரு கவிதையும் நான்கு வரிகளில் வெண்பா போல இருந்தாலும் வெண்பா இல்லை. ஹைக்கூவும் இல்லை.  வாழ்க்கை தத்துவங்கள் சொல்லும் புதுப்பா இது.  அரிய, பெரிய கருத்துக்களை நான்கே வரிகளில் உணர்த்திடும் உன்னத நூல்.  விழிகள் பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பாராட்டுக்கள்.

      புலம் பெயர்ந்த, வலி மிகுந்த வாழ்க்கையிலும், தமிழை நேசிக்கும், வாசிக்கும், சுவாசிக்கும் புலம் பெயர்ந்த தமிழன் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரையில் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை நேசிப்பை, 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அன்பை குறிப்பிட்டுள்ளார்.

      நம்மில் பலர் கடந்த கால கசப்புகளை, கவலைகளை எண்ணி எண்ணி நிகழ்காலத்தை வீணடித்து வருகிறோம்.  அவர்களுக்கான கவிதை ஒன்று மிக நன்று.

      புதன்கிழமை மனத்திற்குள்
புதன் மட்டும் நிறைந்திருக்கும்
      செவ்வாயின் நினைவு வந்து
சிக்கல்கள் நிரப்பாது.
      இயந்திரமயமான உலகில் சில மனிதர்கள் இயந்திரமாகவே மாறிவிட்டனர்.  அன்பு செலுத்த நேரமின்றி, இயற்கையை ரசித்திட நேரமின்றி, ஓடி ஓடி பணம் சேர்த்து, மனச்சோர்வு அடைந்து, மருத்துவரை நாடி வருகின்றனர்.  அவர்களுக்கான கவிதை இதோ!

      பூ நுகர மறந்தவனே
புலம்புவதால் என்ன பயன்?
      ஏன் வந்த பகல் தொலைத்தாய்?
இருள் அழகை தொடர்கின்றாய்?

      சிலர் என்னிடம் அதில் குறை, இதில் குறை என்று குறைபட்டுக் கொண்டே தாழ்வு மனப்பான்மையுடன், வாழ்க்கையை ரசித்து வாழாமல் புலம்பி வாழ்கின்றனர்.  அவர்களுக்கான அறிவுரை கூறும் கவிதை.

      குறையெல்லாம் குறையல்ல
குறைவில் தான் வாழ்வியக்கம்
      நிறை வளரும் பாத்திகளைக்
குறைவென்றா நினைக்கின்றாய்?

      தன்னை விட வலியவர்களிடம் யாரும் வீரம் காட்டுவதில்லை.  எளியவர்களிடமே வீரம் காட்டி வீர வசனம் பேசுவார்கள்.  மனிதாபிமானம் வேண்டும் என்று அறிவுறுத்தும் கவிதை.
      வலியுடன் வாழ்வென்றால்
வாழ்ந்திடுவாய் வாழ்த்திடுவோம்
      மெலிந்தவர்கள் தலை மேலே
வெற்றித் தேர் ஓட்டாதே!

      சிலர், நான் அவர் போல ஆக வேண்டும், இவர் போல ஆக வேண்டும் என்றே முனைந்து, தனது சுயம் இழந்து, வாடுவதைக் காண்கின்றோம்.  அவர்களுக்கான கவிதை.

      எவரைப் போல் வாழ்வதென
ஏனென்ணிக் கலங்குகிறாய்?
      அவரவரும் அவரவராய்
வாழ்ந்தாலே அதுபோதும்.

      இயல்பாக இரு, நீ நீயாக இரு என்று வாழ்வியல் கருத்துக்களை, சித்தர்கள் போல சிந்தித்து கவிதை வடித்துள்ளார் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.  எண்பது வயதைத் தொட்டு விட்ட போதும் ஓய்வின்றி படைத்து வருகிறார்.  தமிழ் கூறும் நல்உலகிற்கு இலக்கியத்தை ஈந்து வருகிறார் ஓய்வறியா படைப்பாளி.

      கேள்விகள் கேட்டு, விடை சிந்திக்க வைத்து, நுட்பம் உணர்த்துவது ஒரு வகை.  அவ்வகையிலான கவிதைகள் நூலில் சில உள்ளன.  அவற்றில் பதச்சோறாக ஒன்று.

      நதியுறக்கம் மந்தமென்றால்
நாம் சாட்டை எடுப்போமா?
      விதையுறக்கம் கலைப்பதற்கு
வெந்நீரை விடுவோமா?
      ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால், அக்குழந்தையிடம் சில பெற்றோர்கள் கடுமையாக நடந்து கொண்டு தண்டிப்பதைக் காண்கிறோம்.  அவர்களுக்கான வரி தான் இது, ‘விதையுறக்கம் கலைப்பதற்கு வெந்நீரை விடுவோமா?’ சிலர் கடுஞ்சொல் என்ற வெந்நீரை குழந்தை என்ற விதையின் மீது ஊற்றி விடுகின்றனர்.  பாராட்டு என்ற நந்நீரே விதையினை வளர்க்கும் என்பதை கடிந்திடும் பெற்றோர்கள் உணர் வேண்டும்.

      சிறு துளி பெரு வெள்ளம் என்பதை அறிந்து இருக்கிறோம்.  ஆனால் இவர் கடைசித் துளியே குடம்பால் ஆகும் என்று வித்தியாசமாக உணர்த்துகின்றார், பாருங்கள்.  குடத்துப்பாலையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.

      ஒரு குடம் பால் நிரம்ப இன்னும்
/ ஒரு துளி தான் தேவையெனில்
      ஒரு துளியாய்க் காத்திருப்பாய்
/ ஒரு குடம் பால் நீ ஆவாய்!

      வாழ்க்கையை செம்மையாக வாழ் ;  வாழ்வில் பிழை நேர்ந்தால் திருத்திக் கொள் ;  எல்லாவற்றிற்கும் நீயே பொறுப்பு ; தீதும் நன்றும் பிறர் தர வாரா ;  உனக்கு நீயே நீதிபதி ; வாழ்வாங்கு வாழ நீ பழகு இப்படி பல கருத்துக்களை வலியுறுத்தும் வண்ணம் குறியீடாக சொற்கள் உள்ளன.

      இருப்பதுவும் இயங்குவதும்
மட்டுமில்லை! இவையிரண்டில்
      உருவாகும் பிழையும் நீ
உருவாக்கும் திருத்தமும் நீ

      தன்னலமின்றி பொது நலனுக்காக வாழ்ந்தவர்கள், மரணத்திற்குப் பின்னும் மக்கள் மனங்களில், எண்ணங்களில் வாழ்கின்றனர்.  தன்னலம் மிக்கவர்களோ வாழும் பொழுதே இறந்து விடுகின்றனர்.  யாருக்கும் உதவாத பணக்காரர்களை செத்த பிணம் என்றே வள்ளுவர் சொல்கின்றார்.  எனவே நடமாடும் நடைப் பிணங்கள் நம் நாட்டில் ஏராளம் உண்டு. வெளிநாட்டு வங்கியில் பணம் பதுக்குபவர்களும் செத்த பிணம்தான் .   மறைந்தும் மறையாத மாமனிதர்களின் தியாகம் உணர்த்தும் கவிதை மிக நன்று.  நான்கே வரிகள் தான், நமக்கு 40 சிந்தனைகளை விதைக்கின்றன.

      உடலுருகி உளமுருகி
ஒளி தருமே மெழுகு திரி
      கடமையில் தேய்பவரே
காலமெலாம் வளர்கின்றார்.

      ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.  அந்த புத்தரை கடவுளாக வணங்குபவரும் ஆசை பிடித்து அலைந்ததன் காரணமாக பிறரை அழித்து மகிழ்ந்து வருகின்றனர்.  மகிழ்ச்சி நிரந்தரமன்று என்பதை உணராதவர்கள்.  அவர்களுக்கு உணர்த்தும் கவிதை.

      அழிகிறதே ஆசையென
ஆசைகளாய் வாழ்ந்தாலும்
      அழிகின்றாய் அழிவதன் முன்
ஆசைகளை அழிப்பாயா?

      உன்னை நீ நம்பு ; உனக்குள்ளே தான் விளக்கு உள்ளது ; அதுவே உனக்கு வழிகாட்டும் ; திசை காட்டும்என்று நம்பிக்கை விதைக்கும் வைர வரிகள்.

      நமக்குள்ளே ஒளியேற்ற
நாமே தான் திரியாவோம்
      நமக்குள்ளே சுடர் பரவ
நாமே தான் விளக்காவோம்

      வாசித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது.  மனதில் கவலை வரும்பொழுதெல்லாம் மறுவாசிப்பு செய்து கவலை அகற்றிக் கொள்ள உதவிடும் நூல்.  .80 வயது   ஆன பின்னும் இலக்கியத்தில் சுறுப்பாக இயங்கி படைத்து வரும் படைப்பாளி கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum