தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு

2 posters

Go down

காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு Empty காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு

Post by அ.இராமநாதன் Fri Nov 14, 2014 6:17 am

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சோழர் கால பழமை வாய்ந்த சிற்பங்கள் அண்ணாமலைப் பல்கலை. வரலாற்றுத் துறை ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் அமுக்கிராங்குட்டை குளம் உள்ளது. இதனருகே உள்ள மரத்தை வேருடன் எடுக்கத் தோண்டிய போது சப்தமாதர் சிற்பங்கள் மற்றும் கிபி 9-10 ஆம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிற்பம் மண்ணில் புதையுண்டு கிடப்பதை அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் அண்ணாமலைப் பல்கலை.க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
-
இதன் பேரில் பல்கலை. வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்கள் திராவிட வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர் இல.கணபதிமுருகன், தலைவர் ஆ.முத்துக்குட்டி மற்றும் சி.பாஸ்கரன் ஆகியோர் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
-
ஆய்வு குறித்து, ஆய்வாளர் இல.கணபதி முருகன் தெரிவித்ததாவது: சோழர்களின் வரலாற்றில் மேலக் கடம்பூர், கீழக் கடம்பூர் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
-
இங்கிருந்த சோழ அரண்மனையில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். அந்நிகழ்வுதான் அப்போதைய தமிழக வரலாற்றை மாற்றியது. ராஜராஜன் என்ற மாமன்னன் சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு மகுடம் சூட கிடைத்த வாய்ப்பாகவும் இந்நிகழ்வுதான் காரணமானது. மேலகடம்பூரில் அமைந்துள்ள ருத்ரபதீஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது. வரலாற்றுச் சிறப்புமிக்கது.
-
சப்தமாதர் சிற்பங்கள்: பிரம்மாவின் மனைவியான பிராமி நான்கு கரங்களுடன் குண்டம், அட்சய பாத்திரம், ஜெப மாலை, அகப்பையை ஏற்றி அபய, வரத முத்திரையில் உள்ள சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவனின் சேவகனான யமனுக்கு சக்தியை வழங்கக் கூடிய தேவியான சாமுண்டி, விரிசடை அலங்காரத்தில் அபய முத்திரையில் காட்சி தருகிறார். சிவனுக்கு சக்தி மூல ஆதாரமாக விளங்கும் மகேஸ்வரி நான்கு கரங்களுடன் உடுக்கை ஏந்திய நிலையில் முக்கண்ணை உடையவளாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். முருகனின் சக்தி மூல ஆதாரமாக விளங்கும் கௌமாரி சிற்பமானது, நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் பொலிவுற வடிக்கப்பட்டுள்ளது.
-
விஷ்ணுவின் சக்தியாக போற்றப்படும் வைஷ்ணவி சிற்பமும் நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையில் சங்கு, சக்கரம் ஏந்திய பத்மபீடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. வராக மூர்த்திக்கு மூல ஆதாரமாக விளங்கக் கூடிய வராகி காதில் மகர குண்டலங்கள் பூட்டி சங்கு, சக்கரம் ஏந்தி அபய முத்திரையில் அருள்பாலிக்கும் தோற்றத்தில் விளங்குகிறார்.
-
இத் தெய்வ உருவங்கள் அனைத்துமே எளிய வேலைப்பாடுடன் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் மேலகடம்பூர் ருத்ரபதீஸ்வரர் கோயிலில் தேவகோஷ்டச் சுவரில் தான் இடம் பெற்றிருக்க வேண்டும்.
-
தற்போது இடம் பெயர்ந்து புதைந்துள்ளது என்பதை கோயில் அமைப்பு மூலம் அறியலாம். இச்சிலைகள் பிற்காலச் சோழர்களின் இறுதி காலக் கட்டத்தைச் சேர்ந்தது.
-
மூத்த தேவியின் சிற்பம்: சப்தமாதர் சிற்பத்தில் அருகாமையிலேயே மூத்த தேவியின் 3.5 அடி நீளம், 2 அடி அகலத்திலான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
-
காக்கை கொடி ஏந்திய மூத்த தேவியின் கழுதை வாகனம் மற்றும் தேவியின் மைந்தர்களான மாந்தன், மாந்தி உருவங்கள் நன்றாகவே தெரிகிறது. கண்களை முடியவாறு செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம் நீண்ட நாள்களாக மண்ணில் புதைந்திருந்த காரணத்தால் மணலால் அரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
-
பாண்டியர் படையெடுப்புகள்: மூன்றாம் ராஜராஜன் (கிபி 1216-1256) சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருக்கும் போது நிகழ்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் நிகழ்த்திய படையெடுப்புகளில் இங்கு பேரழிவு உண்டானதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறெனில் மேலக்கடம்பூர் கோயில் புனரமைப்பு பாதியில் கைவிடப்பட இப்படையெடுப்பு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்றாம் ராஜராஜனுக்கு முந்தைய காலக் கட்டத்திலேயே இங்கு பழமையான கோயில் இருந்துள்ளது.
-
புனரமைப்பு பணிகளை 3ஆம் குலோத்துங்கனும், 3ஆம் ராஜராஜனும் மேற்கொண்டுள்ளது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஆகவே, இச்சிற்பங்கள் காலமும் கிபி 12-13ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
-
–தினமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு Empty Re: காட்டுமன்னார்கோயில் அருகே சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 17, 2014 12:38 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum