தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
வரலாற்று தகவல்கள் - தொடர் பதிவு
Page 1 of 1
வரலாற்று தகவல்கள் - தொடர் பதிவு
முதல் ஓட்டம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு துறையூரில்
ஒரு சினிமா கொட்டகை இருந்தது. ஒருநாள் துரைராஜ்
என்பவர் அவரிடம் வந்து ஒரு வேலை போட்டுத் தரும்படி
கேட்டார்.
-
துரைராஜ் பார்க்க உடற்கட்டோடு, சுறுசுறுப்பாகவும்
காணப்பட்டார். கலைவாணர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்.
-
""திடீரென்று கொட்டகையில் தீ பிடித்துவிட்டது என்று
வைத்துக்கொள்! அப்போது நீ என்ன செய்வாய்?''
-
""அதைப்பற்றி அண்ணா நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட
வேண்டியதில்லை. கொட்டகையில் இருந்து
ஓடுகிறவர்களிலேயே நான்தான் முதலாவதாக இருப்பேன்''
என்றார் துரைராஜ்.
அங்கிருந்த எல்லோரும் "பக்' என்று சிரித்துவிட்டனர்.
-
----------------------------------------
தேனி முருகேசன்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு துறையூரில்
ஒரு சினிமா கொட்டகை இருந்தது. ஒருநாள் துரைராஜ்
என்பவர் அவரிடம் வந்து ஒரு வேலை போட்டுத் தரும்படி
கேட்டார்.
-
துரைராஜ் பார்க்க உடற்கட்டோடு, சுறுசுறுப்பாகவும்
காணப்பட்டார். கலைவாணர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்.
-
""திடீரென்று கொட்டகையில் தீ பிடித்துவிட்டது என்று
வைத்துக்கொள்! அப்போது நீ என்ன செய்வாய்?''
-
""அதைப்பற்றி அண்ணா நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட
வேண்டியதில்லை. கொட்டகையில் இருந்து
ஓடுகிறவர்களிலேயே நான்தான் முதலாவதாக இருப்பேன்''
என்றார் துரைராஜ்.
அங்கிருந்த எல்லோரும் "பக்' என்று சிரித்துவிட்டனர்.
-
----------------------------------------
தேனி முருகேசன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: வரலாற்று தகவல்கள் - தொடர் பதிவு
கவலைகள் எப்படி இருக்கும்?
விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில்
சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை.
அப்போது ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,
"நீ கோயிலுக்குச் சென்று அன்னையிடம் முறையிடு.
அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள்,
கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில்
அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள்
அனுப்பினார்.
பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம்,
"முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர்
"அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார்.
இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது.
-
இறுதியாக அவர் கூறினார்,""இது என்னால் முடியாது.
நான் அன்னையின் முன் சென்றதுமே என் கவலைகள்
பறந்தோடிவிடுகின்றன. நானே அங்கே இருப்பதில்லை.
என் கவலைகள் எப்படி இருக்கும்?'' என்றார்.
இராமகிருஷ்ணரும்,""நீ வீணாகவில்லை, எங்கே
வேண்டுதல் உள்ளதோ அங்கே பிரார்த்தனை இல்லை''
என்றார்.
-
------------------------------------
அ.கருப்பையா, பொன்னமராவதி.
விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில்
சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை.
அப்போது ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,
"நீ கோயிலுக்குச் சென்று அன்னையிடம் முறையிடு.
அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள்,
கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில்
அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள்
அனுப்பினார்.
பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம்,
"முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர்
"அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார்.
இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது.
-
இறுதியாக அவர் கூறினார்,""இது என்னால் முடியாது.
நான் அன்னையின் முன் சென்றதுமே என் கவலைகள்
பறந்தோடிவிடுகின்றன. நானே அங்கே இருப்பதில்லை.
என் கவலைகள் எப்படி இருக்கும்?'' என்றார்.
இராமகிருஷ்ணரும்,""நீ வீணாகவில்லை, எங்கே
வேண்டுதல் உள்ளதோ அங்கே பிரார்த்தனை இல்லை''
என்றார்.
-
------------------------------------
அ.கருப்பையா, பொன்னமராவதி.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: வரலாற்று தகவல்கள் - தொடர் பதிவு
கருணை உள்ளம்
ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த சமயம்,
அவருடைய சொற்பொழிவைக் கேட்க அக்கம் பக்கத்து
கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடினார்கள். மாட்டு
வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார் பிரசங்கத்தை
ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்றுவிட வேண்டும்
என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து வேக வேகமாக
ஓட்டி வந்தார்.
-
பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே
மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப்
பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே
சென்றார்.
-
அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, ""என்னால்
அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' என்று கண்ணீர்
பெருகினார்.
-
செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.
-
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், கண்ணீர்
சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
-
------------------------------------
மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.
ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த சமயம்,
அவருடைய சொற்பொழிவைக் கேட்க அக்கம் பக்கத்து
கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடினார்கள். மாட்டு
வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார் பிரசங்கத்தை
ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்றுவிட வேண்டும்
என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து வேக வேகமாக
ஓட்டி வந்தார்.
-
பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே
மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப்
பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே
சென்றார்.
-
அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, ""என்னால்
அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' என்று கண்ணீர்
பெருகினார்.
-
செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.
-
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், கண்ணீர்
சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
-
------------------------------------
மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: வரலாற்று தகவல்கள் - தொடர் பதிவு
இதிலென்ன அதிசயம்!
காந்தி ஒருமுறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார்.
அவருடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரும்
சென்றிருந்தனர். ""இங்கே ஜோக் ஃபால்ஸ் என்ற நீர்வீழ்ச்சி
இருக்கிறது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம்.
அதைப் பார்க்கலாமே!'' என்றனர் அவர்கள்.
-
""எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள்
போய்ப் பாருங்கள்'' என்றார் காந்தி.
-
""என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். நயாகராவைவிட
மிக உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த அதிசயத்தை
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்'' என்றனர் அவர்கள்.
-
காந்தி சொன்னார்,""இதிலென்ன அதிசயம்! ஆகாயத்திலிருந்து
விழும் மழைத் தண்ணீரைவிடவா இது உயரத்திலிருந்து
கொட்டுகிறது?''
-
-------------------------------------
ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
காந்தி ஒருமுறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார்.
அவருடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரும்
சென்றிருந்தனர். ""இங்கே ஜோக் ஃபால்ஸ் என்ற நீர்வீழ்ச்சி
இருக்கிறது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம்.
அதைப் பார்க்கலாமே!'' என்றனர் அவர்கள்.
-
""எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள்
போய்ப் பாருங்கள்'' என்றார் காந்தி.
-
""என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். நயாகராவைவிட
மிக உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த அதிசயத்தை
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்'' என்றனர் அவர்கள்.
-
காந்தி சொன்னார்,""இதிலென்ன அதிசயம்! ஆகாயத்திலிருந்து
விழும் மழைத் தண்ணீரைவிடவா இது உயரத்திலிருந்து
கொட்டுகிறது?''
-
-------------------------------------
ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: வரலாற்று தகவல்கள் - தொடர் பதிவு
உயர்ந்த உள்ளம்
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி
பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார்.
அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார்.
அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப்
பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்தி
விட்டார்.
-
துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட
நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார்
நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில்
உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார்.
இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,""பாரதி நன்றாக
இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க
வேண்டும்'' என்று உளம் கசிந்தார்.
-
---------------------------------------
ஜி.அருள்குமார், மன்னார்குடி
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி
பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார்.
அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார்.
அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப்
பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்தி
விட்டார்.
-
துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட
நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார்
நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில்
உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார்.
இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,""பாரதி நன்றாக
இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க
வேண்டும்'' என்று உளம் கசிந்தார்.
-
---------------------------------------
ஜி.அருள்குமார், மன்னார்குடி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல்கள் - (தொடர் பதிவு..)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum