தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்னை தெரசா

2 posters

Go down

அன்னை தெரசா Empty அன்னை தெரசா

Post by karumalaithamizhazhan Wed Aug 26, 2015 12:22 pm

( 26-08-2015  இன்று  அன்னை  தெரசா  அவர்களின்  பிறந்த நாள்  அவரைப்போல்  மனித நேயத்துடன்  வாழ   உறுதி  ஏற்போம் )
அன்னை  தெரசா
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
மதமென்னும்    வேலிகளைக்    கடந்து    நின்ற
            --மனிதத்தின்   மாவுருவம் !   இரக்க    ஊற்றின்
பதமான   ஈரநிலா !    மக்கள்    நெஞ்சப்
            --பாத்திகளில்    அன்பென்னும்    விதையை   நட்ட
உதயத்தின்   பூபாளம் !   ஆன்மீ   கத்தின்
            --உண்மையொளி !   இனமொழிகள்    நாடு   தாண்டி
இதமானப்   பூங்காற்றாய்    அரவ    ணைத்த
            --இறையருளின்    இனியமுதம்   தெரசா   அன்னை !
 
ஆயிரமாம்   ஏதிலியர்    உரிமை    யோடு
            --அம்மாவென்   றழைத்திடவே   அணைத்த   அன்னை
ஆயிரமாம்   கரங்களுக்கே   ஊன்று    கோலாய்
            --அனுதினமும்   தனைக்கொடுத்து   நின்ற    அன்னை
ஆயிரமாம்    முதியோர்கள்   அவலம்   நீங்கி
            --அமைதியாக   வாழவழி   யமைத்த    அன்னை
பாயிரமாய்   பாவியமாய்    தியாகத்    தையே
            --பாடலாக    இசைத்தவர்தாம்    தெரசா   அன்னை !
 
அறிவியலின்   வளர்ச்சியிலே    அதிக    மாக
            --அறிவுதனில்   உயர்ந்திட்ட    மனித   ரெல்லாம்
பரிவுகாட்டும்   மனங்களிலே    சுருங்கி    விட்ட
            --பரிதாபச்   சூழலில்தான்   தெருவின்   ஓரம்
சொறிநாய்க்கும்    கேவலமாய்த்    தள்ளப்   பட்ட
            --தொழுநோய    ரும்மனித    ரென்றே    ஏந்திச்
சரியானப்   பாதுகாப்பைப்    பாசத்    தோடு
            --சலியாமல்    அளித்தவர்தாம்    தெரசா   அன்னை !
 
 
 
கரமேந்தி    ஏழையர்க்காய்   உதவி   கேட்டு
            --கனிவோடு   செல்வந்தர்   முன்னே   நிற்கக்
கரந்தன்னில்    எச்சிலினைத்   துப்பு    கின்றார்
            --கடுகளவும்   சினமின்றி    எச்சி   லைநான்
வரவாக   என்கணக்கில்    சேர்த்துக்    கொண்டேன்
            --வழியற்ற    அபலையர்க்குக்    கொடுங்க   ளென்றே
கரம்நீட்டிக்    கல்நெஞ்சைக்    கரைய   வைத்த
            --கருணையின்   வடிவந்தான்   தெரசா   அன்னை !
 
எனிமைக்கும்   எளிமையாய்த்   தனக்காய்   ஏதும்
            --எண்ணாமல்   வாழ்வெல்லாம்   ஏது   மற்ற
எளியவரை   உயர்த்துகின்ற   தவமி   யற்றி
            --ஏசுவாக    ஏளனத்தின்   சிலுவை    யேற்று
நலிந்தவரே   சுற்றமென்று   கன்னி   யாக
            --நடப்பதற்கும்   இயலாமல்   தளர்ந்த   போதும்
மெலியாத   இரக்கத்தில்   உழைத்தொ   ளிர்ந்த
            --மேதினியின்   ஒளிவிளக்கு   தெரசா   அன்னை !
 
வேலிக்குள்   சிறைபட்டுப்    போயி   டாமல்
            --வேண்டியவர்    ஆட்சிக்குப்   பணிந்தி    டாமல்
போலியற்ற   மனிதநேயத்   தொண்டென்   னும்நற்
            --போர்வையாகி   வேதனைக்கு   மருந்தாய்ப்   போர்த்தி
வேலியாகி   நாதியற்றோர்   காப்பாய்   நின்று
            --வெண்மையுடை   அகமாகி   அன்பே   சொல்லாய்க்
காலிரண்டில்   உலகளந்து    அருள்பொ   ழிந்த
            --கண்பார்த்த   கடவுள்தாம்    தெரசா   அன்னை !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

அன்னை தெரசா Empty Re: அன்னை தெரசா

Post by அ.இராமநாதன் Wed Sep 09, 2015 3:49 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum