தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆன்மிக தகவல் -1

Go down

ஆன்மிக தகவல் -1 Empty ஆன்மிக தகவல் -1

Post by அ.இராமநாதன் Mon Jul 18, 2016 3:03 pm




1. சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்) 



2. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு



3. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி 



4. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்




5. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய


6. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம


7. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)


8. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்


9. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்


10. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி 

ஆன்மிக தகவல் -1 Blank
1. அத்திரி முனிவரின் மனைவி....
அனுசூயா


2. ராவணன் யாருடைய தம்பி ....
கரன்


3. அழகியாக மாறிய சூர்ப்பனகையின் பெயர்....
காமவல்லி


4. சூரியனின் அம்சமாகப் பிறந்தகுரங்கு மன்னன்....
சுக்ரீவன்


5. அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்தவள்....
சீதாதேவி 


6. தேவலோகத்தில் பணிசெய்யும் தலைமைத் தச்சர்....
மயன்


7. பிரம்மாவின் அம்சமான கரடி இனத்தலைவர்...
ஜாம்பவான்


8. ஆதிகவி என்று சிறப்பிக்கப்படும் வேடன்...
வால்மீகி


9. தசரதருக்கு அந்திமக்கிரியை செய்த பிள்ளை...
சத்ருக்கனன்


10. வினதைக்குப் பிள்ளையாக அவதரித்த பறவை....
கருடன் 


1. கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

2. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...

குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

3. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...

வில்வமரம்


4. ஆயுள் அதிகரிக்க எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?
கிழக்கு

5. நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் நேர்வரிசையில் அருளும் கோயில்...
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில்

6. அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

7. திருப்பள்ளி எழுச்சியின் போது கோயிலில் பாடும் ராகம்....
பூபாளம்

8. தேங்காய் உடைப்பதற்கு பதிலாக துருவி நிவேதிக்கப்படும் கோயில் எது?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (தேங்காய் உடைத்தால், சுவாமியின் யோகநித்திரை கலைந்து
விடும் என்பதால்)

9. தேவலோக மரமான கற்பகமரத்தில் வீற்றிருக்கும் தெய்வம்....
ஸ்வர்ண வர்ஷினி

10. வீணை இசையை விட இனிய மொழி பேசும் அம்பிகை எங்கு அருள்கிறாள்?
வேதாரண்யம் (யாழைப் பழித்த மொழியாள்) 
ஆன்மிக தகவல் -1 Blank

1. ஐயப்பன் அவதரித்த நட்சத்திரம்....
உத்திரம்

2. ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட மகிஷியின் முற்பிறவி பெயர்....

லீலாதேவி

3. சபரிமலைக்குச் செல்லும் காட்டுவழியில் உள்ள கோட்டைகள்....

ஏழு

4. பழநிமலையில் புனிததீர்த்தமாகக் கருதப்படும் நதி...

சண்முகநதி


5. பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும் படைவீடு...
திருப்பரங்குன்றம்

6. வள்ளி,தெய்வானை முற்பிறவியில் யாருடைய மகள்கள்?

திருமால்

7. வள்ளி, தெய்வானையின் முற்பிறவி பெயர் என்ன?
அமுதவல்லி, சுந்தரவல்லி 

8. பங்குனி சுவாதிநாளில் அவதரித்த சிவனடியார்....
புனிதவதியார்(காரைக்காலம்மையார்)

9. ஆளுடைய பிள்ளையார் என்று போற்றப்படும் நாயன்மார்....
திருஞானசம்பந்தர்

10. குழந்தை முருகன் பவனி வந்த மயில்...
இந்திரமயில் 


1. திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81 

2. பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

3. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

4. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

5. விநாயகரின் பெயரான "சுமுகன்' என்பதன் பொருள்....
நல்ல முகத்தை உடையவர்


6. வாய்மையே வெல்லும்(சத்யமேவ ஜெயதே) என்பது இடம்பெற்றுள்ள உபநிஷதம்...
முண்டக உபநிஷதம்

7. ஆதித்ய ஹ்ருதயத்தை எப்போது பாராயணம் செய்ய வேண்டும்?
சூரியோதய வேளையில்

8. அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

9. தாயாரின் மூலமே பெருமாளை அடைய முடியும்என்பதை எப்படி குறிப்பிடுவர்?
புருஷாகாரம்(பரமாத்வோடு சேர்ப்பவள்)

10. உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி 


1. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

2. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

3. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

4. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

5. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

6. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

7. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

8.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

9. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

10. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர் 
ஆன்மிக தகவல் -1 Blank

1. கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட காலம் எது?
சாலிவாகன சகாப்தம் 807 பங்குனி உத்திர நட்சத்திரம்(தற்போது சாலிவாகன (தெலுங்கு) ஆண்டு 1933) . அதாவது, 1126 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்டது.

2. கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட ஊர்
ஸ்ரீரங்கம்

3. ராமனின் பெற்றோர் தசரதர்-கோசலை. தசதரதரின் பெற்றோர் யார்?
அஜன்- இந்துமதி

4. கைகேயின் நாடு, ஊர் எது?
கேகய தேசம், ராஜக்கிரகம்

5. அயோத்தி நகரம் யாரால் உருவாக்கப்பட்டது?
சூரிய குல அரசன் மனு

6. ராஜாஜி எழுதிய ராமாயணத்தின் பெயர்...
சக்கரவர்த்தி திருமகன்

7. தசரதரின் மந்திரி சுமந்திரருக்கு தரப்பட்டிருந்த பெருமை என்ன?
அந்தரங்க அமாத்தியாயன் என்ற பதவி...அரசரின் அந்தப்புரத்திற்குள்ளும் நுழையும் உரிமை பெற்றவர்.

8. ராம சகோதரர்கள் பிறந்த நட்சத்திரம்...
ராமன்- புனர்பூசம், பரதன்- பூசம், லட்சுமணன்- ஆயில்யம், சத்ருக்கனன்- மகம்

9. கோசலநாடு என்ற சொல்லின் பொருள்
மயில்கள் நிறைந்த நாடு

10. ஜனகர் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
தந்தை 
ஆன்மிக தகவல் -1 Blank
1. புலவர் இளம்பெருவழுதி அழகர்மலையைப் பரிபாடலில்... என்று குறிப்பிடுகிறார்.
மாலிருங்குன்றம்

2. முதல் ஆழ்வார்கள் மூவரில் கள்ளழகரைப் பாடியவர்கள்....
பூதத்தாழ்வார், பேயாழ்வார்


3. அழகர்கோவில் கள்ளழகர் யாருக்காக வைகையாற்றில் எழுந்தருள்கிறார்?
மண்டூக மகரிஷி


4. பழங்காலத்தில் அழகர்கோவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
திருமாலிருஞ்சோலை


5. அழகர்கோவிலில் புனித தீர்த்தமாக விளங்கும் சுனை....
நூபுர கங்கை


6. நூபுரகங்கை என்பதன் பொருள்....
சிலம்பாறு


7. கள்ளழகரை காணும் பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம்....
கோவிந்தா கோவிந்தா


8. அழகரை வைகையாற்றில் வரவேற்கும் பெருமாள்....
மதுரை வண்டியூர் வீரராகவப்பெருமாள்


9. வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் சப்பரம்.....
ஆயிரம் பொன் சப்பரம்


10. கள்ளர் கோலத்தில் அழகர் அழகர் உடுத்தியிருக்கும் ஆடை...
கண்டாங்கி.

ஆன்மிக தகவல் -1 Blank
1. ராமனுக்குரிய ஜென்ம நட்சத்திரம்...
புனர்பூசம்

2. "திரு' என்ற அடையோடு கூடிய இரு நட்சத்திரங்கள்...
திருவாதிரை, திருவோணம்

3. ரோகிணி நாளில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்...
கிருஷ்ணர்


4. ஒவ்வொரு ராசியிலும் இடம்பெறும் நட்சத்திரம் எத்தனை?
இரண்டேகால்

5. சரஸ்வதிக்கும், அனுமனுக்கும் உரிய நட்சத்திரம்....
மூலம்

6. ஆண்டாள் பூவுலகில் அவதரித்த நன்னாள்...
ஆடிப்பூரம்

7. நரசிம்மர் தூணைப் பிளந்து கொண்டு வந்த நாள்...
சதுர்த்தசி திதி, சுவாதி நட்சத்திரம்

8. முருகப்பெருமானுக்கு உகந்த இரு நட்சத்திரங்கள்....
கார்த்திகை, விசாகம்

9. சுபநிகழ்ச்சிகளை செய்ய ..... நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பர்.
ரோகிணி

10. நட்சத்திரமண்டலத்தில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வது...
அசுபதி 
ஆன்மிக தகவல் -1 Blank

1) ராமனின் மனைவி சீதை, மற்ற சகோதரர்களின் மனைவியர் யார்?
லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி, சத்ருக்கனன்- சுருதகீர்த்தி

2) சூரியனின் நட்பு கிரகங்கள் எவை?
செவ்வாய், குரு, சந்திரன்

3) குற்றாலநாதரின் அம்பாள் பெயர்...
குழல்வாய்மொழி நாயகி

4) நவக்கிரகங்களில் சந்திரனுக்குரிய தலம் எது?
திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)


5) காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

6) தன்வந்திரியின் கையில் இருக்கும் பூச்சி
அட்டை

7) "பக்தவத்சலன்' என்று அழைப்பது யாரை?
நரசிம்மர்.

8) "பக்தவத்சலன்' என்பதன் பொருள் என்ன? பக்தர்களிடம் கருணை உள்ளவன் 
(வத்சலம்- கருணை)

9) இறைவன் நமது உள்ளத்தில் கட்டை விரலளவு உள்ளான் என்று கூறும் நூல் எது?
ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்

10) "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர் 
ஆன்மிக தகவல் -1 Blank

1. இலங்கை மீது படையெடுக்க ராமன் குறித்த நட்சத்திரம்...
உத்திரம்

2. ராவணனின்மனைவி மண்டோதரியின் தந்தை..
மயன்

3. மாரீசன் ராமனை எப்படி அழைத்தான்?
நரசிம்மா...!

4. வானரங்களுக்கு அழகு எது என்று ராவணன் கூறினான்?
வால்

5. விபீஷணனின் மனைவி பெயர்...
சரமை

6. தேவர்கள் உத்தரவுபடி அனுமனை சோதித்த அரக்கி...
நாகங்களின் தாய் சுரசை


7. ராமபாணத்தால் துளைக்கப்பட்ட மரம்..
ஆச்சா மரம்

8. கடலில் பாலம் (சேதுபந்தனம்) அமைத்தவன் யார்?
நளன்

9. சேதுபந்தனம் என்பதன் பொருள்...
சேது- பாலம், பந்தனம்- கட்டுதல்

10.சேதுபந்தனம் அமைக்க எத்தனை நாள் ஆனது?
மூன்று 
ஆன்மிக தகவல் -1 Blank

1. திருச்செந்தூரின் புராதனப் பெயர்....
திருச்சீரலைவாய்

2. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

3. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

4. சூரபத்மனின் தங்கையான ஆட்டுமுகப்பெண்...
அஜமுகி

5. அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

6. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

7. நோய் நீங்க அம்மனுக்கு செய்யும் வழிபாடு
மாவிளக்கு

8. இடும்பன் காவடியில் இருக்கும் இருமலைகள்.....
சிவகிரி, சக்திகிரி

9. மீனாட்சியின் தமிழ்ப் பெயர்...
கயல்விழியாள்(மீன் போன்ற கண்களைக் கொண்டவள்)

10. முருகப்பெருமான் சாந்தமே வடிவாக அருள்புரியும் தலம்....
திருத்தணி 
ஆன்மிக தகவல் -1 Blank

1. "தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

2. "தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

3. பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர்...
பாம்பன் சுவாமிகள்

4. திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்த அருளாளர்....
வள்ளலார்

5. "பயந்த தனிவழிக்குத் துணை முருகா' என்று வழிகாட்டியவர்.....
அருணகிரிநாதர்

6. ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தவர்...
திருக்கோஷ்டியூர் நம்பிகள்

7. திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக அவதரித்தவர்.....
திருமங்கையாழ்வார்

8. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

9. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

10. ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர்...
வியாசர் 
ஆன்மிக தகவல் -1 Blank

1. வைகுண்ட வாசலில் காவல்பணிசெய்யும்இருவர்....
ஜெயன், விஜயன்

2. திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தவர் யார்?
கூன்பாண்டியனின் அமைச்சர் குலச்சிறையார்.

3. மகாவிஷ்ணு வராகமாக அவதாரமெடுத்து யாரை வதம் செய்தார்...
இரண்யாட்சன்

4.பிரகலாதனின்பெற்றோர்...
இரண்யகசிபு (இரண்யன்), கயாது

5. கும்பகர்ணன் பிரம்மாவிடம் .... வரம் பெறுவதற்காகத் தவம் செய்தான். 
நிர்தேவத்துவம் (தனக்கு ஈடான தெய்வம் வேறில்லை) 

6. ராமபட்டாபிஷேக செய்தியைச் சொன்ன கூனிக்கு கைகேயி கொடுத்த பரிசு...
முத்துமாலை


7. திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

8. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

9. அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

10. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் 


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum