தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
4 posters
Page 1 of 1
உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
காதல் எப்படி
வரும், யாரிடம் வரும், எங்கு வரும் என்பதெல்லாம் சொல்ல
முடியாது. காதல் என்பதற்கு முதலில் கண் இல்லை என்று
சொல்வார்கள். அப்படி இருக்க ஒருவர் தனது நண்பரையே காதலிப்பதில்
மட்டும் தவறு இருக்க முடியுமா?
பொதுவாக
பார்த்ததும் காதல் வரலாம், அல்லது இப்படி பேசிப் பழகி நல்ல
நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையே காதல் மலரலாம். ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு இருவரும் மனம் விட்டுப் பேசி நமக்குள்
நட்பிற்கும் மேலாகா ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து
கொண்டு பின் காதலர்களாக மாறியவர்களும் உண்டு.
[You must be registered and logged in to see this image.]
ஆனால்,
நண்பர்களுக்குள் காதல் வருவது மிகப்பெரிய அவஸ்தை என்பது
மட்டும் நிஜம். ஒருவர் தனது நண்பரை காதலிக்கிறார் என்றால்,
அதை அவர் உணர்வதற்கே சில காலம் பிடிக்கும். எப்போதும் அவருடன்
நினைவில் பேசிக் கொண்டிருப்பது, அவரது பேச்சைக் காதுகள்
கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வு, அவரைத் தவிர உலகத்தில்
யாரையும் பிடிக்காத அளவிற்கு போவது வரை தனது நண்பரை தான்
காதலிக்கிறோம் என்பதை உணரவே சில காலம் பிடிக்கும்.
அதற்குள்,
அவர்களது நட்பு பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெருமை
வந்திருக்கும். அப்போது அவர்களது நட்பைப் பற்றி தம்பட்டம்
அடித்துக் கொண்டிருப்பார்கள் தங்களை சுற்றியுள்ள
நண்பர்களிடம்.
இந்த
நிலையில், தனது நண்பரை தான் காதலிக்கிறோம் என்ற எண்ணமே
முதலில் குற்ற உணர்ச்சியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதையும்
மீறி, அவரும் தன்னை காதலிக்கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயும்.
இதற்கிடையே அவர் வேறு யாரையும் காதலித்து விடக் கூடாதே என்றும்
மனம் பதபதைக்கும்.
நனது
நண்பர் வேறு யாரிடமாவது பேசினால் முதலில் அதீத பற்று
(பொசசிவ்நஸ்) எனப்படும் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும், பழக
வேண்டும் என்ற எண்ணம் பொறாமையாகவோ, கோபமாகவோ, வெறுப்பாகவோக்
கூட மாறலாம்.
ஒருவர்
தன் நண்பரைக் காதலிக்கத் துவங்கியதும் செய்ய வேண்டிய விஷயம்,
தனது காதலை வெளிப்படுத்துவது அல்ல. அவரது மனதில் தன் மீது காதல்
ஏற்படுவதற்கான விதை உள்ளதா அல்லது காதல் விதையைத் தூவுவதற்கான
வாய்ப்பு உள்ளதா என்பதுதான். அதற்கு முன் வேறு யாரேனும் காதல்
விதையை விதைத்து உள்ளனரா என்பதை அறிந்து கொள்வதுதான் முதல்
வேலையாக இருக்க வேண்டும்.
அவரது
மனதில் காதல் ஏற்படவே இல்லை, தன்னை மிகவும் நல்ல நண்பராக
நினைக்கிறார் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, காதலிக்க
வைப்பதற்கான வழிகளில் ஈடுபடலாம்.
நமது
நட்பை பெரிதாக மதிக்கிறார், தன்னை ஒரு நல்ல நண்பராக அவர்
நினைக்கிறார் என்று நீங்கள் எண்ணினால், உங்களது காதல் முடிவை
சில காலம் தள்ளிப் போடலாம்.
[You must be registered and logged in to see this image.]
ஆனால், நாம் காதலிக்கும் நம் நண்பர், வேறு ஒருவரை காதலிக்கிறார் என்ற
சந்தேகமாவது உங்களுக்கு வந்தால் உங்கள் காதலை கடலில் தூக்கிப்
போடத் தயங்கக் கூடாது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் காதலைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஏதேனும்
உங்களுக்குப் பிடித்த வேலையில் முழு நேரமும் ஈடுபடுங்கள். காலம்
எதையுமே மாற்றும் சக்தி படைத்தது. நீ இல்லாமல் நான் இல்லை
என்று தற்கொலை வரை சென்றவர்களைக் கூட, வேறு கல்யாணம் செய்து
கொண்டு குடும்பஸ்தனாக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. இப்படி
எல்லாம் நாம் இருந்திருக்கிறோமா என்று எண்ணி சிரிக்க
வைக்கவும் இந்த காலத்தால் முடியும். அதே காலம் உங்கள் காதலை
மறக்க வைக்க முடியும். ஆனால் உங்களுக்காக உங்கள் நண்பர்
உங்களுடன் இருப்பார்.
ஒரு
வேளை உங்கள் காதலை நீங்கள் அவசரப்பட்டு வெளிப்படுத்தி, அவரது
மனதை அது பாதிக்குமானால், நீங்கள் இழப்பது ஒரு காதலியை அல்ல..
நல்ல நண்பரை. ஒரு வேளை நீங்கள் காதலை வெளிப்படுத்தியதும், அது
அவருக்குப் பிடிக்காமல் போனால், நீங்கள் இவ்வளவு காலமும்
நண்பரைப் போல இருந்தது வெறும் நடிப்பாக அவருக்குத் தோன்றலாம்.
இனால் உங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லாமலேப் போகலாம்.
காதலை மனதில் அடக்கி வைத்துக் கொள்வது கடினமான விஷயமாக இருந்தாலும்
அதனால் ஏற்படும் பாதிப்பு பெரிதல்ல. உங்களுக்கு எந்த
பிரச்சினையிலும் தோள் கொடுக்க உங்களுக்காக ஒரு நண்பர்
உங்களுடன் இருப்பார். அதை விட வேறு என்ன வேண்டும் உலகத்தில்?
வரும், யாரிடம் வரும், எங்கு வரும் என்பதெல்லாம் சொல்ல
முடியாது. காதல் என்பதற்கு முதலில் கண் இல்லை என்று
சொல்வார்கள். அப்படி இருக்க ஒருவர் தனது நண்பரையே காதலிப்பதில்
மட்டும் தவறு இருக்க முடியுமா?
பொதுவாக
பார்த்ததும் காதல் வரலாம், அல்லது இப்படி பேசிப் பழகி நல்ல
நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையே காதல் மலரலாம். ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டு இருவரும் மனம் விட்டுப் பேசி நமக்குள்
நட்பிற்கும் மேலாகா ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்து
கொண்டு பின் காதலர்களாக மாறியவர்களும் உண்டு.
[You must be registered and logged in to see this image.]
ஆனால்,
நண்பர்களுக்குள் காதல் வருவது மிகப்பெரிய அவஸ்தை என்பது
மட்டும் நிஜம். ஒருவர் தனது நண்பரை காதலிக்கிறார் என்றால்,
அதை அவர் உணர்வதற்கே சில காலம் பிடிக்கும். எப்போதும் அவருடன்
நினைவில் பேசிக் கொண்டிருப்பது, அவரது பேச்சைக் காதுகள்
கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வு, அவரைத் தவிர உலகத்தில்
யாரையும் பிடிக்காத அளவிற்கு போவது வரை தனது நண்பரை தான்
காதலிக்கிறோம் என்பதை உணரவே சில காலம் பிடிக்கும்.
அதற்குள்,
அவர்களது நட்பு பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெருமை
வந்திருக்கும். அப்போது அவர்களது நட்பைப் பற்றி தம்பட்டம்
அடித்துக் கொண்டிருப்பார்கள் தங்களை சுற்றியுள்ள
நண்பர்களிடம்.
இந்த
நிலையில், தனது நண்பரை தான் காதலிக்கிறோம் என்ற எண்ணமே
முதலில் குற்ற உணர்ச்சியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதையும்
மீறி, அவரும் தன்னை காதலிக்கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயும்.
இதற்கிடையே அவர் வேறு யாரையும் காதலித்து விடக் கூடாதே என்றும்
மனம் பதபதைக்கும்.
நனது
நண்பர் வேறு யாரிடமாவது பேசினால் முதலில் அதீத பற்று
(பொசசிவ்நஸ்) எனப்படும் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும், பழக
வேண்டும் என்ற எண்ணம் பொறாமையாகவோ, கோபமாகவோ, வெறுப்பாகவோக்
கூட மாறலாம்.
ஒருவர்
தன் நண்பரைக் காதலிக்கத் துவங்கியதும் செய்ய வேண்டிய விஷயம்,
தனது காதலை வெளிப்படுத்துவது அல்ல. அவரது மனதில் தன் மீது காதல்
ஏற்படுவதற்கான விதை உள்ளதா அல்லது காதல் விதையைத் தூவுவதற்கான
வாய்ப்பு உள்ளதா என்பதுதான். அதற்கு முன் வேறு யாரேனும் காதல்
விதையை விதைத்து உள்ளனரா என்பதை அறிந்து கொள்வதுதான் முதல்
வேலையாக இருக்க வேண்டும்.
அவரது
மனதில் காதல் ஏற்படவே இல்லை, தன்னை மிகவும் நல்ல நண்பராக
நினைக்கிறார் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, காதலிக்க
வைப்பதற்கான வழிகளில் ஈடுபடலாம்.
நமது
நட்பை பெரிதாக மதிக்கிறார், தன்னை ஒரு நல்ல நண்பராக அவர்
நினைக்கிறார் என்று நீங்கள் எண்ணினால், உங்களது காதல் முடிவை
சில காலம் தள்ளிப் போடலாம்.
[You must be registered and logged in to see this image.]
ஆனால், நாம் காதலிக்கும் நம் நண்பர், வேறு ஒருவரை காதலிக்கிறார் என்ற
சந்தேகமாவது உங்களுக்கு வந்தால் உங்கள் காதலை கடலில் தூக்கிப்
போடத் தயங்கக் கூடாது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் காதலைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஏதேனும்
உங்களுக்குப் பிடித்த வேலையில் முழு நேரமும் ஈடுபடுங்கள். காலம்
எதையுமே மாற்றும் சக்தி படைத்தது. நீ இல்லாமல் நான் இல்லை
என்று தற்கொலை வரை சென்றவர்களைக் கூட, வேறு கல்யாணம் செய்து
கொண்டு குடும்பஸ்தனாக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. இப்படி
எல்லாம் நாம் இருந்திருக்கிறோமா என்று எண்ணி சிரிக்க
வைக்கவும் இந்த காலத்தால் முடியும். அதே காலம் உங்கள் காதலை
மறக்க வைக்க முடியும். ஆனால் உங்களுக்காக உங்கள் நண்பர்
உங்களுடன் இருப்பார்.
ஒரு
வேளை உங்கள் காதலை நீங்கள் அவசரப்பட்டு வெளிப்படுத்தி, அவரது
மனதை அது பாதிக்குமானால், நீங்கள் இழப்பது ஒரு காதலியை அல்ல..
நல்ல நண்பரை. ஒரு வேளை நீங்கள் காதலை வெளிப்படுத்தியதும், அது
அவருக்குப் பிடிக்காமல் போனால், நீங்கள் இவ்வளவு காலமும்
நண்பரைப் போல இருந்தது வெறும் நடிப்பாக அவருக்குத் தோன்றலாம்.
இனால் உங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லாமலேப் போகலாம்.
காதலை மனதில் அடக்கி வைத்துக் கொள்வது கடினமான விஷயமாக இருந்தாலும்
அதனால் ஏற்படும் பாதிப்பு பெரிதல்ல. உங்களுக்கு எந்த
பிரச்சினையிலும் தோள் கொடுக்க உங்களுக்காக ஒரு நண்பர்
உங்களுடன் இருப்பார். அதை விட வேறு என்ன வேண்டும் உலகத்தில்?
Last edited by கவிக்காதலன் on Tue Dec 28, 2010 9:28 pm; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
உண்மை தான் தோழரே. அப்படி ஏற்பட்டு விடும் முன்பே, நாம் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நலம். காதல் வந்த பின்னே மனப் போராட்டம் மிக மிக அதிகமாக இருக்கும். கட்டுரை அழகு
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
சொல்லாத காதல் சொர்க்கம் சேராது என்று கவிப்பேரரசு வைரமுத்து சொல்லியுள்ளார் ! நண்பர்களின் பிரிவு காதல் என்றால் அது கடலில் விழவும் தயங்காது ! ஏனெனில் பிரிவு என்பது காதலை விட நட்பில் அதிகம் வலிப்பது ! அதனால் நண்பர்களே போதுமான மட்டம் நாம் சிந்தித்து செயல்படுவது நல்லது என்று நினைக்கிறன்! நன்றி நண்பரே !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
அருமையான கட்டுரை கவிக்காதலன்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா??
» உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்களா?
» உங்கள் நண்பரைக் காதலிக்கிறீர்களா?
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|