தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்

2 posters

Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்

Post by அ.இராமநாதன் Fri Feb 24, 2017 8:34 am


  • அன்பே பிரதானம்

  • பல்லவி

  • அன்பே பிரதானம் – சகோதர

  • அன்பே பிரதானம்


  • சரணங்கள்

  • 1. பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை,

  • இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் — அன்பே


  • 2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,

  • கல கல வென்னும் – கைம்மணியாமே — அன்பே


  • 3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,

  • அன்பிலையானால் – அதிற்பயனில்லை — அன்பே


  • 4. துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்,

  • பணிய அன்பில்லால் – பயனதில்லை — அன்பே


  • 5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,

  • போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள — அன்பே


  • 6. புகழிறு மாப்பு – பொழிவு பொறாமை,

  • பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா — அன்பே


  • 7. சினமடையாது – தீங்கு முன்னாது,

  • தினமழியாது – தீமை செய்யாது — அன்பே


  • 8. சகலமுந் தாங்கும் – சகலமும் நம்பும்,

  • மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும் — அன்பே

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty பாதம்

Post by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:23 pm

பாதம் 


பாத பூஜை என்பார்கள்.  இறைமகனே தமது சீடர்களின் கால்களை கழுவுகிறார். என்பார்கள்.


இறைபட்டம் பெற்றவரே மனிதர்களின் கால்களை கழுகிறார்.


மனிதர்களையே தெய்வம் என்றால் எப்படி தவறு வரும்.


தெய்வம் என்ற பதவி பெரிதா, சிறியதா என்று தெரியவில்லை.
தெய்வம் என்பவரை யாரை சொல்லலாம் அந்த விஷயத்தில் போட்டியிருக்கு.
 
ஆனால் அதற்கும் மேலாக தெய்வம் நம்மை போற்றுகிறார்.
இறைவன் தன்னுடைய பாசத்தால் நம்மை போற்றுகிறார்.
இறைவன் தன்னுடைய அன்பினால் நம்மை போற்றுகிறார்.


மனிதர்களாகிய நாம் நம் குழந்தைகளை கொஞ்சம் உணவு ஊட்டிக்க கண்ணு என்று கெஞ்சுகிறோம். ஏன்?


நமக்கு அதிகாரம் இருக்கு. ஆனால் நாம் நம் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சு, கெஞ்சி குழந்தையிடம் பாசம் காட்டுகிறோம். 


நாமே இந்நன்னடத்தை கொள்ளும் பொழுது. இறைவன் நம் மேல். எப்படி.  அவர் பூவின் வாசனையிலும் மென்மையானவர்.  


அதனை புரிந்து கொள்ள பாத பூஜை அல்லது மனிதர்களின் கால்களை கழுவுவது.  


மனிதர்களின் கால்களை கழுவுவது என்றால் பெரியவர் தன்னை தாழ்த்துகிறாரா?


தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்த படுவான். 


என்ன not completed ஆ ஆம் பரிகாரம் not completed  
சில பாவங்களுக்கு இறைவனால் பரிகாரம் கண்டுபிடிக்க முடியவில்லையா?


அதற்கு தான் பரிகாரம் not completed  
இன்னும் பூரணம் படவில்லையா?


எந்த தூஷணம் மன்னிக்கப்படலாம், ஆவியானவருக்கு எதிரான பாவத்திற்கு மன்னிப்பு இல்லை. 


பாவத்தை வெல்ல முடியாத பரிசுத்தம் ஒன்றும் இல்லை என்பது திட்டவட்டம் 


பரிசுத்தம் வல்லமை உள்ளது. 


ஆவியானவருக்கு எதிராக எந்த பாவமும் செய்ய முடியாது என்பது திட்டவட்டம் ஆகவே தான் 


ஆவியானவருக்கு எதிரான பாவத்திற்கு மன்னிப்பு இல்லை. என்று சொல்லப்படுவதால்  நாம் பரிசுத்தம் கொள்வதில் அச்சம் வேண்டாம்.


அப்படி ஒரு நிலைமை யாருக்கும் வராது. 


பரிசுத்தம் பூரணப்படும். உலகை ஜெயிக்கும்.


பயப்படாதே , திகையாதே


மருத்துவம்


ஒரு மோசமான நோய் வந்தால் நாமாக மருந்து கடையில் மருந்து கொடுங்கன்னு கேட்டு 


மருந்து வாங்கி சாப்பிட கூடாது என்பார்கள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைபடி மருந்து உட்கொள்ள வேண்டும் என்பார்கள்.  


யார் உதவி கேட்டாலும், அவர் கேட்ட பொருளோ, உதவியோ நம்மால் செய்ய முடியும் என்றால் ஆகா அவர் கேட்டுட்டாரே என்று கொடுப்பது தவறாக கூட இருக்கலாம். 


இப்படி உதவி கேட்பது எதுபோல் என்றால் மருந்து கடையில் நாமாக மருந்து வாங்கி உண்பது போல். 


உதவி செய்பவர் மருத்துவரை போன்று பரிசிலித்து செய்யாமல் மருந்து கடையில் வியாபார நோக்கத்தில் சிகிச்சைக்கான மருந்து கொடுப்பது போல் தவறாக அமையலாம்.


பூமியின் பலனை வருத்தத்தோடே புசிக்கனும் என்பது நமக்கு தெரியுமா?


நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் செயல்படும் பொழுது இறைவனாகிய மருத்துவரை பரிசீலிக்கனும்.


நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் இறைவனுக்கு பயந்து அந்நடவடிக்கையில் செயல்படனும். 


நம்முடைய பழக்க வழக்க எல்லா நடவடிக்கையிலும் நன்மைதான் என்று தீர்மானிக்க கூடாது.  ஒவ்வொரு நடவடிக்கையிலும் நன்மை, தீமை சேர்ந்தே இருக்கும். 


ஒவ்வொரு நடவடிக்கையிலும் கிரெடிட் என்ற ஒன்று இருந்தால் டெபிட் என்ற ஒன்று கண்டிப்பாய் உண்டு. 


ஒரு நடவடிக்கையில் நன்மை என்ற ஒன்று இருந்தால் தீமை என்ற நடவடிக்கையும் ஒன்று உண்டு.


இறைவன் நன்மை, தீமை இன்னதென்று அறிவித்திருக்கிறார். 


கோதுமை உணவு நல்லது, பாதாம் பருப்பு நல்லது, படிக்க வைப்பது நல்லது, தொழில் செய்வது நல்லது, உடற்பயிற்சி நல்லது, ஆபரேஷன் 


நல்லது, ஞாயிற்று கிழமை ஆராதனை செய்வது நல்லது, வெள்ளிக்கிழமை துவா செய்வது நல்லது 


ஆடி அம்மாவசை விளக்கு போடுவது நல்லது. 


ஆனால் இத்தனை நடவடிக்கையிலும் தீமையும் உண்டு.


இறைவனின் சித்தம், விருப்பம் என்பதை அறிய மனசாட்சிக்கு பயந்து செயல்படனும். 


எனக்கு கல்யாணம் ஆகனும், ஆண் குழந்தை பிறக்கனும் இதுதான் நல்லது என்று தீர்மானிக்க முன் இறைவனுக்கு பயந்து அறிய முற்படனும்.


எல்லா தவறுக்கும் சரி செய்ய பரிகாரம் இருக்கலாம். 


எவ்வளவோ பெரிய மருத்தவர் நமக்கு பக்க பலம் இருக்கிறார் என்று கத்தியை காய்கறி வெட்ட பயன்படுத்தும் பொழுது அசால்ட்டா கையை கிழித்து அல்லது வெட்டி கொள்ளும்படி பயன்படுத்துவோமா.


ஆகவே எந்த நடவடிக்கையாக இருக்கட்டும் துணிகரமாய் செயல்படுவதிலே சிறிது கடவுள் பயம் இருக்க வேண்டும். கவனமாய் செயல்படவேண்டும் அதாவது விழிப்புடன் செயல்படனும்.   


சாப்பிடலாமா, விரதம் இருக்கலாமா, தூங்கலாமா, நடை பயிற்சி செய்யலாமா


வேகிறதை பார்க்கிலும் திருமணம் செய்யலாமே என்றா? எந்த ஒரு மனிதனும் உறுதியிட்டு சொல்ல முடியாததால் ஒவ்வொரு 


மனிதனிடமும் இறைவன் இருக்கிறார்.  இறைவனின் விருப்பம் அறிந்து செயல்படுவதுதான் நல்லது. 




இக்காலத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கனும் என்று மனிதன் சொன்னாலும் அந்நடவடிக்கையில் நல்லதும் உண்டு, தீமையும் உண்டு. 


ஆகவே நடுக்கத்துடனே, வருத்தத்துடனே பூமியின் பலனை புசிப்போம்.  


விதைக்க ஒரு காலம், அறுக்க ஒரு காலம்.   


எந்த காரியத்திலும் தேவ எச்சரிக்கை பார்க்கணும். நாம் ஒவ்வொருவரும் சுதந்திரமாய் செயல்படனும் பெண்ணை விரும்புவது, பொன்னை விரும்புவதும் 


நம்ம இஷ்டப்படி செய்யனும் என்றால் நாம ஒரு உலகை உருவாக்கி அதிலே நம் சுதந்திரத்தால் மனம் போன போக்கிலே செயல்படலாம். 


ஆகவே இந்த உலகம் தேவனுடையது பலமுறை அனுசரிக்க வேண்டியது.  பலரின் இணைப்பால் அல்லது உறவால் கவனிக்கப்படுகிறது இவ்வுலகம். 


துணிகரமான செயல் வேண்டாம்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty சொந்தம்

Post by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:25 pm

சொந்தம் 




          இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ளுங்கள். இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொண்டவர்கள். இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 


          சிவபெருமானை வணங்கினால்,  அல்லாவை வணங்கினால் 


          என்றெல்லாம் சொல்வதை பார்த்திருப்போம். 


          சொந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்கான கிரயம் உண்டு. 


           இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவருடைய கட்டளைகள் அல்லது  நிபந்தனைகள் கைக்கொள்ள வேண்டும் என்பர். 


           சிவபெருமானை, ஐயப்பனை  எப்படி வணங்கவேண்டும்.  அல்லாவை எப்படி வணங்க வேண்டும். 


          அது போல், சிவபெருமானை ஏற்றுக்கொள்ள, அல்லாவை ஏற்றுக்கொள்ள,


             இயேசுவை சொந்தமாக ஏற்றுக்கொள்ள 


              அதுபோல், சுவாசத்திற்கான ரட்சகராக காற்றை சொந்தமாக ஏற்றுக்கொள்ள


               கோதுமை உணவை சத்தின் சொந்த ரட்சகராக கொள்ள 


               கோதுமை அழுகி போன நிலையில் நமக்கு சத்து சொந்தமாகாது.




                பூமியை சொந்தமாக ஏற்றுக்கொள்ள




                 வானத்தை சொந்தமான ரட்சகராக ஏற்றுக்கொள்ள


                  அன்பை சொந்தமான ரட்சகராக ஏற்றுக்கொள்ள


                  கோபத்தை சொந்தமில்லாததாக விலகி ஓட 


ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ள


                   ஒரு ஆணை கணவனாக ஏற்றுக்கொள்ள


                   தந்தையை ஏற்றுக்கொள்ள,  நண்பனாக ஏற்றுக்கொள்ள


                       ஏற்றுக்கொள்ள கைக்கொள்ள வேண்டிய கட்டளைகள், நிபந்தனைகள், விருப்பங்கள் நிறைவேற்றினால் அது சொந்தம்




பிரிவினை - மார்க்க பேதம்


             தன் மகனை விவசாய தொழிலாளியா விவசாயம் பார்க்கவும். 
தனக்கு பிறவாத ஏழையான திறமையான தலித் பயனை, டாக்டர் க்கு படிக்க வைப்பதும் பிரிவினை ஆகுமா?  


              பிரிவினை அல்லாத வசதி குறைந்தவர்கள் கூட, தன் மகனுக்கு சைக்கிள் மட்டுமே வாங்கி கொடுத்தும் முடமான ஒருவருக்கு ஊனமுற்றோருக்கான பைக் வாங்கி கொடுப்பதும் சாத்தியம் ஆகும். 


             இறைவனும் கூட நல்லாருக்கும், தீயோருக்கும் தமது சூரியனை உதிக்கப்பண்ணினார். 


              ஒருகூட்டம் இப்படி இருக்கலாம் வருமானவரிக்கு கணக்குகாட்டாமல் சொத்துக்களை மறைக்கலாம், பதுக்கி வைக்கலாம். 


              ஆனால் இன்னொரு கூட்டம் இப்படி இருக்க வேண்டும். செய்யும் பல உதவிகளில் சில உதவிகள் வெளிப்படையாக தெரியலாம், ஆனால் கணக்கு காட்டாத பல உதவிகள் நாம் செய்யனும் அப்படி செய்தவை அந்த இறைவனுக்கு அந்தரங்கமாக அமையட்டும். 


                 இறைவன் சில அற்புதங்களை செய்து அதை காட்டும் படியாகவும்.   பல அற்புதங்களை தான் நிகழ்த்தியவர்களிடம் அவர்களை ஒருவரிடமும் அறிவியாதே என்று


வறுமை 


              ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் விசாரிப்பேன்.


              ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டுவேன். 


              மனிதன் செய்யும் காரியங்களை எடுத்து அதனை விசாரித்து 


              அவனுடைய சந்ததியின் ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் நீதி 
              செய்வார். 


              நமக்கு மச்சுவீடு கட்டும் அளவிற்கு சொத்து, சுகம் இருந்தால் 
 
              அதை ஒரு ஏழையின் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு 


              நாம் சிறிய குடிசை வீட்டில் வசித்து எளிமையாய் வாழ்வதை 


             தேர்வு செய்வது நம் முன்னோரின் அநீதிக்காக நாம் நீதி செய்வது 
             நல்லதுதானே 


             ஆயிரம், ஆயிரம் தலைமுறையில் நம் முன்னோர்கள் செய்த 


             அநீதிக்காக நம்மை ஏழையாக்கி கொண்டு நாம் சம்பாதித்த      


             சொத்து, சுகங்களை ஏழை, எளியவருக்கு வழங்கலாமே.    


             வியாபார தந்திரங்கள், அறிவு, பாடும் திறமை மற்றும் நம் 
             பல்வேறு திறமைகளை கூனி, குறுகி உள்ளோருக்கு 
             திறமைகளை தந்து உதவலாமே


              நம் நீதியால், அநீதியை நன்மைக்கு ஏதுவாக சரிக்கட்டும் 
             செயல்களை மற்றவர்களுக்கு வழங்கலாமே


              நம்மை குறுக்கிக்கொண்டு, நம்முடைய நன்மை ஒரு ஏழைக்கு 
              அதுவும் பொழுது     


              அந்த ஏழை அவரை விட ஏழையான ஒருவவருக்கு  நன்மை 
              செய்ய நம்முடைய வாழ்க்கை பாடமாக அமையுமே


              இறைமகன் பேரரசரின் மகனாக பிறந்து உலகை ஜெயிக்க 
              வில்லை.    


              மாட்டு தொழுவத்தில் பிறந்தவர். 


              தனக்கு சொந்தமானதில் வந்தார். 


              சொந்தமானவர்களோ தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை.


              சிலுவை சுமந்து என் பின் செல்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty இம்சை அரசன்

Post by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:27 pm

இம்சை அரசன் 




            சிலரை வதம் செய்வதும் பழி உணர்ச்சியால் வெறுப்பதும் எப்படி 
இருக்கிறது என்றால், கடவுள் நீடிய பொறுமையுள்ளவர் அவர் தன் நீடிய 


பொறுமையின் அளவோடு இருந்தும், நாம் குற்றப்படுத்தி தண்டித்து குற்றபடுத்தும் நபரை கடவுள் தண்டிக்காமல் இருந்து நாம் தண்டித்தால் 


நாம் இறைவனின் சாயலில் இல்லை.  
அவரை போல் நீடிய பொறுமை நம்மிடம் இல்லை.


அவர் அனுமதிக்காமல் (சித்தம்) நம்மை தொடுபவர் எவரும் இல்லை.   
ஆகவே நம்மை தொடுபவரை இறைவனின் நீடிய பொறுமை போல் நாம் அணுகவேண்டும். 


ஒரு சீடர் வாளால் காதை வெட்டினார் அதை இறைமகன் இது என் வழியல்ல என்றார்


ரத்த சாட்சியாய் பலர் இறந்தனர் அவர்கள் நீடிய பொறுமையாய் இருந்தார்கள். 


இறைவன் ஆயிரம் ஆயிரம் தலை முறை வரை விசாரிப்பார். 


நம் முன்னோர், பலரை கொலை செய்து கொலை பழியை செய்திருக்கலாம். 


கத்தியால் குத்தும் பொழுது இருதயத்தை கூட ஊடுருவும் படி நம் முன்னோர் கொலை செய்திருக்கலாம்.


அத்தனை தலைமுறை வரை இருந்த பழியை அவர் நீடிய பொறுமையாய் விசாரிக்கலாம். 


எப்படி விசாரித்திருப்பார்.


ஆம். இருதயத்திற்கான பைபாஸ் சர்ஜெரி தேவைப்படுவோருக்கு நாம் உதவி செய்யலாம். 


முன்னோர் ரத்த பழிக்காக ரத்த தானம் செய்யலாம்.


நம்மிடம் இரண்டு உறுப்புக்கள் இருந்தால் ஒரு உறுப்பை தானம் கொடுக்கலாம். 


இரண்டு உறுப்போடு நரகத்தில் விழுவதை விட ஒற்றை உறுப்போடு பரலோகத்தில் பிரவேசிக்கலாம். 


இருக்க வேண்டிய இரண்டு உறுப்புகள் இல்லாதவருக்கு, நம்மிடம் இருக்கும் இரண்டு உறுப்பில் ஒரு உறுப்பை தானம் செய்யலாம். 


நமக்கு மனம் இல்லை உதவி செய்ய, இரண்டு உறுப்பு இருந்தும் நம்மிடம் ஒன்றும் இல்லை என்று அன்பை செய்ய மறுதலிக்கிறோம்.  


ஒன்றை கொடுத்த்துவிட்டு மற்றொரு உறுப்போடு வாழ முடியாதா?


மாற்று திராணிகள் எப்படி செயல்படுகிறார்கள் ஒற்றை உறுப்போடும், ஒற்றை உறுப்பு பழுதோடும் இருந்து உலகில் வாழவில்லையா


இருக்க வேண்டிய இரண்டிரண்டு உறுப்புகளோடு பூமியில் பல கோடி ஆண்டுகள் வாழ போகிறோமா


பிறப்பு என்ற ஒன்றும் இறப்பு என்ற ஒன்றும் எல்லாருக்கும்தான்  உயிரோடு இருக்கும் கொஞ்சம் காலத்தில் எல்லா உறுப்புகளோடும் நம்மை அடக்கம் பண்ணினாள் பெருமையா?


மாற்று திறனாளிகளை பாருங்கள். 


ஒரு கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம் செய்யலாமே 


மாற்று திராணிகள் இறைவனுக்கு நெருங்கிய உறவு கிடையாது.


எல்லா உறுப்புகளும் உள்ளதால் எல்லா உறுப்புகளோடும் உள்ள நாம் தான் பாக்கியம் செய்தவர்கள் என்று எண்ணி அதனால் நாம் தான் இறைவனோடு நெருக்கம் உள்ளவர் என்று எண்ணுவது சரியா?


கடல் நீரில் உள்ள கழிவுகளை தன்னால் இயன்ற அளவு மீன்கள் அதை உண்டு கடல் நீரை சுத்தபடுத்துகிறது. 


அதுபோல் மண்ணின் மேல் உள்ள கழிவுகளை மண் இழுத்து கொண்டால் தானே காற்று சுத்தமாகும் 


காற்றை மாசுபடுத்தினால் அசுத்த காற்று ஈரமாகி மண்ணுக்குத்தானே வருகிறது.  


மண்ணின் மேல் உள்ள கழிவுகளை மண் இழுத்துகொள்ள நாம் ஒத்தாசை பண்ணக்கூடாதா


ஒத்தாசை வரும் பர்வதம்.


நீர்


          நெற்றி சிறு நீர், காது சிறு நீர், வாய் சிறு நீர், கண் சிறு நீர், கழுத்து சிறு நீர், கை சிறு நீர், உள்ளங்கை சிறு நேர், வயிறு சிறு நீர், பிறப்பு உறுப்பு 


சிறு நீர், சிறு நீரக சிறு நீர், ஆசன வாய் சிறு நீர், தொடை சிறு நீர், கால் சிறு நீர் 


          நான் என்ன சொல்ல வருகிறேன்.


          சிறு நீர் (குறுகிய நீர்) என்பதை வேர்வையாக வரும் நீரையும் சொல்லலாமா. 


          இன்று பல வியாதிகளுக்கு காரணம் உடலில் வேர்வை நீர் வெளியாகணும். 


           நெற்றி வேர்வை துளி மண்ணில் விழ நிலத்தை பண்படுத்தி அதன் கனியை புசிப்பாய்.


             இன்று வேர்வை துளிகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. 


            அக்காலத்தில் உடல் உழைப்பு அதிகம் அதனால் வேர்வை சுரப்பி நன்கு வேலை செய்து உடல் ஆரோக்கியமாக இருந்தது. 


             நம் உடலில் பெருந்துளைகள் வாய் காது இப்படி இருந்தாலும் உடல் முழுவதும் சிறு துளைகள் உள்ளன. 


             சுகர் அதிகமானாலோ இன்னும் பல வியாதிகளில் நடை முடையில் திடீரென ஒரு மயக்கம் அத்துடன் உடல் முழுக்க வேர்த்து விறுவிறுத்து கொட்டும். 


              இந்த சிம்டஸ் (அறிகுறி) எதை குறிக்கிறது நுண் துளைகள் வழியாக கழிவு வெளியேற்றபட வேண்டும். 


             உடல் முழுக்க உள்ள கழிவை வெளியேற்ற சிறு நீரக உறுப்பையும், ஆசனவாயையும் மட்டும் நம்பினால் அவ்வுறுப்புகள் 


அதிகமான வேலைபளுவால் சரிவர கழிவை வெளியேற்ற முடியாமல் சீக்கிரம் செயல் இழந்து பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது. 


                தோளில் உள்ள அனைத்து வேர்வை துவாரங்கள் வழியாய் வேர்வை வெளியேறினால் நமக்கு பல வியாதிகள் வராது.


                வேர்வை வெளியேற நீர் வேது புடிக்கீறீர்களோ , நடை பயிற்சி செய்கிறீர்களோ நூதன, நுணுக்கமான அல்லது எளிய வழிகளிலோ நீங்கள் பின்பற்றி வேர்வை என்ற சிறு நீரை வெளியேற்றுங்கள். 


                நீங்கள் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு உங்கள் வீட்டில் யாராவது ஒருவர் செய்வதே போதும்.


                கடவுளுக்கு பலி, ஆட்டின் தலைஈற்று, கோழியின் தலையீற்று என்பதன் அடிப்படியில் முதல் ஈற்றின் பிறப்பை ஆண்டவருக்கு பலி கொடுப்பது போல் 


             வீட்டில் யாரவது ஒருவர் ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்யலாமே நம் முன்னோரின் ரத்த பழி நீங்க


நீர் - திரு நீர் 




             மோசேக்குக்கு முட்செடி தீயில் இறைவன் தரிசனம் ஆனபோது 


ஒரு பர்தா என்ற விருத்தச்சேதனமான காலணிகளை கழற்றும்படியாக அறிவுறுத்தப்பட்டது 


              இறைவன் கை நீட்டுவார் என்று எண்ணி அவர் மனைவி அவரை காக்கும் பொருட்டு நுனித்தோலை நீக்கும் பர்தாவான விருத்தச்சேனம் நடைபெற்றது. 


              பூசாரி மட்டுமே இறைவனின் சந்நிதானத்திற்குள் போக முடியும் 
அந்த சந்நிதானத்திற்குள் பூசாரி கூட சென்று திரும்புவாரா அல்லது 


திரும்பாமல் இறப்பாரா என்ற அளவிற்கு பர்தா என்ற விருத்தச்சேனம் கடைபிடிக்கப்பட்டது. 


               வனாந்தரத்தில் இஸ்ரேல் மக்களை நடத்திச்செல்லும் பொழுது இஸ்ரேல் மக்கள் தங்கள் கழிவுகளை மண்ணினால் மூடு என்று அறிவுறுத்தப்பட்டது. 


                கிறிஸ்த்துவமக்களும், முஸ்லீம் மக்களும் மரணம் ஆன தங்கள் இனத்தவரை புதைத்துத்தான் அடக்கம் பண்ணுவார்கள்.  எரிக்க மாட்டார்கள். 


                 நம் உடலில் அவ்வப்போது உடல் செல்கள் இறக்கின்றன பிறகு புதிய செல்கள் தோன்றுகின்றன 


                 இறந்தால் மண்ணில் அடக்கம் பண்ணனும் என்ற கூற்றுபடி இறக்கின்ற உடல் செல்களும் அடக்கம் பண்ணப்பட்ட வேண்டுமா?


                 உதிர்கின்ற நம் தலை முடி, வெட்டப்படுகின்ற நகம், எச்சில், சளி, அடிபட்ட ரத்தம் இழந்த இவைகள் இறந்தவை தானே ஆகவே இவைகளை நல்ல அடக்கம் பண்ணப்பட்ட வேண்டும் அல்லவா


                  விளைந்தவைகளை பலி செலுத்தும்பொழுது நல்லவைகளை கொஞ்சம் பலி செலுத்திவிட்டு மீதியானவைகளை நாம் பயன்படுத்தலாம்.


                 அது போல் உதிர்கின்ற நம் தலை முடி, வெட்டப்படுகின்ற நகம், எச்சில், சளி, அடிபட்ட ரத்தம் இழந்த இவைகள் இறந்தவை தானே 


ஆகவே இவைகளில் சிறிதாவது அடக்கம் பண்ணப்பட்ட வேண்டும் என்ற பலி செலுத்தலாமே.   


                 பலி செலுத்த, பலிசெலுத்துவதற்குரிய பர்தா என்ற விருத்தசேனம் கடைபிடித்தே இறந்த செல்களான (நகம், முடி....) அடக்கம் பண்ணலாமே 


                அரசியல்வாதிகள் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என்கிறோம். 


                நாம் மட்டும் ஒழுங்கா சாலையில் போகாமல் ரோட்டை அடைத்துக்கிட்டு ஆக்கிரமிப்பு செய்கிறோம் விபத்து ஏற்படும்  படி. 


                குழந்தைகளை ஆக்கிரமிப்பு செய்கிறோம் அவர்களின் சுதந்திரத்தை தேவையில்லாதபடி பறிக்கும்படி.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty மிச்சம்

Post by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:30 pm

மிச்சம் 


           கடவுள் சொத்தை மிச்சம் பண்ணுவீங்களா?


           காச மிச்சம் பண்ணனும் என்போம்


           மின்சாரத்தை மிச்சம் பண்ணுங்கள் என்பார்கள்.


           திருமணத்தில் திராட்சை ரசம் மிச்சம் 


           மலை பிரசங்கத்தில் வந்திருந்த மக்கள் சாப்பிட்டு கூடைகளில் 
           உணவு மிச்சம் 


           பலர் இன்று வேலை இல்லாத பட்டதாரிகளாக இருப்பதற்கு 
   
           கடவுளுடைய சொத்து மிச்சம் ஆவதற்காக இந்த போராட்டம் 


           வேலை இல்லாத பட்டாதாரிகளாக இல்லாமல் எல்லாருக்கும் 
           நல்ல வேலை கிடைத்தால் 


           எல்லாருக்கும் வருமானம் அதிகமாகும் 


          வருமானம் அதிகமானால் விரும்பியதை எல்லாம் வாங்குவோம் 


          அப்படி வாங்கினால் கடவுளுடைய சொத்து மிச்சம் ஆகாது. 


          கடவுளுடைய சொத்து மீன், இறைச்சிகள் அதிகம் சாப்பிடுவோம் 


          அதனால் ஆடும், மாடு, மீன், கோழி இனங்கள் அழியும். 


          கடவுள் சொத்து மிச்சம் ஆகாது 


          சுற்றலா என்ற பெயரில் இயற்கையை நாசம் பண்ணுவோம்.      


          ஹைட்ரோ கார்பன் திட்டம் வேணாம், மீத்தேன் திட்டம் வேணாம் 


          ஆனால் எப்படியாவது மின்சாரம் தட்டுப்பாடு இருக்கக்கூடாது
          எரிவாயு தட்டுபாடு இருக்க கூடாது மானியம் கிடைக்கணும்


          வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம் என்று சொல்லும் நாம் 


          வீட்டுக்கு வீடு நம் கழிவுகளையே  மின்சாரம், எரிவாய்வும் நாமே 
          தயாரித்து தன்னிறைவு பெற்றால் 
  
          ஹைட்ரோ கார்பன் திட்டம்,  மீத்தேன் திட்டம் கொண்டு 
          கிடைக்கும் எரிவாய்வு ஒரு பகுதியில் பத்து வருடத்திற்கு 


          கிடைக்கும் ப்ராஜெக்ட்டாக இருந்தால் நமக்கு நாமே மின்சாரம்,  
          எரிவாய்வு தன்னிறைவால் இன்னும் இருபது வருடத்திற்கு 
          கிடைக்கும் படி மிச்சம் பண்ணலாமே 


          ஹைட்ரோ கார்பன் திட்டம்,  மீத்தேன் திட்டம் இதனால் மட்டும் 
          நிலம் வீணாகாது.        


          நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சினாலும் 
          அந்த பூமி பாழ்ப்படும்


          நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சினால் பூமி எரி குழம்பு பாதிப்பும் 
          இருக்கும்  அதனை தவிர்க்க 


         கொஞ்சம் குறைவான பாதிப்பாக 


         ஹைட்ரோ கார்பன் திட்டம்,  மீத்தேன் திட்டம் இருக்கும் என்பதால் 
         இத்திட்டம் செயல்படட்டுமே 


         சூறை காற்று, புயல் என்று கேள்வி பட்டிருப்போம் 


        அதுபோல் நிலத்தடி நீர் சூறையாடப்பட்டால் தவறு தானே 
      
        தென்றல் இனிமையாக இருக்கும்


        புயல் சூறை காற்று பாதிப்பு தானே 


        நிலத்தடி நீரை காற்றின் தென்றலை போல் பயன்படுத்தினால் 
        நன்றாக இருக்கலாம்  


       நிலத்தடி நீரை புயல் சூறை காற்றை போல் பயன்படுத்தினால் 
       நன்றாக இருக்குமோ 


       ஜெயலலிதா அதிகார துஷ் பிரயோகம் செய்தார் 


      சசிகலா அதிகார துஷ் பிரயோகம் செய்தார் 


      கலைஞர் அதிகார துஷ் பிரயோகம் செய்தார்


      காவல் துறை அதிகார துஷ் பிரயோகம் செய்தனர் 


      அதுபோல் எதில் தன்னிறைவு பெறவேண்டும் என்று 
      கணக்கில்லாமல் 


       தனிமனிதர்கள் நாமும் அதிகார துஷ் பிரயோகம் செய்வதில் 
       தன்னிறைவு பெறும்படி


       நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு powerful மோட்டரை வைத்து 
       powerful ட்ரில்லர் வைத்து பூமியின் ஆழத்தில் உள்ள நீரை 


       சூறையாடும்படி அதிகார துஷ் பிரயோகம் மான அதிகார ful 
       செய்வதற்கு  மோட்டார் ட்ரில்லர் வடிவமைத்து 


       அழகு காட்டுகிறோம். அந்த அழகு நடன மாடுகிறது.


       அந்த நடனம் சிவனின் உத்தர தாண்டவமா?




ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளரும் 


           ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளரும் என்பார்கள்.


            ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்து புண்ணியம் சேர்த்தால் தன் பிள்ளையின் சந்ததிக்கு நாம் சேர்த்த புண்ணியம் நன்மை செய்யும்.


             என்னதான் தன் பிள்ளைய மட்டும் கொஞ்சி, கொஞ்சி வளர்த்தாலும் உனக்கும், உன் பிள்ளையின் மூதாதையர் பாவ கணக்கு 


நன்மையால் சரிகட்டப்படவில்லையென்றால் உன் பிள்ளை மற்றும் சந்ததிக்கு சாபமும், தீமையும் தொடரும் 


               சோத்துள்ள உப்ப போட்டு சாப்பிடுறியா? சூடு, சொரணை இல்ல            
வாங்கின கடனை வட்டியும், முதலுமா கொடுத்து கணக்க சரிக்கட்டிட்டு அப்பறம் சாப்பிடு.  உனக்கெல்லாம் சோறு ஒரு கேடா?


                ரோசம் மற்றும் உணர்வு உள்ளவர்கள் நாம கஞ்சி தண்ணி குடிச்சாலும் பரவாயில்லை முதல இந்த கடனை அடைச்சிடனும் என்பார்கள் 


                நம் மூதாதையர் செய்த கொடுமைகள், அக்கிரமங்கள் கொலை, கற்பழிப்பு ஆகிய அக்கிரம கணக்கை மாற்றனும்.


               நம் மூதாதையர் செய்த அக்கிரமங்களை நீக்க நம் மூதாதையர் பட்ட கடனை பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளையின் சந்ததிகளிடம் அன்பு காட்டி நம் சாபத்தை போக்க வேண்டும். 


               ஆம். ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளரும்.            


ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்து புண்ணியம் சேர்த்தால் தன் பிள்ளையின் சந்ததிக்கு நாம் சேர்த்த புண்ணியம் நன்மை செய்யும்.


            ஆயிரம், ஆயிரம் தலைமுறைக்கும் நம்மை விசாரிப்பவர் இறைவன். 


              தன் மூதாதையர் தந்த பாவம் போதாதுன்னு நாமும் நம்முடைய செல்வாக்கினால் ஒடுக்கப்பட்டோரை இன்னும் ஒடுக்கினால் நமக்கு பாவ போராட்டம்தான். 


             இது ஒரு சின்ன உதாரணம் .


             அதாவது தான் சுயநலத்தோடு வாழ்ந்து நிறைய சம்பாதித்து 


தன் மகளை திருமணம் பண்ணிக்கொடுக்க 50 பவுன் நகை இன்னும் சொத்தெல்லாம் வைத்திருந்தாலும் 
                
               வருகிற வரன் எல்லாம் 100 பவுன் வேணும் என்று கேட்பார்கள் 
ஆம் அதையும் செய்து திருமணம் பண்ண சம்மதித்தாலும் மாப்பிள்ளை மோசமான கேரக்ட்டர் ஆக இருப்பான். 


மற்றவர்களுக்கு உதவி செய்தும்,  புண்ணியம் சேர்ப்பவனும் 40 பவுன் வைத்திருந்தாலும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வருகிறவர் 


உங்களால் முடிந்ததை செய்யுங்கள், கட்டிய சேலையோடு வந்தாலும் 


பரவாயில்லை என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு பெண்ணை நேசித்து வாழ்பவனை இருப்பவன் மாப்பிள்ளையாக வருவான்.




சுயநலமுள்ளவனுக்கு தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை கூட அமையலாம் 


தன் கொள்ளு பேத்திக்கு சீரழிவு வந்தால் 


கொஞ்சம் உன் மூதாதையரால் புண்ணியம் அமைந்து உன் மகள்  வாழ்க்கை நன்கு அமைந்திருக்கலாம் 


ஆனால் உன் அக்கிரமத்தை உன் மகளுக்கும் கற்று கொடுத்தால் உன் பேத்தி வாழ்க்கை சாபமாகும்.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty வேண்டுதலை-பொருத்தனை

Post by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:31 pm

வேண்டுதலை-பொருத்தனை


            எனக்கு மொட்டை போடனும் என்ற வேண்டுதலை இருக்கு.


            எனக்கு எடைக்கு எடை வெள்ளி காணிக்கை செய்யனும் என்ற வேண்டுதலை இருக்கு.


            நான் பாதயாத்திரை செய்யனும் என்ற வேண்டுதலை இருக்கு. 


            நான் 10 வருடத்திற்குள் ஐந்து லட்சம் காணிக்கை செய்யனும் என்ற பொருத்தனை செய்திருக்கிறேன் 


            அன்னதானம் செய்யனும் என்ற வேண்டுதலை இருக்கு என்றெல்லாம் சொல்வார்கள்.


            கடவுளுக்கும் வேண்டுதலை இருக்கு தனது அன்பான வார்த்தையினால் அனைவரையும் தேற்றனும் தனது சந்தோசத்தை நமக்கு தரனும் என்று. 


           தன்னுடைய இப்படிப்பட்ட வேண்டுதலையை அல்லது பொருத்தனையை கடவுள் எப்பொழுது நிறைவேற்றுவார்.


           சீடர்கள் இயேசுவின் நாமத்தினால் பேய்களை ஓட்டினார்கள். 
மந்திரவாதிகளும் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டும்பொழுது 
பேய்கள் ஓடாமல் மந்திரவாதிகளை எதிர்த்தன. 


           இயேசு என்ற வார்த்தையின் விசுவாசம் மந்திரவாதிகள் அறியவில்லை. 


           அதுபோல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்ற வார்த்தையின் விசுவாசம் அறிந்தவர்கள் மட்டுமே அதன் பலனை அடைவார்கள். 


             நீ காணிக்கை செய்யும்பொழுது உன் சகோதரனுடன் ஒப்புரவு இல்லை என்றால் அவனோடு சமாதான ஒப்புரவாகி காணிக்கை செலுத்து என்பதை விசுவசித்தவர்கள் அதன் பலனை அடைவார்கள். 


              ஸ்தோத்திரம், அல்லேலூயா, நன்றி என்பதன் வார்த்தையின் விசுவாசம் அறிந்தவர்கள் அதன் பலனை அடைவார்கள். 
               
           சீடர்கள் இயேசுவின் நாமத்தினால் பேய்களை ஓட்டினார்கள். 
மந்திரவாதிகளும் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டும்பொழுது 
பேய்கள் ஓடாமல் மந்திரவாதிகளை எதிர்த்தன. 


           இயேசு என்ற வார்த்தையின் விசுவாசம் மந்திரவாதிகள் அறியவில்லை. 
                   
            அதுபோல் ஸ்தோத்திரம், அல்லேலூயா, நன்றி என்பதன் வார்த்தையை மந்திரவாதிகள் போல் அறிந்திருந்தால் பலன் இல்லை. 


            ஒரு பேயை 10 கிலோமீட்டர் தூரம் ஓட்டவேண்டுமானால் 10 கிலோமீட்டர் தூரம் வரை இயேசுவின் நாமம், இயேசுவின் நாமம் என்று சொல்லிகொண்டே இருந்திருப்பார்களா இயேசுவின் சீடர்கள் ஒரே முறை இயேசுவின் நாமத்தினால் உன்னை துரத்துகிறேன் என்று சீடர்கள் சொல்லியிருப்பார்களா?


            சமையலில் உணவில் உப்பை சேர்க்க வேண்டுமானால் எவ்வளவு சேர்ப்போம். 


           சமையலுக்கு அரிசியை எவ்வளவு சேர்ப்போம்,  தண்ணீரை எவ்வளவு சேர்ப்போம். மிளகாய் தூள் எவ்வளவு சேர்ப்போம். 


           அதுபோல் ஸ்தோத்திரம், அல்லேலூயா, நன்றி என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து திருப்திகரமாக சொல்லலாமே. சமையலை போல 


            நம்முடைய திருப்திகரம் எவ்வளவோ அவ்வளவு சொல்லலாம். 


            காணிக்கைக்கு பணம், காசு கொடுப்பதில் எவ்வளவு அளவு திருப்திகரம் இருக்கு.


             வாஷிங் மெஷினில் துணிகளை போட்டால் அது ஆட்டமேட்டிக்கா துவைத்து தரும் அதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு தூரம் ஓடி தானாக நின்று விடும்.


            ஸ்தோத்திரம் தானே அது சொல்லிகிட்டே இருக்கலாம் அது ஈஸி 
என்று அதை மட்டும் குறிவைத்து சொல்லிவிட்டு, தேவனுடைய விருப்பத்திற்கு வெகு தூரம் ஆக இருந்தால்


            ஸ்தோத்திரத்தை ஒலி பதிவு பண்ணி (ரெகார்ட்) எப்ப பிரச்சனையோ அப்பொழுது எல்லாம் ஆன் பண்ணி விட்டுட்டு நாம் பிரீ ஆகிடலாமே 


             வாஷிங் மெஷின் துணி துவைப்பது போல் - சிந்திப்போம்.




கல்யாணம் ஆனவர் கல்யாணம் 


       கல்யாணம் ஆனவர் கல்யாணம் ஆகாதவர் போலவும்
       கல்யாணம் ஆகாதவர் கல்யாணம் ஆனவர் போலவும் 


       இச்சொற்றொடரை வைத்து ஒவ்வொன்றின் பங்கீட்டில் 
      முடிவெடுத்து சமாதானத்திற்கான வழி பார்ப்போம்


       ஏழை ஆனவர் ஏழை இல்லாதவரை போலவும் 
       ஏழை இல்லாதவர் ஏழையை போலவும்
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty தசம பாகம் செலுத்துதல்

Post by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

     தசம பாகம் செலுத்துதல் 


       நம்முடைய வருமானத்தில் தசமபாகம் செலுத்துதல் 
 
       நம்முடைய ஒவ்வொரு பங்கீட்டை பணம் என்ற அலகால் அளந்து 
       பண்டபரிமாற்றத்தை செய்கிறோம். 


       பண்டபரிமாற்றத்தில் 
       பண்டங்களாக உணவு பொருள்கள், உடை, உறைவிடம், உழைப்பு
       அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி
       நகைச்சுவை, பட்டிமன்றம், திரைப்படம் என்றெல்லாம் 


       இவைகள் சம்பந்தப்பட்டதை பணம் ஆக தசமபாகம்    
       பரிமாறப்படுகிறது.         


       தசம பாகம் ஆக பெறப்பட்ட பணம் பண்டங்களாக உணவு 
       பொருள்கள், உடை, உறைவிடம், உழைப்பு
       அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி, ஆலயம் 
       எழுப்புதல், ஆலய கட்டுமான பொருள்கள், ஆலய கட்டுமான கூலி
       நகைச்சுவை செலவழிக்கப்படுகிறது.
 
       உணவு பொருள்கள், உடை, உறைவிடம், உழைப்பு
       அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி
       நகைச்சுவை, பட்டிமன்றம், திரைப்படம் என்றெல்லாம் உள் மீட்சி 
       திறன் பெற்று பணம் ஆகிறது. 


       பணம் வெளி மீட்சி திறன் பெற்று உணவு பொருள்கள், உடை
       உறைவிடம், உழைப்பு, அறிவு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு
       மன மகிழ்ச்சி, நகைச்சுவை, பட்டிமன்றம், திரைப்படம் 
       என்றெல்லாம் மாற்றம் ஆகிறது. 


       100 இறை வசனத்தில் தசம பாகம் ஆக 10 இறைவசனத்தை நாம் 
       கைக்கொள்ளலாம் அல்லது 10 இறைவசன தசம பாகம் ஆக 
       மற்றவரிடத்தில் விதைப்பதை செலுத்தலாம்.   


       ஒரு ஆண்டில் நாட்களின் தசம பாகமாக 36 நாட்கள் இறை ஊழியம் 
       செய்யலாம் அல்லது மருத்துவ சேவை செய்யலாம் 
      - ஒரு ஆண்டு 365  நாட்கள்  


       ஒவ்வொரு ஆண்டும் தசமபாக 36 நாட்களை பல்வேறு 
       நலத்திட்டங்கள் செய்யலாம் 


       இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் குடும்பம் என்ற ஜெயிலில் 
       இருந்து விடுதலை அடைந்து பலரின் கட்டுகளை விடுவிக்கும் 
       விடுதலைக்கு செயல்படுவோம். 


       அதனதன் பருவத்திற்கான வயது வரும்பொழுது அந்த அந்த தசம 
       பாகம் செலுத்துவோம் மற்றும் பெறுவோம் என்று 
       நிறைவேற்றுவோம். 




ஆண்டு நாட்களுக்கான தசம பாக நாட்கள் 36

               3
வருடம் , 4  வருடம் , 5  வருடம்  பொண்டாட்டி, பிள்ளையை விட்டுட்டு foreign (பாரின்) போறாங்க. ஏன்? வருடத்திற்கு 36 நாட்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆக முழு வீச்சில் சேவை செய்யக்கூடாது.

             
திடீர் என சம்பந்தமே இல்லாம ஏதோ ஒரு கேசில் மாட்டி ஒரு வருடம், இரண்டு வருடம் ஜெயிலுக்கு போக நேரிடலாம்.

              
ஏன் வருடத்திற்கு 36 தசம நாட்கள் இறைவனுக்காக செலவிட கூடாது

              
வருமானம் ஈட்ட 3 வருடம், 4 வருடம் வீட்டை பிரிந்து ஃபாரின் செல்லலாம்

                 
ஏன்? நாம் ஒரு கிராம முன்னேற்றத்திற்காக மக்கள் நல்வாழ்வுக்காக வருடத்திற்கு 36 தசம பாக நாட்களை செயல்படுத்தக்கூடாது.  


இறைவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டை


           தசம பாகம் என்ற வார்த்தையின் இருபுறமும் கருக்குள்ள பட்டை. 


பிளஸ் தசம பாகம்,  மைனஸ் தசமபாகம், மல்டிபிளை தசம பாகம்


மைனஸ் X  மைனஸ் மல்டிபிளை தசம பாகம், பிளஸ் x  பிளஸ் மல்டிபிளை தசம பாகம், மைனஸ் X  பிளஸ் மல்டிபிளை தசம பாகம் 


டிவிசன் தசம பாகம் மீதி, டிவிசன் தசம பாகம் ஈவு 


பிறந்த குழந்தை தனக்கு வேண்டிய பாலுக்காக சம்பாதிக்குமா ?
அந்த குழந்தை எந்த விதத்தில் தசம பாகம் செலுத்துகிறது.


இறைவன் பெயரால் அக்குழந்தைக்கு பிறரால் தசம பாகம் பெறப்படுகிறது. 


அக்குழந்தை எப்படி தசமபாகம் செலுத்துகிறது என்றால் மைனஸ் தசமபாகம் செலுத்துகிறது. 


வேதம் தசம பாகம் செலுத்து என்ற பதம் ஒரு தசம பாகம் செலுத்து என்று பொருள் அல்ல 


தசம பாகம் செலுத்து அவ்வளவுதான் 


தசம பாகம் வேறு, காணிக்கை வேறு 


தசம பாகம் செலுத்து அவ்வளவுதான்
ஒரு தசம பாகம் செலுத்து, இரண்டு தசம பாகம் செலுத்து, ஐந்து தசம பாகம் செலுத்து, மைனஸ் தசம பாகம் செலுத்து, மைனஸ் மூன்று மடங்கு தசம பாகம் செலுத்து 


வயது வந்த ஒரு அனாதை கை, கால் அடிபட்டு கிடக்கிறார்.  அவரால் சம்பாதிக்க முடியாது 


அவர் 6 மடங்கு மைனஸ் தசமபாகம் செலுத்துவார் 


அதாவது அந்த மைனஸ் ஐ மூட ஒரு லட்சத்தில் 60 ஆயிரம் அவருக்கு கொடுத்து மைனஸ் மூட பட வேண்டும். 


1௦௦௦  கோடி வருமானம் என்றால் 100 கோடி தந்து தசமபாகம் என்று 100 கோடி செலுத்த கூடாது.  900  கோடி கூட செலுத்தலாம் நிலைமையின் தீவிரத்தை பொறுத்து. அதாவது 9 தசம பாகம் (900 கோடி )   


ஒரு கிராமம் சுனாமி, அல்லது வெள்ளம் ஆகியவற்றால் பெரிய அளவில் பாதிக்க பட்டால். 


இறைவன் இப்படி சொல்கிறார் உன்னுடையதை எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடு, பின் என் பின்னே வா.  இது ஒருவகையான சூழல் 


அப்படியென்றால் 9 தசம பாகம்  கொடுப்பது சரியே


எப்படியோ மேடும் பள்ளமும் சம நோக்கு அடையலாமே
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty இன்னும் பிற, சொடுக்குங்கள்

Post by ராஜேந்திரன் Fri Mar 31, 2017 2:24 pm

இன்னும் பிற, சொடுக்குங்கள்



http://www.tamilthottam.in/t46941-4
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty Re: அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்

Post by ராஜேந்திரன் Thu Jul 13, 2017 8:27 pm

கம்பீர சத்தம்

             கம்பீர சத்தம் கேட்கும். கரங்களை தட்டி பாடுங்கள்.

              நீ முணு, முணு இன்னு சொல்லுவியோ,  உரக்க சத்தமாய்
              சொல்லுவியோ.

              உம் வார்த்தையை கேட்டு கேட்கிறவர் தன்னுடைய துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும்.

               உள்ளம் புத்துணர்வு பெற்று நம்முடைய வார்த்தையினால் உள்ளம் உயிர் பெற வேண்டும்.


               அதற்கான முயற்சிகள் எழுத்தின் வடிவமாக கூட இருக்கலாம், நம்முடைய நற்சாட்சியான் வாழ்க்கை முறையாய் கூட இருக்கலாம். 

                காது கேளாதவருக்கும் கம்பீர சத்தம் கேட்கும்.  வாய் பேசாதவரிடமிருந்தும் கம்பீர சத்தம் வரும்.

                வெறும் உரக்க சத்தமிடுவதும் மட்டும் கம்பீர சத்தம் அல்ல.

                உரக்கமாய் கெட்ட வார்த்தையாய் பேசுவார்கள் அது கம்பீர சத்தமா?

                   உள்ளத்திலே ஒரு எழுப்புதல் வேண்டும் அதற்கான சத்தம் தான் கம்பீர சத்தம் அது மெல்லிய குரலில் சொல்வதாக கூட இருக்கலாம்.

                சிலர் கீச்சு, கீச்சு என்று பேசுவார்கள்,  சிலர் பேசுவது கர, கரத்த குரலில் இருக்கலாம்.

                 நாம் எண்ணுவதுபோல் சத்தம் போட்டு பேசுவது கம்பீர சத்தம் அல்ல.  

                  உள்ளத்தில் அமைதியான சந்தோச சத்தமே கம்பீர சத்தம்.

                 ஒன்றை சொல்லி புரிய வைப்பதற்கு பல வழிகளான சத்தங்களை போன்று மாற்று வழிகள் இருக்கின்றன.

                   காது கேளாதவரும், கண் தெரியாதவரும். வாய் பேசாதவரும் கல்வி பயில வழிகள் இருக்கின்றன இவைகள் சத்தங்களை போன்ற மாற்று வழிகள்.

                    நடந்து போய் ஸ்விட்சை ஆன் பண்ண வேண்டிய சத்தம் கூட இக்காலத்தில் இல்லை.   ஆம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் டிவி ஆன் பண்ணுகிறோம்.   இது மின் சத்தம்.

                    நாம் நினைக்கும் வெறும் சத்தம் தான் கம்பீர சத்தம் என்றால்
அந்த சத்தத்திற்கு loud ஸ்பீக்கர் வைத்து volume அதிகம் வைக்கலாம். 


அதற்கு கஷ்ட்டப்பட்டு கத்த வேண்டியதல்ல.

                  மனதோடு பேசும் ஒலிதான் கம்பீர சத்தம்.

                   மனதின் இருளை அகற்ற போதிக்கும் ஒலிதான் கம்பீர சத்தம்.

                    ஒரு நாளில் ஒருவர் கம்பீர சத்தம் என்று சொல்லி ஒருவருக்கு புது வாழ்வுக்கு வழி வகுப்பதும்.

                    மென்மையாய் பேசி ஆயிரம் பேரின் வாழ்வில் புது வாழ்வு கொண்டு வருவதே கம்பீர சத்தம்.

                     அந்த சத்தம் ஒருவரை மாற்றியது.

                     இந்த மென்மை சத்தம் ஆயிரம் பேருக்கு ஊடுருவியது.
அங்கே கேட்டது ஒருவர்.  இங்கே கேட்டது ஆயிரம் பேர்.   ஆயிரம் பேரை கேட்க செய்தது தான் கெம்பீர சத்தம்.

                    ஆலயத்திற்கு சென்று உற்சாகமாய் பாடி கரங்களை தட்டி ஆராதிக்க வேண்டுமானால்.

                     கரங்கள் நன்கு தட்டுவதற்கு கரங்களை வலுப்படுத்த வேண்டுமே

                     ஆகவே வீட்டிலே நன்கு உடல், உள்ள பயிற்சிகள் செய்ய வேண்டும். 

                        வீட்டில் உடல், உள்ள பயிற்சி செய்வதும் ஆராதனைக்கான ஆயுத்தம், நம்மை தயார் படுத்துதல்  அது தனிப்பட்ட நம்முடைய உடலால் இறைவனுக்கு செய்யும் ஆராதனை.

                        வீட்டில் உடல், உள்ள பயிற்சி செய்வது ஒரு ஆராதனை.

                         கைகள் மட்டும் ஆராதித்தால் மற்ற நம் சரீரம் இறைவனை ஆராதிக்க வேண்டாமா?

                        உடல், உள்ளம், ஆன்மா எல்லாம் இறைவனுக்கே

                    மதபாகுபாடு இல்லாமல் அனைவரின் மூச்சு காற்றும் காற்றில் கலக்கும்.

                      மனிதர் அனைவரின் மதங்களும் இறைவனிடத்தில் கலக்கும்.

                    மனித நேயம் உள்ளவர்கள் தம்மை தனித்து சொல்ல வழி இல்லை.

                     கிறிஸ்த்துவத்திலே நான் பிராட்டஸ் ஸ்டாண்ட் கிருஸ்த்துவன், நான் பென்டிகேஸ்ட் கிறிஸ்த்துவன், நான் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவன்  என்று பிரித்து கொள்வர்.

                       ஒவ்வொரு பிரிவிலும் கொள்கைகள் வேறு வேறு
அது போல் இந்துவும், முஸ்லீமும் வேறு வேறு

                      இவர்களையும் அனைவரின் மூச்சு காற்றும் காற்றில் கலப்பது போல்
அனைவரின் மதங்களும் இறைவனிடத்தில் கலக்கும் படி
கிறிஸ்த்தவ இந்து, கிறிஸ்த்தவ முஸ்லீம் என்று பகுத்து எல்லாருடைய

நலன்களும் மனித நேயத்தில் அழைத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி மகிழ்வோம்.  பிராட்டஸ் ஸ்டாண்ட் கிருஸ்த்துவன், பென்டிகேஸ்ட் கிறிஸ்த்துவன், ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவன்  இந்து கிறிஸ்த்துவன், முஸ்லீம் கிறிஸ்த்துவன்.

சின்ன சின்ன பிரிவில் அடக்கும்பொழுது பெரிய பிரிவில் வார்த்தையை அடக்குவோம்.

           பெருமாள் வழி இந்து,  முருகன் வழி இந்து,  பிள்ளையார் வழி இந்து, சிவன் வழி இந்து,  கிறிஸ்த்தவ வழி இந்து,  முஸ்லீம் வழி இந்து.
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty மன்னிப்பு

Post by ராஜேந்திரன் Sat Oct 28, 2017 4:14 pm

மன்னிப்பு 


              இயேசு, சிலுவையில் தன் உயிரை தந்தையிடம் ஒப்படைக்கையில்  பிதாவே இவர்களை மன்னியும் என்றார். 


              இந்த மனிதனை மட்டும் மன்னியும், அந்த மனிதனை மட்டும் மன்னியும் என்றா சொன்னார்.  இவர்களை மன்னியும் என்றார்.


               இவர்களை என்று எண்ணும்பொழுது அனைவரையும் என்பது தெரிகிறது. 


                 இயேசுவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். 


                   ஒருவர் யேசுவிடம் எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்டதற்கு ஏழு முறை அல்ல ஏழு ஏழு முறை என்றார் அது 7 x 7 x 7 x 7 x 7x 7x 7x 7x 7x 7x 7 ........


                   ஏழு என்பது பொதுவாக முழுமை என்பதை குறிப்பதற்கு ஏழு என்ற எண்ணை குறிப்பிடுவார்கள். 


                      ஒரு வாரம் என்பது எப்படி முழுமை அடைகிறது. ஏழு நாட்களை ஒரு வாரம் என்கிறார். 


                        இதோ, உலகத்தின் பாவத்தை போக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று இயேசுவை யோவான் சொல்கிறார். 


                          உலகம் என்பது ஒரேயொரு மனிதனையா? ஏதோ ஒரு மக்கள் கூட்டத்தையா? 


                          உலகத்தின் பாவத்தை போக்கும் தேவ ஆட்டுக்குட்டி என்று ஏன் சொல்ல வேண்டும். 


                              இயேசு, எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்க செய்கிற மெய்யான ஒளி. 


                               100 ஆடுகளில் ஒரு ஆடு காணவில்லை என்றாலும் அதை தேடுபவர். 


                                 தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று ஏசுவே சொல்கிறார்.  அவர் கண்டடைந்தாரா ?


                                  நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்கிறார் இயேசு.   


                                  எல்லா மனிதருக்கும் வழி என்கிறார். 


                                  இயேசு ஜெயம் கொண்டார்.  என்றால் ஒரு மனிதரிடம் தோற்று விட்டாரா?


                            பாவம் செய்தவர்களை நரகம் என்று தண்டித்தால் யேசுவிடம் இருக்கும் சிறப்பு தன்மை என்ன.


                           தண்டிக்கும் குணம் அல்லது தண்டிப்பது நல்லது என்பது சாதாரண பிசாசே செய்கிற யோசனை இல்லையா.


                           கடவுள், பிறர் தப்பிதங்களை நாம் மன்னிக்கும் பொழுது நம் தப்பிதங்களை மன்னிப்பேன் என்கிறார்.   பிறர் தப்பிதங்களை மன்னியாது போனால் பிதாவும் மன்னியார் அதாவுது கடவுளும் மன்னியார். 


                           இப்ப மன்னிக்காத case கடவுளிடம் வருகிறது. இப்போ கடவுள் தன்னிடம் வந்த மன்னிக்காத case தப்பிதங்களை மன்னிக்காமல் போனால் கடவுளுடைய தப்பிதங்களை யார் மன்னிக்க மாட்டார்.  


                               ஒருத்தர் ஒரு பிரபுவிடம் அதிகம் கடன் வாங்கியிருந்தார். அந்த பிரபு அவரிடம் கடனை தரும்படி கேட்டார். அவர் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார் பிரபுவும் கடனை தராதற்காக தண்டிக்காமல் பொறுமையாக இருந்தார். 


                                பிரபுவிடம் கடன் வாங்கியிருந்த அந்த ஒருத்தரிடம் இன்னொருவர் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கியவர்  தரவேண்டிய அந்த கொஞ்ச கடனுக்காக அவரை தண்டித்தார். 


                                இப்படி செய்தது அந்த பிரபுவிற்கு தெரிந்தது.  தன்னிடம் கடன் வாங்கியிருந்த அந்த நபரிடம்  நான் உன்னிடம் அவ்வளவு கடனுக்காக பொறுமையாய் இருந்தேன்.  உன்னிடம் பெற்ற அந்த சிறு கடனுக்காக அவரை தண்டித்தாயே என்றார்.   


                                     இப்பொழுது உன் கடனை என்னிடம் அடைத்து விடு என்று கெடுபிடி செய்தார். 


                                      அதுபோல் கடவுள் நாம் பிறரை மன்னிக்காத பட்சத்தில் அவர் கெடுபிடி நம்மிடம் செய்தால். அவரை யார் கெடுபிடி செய்வார். 


                                அப்படி கெடுபிடி செய்பவர் ஒருவர் இருந்தால் அவரை யார் கெடுபிடி செய்வார். 


                                 அப்ப பிரச்சனையை வளர்ந்துகொண்டே போகுமா?
full  stop எப்போ. 


                        விஜயகாந்த் ஒரு திரைப்படத்தில் தப்பு செய்கிற முதல்ல அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் என்று ஒவ்வொரு துறையிலும் தப்பு செய்கிறவரைகளை ஒவ்வொருவராக சொல்வர் அது போல் இருக்கிறது. 


                           சாட்ச்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து பிரச்சனையை தீர்க்கலாம் என்பார்கள். 


                             இறைவன் சொல்கிறார்.  ஒருவனிடம் தப்பு செய்து அரசனிடம் மாட்டிக்கொள்வதை விட தானே அவனிடம் நல்மனம் பொருந்தி அரசனிடம் இருந்து தப்பிப்பானோ என்பார். 


                             அவன் நல் மனம் பொருந்தவில்லை அரசனிடம் மாட்டிக்கொண்டார்.   அரசன் அந்த விசயத்திற்கு நல் மனம் பொருந்தவில்லை என்றால்.  இந்த அரசனுக்கு இறைவன் நல் மனம் பொருந்த வில்லை என்றால்.  


                            வழி, வழியாய் வந்த இந்த பிரச்சனை கடைசியில் ஒரு மன்னிப்பினால் தான் பிரச்சனை தீரும்.  


                             தன் மகனை தண்டிப்பதால் அவன் சாகான்.  ஏசுவும் சாகவில்லை.


                             தன் மகனை தண்டிப்பதால் அவன் சாகான்.  பிரம்பை எடுப்பவன் தன் மகனை ஏற்கனவே தண்டிக்கிறான்.  


                             இதற்க்கு என்ன பொருள் தன் மகன் நல்லபடியாக வளர்க்க படுகிறான்.      பின்னடி, எதிர்காலத்தில் வரப்போகும் 


பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும்படி வளர்ப்பதற்கு தன் மகனிடம்  சிறுவயதில் பிரம்பை பயன்படுத்தியதால் அவன் ஏற்கனவே தண்டிக்கப்பட்டபடி எதிர் காலத்தில் தவறு செய்ய வில்லை.  
 
                                மனிதனே இப்படி என்றால் கடவுள் ஏற்கனவே பிரம்பை கையாடி விட்டார் .


                                நல் மனம் பொருந்தி விட்டார். 


                             இன்பமும், துன்பமும் தான் இவ்வுலகம் என்பர்.  நாம் பிறரை சொல்வது போல் அவன் கொலைகாரன், கொடுமை காரன், காம கொடூரன் என்பது எல்லாம் எப்படியிருக்கிறது. 


                             அந்த பாவியும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.  


                              நல்லவருக்கு துன்பம் வருகிறதா? இல்லையா? தீயவருக்கும் துன்பம் வருகிறது.  அதனால்தான். இவ்வுலகத்தில் மனிதனுக்கு இன்பமும், துன்பமும் உண்டு. என்று சொல்லப்படுகிறது.


                              இன்பம், துன்பம் இல்லாத இவ்வுலகம் இல்லை. ஏன் ஏசுவும் சிலுவை மரத்தில் தொங்கி துன்பம் கண்டார்.    


                           இறைவன் நல்லோருக்கும், தீயோருக்கும் தம் சூரியனை உதிக்க பண்ணுகிறார். 


                              அதாவது பாரபட்சம் பார்க்காமல் இருக்கிறார். 


                               நாம் இறந்த பிறகு பாரபட்சம் பார்ப்போரே, நரகம் என்று.  அப்பொழுது தன் சூரியன் எங்கே 


                             முதலில் இறைவனை நேசி அதற்க்கு ஒப்பாக,   தன்னைத்தான் நேசிப்பது போல பிறனையும் நேசி.


                              தனக்கு துன்பம் வந்தால் எப்படி இருக்கிறது.  அதுபோல தானே மற்றவருக்கும் என்று கருதி மற்றவருக்கு உதவி அன்பு செய்வது உண்டு. 


                               தான் எப்படி மற்றவரை கொடுமை படுத்தினோம்.  என்று கருதி மனம் வருந்தி மற்றவருக்கு செய்த கொடுமை போல் தன்னை கொடுமை படுத்தி கொள்வது.   அதாவது தன்னை வருத்தி கொள்வது. 


                            மனம் வருந்தி வந்தால் இறைவன் ஏற்றுக்கொள்வர். 


                             இப்படித்தான் இறைவன் நீதி செய்வார்.  மனிதன் ஒவ்வொருவரும் அவரவர் குற்றத்திற்கு அவரவர் மனம் வருந்துவார்.  


                               இறைவன் தண்டிக்க போவதில்லை.  இறைவன் அன்பை பார்த்தவுடன் மனிதனே தன் பாவத்திற்காக மனம் வருந்தி தன்னை தண்டித்து கொள்வான்.  


                                 நாமெல்லாம்.   அவனைப்பார் கொடுங்கோலன் அவனை இறைவன் தண்டிப்பார் என்கிறோம்.  அதாவது பிறர் தப்பிதங்களை மன்னிக்காது இருக்கிறோம்.  


                                   காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு இறைவனுக்கு அனைவரும் பிள்ளைகளே .   


                                    இறைவன் ஏற்கனவே இவ்வுலகில் பிரம்பை எடுத்துவிட்டார்.  அதாவது ஏற்கனவே பிரம்பால் அன்பு செய்ய தொடங்கி  
இதமான முத்தங்களை தருகிறார்.  அமைதி தருகிறார்.   


                                   நல்லவர்களின் தியாகங்களை கண்டு,  தீயவர்கள் தன் குற்றங்களுக்காக மனம் வருந்துவர்.   


                                  மனம் வருந்துவதுதான் அவர்கள் பெற்ற தண்டனை. 
கடவுள் தண்டிப்பவர் அல்ல.  மன்னிப்பவர்.  


                                  தான் செய்த தவறுக்கு தான் மனம் வருந்துவதான் சரியான தண்டனை.  பிறர் அவருடைய குற்றத்திற்காக தண்டிப்பது மிருக குணம்.  கடவுளும் பிறரை தண்டிக்க மாட்டார்.  தன் பிள்ளைகளை 


தண்டித்து வளர்ப்பார்.   தன் பிள்ளைகளை நாம் எப்படி தண்டிப்போம் ஒரு எதிரியை போலவா.   அது போல்தான் இறைவனும் பிறரை தன் பிள்ளையாக தண்டிப்பார்.  கண்ணுக்கு கண் , பல்லுக்கு போல் என்பது போல்.  


                               பிறருடைய கண்ணை குத்தி குருடாக்கிவிட்டால் நாம் அவருக்கு கடைசி வரை வழிகாட்டியாக இருக்க்க வேண்டும்.   அதாவது தன் கண் பார்வை கொண்டு குருடாக்கி விட்ட  அவருக்கு வழி காட்ட வேண்டும்.  குருடரான அவர் கண் செய்ய வேண்டிய பணிகளை நாம் நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.  அதுதான் கண்ணுக்கு கண்.  


                               பிறர் பல்லை உடைத்து விட்டால் நாம் உணவை மென்று அவருக்கு தர வேண்டும்.  அவர் பல் செய்ய வேண்டிய செயலை நம் பல்லை கொண்டு அவருக்கு உணவை மென்று தர வேண்டும். 


                                அது தான் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல். 


                 தீயவர் என்ன செய்வர் தன் கண் போய் விட்டால் பிறருடைய இரண்டு கண்ணையும் குருடாக்கி விடுவார். 


                       நமக்கு ஒரு பல் போனா அவருக்கு நாலு பள்ளு போகணும். 


                 மனம் வருந்தி திருந்தியவர் என்ன செய்வார்.           


அதாவது தன் கண் பார்வை கொண்டு குருடாக்கி விட்ட  அவருக்கு வழி காட்ட வேண்டும்.  குருடரான அவர் கண் செய்ய வேண்டிய பணிகளை நாம் நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். 


                               பிறர் பல்லை உடைத்து விட்டால் நாம் உணவை மென்று அவருக்கு தர வேண்டும்.  அவர் பல் செய்ய வேண்டிய செயலை நம் பல்லை கொண்டு அவருக்கு உணவை மென்று தர வேண்டும்.


                              இதுதான் மகிழ்ச்சி .  நடைமுறையில் நாம் தரும் தண்டனை துன்பம்.  கடவுள் தரும் தண்டனை மகிழ்ச்சி க்கு இட்டு செல்வது. 


பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான் 


பிரம்பை கையாடுகிறவன் தன் மகனை ஏற்கனவே தண்டிக்கிறான்


கடவுள் நம்மை ஏற்கனவே தண்டித்து விட்டாரா? இல்லை பகைக்கிறாரா?, 


இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கிற நல்லோர் சாட்ச்சியை நமக்கு முன்னுதாரணமாக பின்பற்றி நாம் வாழ  
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty நல் மனம் பொருந்து

Post by ராஜேந்திரன் Tue Nov 14, 2017 9:16 pm

நல் மனம் பொருந்து 


           இறைவனுக்கு காணிக்கை செய்யும்பொழுது உன் சகோதரனுடே பகை இருந்தால் முதலில் உன் சகோதாரனுடே  நல் மனம் பொருந்து.  பின்பு வந்து காணிக்கை செலுத்து.  


              மூன்று நிலை இருக்கிறது.   நம் சரீரம், பிறர் மனம், இறைவன் 
பிறரிடம் நல் மனம் பொருந்திவிட்டால் இறைவன் நம்மை ஏற்பார்.


               பிறர் மனமும், இறைவனும் நம்மை ஏற்பதற்கு நம் சரீரத்திடம் நல் மனம் பொருந்த வேண்டும். 


                 அல்சர் இருக்கும்பொழுது இறைவனுக்காக விரதம் இருக்காதே
முதலில் அல்சரிடம் இருந்து மீண்டு உடலில் நல் மனம் பொருந்து.  


                   இன்னொரு உதாரணம் உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடு அப்பொழுது பிறர் கண்ணில் உள்ள தூசியை எடுப்பதற்கு வகைபார்ப்பாய்.


                உடல், பொருள், ஆவி மூன்றும் ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும்.  


                 உன் சகோதரனுடே இடர்பாடு இருந்தால் முதலில் உன் சகோதரனுடே நல் மனம் பொருந்து.   


                  உனக்கே ஏழு பேரு வேணும்.   இதுல கை நீட்ட முடியல, கால நீட்ட முடியில இதற்க்கு அடுத்தவரை தொந்தரவு பண்ணனுமா?


                   அடுத்தவர்களுக்கு சிரமத்தை கொடுக்கிறத குறைக்கனும்.  அதற்க்கு நாமும் முயன்று அடுத்தவருடன் நல் மனம் பொருந்தனும்.


                   நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.  ரொம்ப ஆரோக்கியம்னு சொல்லிக்கிட்டு அதுல மூழ்க கூடாது. 


                  நமக்கு உள்ள தாலந்த சம்பாதிக்கனும்.   வட்டிக்கு உடுற மாதிரி body builder ஆகா கூட இருக்கலாம். 


                  ஆனா துருப்புடிச்சி  ஒன்னுத்துக்கும் ப்ரொயஜனமே  இல்லாமல் இருக்க கூடாது. 
ராஜேந்திரன்
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 48
Location : Mind my own Business

Back to top Go down

அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம் Empty Re: அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum