தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by அ.இராமநாதன் Wed Mar 01, 2017 10:07 pm

[You must be registered and logged in to see this image.]


-
தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு 
யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது 
தெரியவந்துள்ளது.

இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும், 
மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும் 
பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இந்தத் தகவல்கள், வனத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச் 
சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டதில் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள் 
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 
உயிரிழந்துள்ளன. கோவையில் மட்டும் ரயில் மோதியும், கிருமித் 
தொற்று காரணமாகவும் கடந்தாண்டு 22 யானைகள் 
உயிரிழந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் 
ஆண்டு வரை உயிரிழந்துள்ள புலி மற்றும் சிறுத்தைகளின் 
புள்ளிவிவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகக் காடுகளில் 2003 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 
53 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைக்கப்பட்டு 
9 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மின்வேலி மின்சாரத்தால்
ஒரு புலியும், ஆட்கொல்லி என சுடப்பட்டு 3 புலிகளும் 
உயிரிழந்துள்ளன. 

தமிழகக் காடுகளைப் பொருத்தவரை 2014-ஆம் ஆண்டு 
கணக்கெடுப்பின்படி 229 புலிகள் உள்ளன.

தமிழகக் காட்டின் பரப்பளவு சுருங்குவதால் பல மலைக் 
கிராமங்கள் சிறுத்தையின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. 
இதில் 2001 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் 207 சிறுத்தைகள் 
பலியாகியுள்ளன. இதில் 201 சிறுத்தைகள் இயற்கையான 
முறையில் உயிரிழந்துள்ளன.

யானைகள் உயிரிழப்பு:

-
தமிழகத்தில் கணக்கெடுப்பின்படி 4,200 யானைகள் இருக்கலாம் 
எனத் தெரிவிக்கப்படுகிறது. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக 
யானைகள் கொல்லப்படுவதைவிட, மின்சாரம் தாக்கி அதிக 
அளவில் யானைகள் உயிரிழக்கின்றன.

முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, 
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் 
ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் 
காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன. 2010 முதல்
2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் மின்சாரம்
தாக்கியே உயிரிழந்துள்ளன.

யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்பதற்குக் காரணம் என்ன? 


விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க
9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்
படலாம்.

இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் 
பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். 
ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயத்தால் மீண்டும் 
வேலி அருகே வராது. 

தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், 
பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த 
அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப்
பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதல் வாட்ஸில்
மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதனால் வன விலங்குகள் 
மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன என வனத் துறை அதிகாரிகள் 
தெரிவிக்கின்றனர்.


[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty Re: தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by அ.இராமநாதன் Wed Mar 01, 2017 10:07 pm

கொல்லப்படும் புலிகள்: 
2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 
அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 
15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. 
இதில் 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், 2015- ஆம் ஆண்டில் தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே 
உயிரிழந்துள்ளன. புலிகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து 
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. புலிகளின் உயிரிழப்பு 
தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின் 
எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வன்ததுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty Re: தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by அ.இராமநாதன் Wed Mar 01, 2017 10:07 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழகத்தில் மனிதன் - வன விலங்குகள் மோதல் காரணமாக 
2006-2015-ஆம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோர் 
பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் யானை தாக்கி 200 பேர் 
உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி 
மாவட்டம் ஓசூரில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 
தமிழக அரசு இதுவரை ரூ.19 கோடியை நிவாரணத் தொகையாக 
வழங்கியுள்ளது.

முதுமலையில் வறட்சி இல்லை!
--
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு நதி 
வற்றாததால், வறட்சி பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று
தலைமை வனப் பாதுகாவல் (நீலகிரி) மற்றும் திட்ட இயக்குநர்
(மலைப் பகுதிகள்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் பரவலான 
வறட்சி முதுமலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 
முதுமையில் பாயும் மாயாறு நதி வற்றவில்லை. இதனால் வன 
விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏதுமில்லை.

ஆனால், காப்பகத்தில் இருக்கும் நீர் குட்டைகள் வறண்டுவிட்டன. 
இந்தக் குட்டைகள், லாரிகள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு 
நிரப்பப்படுகின்றன. யானைகளுக்கு இப்போதிருக்கும் நீர் 
தேவையான அளவைவிட சற்று குறைவாக இருக்கிறது.

மேலும், யானை ஓரிடத்தில் மட்டும் இருக்கக் கூடிய விலங்கு இல்லை 
என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள் 
முதுமலையில் தனது குட்டிகளுடன் வலம் வந்துகொண்டுதான் 
இருக்கின்றன. மேலும், கோடைக் காலங்களில் உணவும், நீரும் தேடி 
முதுமலை காப்பகத்தை விட்டு வெளியே செல்லும் யானைகள் 
ஆகஸ்ட் மாதத்துக்கு பின்பு காப்பகத்துக்கு திரும்பும். 
இது வழக்கமான நிகழ்வுதான் என்றார் ஸ்ரீனிவாஸ் ரெட்டி.

--------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Empty Re: தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum