தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சுட்டு விரல் சொர்க்கம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
சுட்டு விரல் சொர்க்கம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
சுட்டு விரல் சொர்க்கம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு : நிகழ் பதிப்பகம், சென்னை-50 பேச : 044 4951230
புத்தக தொடர்புக்கு : 98941 16580, 0422 4516580
70 பக்கங்கள் விலை : ரூ.50
*****
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக அமைந்துள்ளது, பாராட்டுக்கள். காதல் கவிதைகள் என்றும் வரவேற்கப்படுகின்றன. வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கும் கவிதைகளாக காதல் கவிதைகளே உள்ளன. இந்நூல் முழுவதும் காதல் கவிதைகள்.
நூல் ஆசிரியர் கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி காதல் கவிதைகளை புரியாத புதிராக எழுதாமல் பொழிப்புரைம, தெளிவுரை தேவைஅல்லாத அளவிற்கு எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி இருப்பதற்கு முதல் பாராட்டு.
யாதுமாகி !
உன் சுந்தர வதனத்திலும்
சொக்குப்பொடிப்
பேச்சிலும்
கிறங்கி கிறுக்குப் பிடித்து விட்டது!
யாதுமாகி தெரிகிறாய் எங்கும்!
காதலித்தவர்கள் கட்டாயம் உணர்வார்கள். காதல் உணர்வை அப்படியே கவிதை ஆக்கி இருப்பது சிறப்பு. காதலால வரும் இன்பம் சொல்லில் அடங்காது. காதலித்தவர்கள் மட்டுமே உணர்ந்திடும் உன்னத சுகம் என்பதை உணர்த்திடும் கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
என்ன நிலை இது!
எங்கிருந்தாய் எத்தனை நாள்!
எப்படி என்னை
எட்டிப் பிடித்தாய்
பட்டென மொட்டு வீழ்ந்த தாமரை
பார்த்த சூரிய தரிசனம் நீ
தொடங்குகிறது வாழ்க்கை
புதிதாய்
கூப்பிடு தூரத்தில் சொர்க்கம்!
வாயில் சாவியுடன் நீ!
கூப்பிடு தூரத்தில் சொர்க்கம் உள்ளதாம், சொர்க்கவாயிலின் சாவியுடன் காதலன் காத்திருக்கிறாராம். நல்ல கற்பனை. ஆன்மீகவாதிகள் வானத்தில் உள்ளது சொர்க்கம் என்கின்றனர். நூலாசிரியர் கூப்பிடு தூரத்தில் மண்ணில் உள்ளது சொர்க்கம் என்கிறார்.
கண்டு கொள்
உன்னை நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும் சேமிக்க ஆசை
ஒவ்வொன்றிலும்
நீயே தெரிகிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
கேட்கும் ஒலி எல்லாம்
பாரதியின் காதல் புரிகிறது. !
மகாகவி பாரதியாரின் காதல் வரிகளோடு காதல் உணர்வை கவிதைகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.
சின்ன சொர்க்கம்!
திணறடித்து திக்குமுக்காட
வைத்தும்
ஆழ்ந்த சுவாசம் காட்டும் அந்த
நேரத்தின் வாசனையில்
கலந்து கரைந்து கரைந்து
போதும் இந்த சின்ன சொர்க்கம் !
வாழ்க்கையை ரசித்து, காதல் செய்து, அன்பு செலுத்தி வாழ்ந்தால் சொர்க்கத்தை மண்ணிலேயே காணலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.
என்ன நிலை இது! என்ற கவிதை 14ஆம் பக்கத்திலும், 29ஆம் பக்கத்திலும் இருமுறை பிரசுரம் ஆகி உள்ளது, அடுத்த பதிப்பில் ஒன்றை நீக்கி விடுங்கள்.
தோள் சாய்த்துக் கொள்
துயில் மறந்த மழைஇரவு
கொட்டும் மழையில் கொஞ்சமும்
கரையாத நினைவுகள் சுமக்க
இலகுவாய்
எடையற்ற பாரம் தான்
இறக்கி வைக்காதே
இறுகப்பற்றி
தோள் சாய்த்துக் கொள்!
காதலியே காதலனை தோள் சாய்த்துக் கொள் என்று உரைப்பது வரம். கவலைகளைக் காணாமல் போக வைக்கும். அனுபவித்தவர்கள் அறிந்திடும் அற்புத சுகம். கொடி படர கொம்பு கிடைத்தது போன்றது காதலியின் ஆறுதல். அரவணைப்பு, கதகதப்பு.
துளிர்க்கட்டும் உயிர் !
கரிசனையை எடுத்துக்கொள்
கைவிரலைக் கொடுத்தனுப்பு
நீ தொட்ட
வாசனை நுகர்ந்து
துளிர்க்கட்டும் என்
உயிர் மீண்டும் !
கற்பனை தான் என்றாலும், காதலியின் கோணத்திலிருந்து படித்துப் பார்த்தால் உண்மையான உணர்வு என்பது விளங்கும்.
காய்ச்சல் இன்று
தணலாய கொதிக்கும்
உடலுக்கு தெரியும்
காய்ச்சல் என்று
வேகிறதா குளிர்கிறதா மனதுக்கு
விளங்கவில்லை !
தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள
உன் மீது
வழக்கு உணடு
வாக்கு சாதுர்யத்தில் உன்னை
வெல்ல முடியாது தான்!
காதலை மானே, தேனே, மயிலே, குயிலே என்ற பழைய சொற்களைப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக “தொடர்பு எல்லைக்கு அப்பால்” என்று அலைபேசியில் கேட்ட சொற்களைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. காதலன் பேச்கில் சிறந்தவன், அவனை வெல்ல முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது சிறப்பு.
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் தலைவியின் கூற்றை நினைவூட்டும் விதமாக கவிதைகள் உள்ளன. பழமைக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
வீரன் தான் !
ஒற்றைச் சொல்லில் வீழ்த்தும்
வீரன் தான் நீ
பத்ம வியூகத்துக்குள் வந்து விட்டாய்
இனி திரும்ப முடியாது கள்வனே !
பத்ம வியூகம் என்ற புராண நிகழ்வை நினைவூட்டி காதலனை உள்ளத்தில் சிறை வைத்து விட்டதை கவிதை உணர்த்துகின்றது. பாராட்டுகள்.
நீ தான் நான்
எத்தனை பொக்கிசங்களைப்
பதுக்கி வைத்திருக்கிறாய் என்னுள்
எடுத்து வைத்து
செல்வளிக்கிறாய் தாராளமாய்
எனக்கே பொறாமை
என் மேல்
பங்கு கொடுக்கிறாய். இருந்தும்
பாதி கூட நிறையவில்லை
கஞ்சப்பயல் நீ !
காதலின் கூடலை மிக கண்னியமாக, அதே நேரத்தில் மிக நுட்பமாக கொடுப்பதும், எடுப்பதும் காதலுக்கு அழகு என்ற விதத்தில் கவிதையில் உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள். காதலனை கஞ்சப்பயல் என்பதும் புதிய யுத்தி.
போக்கிரி தான்
உன்னை மறைக்க மட்டுமே
சொற்களுக்கு
சிலம்பாட்டம்
முழுதாய்
தெரியாமல் மூடி மூடி
மறைத்தும் ஒளித்தும்
இருட்டடைப்பு செய்தாலும்
முகம் காட்டி விடுகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் அகத்தில் உள்ள காதலன் முகத்தில் தெரிந்து விடுகிறான் என்கிறார், சிறப்பு.
தாம்பத்யம்!
நீ தலைவன் என்றானதினால்!
நான் தலைவியானேன்
மற்றபடி உனக்கு மட்டுமே
உரியவள் தான்
பெற்றவர்களிடமிருந்து
அழகாய்
பிரித்து பதியம் செய்து விட்டாய்
என் தோட்டத்தில்!
காதல் வயப்பட்டவுடன் இருபது ஆண்டுகள் வளர்த்த பெற்றோரைப் பிரிந்து காதலன் வசம் செல்வது காவியக் காலம் முதல் கணினிக் காலம் வரை நடக்கும் ஒன்று. சங்க இலக்கியத்திலும் உண்டு உடன்போக்கு. ‘பிரித்து பதியம் செய்து விட்டாய்’ புதிய சொல்லாட்சி. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
நூல் ஆசிரியர் : கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு : நிகழ் பதிப்பகம், சென்னை-50 பேச : 044 4951230
புத்தக தொடர்புக்கு : 98941 16580, 0422 4516580
70 பக்கங்கள் விலை : ரூ.50
*****
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனிபாரதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக அமைந்துள்ளது, பாராட்டுக்கள். காதல் கவிதைகள் என்றும் வரவேற்கப்படுகின்றன. வாசகர்களால் பெரிதும் விரும்பிப் படிக்கும் கவிதைகளாக காதல் கவிதைகளே உள்ளன. இந்நூல் முழுவதும் காதல் கவிதைகள்.
நூல் ஆசிரியர் கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி காதல் கவிதைகளை புரியாத புதிராக எழுதாமல் பொழிப்புரைம, தெளிவுரை தேவைஅல்லாத அளவிற்கு எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி இருப்பதற்கு முதல் பாராட்டு.
யாதுமாகி !
உன் சுந்தர வதனத்திலும்
சொக்குப்பொடிப்
பேச்சிலும்
கிறங்கி கிறுக்குப் பிடித்து விட்டது!
யாதுமாகி தெரிகிறாய் எங்கும்!
காதலித்தவர்கள் கட்டாயம் உணர்வார்கள். காதல் உணர்வை அப்படியே கவிதை ஆக்கி இருப்பது சிறப்பு. காதலால வரும் இன்பம் சொல்லில் அடங்காது. காதலித்தவர்கள் மட்டுமே உணர்ந்திடும் உன்னத சுகம் என்பதை உணர்த்திடும் கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
என்ன நிலை இது!
எங்கிருந்தாய் எத்தனை நாள்!
எப்படி என்னை
எட்டிப் பிடித்தாய்
பட்டென மொட்டு வீழ்ந்த தாமரை
பார்த்த சூரிய தரிசனம் நீ
தொடங்குகிறது வாழ்க்கை
புதிதாய்
கூப்பிடு தூரத்தில் சொர்க்கம்!
வாயில் சாவியுடன் நீ!
கூப்பிடு தூரத்தில் சொர்க்கம் உள்ளதாம், சொர்க்கவாயிலின் சாவியுடன் காதலன் காத்திருக்கிறாராம். நல்ல கற்பனை. ஆன்மீகவாதிகள் வானத்தில் உள்ளது சொர்க்கம் என்கின்றனர். நூலாசிரியர் கூப்பிடு தூரத்தில் மண்ணில் உள்ளது சொர்க்கம் என்கிறார்.
கண்டு கொள்
உன்னை நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும் சேமிக்க ஆசை
ஒவ்வொன்றிலும்
நீயே தெரிகிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
கேட்கும் ஒலி எல்லாம்
பாரதியின் காதல் புரிகிறது. !
மகாகவி பாரதியாரின் காதல் வரிகளோடு காதல் உணர்வை கவிதைகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்.
சின்ன சொர்க்கம்!
திணறடித்து திக்குமுக்காட
வைத்தும்
ஆழ்ந்த சுவாசம் காட்டும் அந்த
நேரத்தின் வாசனையில்
கலந்து கரைந்து கரைந்து
போதும் இந்த சின்ன சொர்க்கம் !
வாழ்க்கையை ரசித்து, காதல் செய்து, அன்பு செலுத்தி வாழ்ந்தால் சொர்க்கத்தை மண்ணிலேயே காணலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.
என்ன நிலை இது! என்ற கவிதை 14ஆம் பக்கத்திலும், 29ஆம் பக்கத்திலும் இருமுறை பிரசுரம் ஆகி உள்ளது, அடுத்த பதிப்பில் ஒன்றை நீக்கி விடுங்கள்.
தோள் சாய்த்துக் கொள்
துயில் மறந்த மழைஇரவு
கொட்டும் மழையில் கொஞ்சமும்
கரையாத நினைவுகள் சுமக்க
இலகுவாய்
எடையற்ற பாரம் தான்
இறக்கி வைக்காதே
இறுகப்பற்றி
தோள் சாய்த்துக் கொள்!
காதலியே காதலனை தோள் சாய்த்துக் கொள் என்று உரைப்பது வரம். கவலைகளைக் காணாமல் போக வைக்கும். அனுபவித்தவர்கள் அறிந்திடும் அற்புத சுகம். கொடி படர கொம்பு கிடைத்தது போன்றது காதலியின் ஆறுதல். அரவணைப்பு, கதகதப்பு.
துளிர்க்கட்டும் உயிர் !
கரிசனையை எடுத்துக்கொள்
கைவிரலைக் கொடுத்தனுப்பு
நீ தொட்ட
வாசனை நுகர்ந்து
துளிர்க்கட்டும் என்
உயிர் மீண்டும் !
கற்பனை தான் என்றாலும், காதலியின் கோணத்திலிருந்து படித்துப் பார்த்தால் உண்மையான உணர்வு என்பது விளங்கும்.
காய்ச்சல் இன்று
தணலாய கொதிக்கும்
உடலுக்கு தெரியும்
காய்ச்சல் என்று
வேகிறதா குளிர்கிறதா மனதுக்கு
விளங்கவில்லை !
தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள
உன் மீது
வழக்கு உணடு
வாக்கு சாதுர்யத்தில் உன்னை
வெல்ல முடியாது தான்!
காதலை மானே, தேனே, மயிலே, குயிலே என்ற பழைய சொற்களைப் பயன்படுத்தாமல், வித்தியாசமாக “தொடர்பு எல்லைக்கு அப்பால்” என்று அலைபேசியில் கேட்ட சொற்களைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. காதலன் பேச்கில் சிறந்தவன், அவனை வெல்ல முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது சிறப்பு.
சங்க இலக்கியப் பாடல்களில் வரும் தலைவியின் கூற்றை நினைவூட்டும் விதமாக கவிதைகள் உள்ளன. பழமைக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாகவும் கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.
வீரன் தான் !
ஒற்றைச் சொல்லில் வீழ்த்தும்
வீரன் தான் நீ
பத்ம வியூகத்துக்குள் வந்து விட்டாய்
இனி திரும்ப முடியாது கள்வனே !
பத்ம வியூகம் என்ற புராண நிகழ்வை நினைவூட்டி காதலனை உள்ளத்தில் சிறை வைத்து விட்டதை கவிதை உணர்த்துகின்றது. பாராட்டுகள்.
நீ தான் நான்
எத்தனை பொக்கிசங்களைப்
பதுக்கி வைத்திருக்கிறாய் என்னுள்
எடுத்து வைத்து
செல்வளிக்கிறாய் தாராளமாய்
எனக்கே பொறாமை
என் மேல்
பங்கு கொடுக்கிறாய். இருந்தும்
பாதி கூட நிறையவில்லை
கஞ்சப்பயல் நீ !
காதலின் கூடலை மிக கண்னியமாக, அதே நேரத்தில் மிக நுட்பமாக கொடுப்பதும், எடுப்பதும் காதலுக்கு அழகு என்ற விதத்தில் கவிதையில் உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள். காதலனை கஞ்சப்பயல் என்பதும் புதிய யுத்தி.
போக்கிரி தான்
உன்னை மறைக்க மட்டுமே
சொற்களுக்கு
சிலம்பாட்டம்
முழுதாய்
தெரியாமல் மூடி மூடி
மறைத்தும் ஒளித்தும்
இருட்டடைப்பு செய்தாலும்
முகம் காட்டி விடுகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் அகத்தில் உள்ள காதலன் முகத்தில் தெரிந்து விடுகிறான் என்கிறார், சிறப்பு.
தாம்பத்யம்!
நீ தலைவன் என்றானதினால்!
நான் தலைவியானேன்
மற்றபடி உனக்கு மட்டுமே
உரியவள் தான்
பெற்றவர்களிடமிருந்து
அழகாய்
பிரித்து பதியம் செய்து விட்டாய்
என் தோட்டத்தில்!
காதல் வயப்பட்டவுடன் இருபது ஆண்டுகள் வளர்த்த பெற்றோரைப் பிரிந்து காதலன் வசம் செல்வது காவியக் காலம் முதல் கணினிக் காலம் வரை நடக்கும் ஒன்று. சங்க இலக்கியத்திலும் உண்டு உடன்போக்கு. ‘பிரித்து பதியம் செய்து விட்டாய்’ புதிய சொல்லாட்சி. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|