தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Today at 1:20 pm

» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 10:36 pm

» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm

» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 pm

» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm

» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm

» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm

» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm

» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm

» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm

» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm

» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm

» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm

» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm

» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm

» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm

» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm

» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm

» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm

» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm

» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm

» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm

» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm

» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm

» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm

» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm

» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm

» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm

» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm

» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm

» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm

» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?

Go down

ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்? Empty ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?

Post by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

'ஆன்மா, ஆன்மா எனச் சொல்கிறார்களே... அப்படின்னா என்ன? 
ஆன்மா வேற, ஆத்மா வேறயா? ஆஸ்துமாவுக்கும் இதுக்கும் 
தொடர்பு இருக்குமோ?'னுகூட சில பேரோட மனசுக்குள்ள ஓட 
ஆரம்பிச்சிருது.

'ஆன்மா எங்கேயாவது கடையில கிடைக்குமா அல்லது 
அது ஒரு இடமா? அது ஒரு பொருளா?' என ஆயிரம் கேள்விகள்...

ஆன்மா என்றதும், `உடல் அழியும், ஆன்மா அழியாது' '
ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்' 
இப்படிப்பட்ட வாக்கியங்கள் நமக்குள்ளே வந்து போகும்.

ரொம்பவே நமக்கு அன்னியமாகவும் பயமுறுத்தக்
கூடியதாகவும் இருக்கக்கூடிய ஆன்மாவைப்பற்றி 
எளிமையாகப் பார்ப்போம்...

'இறைவா நான் படுக்கைக்குச் செல்லும் நேரத்துக்கும், 
தூங்கும் நேரத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து 
விடு' என்று  மனிதன் வேண்டுகிறான். 

காரணம், நாள் முழுவதும் மனம் சொன்னதையெல்லாம் 
செய்த மனிதனுக்கு ஒருநாள் பொழுதில் அவன் செய்த 
சில தவறுகளுக்கு அவனது மனசாட்சியே இன்னொரு 
மனிதனாக அவனிடம் கேள்வி கேட்கிறது.

'ச்சே... பாரிமுனைக்கு எந்த பஸ் போகும்?'னு வழி 
கேட்டவருக்கு பதில் சொல்லி இருக்கலாமே...', 
 'வழியில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த பாட்டிக்கு
 5 ரூபாயை போட்டிருக்கலாமே...',  
'தேவையில்லாம பக்கத்து சீட்டில் உள்ளவரிடம் விவாதம்
 செய்து அவர் மனசை நோகடிச்சிட்டோமே...' 
என பலவித எண்ணங்கள்...ரீகேப்பாக ஓடி மறையும்.

'சரி, இந்தப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று 
நினைத்துக்கொண்டே தூங்கிப்போய் விடுகிறோம். 
இதில் உங்களைத் தூங்க விடாமல் கேள்வி எழுப்புகிறதே...
அந்த மனசாட்சிதான், ஆன்மா அல்லது ஆத்மா. 

இதைத்தான், 'ஆன்ம விசாரணை', 'ஆத்ம விசாரம்' என்று
 சொல்கிறார்கள். இது, தன்னைத்தானே
 'சுயபரிசோதனை' செய்துகொண்டு புதிதாக நம் மனதை 
மலரச் செய்கிறது.

ஆன்மா என்பது மனம், மனசாட்சி என இரண்டு உட்பிரிவுகள் 
கொண்டதாக இருக்கிறது. மனம் கடல் அலை போல் ஓயாமல்,
 ஆயிரம் சிந்தனைகளை அலையாய் உருவாக்கிக் கொண்டே
 இருக்கிறது. 

அதில் நல்லதை செயல்படுத்தவும், தீயதை செயல்படுத்தவும்,
 மனசாட்சியிடம் ஒப்புதல் கேட்கிறது. அப்படி கேட்கும்போது
 நல்லவற்றுக்கு மனசாட்சி உடனே ஒப்புதல் அளிக்கிறது. 

ஆனால் தீயவற்றுக்கு உடனே ஒப்புதல் அளிப்பதில்லை. 
உதாரணமாக, உங்களுக்கு திடீரென ஒரு ஆயிரம் ரூபாய் 
பரிசு கிடைக்கிறதென்றால், அதில் பிள்ளைகளுக்கு 
தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு, மீதியை நம் 
மனைவியிடம் கொடுத்து சேமிக்கச் சொல்லலாம். 

இதை நம் மனம் நினைக்கும் தருணத்திலேயே நம் மனசாட்சி 
ஒப்புதல் கொடுத்துவிடும். 
-
இதே மனம், 'நண்பர்களுடன் சேர்ந்து ஒரு டிரிங்ஸ் 
பார்ட்டிக்கு செலவு செய்துவிட்டுப்போகலாமே' என்றும் 
சொல்லும். 

ஆனால், மனசாட்சி இதற்கு உடனே ஒப்புதல் அளிக்காது. 
உடனே, மனம் இதற்கு சப்பைக்கட்டான 
பல காரணங்களைக் கொண்டு வந்து நிறுத்தும்.

 'அதான் சம்பளப் பணத்தை அப்படியே கொடுத்துடுறோம்ல...
 இது தற்செயலா கிடைச்சதுதானே... 
மேலும் ஒரு ரிலாக்ஸேஷனே இல்லாம எப்படிப்பா இருக்க
முடியும்..?'  என காரணங்களை அடுக்கும்.

 மனசுக்கும் மனசாட்சிக்கும் இடையே ஒரு போராட்டமே
 நடக்கிறது.

இந்த ஆன்மாவும், மனமும் பெரும்பாலும் ஒத்துப்
போவதில்லை. ஆன்மாவும், மனமும் முழுவதுமாக ஒத்துப்
போய்விட்டால் அவா்கள் ஞானிகளாக, மகான்களாக 
அல்லது அதற்கும் மேம்பட்ட பிறவிகளாக இருப்பார்கள். 

ஆன்மா ஏவுகின்றபடிதான் மனம் செயல்பட்டு உடலை
 இயக்க வேண்டும். ஆனால், சில வேளைகளில் ஆன்மாவின்
 கட்டளைக்கு  மாறாகவே மனம் செயல்படுகிறது.

 அதனால்தான் உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, 
வஞ்சகம் போன்ற துயர சம்பவங்கள்  நிகழ்கின்றன. 

ஆன்மா சொல்வதைக் கேட்காது,  மனம் தன்னிச்சையாகச் 
செயல்படுவதால் ஏற்படும் பாவங்கள் மற்றும் தீவினைகள்
 ஆன்மாவில் அழுக்காக ஏறுகின்றன. 

ஆன்மா பிறவி எடுத்து அந்தத் தீவினைப் பாவங்களைத் 
தீர்க்க வேண்டியுள்ளது.

மனம் செய்யும் குற்றங்களுக்காக ஆன்மா பிறவி எடுப்பது, 
ஆன்மிகத்தில் ஒரு விந்தை. அவரவர்களின் 
மனோபலத்துக்கேற்ப, மனசோ மனசாட்சியோ வெற்றி 
பெறுகிறது. 

இதனால்தான் சிலர் கொடும் தவறுகளைச் செய்யும்போது, 
உனக்கு மனசாட்சியே இல்லையா? எனக் கேட்கிறோம். 
இந்த மனசாட்சியானது படித்தவர், படிக்காதவர், ஏழை, 
பணக்காரர், ஆத்திகர், நாத்திகர் என எல்லோருக்கும் 
உண்டு.  

இதைத்தான் 'அஹம் பிரம்மாஸ்மி'  -Aham Brahmasmi - 
(நான் பரம்பொருளாக இருக்கிறேன்) என்றும்
  'தத்வம் அஸி' ( 'அது நீ' - உபநிடத மகாவாக்கியம்) என்றும் 
சொல்லப்படுகிறது.

இந்த மனசாட்சியின் குரலைத்தான் 'மனம் சொல்வதைக்
கேளுங்கள்...'என்று சுயமுன்னேற்ற வகுப்புகளில் 
சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், அதில் நன்மையும் 
விளையலாம், தீமையும் விளையலாம். 

அதனால் மனசாட்சி சொல்வதைக் கேளுங்கள். 
நீங்கள் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டிய 
அவசியமிருக்காது.

மனசாட்சிதான் நம் ஆன்மா! 
மனசாட்சிக்குப் பயப்படுகிறவர் மற்றவற்றுக்குப் 
பயப்படவேண்டியதில்லை.
-
-----------------------------------

- எஸ்.க
நன்றி - விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்? Empty Re: ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?

Post by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்? Aanma
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum