தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6by ராஜேந்திரன் Yesterday at 12:22 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm
» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm
» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm
» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm
» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm
» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm
» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm
» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm
» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm
» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm
» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm
» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm
» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am
» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am
» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am
» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am
» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am
» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am
» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am
» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am
» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am
» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am
» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm
» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm
» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm
» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm
» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm
» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm
» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm
» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm
» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm
» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm
» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm
» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm
» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm
உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு
உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு
உதிராப் பூக்கள் !
(கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்)
தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி !
நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70.
*****
கவிஞர் ஆத்மார்த்தி சிறந்த கவிஞர் மட்டுமல்ல, நல்ல ரசிகரும் கூட. அதுவும் சக கவிஞர்களின் கவிதைகளைத் தாம் ரசித்து மகிழ்வதோடு, பாராட்டுகிற பேருள்ளமும் பெருந்தன்மையும் கொண்டவர். அவருடைய பாராட்டைப் பெற்றதிலும் அவராலேயே தம் ஹைக்கூ கவிதைகளில் சிறந்தவையாக 100 தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் இரவி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. தொகுப்புரையிலும் ஆத்மார்த்தியின் அன்பு தெரிகிறது.
மூன்று வரிகள் இருப்பது மட்டுமல்ல, ஹைக்கூ மூன்றாவது வரியில் முடிச்சு அவிழ வேண்டும். மேலே இரண்டு வரிகள் போட்ட புதிரை மூன்றாவது வரி விடுவிக்கும் அல்லது கேள்விக்கு பதில் கிடைக்கும்.
ஹைக்கூ என்றதும் கவிஞர் அமுதபாரதியைத் தொடர்ந்து மித்ரா, முருகேஷ் என்று பலர் நினைவுக்கு வருவர். கூடவே இரா. இரவியும் இருப்பார். சிறந்த படைப்பாளராகவும், படிப்பாளராகவும் திகழ்கிற பண்பாளரான இரவி, விரும்பிய வண்ணமும், வேண்டிய வண்ணமும் இந்நூல் விளைந்துள்ளது.
கவிஞர் மு. முருகேஷ் தம் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இரா. இரவி தமிழ் ஹைக்கூவில் தவிர்க்க முடியாத ஒரு பெயராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இரா. இரவியின் ஹைக்கூக்களை ஏற்கனவே நிறைய படித்திருக்கும் நமக்கு, அவற்றுள் தேர்ந்த சிலவற்றைப் பார்க்கிறபோது மீண்டும் மனம் சிலிர்க்கிறது. நினைத்து இன்புறுவது என்பது இன்பத்தின் உச்சம். அந்த அனுபவத்தை இந்த நூல் நமக்குத் தருகிறது.
கவிஞர் ஆத்மார்த்தியின் தேர்வும், ரசனையும் கிட்டத்தட்ட முன்பே சுவைத்த நம் ரசனையோடு ஒத்துப்போவது கூடுதல் சிறப்பு.
“பொம்மை உடைந்தபோது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு”
என்றதும் ரவியின் ஞாபகம் வந்துவிடும். இதுதான் அவரது வெற்றி.
இதைப்போலவே,
“உடன் வந்தாலும்
உண்மையில்லை
நிழல்”
என்பது நிஜம். முதன்முறை வெளிவந்தபோதே பாராட்டைப் பெற்ற வரிகள். நூலைத் திறந்ததும்
“மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து”
என்ற வரிகளைப் படிக்கிறபோதே நாம் நனைந்திருக்கிற நினைவைப் பெறுவோம்.
மழையோடு தொடர்பாக மற்றுமோர் கவிதை,
“மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப் பூச்சி”.
நமக்கெல்லாம் கடவுள் என்பது தாய்க்கு மட்டுமே மிகப் பொருத்தம். ஏனெனில், தாயிடம் மட்டுமே கருவறை உள்ளது. அடடா என்று கூற வைக்கும் வரிகள்.
“கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்”.
“ரசிப்பதில் தவறில்லை,
பறிப்பதில் தவறு
மலர்கள்”.
பூக்களே புலம்புவதை இவ்வரிகளில் பார்க்கிறோம். இயல்பான சில நடைமுறைகள் இன்றைய நம்மிடம் இருப்பதைப் பல ஹைக்கூக்களில் காண்கிறோம்.
“உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்”
உண்மை தானே.
“புதிய வீடு
வரவில்லை உறக்கம்
வாங்கிய கடன்”.
இது கடன் வாங்கி வீடு கட்டியவர்களின் நிலை.
“அடுக்கு மாடிகள்
நெருக்க வீடுகள்
தூர மனங்கள்”.
ஒன்றாக இருக்கிற அடுக்கக மக்கள் ஒன்றி இருப்பதில்லை. அடுத்த வீட்டில் யாரென்றே அறியாத வாழ்க்கை என்று அடுக்கக வாழ்க்கை குறித்து அலுத்துக் கொள்கிறார் இரா. இரவி.
இப்படி ஆயிரம் காரணங்கள். இந்த அடுக்கக வாழ்க்கைகள் பயன்படுத்த முடியாத அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகிற பல விஷயங்களில் ஒன்றாக இந்தியா சுதந்திரம் இருக்கிறதோ என்கிற ஆதங்கம் இரா. இரவிக்கும் இருப்பதால்,
“சுதந்திரம்
நாய் பெற்ற
தெங்கம்பழம்”
என்று எழுதத் தோன்றி இருக்கிறது.
அடுத்து
“குடும்ப அட்டைகளின்
வண்ணங்கள் தான் மாறுகின்றன,
வாழ்க்கை அப்படியே”
என்று அட்டைதாரர்களுக்காகத் தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியுள்ள ஹைக்கூவிலும் உண்மை இருக்கிறது.
கனிந்த முகம், இனிய பண்புகள், அழகு மொழி யாவும் இரவி வாங்கி வந்துள்ள வரங்கள்.
முகம் மலர,
அகம் மலரும்
இன்முகம்
என்ற அவரது ஹைக்கூவுக்கு நூலின் வடிவமைப்பாளர் திரு. ராம்குமாருக்கு கவிஞரின் படமே பொருத்தமாகத் தோன்றியிருக்க வேண்டும். இரவியின் படத்தோடு அந்த ஹைக்கூ வெளிவந்துள்ளது சிறப்பு. சின்னச் சின்னதாய இதழ் விரித்த வண்ண மலர்களின் தொகுப்பாய், வாசித்த பின்னரும் வாசம் நெஞ்சிலாய். அற்புதம்
(கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்)
தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி !
நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70.
*****
கவிஞர் ஆத்மார்த்தி சிறந்த கவிஞர் மட்டுமல்ல, நல்ல ரசிகரும் கூட. அதுவும் சக கவிஞர்களின் கவிதைகளைத் தாம் ரசித்து மகிழ்வதோடு, பாராட்டுகிற பேருள்ளமும் பெருந்தன்மையும் கொண்டவர். அவருடைய பாராட்டைப் பெற்றதிலும் அவராலேயே தம் ஹைக்கூ கவிதைகளில் சிறந்தவையாக 100 தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் இரவி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. தொகுப்புரையிலும் ஆத்மார்த்தியின் அன்பு தெரிகிறது.
மூன்று வரிகள் இருப்பது மட்டுமல்ல, ஹைக்கூ மூன்றாவது வரியில் முடிச்சு அவிழ வேண்டும். மேலே இரண்டு வரிகள் போட்ட புதிரை மூன்றாவது வரி விடுவிக்கும் அல்லது கேள்விக்கு பதில் கிடைக்கும்.
ஹைக்கூ என்றதும் கவிஞர் அமுதபாரதியைத் தொடர்ந்து மித்ரா, முருகேஷ் என்று பலர் நினைவுக்கு வருவர். கூடவே இரா. இரவியும் இருப்பார். சிறந்த படைப்பாளராகவும், படிப்பாளராகவும் திகழ்கிற பண்பாளரான இரவி, விரும்பிய வண்ணமும், வேண்டிய வண்ணமும் இந்நூல் விளைந்துள்ளது.
கவிஞர் மு. முருகேஷ் தம் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இரா. இரவி தமிழ் ஹைக்கூவில் தவிர்க்க முடியாத ஒரு பெயராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இரா. இரவியின் ஹைக்கூக்களை ஏற்கனவே நிறைய படித்திருக்கும் நமக்கு, அவற்றுள் தேர்ந்த சிலவற்றைப் பார்க்கிறபோது மீண்டும் மனம் சிலிர்க்கிறது. நினைத்து இன்புறுவது என்பது இன்பத்தின் உச்சம். அந்த அனுபவத்தை இந்த நூல் நமக்குத் தருகிறது.
கவிஞர் ஆத்மார்த்தியின் தேர்வும், ரசனையும் கிட்டத்தட்ட முன்பே சுவைத்த நம் ரசனையோடு ஒத்துப்போவது கூடுதல் சிறப்பு.
“பொம்மை உடைந்தபோது
மனசும் உடைந்தது
குழந்தைக்கு”
என்றதும் ரவியின் ஞாபகம் வந்துவிடும். இதுதான் அவரது வெற்றி.
இதைப்போலவே,
“உடன் வந்தாலும்
உண்மையில்லை
நிழல்”
என்பது நிஜம். முதன்முறை வெளிவந்தபோதே பாராட்டைப் பெற்ற வரிகள். நூலைத் திறந்ததும்
“மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து”
என்ற வரிகளைப் படிக்கிறபோதே நாம் நனைந்திருக்கிற நினைவைப் பெறுவோம்.
மழையோடு தொடர்பாக மற்றுமோர் கவிதை,
“மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப் பூச்சி”.
நமக்கெல்லாம் கடவுள் என்பது தாய்க்கு மட்டுமே மிகப் பொருத்தம். ஏனெனில், தாயிடம் மட்டுமே கருவறை உள்ளது. அடடா என்று கூற வைக்கும் வரிகள்.
“கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்”.
“ரசிப்பதில் தவறில்லை,
பறிப்பதில் தவறு
மலர்கள்”.
பூக்களே புலம்புவதை இவ்வரிகளில் பார்க்கிறோம். இயல்பான சில நடைமுறைகள் இன்றைய நம்மிடம் இருப்பதைப் பல ஹைக்கூக்களில் காண்கிறோம்.
“உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்”
உண்மை தானே.
“புதிய வீடு
வரவில்லை உறக்கம்
வாங்கிய கடன்”.
இது கடன் வாங்கி வீடு கட்டியவர்களின் நிலை.
“அடுக்கு மாடிகள்
நெருக்க வீடுகள்
தூர மனங்கள்”.
ஒன்றாக இருக்கிற அடுக்கக மக்கள் ஒன்றி இருப்பதில்லை. அடுத்த வீட்டில் யாரென்றே அறியாத வாழ்க்கை என்று அடுக்கக வாழ்க்கை குறித்து அலுத்துக் கொள்கிறார் இரா. இரவி.
இப்படி ஆயிரம் காரணங்கள். இந்த அடுக்கக வாழ்க்கைகள் பயன்படுத்த முடியாத அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகிற பல விஷயங்களில் ஒன்றாக இந்தியா சுதந்திரம் இருக்கிறதோ என்கிற ஆதங்கம் இரா. இரவிக்கும் இருப்பதால்,
“சுதந்திரம்
நாய் பெற்ற
தெங்கம்பழம்”
என்று எழுதத் தோன்றி இருக்கிறது.
அடுத்து
“குடும்ப அட்டைகளின்
வண்ணங்கள் தான் மாறுகின்றன,
வாழ்க்கை அப்படியே”
என்று அட்டைதாரர்களுக்காகத் தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியுள்ள ஹைக்கூவிலும் உண்மை இருக்கிறது.
கனிந்த முகம், இனிய பண்புகள், அழகு மொழி யாவும் இரவி வாங்கி வந்துள்ள வரங்கள்.
முகம் மலர,
அகம் மலரும்
இன்முகம்
என்ற அவரது ஹைக்கூவுக்கு நூலின் வடிவமைப்பாளர் திரு. ராம்குமாருக்கு கவிஞரின் படமே பொருத்தமாகத் தோன்றியிருக்க வேண்டும். இரவியின் படத்தோடு அந்த ஹைக்கூ வெளிவந்துள்ளது சிறப்பு. சின்னச் சின்னதாய இதழ் விரித்த வண்ண மலர்களின் தொகுப்பாய், வாசித்த பின்னரும் வாசம் நெஞ்சிலாய். அற்புதம்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2520
Points : 5996
Join date : 18/06/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|