தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

ஏழு ராஜாக்களின் தேசம்!  நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

[*]ஏழு ராஜாக்களின் தேசம்!


  • நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் !

  • நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

  • வெளியீடு : யாவரும் பப்ளிகேஷன்ஸ்.
  • பக்கங்கள் : 248 ; விலை : ரூ. 275 ; அலைபேசி : 90424 61472

  • ******
  • நூல்ஆசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியல் பட்டம் பெற்றவர். ஐக்கிய அரபு நாட்டில் இணையரின் வேலை நிமித்தமாக இரண்டு ஆண்டுகள் வசித்து, சுற்றிப்பார்த்து பயணக் கட்டுரையாக இந்நூல் வடித்துள்ளார்.

  • நூலில் 27 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. அமீரகத்தை ஏற்கெனவே சுற்றிப்பார்த்தவர்கள் அசைபோட்டுக் கொள்ளவும், இன்னும் பார்க்காதவர்களுக்க்கு உடன் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் எழுதி உள்ளார். முதல் நூல் என்றே சொல்ல முடியாது. அனுபவம் வாய்ந்த முதிர்ந்த எழுத்தாளர் போல நல்ல நடையில் சுவையாகவும், பல பயனுள்ள தகவல்களையும் வழங்கி உள்ளார். பாராட்டுகள். 

  • துபாய் என்பதன் பெயர்க்காரணம் தொடங்கி பல தகவல்கள் நூலில் உள்ளன.  பாலைவன வேடிக்கை, ஒட்டகச் சவாரி, தனுரா நடனம், முசண்டம் படகு சவாரி எல்லா இடங்களுக்கும் நேரடியாகச் சென்று ரசித்து, படங்கள் எடுத்து அந்த படங்களையும் நூலில் சேர்த்து இருப்பது சிறப்பு.  நான் அரசுப்பணி காரணமாக எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை. ஆனால் துபாய் புகைப்படங்களைப் பார்த்து, பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது.  பணிநிறைவு பெற்றவுடன் சென்று கண்டு வரவேண்டுமென்று முடிவெடுத்து விட்டேன். எனது நூல்களை எல்லாம் துபாயில் உள்ள இனிய நண்பர் ஹிதாயத் தவறாமல் வெளியிட்டு, படமும் செய்தியும் அனுப்பி வருகிறார். நான் செல்லாவிட்டாலும் எனது நூல்கள் துபாய் சென்றுள்ளன.தாகூர் நினனைவு நூலகத்தில் எனது நூல்கள் உள்ளன.

  • துபாயில் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? அங்கு என்ன உள்ளது? என்ன விற்பனையாகின்றன? என அனைத்து தகவலும் நூலில் உள்ளன. துபாய் சுற்றுலா கையேடு என்றே சொல்லலாம்.  குளோபல் வில்லேஜ் முகப்புத் தோற்றம் படம் உள்ளது.  தெற்காசிய கூடாரங்கள், ஆப்ரிக்கக் கூடாரங்கள், கிழக்குக் கூடாரங்கள், ஐரோப்பிய கூடாரங்கள் அதில் என்ன உள்ளன என்பது பற்றி விரிவாக விளக்கமாக எழுதி உள்ளார்.
  • அந்தரத்தில், உயரத்தில் பறந்து உண்ணும் உணவுக்கூடம். படங்கள் பார்க்கும் போது, துபாய் நாடு எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்று பார்க்கும் போது வியப்பாக உள்ளது. கொரோனா கொடுமையின் காரணமாக விமானம் துபாய்க்கு செல்லவில்லை. துபாயிலிருந்தும் வரவில்லை. தினமும் துபாய்க்கு மதுரையிலிருந்து விமானம் சென்று வந்தது. ஜூலை 2021 மாதம் முழுவதும் துபாயிலிருந்து ஒரு விமானம் கூட வரவும் இல்லை, செல்லவும் இல்லை.

  • நிலைமை சீராக விமான போக்குவரத்து விரைவில் தொடங்க வேண்டும். அனைவரும் சென்று களிக்க வேண்டும். உலகில் அவசியம் காண வேண்டிய நாடுகளில் துபாய் முதலிடம் வகிக்கும் வண்ணம், துபாய் நாட்டின் சிறப்பை நூல் முழுவதும் சிறப்பாக விளக்கி உள்ளார்.
  • குதிரை அருங்காட்சியகம், காபி கண்காட்சியகம், நாணய அருங்காட்சியகம், துபாய காவலர்கள் அருங்காட்சியகம் - படிக்க படிக்க, காண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார், பாராட்டுகள்.

  • அமீரகக் கோயில் இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என சகல மதக் கோயில்களும் அங்கு இருப்பது வியப்புத்தான். என் மகன் பிரபாகரன் இரண்டு ஆண்டுகள் துபாயில் பணிபுரிந்தான். தற்போது மதுரை வந்து விட்டான். இந்த நூலில் உள்ள பல இடங்கள் அவன் சென்று பார்த்ததாக குறிப்பிட்டான்.  இந்து கோயில்கள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டான். மிகைப்படுத்தி எதுவும் எழுதாமல், உள்ளது உள்ளபடியாக எழுதி இருப்பதால், உண்மை இருப்பதால் படிக்க சுவையாக உள்ளது.

  • பயணக் கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக எழுதி உள்ளார்கள். போரடிக்கும் புள்ளி விபரங்கள் எதுவும் இல்லாது காண வேண்டிய இடங்கள் அங்கு என்ன உள்ளன என்பதை தெள்ளத் தெளிவாக எழுதி இருக்கிறார். துபாய் மாலும் அதன் நீரூற்றும், புர்ஜ் கலிபாவின் இருப்பு புகைப்படங்களே சிறப்பாக உள்ளன. இப்படி எல்லாம் நம் தமிழகத்தில் இல்லையே என்ற ஏக்கம் தரும் விதமாகவும் இதுபோன்ற நவீனம் நம் தமிழகத்தில் வருவதற்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற ஏக்கத்தையும் வரவழைத்தது.
  • மிராக்கிள் கார்டனும் பட்டாம் பூச்சிகளும் கட்டுரையில் பறவைக் கோணம் புகைப்படம் நன்று. நீர் மேலாண்மை எப்படி நிர்வகிக்கின்றன. ஒட்டுமொத்த நாட்டின் மேலாண்மையும் சிறப்புத்தான். பாலைவன நாடு, எண்ணெய் வளம்  பெற்றதும் உலகில் சிறந்த நாடாக சுற்றுலா தளமாக மாறிவிட்ட விந்தை.

  • சாய்வு கோபுரமும் அங்கு உள்ளது. தியாகத் திடலும் அங்கு உள்ளது. பிரமாண்ட மசூதிகள் கட்டிடக் கலைக்கு பெயர் பெற்ற கட்டிடங்கள், யாரும்  பார்த்ததில்லை. துபாய் தான் சொர்க்கம் என்றால் மிகையன்று. சொர்க்கம் போன்று செல்வ செழிப்புடனும் கண்களுக்கு விருந்து வைக்கும் காட்சி அமைப்புடனும் துபாய் விளங்குகின்றது.

  • அஜ்மான் திருவிழா, சோரா இயற்கை சரணாலயம், எட்டி சாலட் கட்டிடம், அஜ்மான் மீன் சந்தை, அஜ்மான் வானொலி, படகுக் கட்டுமானத் தளம் இப்படி எதையும் விட்டு வைக்காமல், நூல் ஆசிரியர் அபிநயா ஸ்ரீகாந்த் இரண்டு ஆண்டுகள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திட்டமிட்டு நேரத்தை வீணாக்காமல், துபாயில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களுக்கும் சென்று படம் எடுத்து ஆராய்ந்து வடித்த பயணக் கட்டுரை சிறப்பு. சென்று வந்த பயணத்தை சிறப்பாக்கி விட்டார்கள். துபாய் பற்றி வந்துள்ள ஆகச்சிறந்த நூல் இது என்று பாராட்டி முடிக்கிறேன்.

avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2632
Points : 6332
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கனவுகளின் தேசம் நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. அஜீத்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum