தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

3 posters

Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:00 pm

ஜலாலுதீன் முகமது அக்பர் (Jalaluddin Muhammad Akbar, உருது:جلال الدین محمد اکبر, Jalāl ud-Dīn Moḥammad Akbar), அல்லது பேரரசர் அக்பர் (Akbar-e-Azam) (அக்டோபர் 15, 1542 – அக்டோபர் 12, 1605) என்பவர் 1556 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் மன்னராக இருந்தவர். ஹிமாயுன் ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுகிறது இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் . இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் 1556 இல் தோற்கடித்தன. பேரரசர் வலிமையான ராஜ்புத் இனத்தாருடன், அவர்களின் இனத்தை சேர்ந்த ராஜ்புத்தின் குழுவான இளவரசிகளை மணந்து , நட்பை பலப்படுத்தினார்.


அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன் பலரும் புகழும் கட்டங்களை கட்டுவித்தார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டை கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் .அக்பர் மத சம்பந்தமான வாதங்களை முஸ்லிம் அறிஞர்களுக்கும் மற்றும் மதத்தினருக்கும் சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும் , இடையே நடத்தினார் . கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் இருந்து வந்த யேசுசபைக் கிறித்தவ மதத்தினருடனும், முஸ்லிம் மத அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அதன் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:02 pm

அக்பர் எனும் பெயர்

பிறந்த போது அக்பர் பதுருதின் மொகம்மத் அக்பர் என அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர் பௌர்ணமி நாள் அன்று இரவில் பிறந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டார். பத்ரு (முழு நிலவு என்று பொருள்) ஹுமாயுன் காபூலைத் தனது வசம் கொண்டு வந்த பிறகு அக்பரின் பிறந்த தேதியும், பிறந்த போது வைக்கப்பட்ட பெயரும் மாற்றி வைக்கப்பட்டது. பெயரானது தீய சக்திகளை துரத்தி அடிக்கும் வகையில் மாற்றி வைக்கப்பட்டது. அக்பர் என்றால் "மிகப் பெரிய" என்று பொருள். உண்மையில் அக்பர் என்ற பெயர், அவருடைய தாய் வழித் தாத்தாவான சாகித் அலி அக்பர் ஜமி என்பவருடைய பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:04 pm

இளமை காலம்

மாமன்னர் அக்பர் அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய பாகிஸ்தானில் சிந்து மாநிலம் அமர்கோட்டில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் உமாயூன் மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள்.


உமாயூன் பாஸ்துன் (ஆப்கன்) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். உமாயூனும் மனைவியும் பாரசீகத்துக்குச் சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது. இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் கலைகள், கட்டடக்கலை, இசை, இலக்கியம், காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.


இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முகலாயப் பேரரசை மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார். அக்பர் ஷாஹன்ஷா (பாரசீக மொழியில் இதற்கு "அரசருக்கு அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார். அக்பர் காலத்தில் கட்டப்பட்ட மசூதியையும் , அவர் இறை வணக்கம் செய்த இடத்தையும் இன்றளவும் காண முடியும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by வ.வனிதா Tue Jan 11, 2011 12:30 pm

உண்மையில் சாதனை படைத்த வீரர் அக்பர். பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு திகழ்ந்து நமக்கெல்லாம் முன்னோடியாய் இருக்கிறார்! பகிர்வுக்கு நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by கவிக்காதலன் Tue Jan 11, 2011 11:38 pm

அக்பர் பற்றி தெர்ந்துகொள்ள முடிந்தது.. நன்றி...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 12, 2011 8:53 am

நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க  Empty Re: பேரரசர் அக்பர் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum