தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

Go down

காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்! Empty காற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 09, 2010 3:00 pm

வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது.

வெகு ஒருசிலரே அந்நிலையிலிருந்து மாறி நகரும் நிகழ்வுகளை அலுக்காமல் அவைகளை தனக்கான ஓர் பாடமாக்க எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையின் மூலம் வாழ்தலை பிறருக்கு உணர்த்தி; ஓர் நல்ல வழிகாட்டியாகவும் நாளைய வரலாற்றிற்குரிய இன்றைய சிறப்பாகவும் வாழ்ந்து முடிக்கிறார்கள். மாலனும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழவே எண்ணினார்.

தான் விரும்பும் பொருள்களை எப்படி தனதாக்கிக் கொள்கிறோமோ அதுபோல் பிறர் உணர்வுகளையும் மதிக்க தவறக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தார். தன் ஒவ்வொரு செயலிலும் பிறருக்கான பாதிப்பினை பிறரின் மனவருத்தத்தினையும் எண்ணி எவரும் தன்னால் வருத்தத்திற்கு ஆளாகவேண்டாமென்பதில் அவர் கொண்ட சிரத்தை அவரின் செயல்களில் மிகையாய் தெரிந்தது.

தன்னை பிறர் நோவாதளவிற்கு எத்தனை பக்குவப்படுத்த வேண்டுமோ அல்லது குறுக்கிக் கொள்ளவேண்டுமோ அத்தனை அடுத்தவர் நலன் கருதி தன்னை விஸ்தாரித்தும் கொள்ளவேண்டுமென்று அடிக்கடி சொல்வதோடு நில்லாமல் அப்படி வாழவும் முயற்சித்துக் கொள்கிறார்.

தன் வருமானத்தை விரிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே பிறருக்கு உதவமுடியுமென்று தன் கடின உழைப்பினால் பல சுயவருமானங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் கூட நான்கில் ஒரு பாகம் தன் தாய்தந்தை மற்றும் மனைவியின் பெற்றோர் நலனுக்காவும், ஒரு பாகத்தை தன் குடும்பநல முன்னேற்றத்திற்காகவும், இன்னொரு பாகத்தை பிள்ளைகளளின் எதிர்கால சேமிப்பிற்காகவும், மீதமொரு பாகம் சமுகத்தின் ஏழ்மை நிலையகற்றும் முயற்சிக்ககென்றும் தன் வாழ்தலை சமூகத்தோடு இனைத்தே வருகிறார் மாலன்.

கடவுளென்னும் ஒரு சக்தியின் மீது கொண்ட நம்பிக்கையினால் தான் அடைந்த நலன்களையும், கடவுள் மேல் தான் கொண்டுள்ள பக்தியின் ஆழம் ‘தனக்கு போதித்த போதனைகளையும், தனக்கு அருளிய செல்வாக்கினையும் பிறருக்கும் கிடைக்கப்பெற அதிகபட்ச அக்கறை கொண்டார். கடவுள் நம்பிக்கையினை வெறியின்றி ஏற்படுத்திக் கொள்ள, மனிதனின் பண்பு குளையாது பிற உயிர்கள் வருந்தாமல் வளர்த்துக் கொள்ளப் பரிந்துரைத்தார்.

அவரை பொருத்தவரை, ‘பிறரை நோவாத பக்தியே ஞானம் என்பது அவர் கணிப்பு. கடவுள் என்றொரு சக்தி இருப்பதாக நம்புவதில் ஒரு ஆன்ம திருப்தியையும் பிற பலனையும் உணர்ந்தாலும், நகரும் பொழுதெல்லாம் அவன் செயலென நகர்ந்து அக்கடவுளின் அதிர்வுகளை ஆத்மார்த்தமாக உள்வாங்கினாலும் ‘யாரிடத்தும் கடவுள் பற்றிய வாதம் செய்வதில் பயனில்லை என்பதனை முடிவாக கொண்டிருந்தார். அது ஒரு நம்பிக்கை மட்டுமே. நம்பிக்கையை நம்புவோரிடத்தில் ஏற்படுத்தலாம், எவரிடத்தும் கட்டாயப் படுத்துதல் முறையில்லையென்பது அவரின் இன்னொரு குறிக்கோளாக இருந்தது.

அதேநேரம், வெறுமனே வெடுக்கென பிடிங்கிய உயிர்போல கடவுளில்லை என்று சொல்லுமொரு நன்றியற்ற செயலை தான் செய்து விடவேண்டாமே என்பதில் கவனாமாகவும் இருந்தார். ஆயினும், இன்று கடவுள் உண்டென்பதை மீறி, தான் எண்ணிய வண்ணமெலாம் வணங்குதல் கடந்து, அதற்காக போட்டியுமிட்டு பிறரை நிந்திக்கவும் செய்யும் மனிதரின் மனவோட்டத்தை மாற்றும் வண்ணம், தான் வணங்கும் கடவுளிற்குரிய பக்தி நெறியின், வழிமுறைகளின், காரணகாரணி என்ன என்றெல்லாம் சிந்தித்து, அதை பிறருடன் பகிர்ந்தும் கொண்டால், அந்த கடவுளின் மீதான ஒரு வெறி அகன்று பக்தி மட்டுமே மிச்சமாகுமோ என்றொரு ஏக்க எதிர்ப்பார்ப்பும் அவருக்கிருந்தது.

அங்ஙனம் தன் சிந்தனைகளை தன் கடவுள் சார்ந்த அனுபவங்களை தான் அறிந்த உணர்ந்த ரீதியில் மட்டுமே திருமேனியன் மற்றும் அவரோடு வந்த பிற தோழமைகளிடத்தும் பகிர்ந்து கொள்கிறார்.

திருமேனியனும் அவரோடு வந்தவர்களும் அவரோடு பேசி பேசி ஒன்றி நட்புற்று முழுதும் தன்னை அவரின் மனநிலைக்கே ஆட்படுத்திக் கொண்டவர்களாக ஆக்கிக் கொண்டனர். அந்நிலையில் மதிய உணவையும்முடித்து காற்றாட அமர்ந்து கடவுள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் நிறைய பேசுகிறார்கள் அவர்கள்.

“எங்க எங்கயோ பேசி எங்க எங்கயோ வந்துட்டோம் பாருங்க சாமி..”

“ஆமா.. பேச ஆயிரம் விஷயம் இருக்கு.. இப்படி வாக்குவாதம் இல்லாம பேசி புரிந்து கொண்டால் நிறைய பேசலாம் நிறைய புரிந்து கொள்ளலாம், நான் ஊரில் கூட என் தோழர்களோடு பேச அமர்ந்தால் இரவெல்லாம் பேசுவோம். யாரும் யாரையும் வக்கிரமாக எதிர்கமாட்டோம், ஒருவரின் தகவல்களை ஒருவரோடு பகிர்ந்துக் கொள்வதே எங்களின் நோக்கமாக இருக்கும். தவறென்றால் கூட அப்படியல்ல அது இங்ஙனம் தவறு அலல்து இவ்வாறு சரியென்று தன் மாற்றுக் கருத்தை மணம் வலிக்காமல் சொல்வோம். நான் தான் சரியோ தவறோ பேசிக் கொண்டேயிருப்பேன்”

“அதலாம் சரியா தான் சாமி பேசுறீங்க..”

“இல்லல்ல, அது உங்க நம்பிக்கை. நம்பினோரோடு பேசுவது அலாதி. அதுக்காக நான் சொல்றதுக்கெல்லாம் நீங்க ஆமாம் போடனும்னு அவசியமில்ல, என் சிந்தனையை சொல்லசொல்லி கேட்குறீங்களே, அதுக்கே நான் நன்றி சொல்லணும்..”

“என்னங்கையா நன்றின்னெல்லாம் சொல்லி பிரிக்கிறீங்களே.., இவ்வளோ தூரம் நம்ம சமூகம் வாழனும் நம்ம தமிழ் ஜாதி நல்ல கருத்துக்களை வளர்த்துக்கணும்னு இவ்ளோ செயரீங்களே பெருசில்லையா?”

ஒருவர் சொல்லி நிறுத்த இன்னொருத்தர்.. “ஆமாமா எத்தனை நாடு எவ்வளவு மக்கள்னு பார்க்குரீங்களே உங்களுக்கு தெரியாததா…, நீங்க பேசுங்கையா”

“மாலன் சிரித்துக் கொண்டார், அப்படியல்ல இது, நான் சொல்வது எதுவுமே ஒரு முடிவான தகவலில்லை, தீர்ப்பு ஒன்றுமில்லை என்பதை கண்டிப்பா நீங்க புரிந்துக் கொள்ளனும். இது போல நீங்க சிந்தித்து அனுபவித்து ஆழமா அர்த்தமா உணர்ந்தீங்கனா; பிறகு எது உண்மையோ எது சரியோ அதை எடுத்துக்கலாம். அதுவரையும் கேட்டுக்கோங்க தப்பில்ல, அதுக்காக முழுசா இதுதான் வேதம்னு நம்பிடாதீங்க”

“உங்க மேல நம்பிக்கை இல்லாமையா சாமி இவ்வளோ தூரம் வந்து உட்கார்ந்து கேட்டுன்ருக்கோம்” திருமேனியன் குறுக்கிட்டார்

“அது வேற திருமேனியா, நம்பிக்கைன்றது வேற, இதுல நான் யாரயும் நம்பாதேன்றேன். யார் சொல்றதையும் ஏற்று நம்மை செயல்படுத்த வேண்டாம்றேன். எல்லாத்தையும் கேட்டு நாம ஒவ்வொருத்தரும் சிந்திக்க துவங்கனும்றது தான் என் வேண்டுகோள். இது என் அனுபவம், இதை வைத்து உன் அனுபவத்தை எடுத்துக்கோ..” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாலினி வந்து எல்லோருக்கும் தேனிர் கொடுத்துவிட்டு குடிக்கும் வரை நின்று தேனிர் குவளையை வாங்கிக் கொள்ள மாலன் அவருடையதை மட்டும் திருப்பிக் கொடு என்று வாங்கிக் கொண்டார்.

“பரவாயில்லை நீங்க பேசிக் கொண்டிருங்க நான் கழுவிக்கிறேன்..”

“பரவாயில்லை மாலினி நானே கழுவிக்கிறேன், தேனிர் பிரமாதம், மதிய சாப்பாடு கூட குழம்பு கூட்டு பலகாரமெல்லாம் அற்புதமா இருந்தது சொள்ளமரந்துட்டேன்…”

மனைவியிடம் என்னவோ புதிதாக பேசுவது போல பேசுறாரேன்னு பார்த்திருப்பார்கள் போல் அவர்கள், என்னாச்சு, என்னடா பொண்டாட்டிய புகழறுனேன்னு பார்க்குறீங்களா..? சமையல் ஒரு கலை. அது யார் செய்து நல்லா இருந்தாலும் நல்லா இருக்குன்னு சொல்லிடனும். உழைப்புக்கு எப்பவும் அங்கிகாரம் தரனும். உழைப்பவர்களை பாராட்டனும்..”

“நான் நல்ல இல்லைனா பெருசா கண்டுக்கிறதில்ல சாமி, நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லிடுவேன்..”

“அப்போ என் மனைவி சமைத்தது நல்லால்லன்றீயா……….?”

“அச்சச்சோ பிரமாதம், அருமையா செய்தாங்க அன்பா பரிமாறுனாங்க. நீங்களும் எங்க கூடவே சாப்பிட்டிருக்கலாமே ம்மா”

“அது முறையில்லை சகோதரா. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நல்லா உபசரிப்பது நம் முக்கிய பண்பு. நான் என் வயிற பார்துன்ருப்பேன், நீங்க உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லாம போதும்னு எழுத்ந்துட்டா நான் சமைத்ததுல உணவு பரிமாறினதுல ஒரு அர்த்தமே இல்லாம போயிடும்..”

“இதலாம் தான் நம் பெண்மணிகளின் சிறப்பு ஐயா, சற்று இருங்க வருகிறேனென்று கேட்டுக் கொண்டு அவர் குடித்த தேனிர் குவளையை அவரே சென்று கழுவி மாளினியிடம் கொடுத்து விட்டு மீண்டும் அவர்களோடு வந்து அமர்ந்துக் கொள்கிறார்.

“ம்ம்… சரி சொல்லுங்க.., என்ன பேசினோம்..? ஆங்.. .. கடவுள் பற்றி பெசினோமில்லையா.. சாமி இருக்கான்னு தானே கேட்டீங்க..”

“சாமிய விட மாட்டீங்க போலிருக்கே..”

“வேணாம்னா விட்டுடுவோம்.. வேற பேசுங்க..”

“இல்ல சாமி அவன் கிடக்கான் நீங்க சொல்லுங்க”

“வேண்டாம் திருமேனியா விருப்பமில்லாததை ஏன் வீணா பேசுவானேன்..”

“அப்படியெல்லாம் இல்ல சாமி நான் சும்மா அப்படி வாய்ல வந்ததை சொல்லிட்டேன் கொபிச்சிக்காதீங்க..நாங்க வந்ததே அதை பற்றி கேட்க தானே வந்தோம்..”

“மிக நல்லது ஐயா, உங்களிடம் கொபமென்ன சொல்றேன் கேளுங்க.. “
திருமேனியன் அவர் பக்கம் திரும்பி உட்கார்ந்துக் கொண்டான், அவர் வாயசைவையே, முகபாவத்தையே என்ன சொல்ல வராரோ என்பதுபோல் பார்த்தார்..
————————————————————————————————————
மாலன் நிறைய பேசியிருக்கிறார் என்பதால் அதை இன்னொரு பதிவில் தனியாக பார்ப்போமே!!! அதுவரை ‘காற்றின் ஓசை’ – தொடரும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum