தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

2 posters

Go down

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்! Empty இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

Post by prakashin Mon Feb 21, 2011 12:21 pm

நேற்றிலிருந்து உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாயிடுச்சு. 2007 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு தோல்வியடைந்து வெளியேறிய இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சாதிக்க காத்திருக்கிறது.

இப்போதைய இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சரி, துடிப்பு மிக்க இளைஞர்களை கொண்ட அணியாக உள்ளது.
ஒரு நாள் தொடரில் இரண்டாமிடத்திலும், டெஸ்ட் தொடரில் முதலிடத்திலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தர வரிசையை பெற்று கோப்பையை வெல்லக் கூடிய அணியாக உள்ளது (எல்லாம் ஒரு நம்பிக்கை தானுங்க).

இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியினரைப் பற்றி இரண்டு, மூன்று வரிகள் உங்களுக்காக.


சச்சின்:

இந்தியாவின் ஒரே மாஸ்டர் பேட்ஸ் மேன் இவர் தான். இவர் களத்தில் இருந்தாலே போதும், மற்ற வீரர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவர் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தால் எதிரணியினர் அவ்வளவு தான்.

ஷேவாக்:

ஆஸ்த்ரியலிய அணி அஞ்சும் ஒரே வீரர் இவர் தான். முதல் பந்தையே எல்லை கோட்டுக்கு அனுப்ப வேண்டும் என துடிப்பவர். ஒவ்வொரு பந்தையும் நன்றாக அடித்து ஆடக்கூடிய மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர். இவர் களத்தில் இருந்தால் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கிலி தான். இந்திய அணியின் ரன்கள் மளமள என உயரும். இவர் பகுதி நேர சுழல்பந்து வீச்சாளராகவும் எதிரணியை கலக்குவார்.


காம்பிர்:

இவர் சிறந்த இடது கை ஆட்டக்காரர். இவர் களத்தில் நின்று விளையாட ஆரம்பித்தால் அணியின் ரன் ரேட் பற்றி கவலை இல்லை. பந்துக்கு பந்து ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் நிலையான பேட்ஸ் மேன்.

ஹோலி:

ஜுனியர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி ஜூனியர் உலக கோப்பையை பெற்றுத் தந்த இளம் வீரர். அந்த தகுதியே சீனியர் அணிக்கு வரக் காரணம். 20 /20 கிரிக்கெட்டிலும் தனி முத்திரை படைத்தவர். இவர் ஒரு நாள், டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடும் இவர் மிகச் சிறந்த பீல்டர்.

ரைனா:

அணியில் மூன்றாம் நிலை முதல் ஏழாம் நிலை வரை எந்த இடத்திலும் அதிரடியாக ஆடக்கூடிய ஆட்டக்காரர் ரைனா. இவர் களத்தில் நின்றால் பந்துகள் எல்லை கோட்டை கட்டிப் பிடிக்கும். கிரீசில் நின்று பின்னங் காலை சற்று தூக்கி சிக்ஸர் அடிக்கும் ஷாட்டுகளில் கை தேர்ந்தவர். இவரும் பகுதி நேர பந்துவீச்சாளராக விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்.

தோனி:

இந்திய அணியின் வெற்றிக் காப்டின். பெரும்பாலும் தாசை வெல்லக்கூடிய ராசி இவருக்கு உண்டு. அணியை திறம்பட வழி நடத்துவதிலும், பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகிக்கும் திறமை படைத்தவர். இவர் களத்தில் பந்தை வெட்டி விட்டு ஆடும் ஆட்டம் நன்றாக இருக்கும்.

யுவராஜ் சிங்:

இவருக்கு உடல் தகுதியும், பார்மும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இருந்தாலும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதை இவர் சரியாக பயன்படுத்தி அணிக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் என அழைக்கப்படுபவர். ஒரு காலத்தில் இவர் அரை சதம் அடித்தால் இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி பெரும் என்ற ராசி இவருக்கு இருந்தது. இப்போதும் இந்த ராசி வொர்கவுட் ஆகுமா?

யூசுப் பதான்:

குறுகிய காலத்தில் அசுர வளர்சியடைந்தவர். இவர் களத்தில் காட்டும் அதிரடி இருக்கே, ஒன்னொன்னும் பேரிடி. வேகம், சுழல் என எந்த பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்யும் திறமை படைத்தவர். இவரிடம் சிக்கும் பந்துகள் நான்கும், ஆறுமாக சிதறும். பகுதி நேர பந்து வீச்சாளர்.

ஹர்பஜன்:

அருமையான சுழல் பந்து வேசாளர் மட்டுமல்ல, பின்வரிசையில் இறங்கி ஆடும் அருமையான அதிரடி ஆட்டக்காரர். இவரின் தொஸ்ராவுக்கு எதிரணி சரண்டர் தான். இவர் விக்கெட் வேட்டை நடத்தினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் தான். தோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்..

ஜாகிர் கான்:

அணியில் நீண்ட காலமாக விளையாடும் சிறந்த வேகப் பந்து வேசாளர். இவரின் ஸ்டம்ப்பை தகர்க்கும் படி வீசும் பந்துகள் எதிரணியினரை அச்சப்படுத்தும். ரன்களை அதிகம் விட்டுக் கொடுக்காமல் கட்டுக் கோப்பாக பந்து வீசுபவர். பந்து வீச்சில் மட்டுமல்ல, மட்டை வீச்சிலும் திறமை வாய்ந்தவர். எதிரணியின் துவக்கத்தை விரைவில் அவுட் ஆக்கும் நல்ல பவுலர்.

நெஹ்ரா:

இவரும் அணியில் நீண்ட காலமாக விளையாடுபவர். இவரின் இன்ஸ்விங் பந்துகள் எதிரணியினரை அவுட் ஆக்கும் வகையில் இருக்கும். அணிக்கு வருவதும், போவதுமாக இருக்கும் இவர் ரன்கள் அதிகம் கொடுப்பதை கட்டுப்படுத்தினால் நல்லது.

அஸ்வின்:

20 /20 போட்டிகளில் அடையாளம் காணப்பட்ட சிறந்த சுழல் பந்து வீச்சாளர். 20 /20 ஐ‌பி‌எல் போட்டிகளில் கலக்கியவர். தோனியின் நம்பிக்கைக்கு உரியவர். இவர் ஒவ்வொரு பந்தையும் வித விதமாக வீசும் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்க வேண்டுமெனில் இந்த தொடரில் சாதித்தால் மட்டுமே முடியும்.

சாவ்லா:

கடந்த இரு வருடங்களாக அணியில் இடம் கிடைக்காத இவருக்கு இந்த தொடரில் விளையாடுவது ஒரு அதிர்ஷ்டம் தான். இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதால் அணியில் இடம் கிடைத்தது.

ஸ்ரீசாந்த்:

களத்தில் இவரின் ஆக்ரோசமே இவருக்கு பலமும், பலவீனமும் ஆகும். ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும். ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்தினால் மிகவும் நல்லது. இவரின் பவுன்சர்கள் எதிரணியை அச்சப்படுத்தக் கூடியது.

முனாப் படேல்:

இவரும் அருமையான வேகப்பந்து வீச்சாளர். விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்.
prakashin
prakashin
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை

Back to top Go down

இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்! Empty Re: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 12:23 pm

தகவலுக்கு நன்றி பாஸ்... தொடர்ந்து கலக்குங்க..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
» இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர் நியமனம்
» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
»  3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்
» பாக்., பிரதமர் கிலானி இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum