தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
ஆண், பெண்களே உஷார்!
2 posters
Page 1 of 1
ஆண், பெண்களே உஷார்!
1. ஏமாறும் ஆண், பெண்களே உஷார்!
மூலிகை மருத்துவர் முகுந்தன்: என் சொந்த ஊர் நீலகிரி. என் அப்பாவிற்கு, மூலிகைகள் மேல் பெரிய பிடிப்பு. அதே மாதிரி எனக்கும் ஏற்பட, சித்த மருத்துவரிடம், அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். கோல்கட்டாவில் பி.எம்.எச். எஸ்., முடித்துவிட்டு, மூலிகை மருத்துவம் செய்ய அங்கீகாரம் பெற்றேன். மூலிகைகள், தீய விளைவுகளுக்காக பயன்படுகிறது என்பதை அறிந்தேன். மந்திரம், மாந்திரீகம் செய்வதாக சிலர் கூறி, உடல் நோய், சரும நோய்னு பல பிரச்னைகளை உண்டு பண்ணுவாங்க. செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி, மாந்திரீகம் பண்ணக் கூடியவர், பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டு, பெண்களை ஏமாற்றுகின்றனர். அதனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இது குறித்து ஆராய்ச்சி செய்தேன். தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் போல், விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் உள்ளன. வசிய மருந்து வைக்க, பெரும்பாலும் அந்த மாதிரி தாவரங்களைத் தான் தேடிப் பிடித்து, அதை, பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணுவாங்க. தெரிந்த மனிதர்கள் மூலம், உணவில் கொடுக்க வெச்சுடுவாங்க. மூலிகையின் நச்சுத் தன்மை ரத்தத்தில், கலந்து, தன் ஆட்டத்தை துவக்கும். இப்படி மருந்து கொடுக்கப்பட்டவங்க, இயல்புக்கு வினோதமா நடப்பதைத்தான், வசியம் வெச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. இது ஒரு வகையான, "புட் பாய்சன்!' பெரும்பாலான மருந்துகள், ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்த பின் தான், அதன் வேலையைக் காட்டும். அதனால், இதை சரி செய்ய, இந்த சக்திக்கு இணையான மருந்துகளை மந்திரவாதிகள் கொடுக்கும் போது, அதன் வீரியம் அதிகமாகும். பிரச்னையில், இருந்து விடுபட ஒரு தரமான, அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரை நாடலாம். முறையான மருத்துவம், உணவுக் கட்டுப்பாடு மூலம் குணம் பெறலாம்.
மூலிகை மருத்துவர் முகுந்தன்: என் சொந்த ஊர் நீலகிரி. என் அப்பாவிற்கு, மூலிகைகள் மேல் பெரிய பிடிப்பு. அதே மாதிரி எனக்கும் ஏற்பட, சித்த மருத்துவரிடம், அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன். கோல்கட்டாவில் பி.எம்.எச். எஸ்., முடித்துவிட்டு, மூலிகை மருத்துவம் செய்ய அங்கீகாரம் பெற்றேன். மூலிகைகள், தீய விளைவுகளுக்காக பயன்படுகிறது என்பதை அறிந்தேன். மந்திரம், மாந்திரீகம் செய்வதாக சிலர் கூறி, உடல் நோய், சரும நோய்னு பல பிரச்னைகளை உண்டு பண்ணுவாங்க. செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி, மாந்திரீகம் பண்ணக் கூடியவர், பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டு, பெண்களை ஏமாற்றுகின்றனர். அதனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இது குறித்து ஆராய்ச்சி செய்தேன். தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் போல், விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் உள்ளன. வசிய மருந்து வைக்க, பெரும்பாலும் அந்த மாதிரி தாவரங்களைத் தான் தேடிப் பிடித்து, அதை, பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணுவாங்க. தெரிந்த மனிதர்கள் மூலம், உணவில் கொடுக்க வெச்சுடுவாங்க. மூலிகையின் நச்சுத் தன்மை ரத்தத்தில், கலந்து, தன் ஆட்டத்தை துவக்கும். இப்படி மருந்து கொடுக்கப்பட்டவங்க, இயல்புக்கு வினோதமா நடப்பதைத்தான், வசியம் வெச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. இது ஒரு வகையான, "புட் பாய்சன்!' பெரும்பாலான மருந்துகள், ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்த பின் தான், அதன் வேலையைக் காட்டும். அதனால், இதை சரி செய்ய, இந்த சக்திக்கு இணையான மருந்துகளை மந்திரவாதிகள் கொடுக்கும் போது, அதன் வீரியம் அதிகமாகும். பிரச்னையில், இருந்து விடுபட ஒரு தரமான, அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவரை நாடலாம். முறையான மருத்துவம், உணவுக் கட்டுப்பாடு மூலம் குணம் பெறலாம்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆண், பெண்களே உஷார்!
2. திரிபுராவில் புதிதாக திருமணமான ஆசிரியர் ஒருவர், தனக்கு சீர்வரிசையாக கொடுக்கப்பட்ட பொருட்களை விற்று, பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவின் வடகோடியிலுள்ள தன்பிலாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிமல்சிங் தெப்பர்மா (37). ஆசிரியர். இவருக்கும், ஜெஸ்மி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.தனக்கு வரதட்சணையாக கொடுத்த பொருட்கள் அனைத்தையும் விற்ற பிமல்சிங், அதில் கிடைத்த பணத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:வரதட்சணை வாங்கக் கூடாது என்பது எனது கொள்கை. இதை என் மாமனார் வீட்டிலும் கண்டிப்பாக தெரிவித்து விட்டேன். ஆனால், எனது மனைவி அவருக்கு ஒரே பெண் என்பதால், நிறைய சீர்வரிசை வழங்கினார். திருமணத்திற்கு பின் வரதட்சணை பொருட்களை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலாக இருந்தது. எனவே, அந்த பொருட்களை விற்பதற்கு என் மனைவியிடம் அனுமதி கேட்டேன். அவளும் ஒப்புக் கொண்டாள். இதையடுத்து, வரதட்சணையாக கொடுத்த தங்க நகைகள் மற்றும் பர்னிச்சர்களை விற்று, அதில் கிடைத்த 148,000 ரூபாய் பணத்தை முதல்வர் நிவாரண நிதியில் சேர்த்து விட்டேன்,என்றார்.
பிமல்சிங்கின் செயலை, மாநில கல்வி அமைச்சர் தபான் சக்கரவர்த்தி மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் அலி ஆகியோர் பாராட்டியுள்ளனர். வரதட்சணை கொடுமைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில், பிமல்சிங் முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார் என பலரும் பாராட்டுகின்றனர்.
திரிபுராவின் வடகோடியிலுள்ள தன்பிலாஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிமல்சிங் தெப்பர்மா (37). ஆசிரியர். இவருக்கும், ஜெஸ்மி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.தனக்கு வரதட்சணையாக கொடுத்த பொருட்கள் அனைத்தையும் விற்ற பிமல்சிங், அதில் கிடைத்த பணத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:வரதட்சணை வாங்கக் கூடாது என்பது எனது கொள்கை. இதை என் மாமனார் வீட்டிலும் கண்டிப்பாக தெரிவித்து விட்டேன். ஆனால், எனது மனைவி அவருக்கு ஒரே பெண் என்பதால், நிறைய சீர்வரிசை வழங்கினார். திருமணத்திற்கு பின் வரதட்சணை பொருட்களை பார்க்கும் போதெல்லாம் எரிச்சலாக இருந்தது. எனவே, அந்த பொருட்களை விற்பதற்கு என் மனைவியிடம் அனுமதி கேட்டேன். அவளும் ஒப்புக் கொண்டாள். இதையடுத்து, வரதட்சணையாக கொடுத்த தங்க நகைகள் மற்றும் பர்னிச்சர்களை விற்று, அதில் கிடைத்த 148,000 ரூபாய் பணத்தை முதல்வர் நிவாரண நிதியில் சேர்த்து விட்டேன்,என்றார்.
பிமல்சிங்கின் செயலை, மாநில கல்வி அமைச்சர் தபான் சக்கரவர்த்தி மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் அலி ஆகியோர் பாராட்டியுள்ளனர். வரதட்சணை கொடுமைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில், பிமல்சிங் முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார் என பலரும் பாராட்டுகின்றனர்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆண், பெண்களே உஷார்!
3. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு "வாக்கிங்' செய்தால், மரணம் ஏற்படுவதை (அல்லாஹ் நாடினால்) தடுக்க முடியும்' என, புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்க விஞ்ஞானிகள் சார்பில், "புற்றுநோய்க்கும், உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பு' பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக, கடந்த 1982 முதல் 2005ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்களின் தற்போதைய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இவ்விவரங்கள் அடிப்படையில், சோதனை மேற்கொண்ட போது, பெரும்பாலானோர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதும், ஒருசிலர் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. உடல் நலமாக இருந்தவர்கள், தினசரி உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதாகக் கூறினர். மேலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால், இதய நோய் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிகிறது.
இதுகுறித்து வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் கத்லீன் வோலின் கூறியதாவது: ஆய்வில் பங்கேற்ற பலர், கடந்த 10 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் காணப்பட்டனர். தீவிர உடற்பயிற்சியால், பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உடனே மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும். அனைவரும் இதை கடைபிக்க வேண்டும். இவ்வாறு கத்லீன் கூறினார்.
இவ்விவரங்கள் அடிப்படையில், சோதனை மேற்கொண்ட போது, பெரும்பாலானோர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதும், ஒருசிலர் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. உடல் நலமாக இருந்தவர்கள், தினசரி உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதாகக் கூறினர். மேலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால், இதய நோய் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிகிறது.
இதுகுறித்து வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் கத்லீன் வோலின் கூறியதாவது: ஆய்வில் பங்கேற்ற பலர், கடந்த 10 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் காணப்பட்டனர். தீவிர உடற்பயிற்சியால், பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உடனே மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும். அனைவரும் இதை கடைபிக்க வேண்டும். இவ்வாறு கத்லீன் கூறினார்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆண், பெண்களே உஷார்!
4. வறுமையை விரட்ட சுய முயற்சி முக்கியம்:
ஆடு வளர்க்கும் வளர்மதி: தேனி மாவட்டம் சிலமலை என் சொந்த ஊர். நான்காவது வரை படித்துள்ளேன். 19 வயதில் திருமணம். கணவர் சத்தியமூர்த்திக்கு தச்சு வேலை. தகரம்தான் சுவர்; தென்னங்கீற்று தான் கூரை; அதுதான் எங்கள் வீடு. வறுமை வாழ்க்கையை பிடுங்கியது. "அரம்' செய்வது எங்கள் ஊரின் குடிசைத் தொழில். அதையே நானும் செய்தேன். தினம், 50 ரூபாய் கிடைத்தது. எனக்கு தையல் தெரியும் என்பதால், ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கி வந்தேன். காடா துணி வாங்கி வந்து, உள் பாவாடை தைத்து விற்றேன். அதன் மூலம் சிறிது வருமானம் உயர்ந்தது. அடுத்ததாக, கிரைண்டர் வாங்கி, கூலிக்கு மாவு அரைத்துக் கொடுத்தேன். பின், மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினரானேன். அப்போது தான், வெளியே நாலு பேருடன் பழக முடிந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆடு வளர்க்க குழுவுக்கு கடன் கொடுத்தனர். துணிந்து 34 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, 11 ஆடுகளை வாங்கினேன். ஆட்டு புழுக்கையை விற்று, அந்த பணத்தில் ஆடுகளுக்கு தீவனம் வாங்கினேன். தொண்டு நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு, மொபைல் போன் வாங்க பணமும், இலவச சிம் கார்டும் கொடுத்தனர். தினமும் அதில் ஐந்து முறை, வாய்ஸ் மெயிலில் விவசாய டிப்ஸ் வரும். ஆடு வளர்ப்பு, எளிய முறை ஆடு வைத்திய குறிப்புகள் போன்றவற்றை கேட்டுக் கொள்வேன். வர்த்தக வசதி சேவை மையம், வங்கிகள் இல்லாத கிராமங்களுக்கு கை கொடுக்கிறது. எங்கள் ஊரிலும் அந்த மையம் இருக்கிறது. அதற்கு நான் தான் பொறுப்பாளர். அதற்கு ஊதியமும் உண்டு. நான் இப்போது, சிலமலை கிராம ஏழு மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி; 14 மகளிர் கூட்டமைப்பின் பொருளாளர்; விடி வெள்ளி மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்; மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீவிர ஆர்வலர் ஆகிய பொறுப்புகளை வகிக்கிறேன். நாள் முழுவதும் அயராத உழைப்பு என்றாலும், இப்போது என்னால் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது. இதற்கு சுய முயற்சி தான் காரணம்.
ஆடு வளர்க்கும் வளர்மதி: தேனி மாவட்டம் சிலமலை என் சொந்த ஊர். நான்காவது வரை படித்துள்ளேன். 19 வயதில் திருமணம். கணவர் சத்தியமூர்த்திக்கு தச்சு வேலை. தகரம்தான் சுவர்; தென்னங்கீற்று தான் கூரை; அதுதான் எங்கள் வீடு. வறுமை வாழ்க்கையை பிடுங்கியது. "அரம்' செய்வது எங்கள் ஊரின் குடிசைத் தொழில். அதையே நானும் செய்தேன். தினம், 50 ரூபாய் கிடைத்தது. எனக்கு தையல் தெரியும் என்பதால், ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கி வந்தேன். காடா துணி வாங்கி வந்து, உள் பாவாடை தைத்து விற்றேன். அதன் மூலம் சிறிது வருமானம் உயர்ந்தது. அடுத்ததாக, கிரைண்டர் வாங்கி, கூலிக்கு மாவு அரைத்துக் கொடுத்தேன். பின், மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினரானேன். அப்போது தான், வெளியே நாலு பேருடன் பழக முடிந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆடு வளர்க்க குழுவுக்கு கடன் கொடுத்தனர். துணிந்து 34 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, 11 ஆடுகளை வாங்கினேன். ஆட்டு புழுக்கையை விற்று, அந்த பணத்தில் ஆடுகளுக்கு தீவனம் வாங்கினேன். தொண்டு நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு, மொபைல் போன் வாங்க பணமும், இலவச சிம் கார்டும் கொடுத்தனர். தினமும் அதில் ஐந்து முறை, வாய்ஸ் மெயிலில் விவசாய டிப்ஸ் வரும். ஆடு வளர்ப்பு, எளிய முறை ஆடு வைத்திய குறிப்புகள் போன்றவற்றை கேட்டுக் கொள்வேன். வர்த்தக வசதி சேவை மையம், வங்கிகள் இல்லாத கிராமங்களுக்கு கை கொடுக்கிறது. எங்கள் ஊரிலும் அந்த மையம் இருக்கிறது. அதற்கு நான் தான் பொறுப்பாளர். அதற்கு ஊதியமும் உண்டு. நான் இப்போது, சிலமலை கிராம ஏழு மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி; 14 மகளிர் கூட்டமைப்பின் பொருளாளர்; விடி வெள்ளி மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்; மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீவிர ஆர்வலர் ஆகிய பொறுப்புகளை வகிக்கிறேன். நாள் முழுவதும் அயராத உழைப்பு என்றாலும், இப்போது என்னால் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது. இதற்கு சுய முயற்சி தான் காரணம்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆண், பெண்களே உஷார்!
தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஆண், பெண்களே உஷார்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தகவலுக்கு நன்றி
முழுசா படித்து நன்றி சொன்னமைக்கு நன்றி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» உஷார் பெண்ணே உஷார்...
» உஷார்! உஷார்! புண்ணியம்
» உஷார் பெண்ணே உஷார்...
» பெண்களே! இது உங்களுக்கான கோவில்
» பெண்களுக்குப் பெண்களே எதிரி
» உஷார்! உஷார்! புண்ணியம்
» உஷார் பெண்ணே உஷார்...
» பெண்களே! இது உங்களுக்கான கோவில்
» பெண்களுக்குப் பெண்களே எதிரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|