தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....

3 posters

Go down

 ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் ..... Empty ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....

Post by உதுமான் மைதீன் Thu Oct 21, 2010 12:20 am

புதுடில்லி:இலஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை.எனவே, ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் இலஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும். அதிகாரிகளுக்கும் வீணாகப் பேரம் பேசி தங்களுடைய வேலைநேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு வேதனையாகவும் வேடிக்கையாகவும் கருத்துத் தெரிவித்தது.

வருமானவரித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் சர்மா என்பவர் வருமானவரி செலுத்த வேண்டிய ஒருவர் அந்தத் தொகையைக் கணிசமாகக் குறைக்க ரூ 25 ஆயிரம் இலஞ்சம் தர வேண்டும் என்று கோரினாராம். அவ்வளவு தொகையைத் தர முடியாது என்று அந்த நபர் கூறினாராம். இறுதியில் நீண்ட பேரத்துக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபா தந்தால் போதும் என்று முடிவானதாம். அந்தப் பணத்தை சர்மா பெறமுற்பட்டபோது சி.பி.ஐ. பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப்ஹரியானா உயர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சர்மாவை விடுவித்து விட்டது. ஆனால், சி.பி.ஐ. மேன்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு,டி.எஸ்.தாக்குர் அடங்கிய குழு விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.பி. மல்ஹோத்ரா வாதிட்டார்.

இந்த இலஞ்ச வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம் எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். தான் அப்பாவி என்றும் வேண்டும் என்றே தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சர்மா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அப்போது அந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் இருந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதிகள் “வருமான வரித்துறை,சுங்கத்துறை,விற்பனை வரித்துறை போன்றவை இலஞ்சம் வாங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன. இதைப்போல வழக்குகள் வருவதைத் தடுக்க என்னென்ன வேலைக்கு எவ்வளவு இலஞ்சம் என்று மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால் பொதுமக்களுக்கும் இலஞ்ச அளவு தெரியும். அதிகாரிகளும் பேரம்பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் அடுத்தடுத்து இலஞ்சம் வாங்கி வேலைகளை மடமடவென முடித்துக்கொடுக்க முடியும் அல்லவா, நீங்கள் ஏன் இந்த யோசனையை அரசுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டனர் நீதிபதிகள்.

அதிகாரிகள் இப்படி இலஞ்சம் வாங்குகிறார்களே என்று நாம் கோபிக்க முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் விலைவாசி வேறு கடுமையாக உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர்.

இலஞ்சம் வாங்குவது தவறு என்று பள்ளிக்கூடத்திலேயே சொல்லித்தர ஏற்பாடு செய்தால்தான் இந்தப் பழக்கம் குறையும் என்று வேணுகோபால் அவர்களுக்குப் பதிலளித்தார்.

அடுத்தபடியாக வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பிவிடப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இருவரும் அவரைப் பார்த்து உங்களுடைய அனுபவம் திறமை தகுதிக்கு இந்த மாதிரியான அற்ப வழக்குகளில் எல்லாம் ஆஜராகலாமா. மகாத்மா காந்திஜியும் வழக்கறிஞர்தான். இந்த மாதிரியான (மோசடி) வழக்குகளில் அவர் ஆஜரானதாக வரலாறே இல்லையே?%27 என்றனர்.

நீங்கள் சொல்வது சரிதான். அதற்காக நான் இந்த மாதிரி (மோசடி) வழக்குகளில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துவிட்டால் பெரும்பாலான வழக்குகள் என் கையைவிட்டுப் போய்விடுமே என்று வேணுகோபால் பதில் சொன்னபோது நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

தினமணி
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

 ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் ..... Empty Re: ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 21, 2010 12:36 pm

மிகப்பெரிய அவலம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் ..... Empty Re: ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....

Post by சங்கவி Thu Oct 21, 2010 8:19 pm

tamilparks wrote:மிகப்பெரிய அவலம்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

 ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் ..... Empty Re: ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்
» அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு
» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» பரிசுத் தொகையை திருப்பியளித்த விஜய் சேதுபதி... திரையுலகினர் பாராட்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum