தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அன்புள்ள தோழனுக்கு...
+4
கவிக்காதலன்
சங்கவி
நிலாமதி
சிசு
8 posters
Page 1 of 1
அன்புள்ள தோழனுக்கு...
[You must be registered and logged in to see this image.]
அன்புள்ள தோழனுக்கு...
நினைவிருக்கிறதா? நம் அறிமுகம்.
எனக்கில்லை.
ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல்
ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் நட்பு.
அலுவலகத்தின் முதல்நாள்.
எல்லோரையும்போல்தான்
அறிமுகமானாய் நீ...!
பணியில் தடுமாறிய என்னை
பக்குவமாய் திருத்தி்ய போதெல்லாம்
நீயொரு நல்ல சகஊழியனாய் மதிக்கப்பட்டாய்.
சரி. எப்போது நண்பனானாய்?
எனக்கு நினைவில்லை.
என் அண்ணனின் திருமணம்.
வந்திருந்த அத்தனை சகஊழியர்களும்
என் அன்னையை ஆன்ட்டி-யாக்கினர்.
நீ மட்டும் அம்மாவாக்கிய போது
நமக்குள் புரிதல் துவங்கியது.
எந்த நீரூற்றி வளர்த்தோமென்று தெரியவில்லை
நட்பு மட்டும் செழித்து வளர்ந்தது.
அரசியல் முதல் ஆன்மிகம் வரை...
இலக்கணம் முதல் இலக்கியம் வரை...
இணையம் முதல் இதயம் வரை...
இமயம் முதல் இ-மயம் வரை...
சங்ககாலம் முதல் சமச்சீர் கல்வி வரை...
செல்போன் முதல் ஸ்பெக்ட்ரம் வரை...
சமையல் முதல் கோலம் வரை...
வள்ளுவர் கோட்டம் முதல் தமிழ்த்தோட்டம் வரை...
எதைப்பற்றி நாம் பேசிக்கொள்ளவில்லை?
என்வீட்டிற்கு வரத்துவங்கினாய்.
முதல் வருகையின் மதிய உணவுக்குப் பின்னான
உன் புறப்படுதலுக்கு முன்,
என் அம்மாவைப் பார்த்து சொன்னாய்.
"நட்புக்காலத்தின் 15 -ம் கவிதை
உங்களுக்கானதென்று".
படித்துவிட்டு சிரித்த அம்மாவின் புன்னகையில்
இன்னும் விசாலமானது நம் நட்பு.
நட்புக்காலம்...
- அறிவுமதியின் புனைவு அல்ல
நம்மின் பதிவென்று
சிலாகித்துக் கொண்டோமே...
நினைவிருக்கிறதா?
வாழ்வின் அடுத்தடுத்த உயரங்களுக்காக
நீ இடம்பெயர்ந்தபோது
என் உதட்டுப் புன்னகை கூட உப்புக்கரித்தது.
அலைபேசியின் ஆதரவில்
நம் தூர எல்லைகள்
அட்சமாகவும், தீர்க்கமாகவும் குறுக்கப்பட்டன.
தொடர்ந்து என் குடும்பத்தோடும் தொடர்பிலிருந்தாய்.
மனத்தந்தியில் நம் எண்ணங்கள்
நித்தமும் பிரசவித்தன.
சிலமாதங்கள் இடைவெளிக்குப் பின்
வேர்வைபூக்கும் ஒரு கோடை சந்திப்பில்,
கடந்தகாலத்தின் பசுமையான பக்கங்களைப்
புரட்டிக்கொண்டே - என்வீட்டில்
நாம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
பேச்சினூடே...
நான் உன்னிடமிருந்து சற்றும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினாய்.
திகைப்பாய் உணர்ந்தேன் நான்.
இலேசான மனதோடு புன்னகைத்துப் புறப்பட்டாய் நீ.
உதைவண்டியில் ஒன்றாய் பயணித்தபோதும்,
அலைநீரடித்து கடற்கரையில் விளையாடியபோதும்
நாம் உணர்ந்ததில்லையே...
நட்பு தவிர்த்த உணர்வுகள்!
நம் தூரஇடைவெளிகளிலும், கால எல்லைகளிலும் உணர்ந்தாயா?
உலாபேசியின் உரையாடல்களில் உணர்ந்தாயா?
உறவின் வெற்றிடங்களை நிரப்ப
அன்பாகவும், ஆறுதலாகவும்
ஒரு நட்பு போதுமென்று நீயேன் உணரவில்லை??
நட்பைத் தவிர்த்து வேறொன்றும்
உணர்ந்ததில்லை உன்னிடம் நான்.
என்றென்றும் உன் நட்பு போதுமெனக்கு...
என்றாலும்,
இருவேறு உணர்வுக்குவியலாய் நாம்.
நட்பின் பாதையில் இனி நமக்கு -
முட்கள் மட்டுமே அதிகதிகமாய்த் தென்படும்.
மிக அழ்ந்த யோசனைக்குப் பின்னும்,
உன்னில் உணர்ந்த சுதந்திரத்தை
இனி யாரில் பெறுவோம் என்ற கவலையையும் மீறி -
நட்புக்காலத்தின் 15 -ம் கவிதையை
மெய்யாக்கவே முனைகிறேன் நான்.
நம் நட்பின்
கடைசிப் பகிர்தலாய் இருக்கட்டும் இந்தக்கடிதம்.
ஏனென்றால்...
நட்புசொல்லி நெருங்கிப் பழகி
ஒருவரையொருவர் புரிந்துகொண்டாலும்...
காதலைக் குறிவைத்தே
முன்னகர்த்தப்படும் நட்பும்
நம்பிக்கைத் துரோகமே...!
என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,
@
#
$
%
&...
(கொஞ்சம் பெரிய க(வி)தை தான்...பொறுத்துக்கொள்ளுங்கள். நண்பர்களே...)
அன்புள்ள தோழனுக்கு...
நினைவிருக்கிறதா? நம் அறிமுகம்.
எனக்கில்லை.
ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல்
ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் நட்பு.
அலுவலகத்தின் முதல்நாள்.
எல்லோரையும்போல்தான்
அறிமுகமானாய் நீ...!
பணியில் தடுமாறிய என்னை
பக்குவமாய் திருத்தி்ய போதெல்லாம்
நீயொரு நல்ல சகஊழியனாய் மதிக்கப்பட்டாய்.
சரி. எப்போது நண்பனானாய்?
எனக்கு நினைவில்லை.
என் அண்ணனின் திருமணம்.
வந்திருந்த அத்தனை சகஊழியர்களும்
என் அன்னையை ஆன்ட்டி-யாக்கினர்.
நீ மட்டும் அம்மாவாக்கிய போது
நமக்குள் புரிதல் துவங்கியது.
எந்த நீரூற்றி வளர்த்தோமென்று தெரியவில்லை
நட்பு மட்டும் செழித்து வளர்ந்தது.
அரசியல் முதல் ஆன்மிகம் வரை...
இலக்கணம் முதல் இலக்கியம் வரை...
இணையம் முதல் இதயம் வரை...
இமயம் முதல் இ-மயம் வரை...
சங்ககாலம் முதல் சமச்சீர் கல்வி வரை...
செல்போன் முதல் ஸ்பெக்ட்ரம் வரை...
சமையல் முதல் கோலம் வரை...
வள்ளுவர் கோட்டம் முதல் தமிழ்த்தோட்டம் வரை...
எதைப்பற்றி நாம் பேசிக்கொள்ளவில்லை?
என்வீட்டிற்கு வரத்துவங்கினாய்.
முதல் வருகையின் மதிய உணவுக்குப் பின்னான
உன் புறப்படுதலுக்கு முன்,
என் அம்மாவைப் பார்த்து சொன்னாய்.
"நட்புக்காலத்தின் 15 -ம் கவிதை
உங்களுக்கானதென்று".
படித்துவிட்டு சிரித்த அம்மாவின் புன்னகையில்
இன்னும் விசாலமானது நம் நட்பு.
நட்புக்காலம்...
- அறிவுமதியின் புனைவு அல்ல
நம்மின் பதிவென்று
சிலாகித்துக் கொண்டோமே...
நினைவிருக்கிறதா?
வாழ்வின் அடுத்தடுத்த உயரங்களுக்காக
நீ இடம்பெயர்ந்தபோது
என் உதட்டுப் புன்னகை கூட உப்புக்கரித்தது.
அலைபேசியின் ஆதரவில்
நம் தூர எல்லைகள்
அட்சமாகவும், தீர்க்கமாகவும் குறுக்கப்பட்டன.
தொடர்ந்து என் குடும்பத்தோடும் தொடர்பிலிருந்தாய்.
மனத்தந்தியில் நம் எண்ணங்கள்
நித்தமும் பிரசவித்தன.
சிலமாதங்கள் இடைவெளிக்குப் பின்
வேர்வைபூக்கும் ஒரு கோடை சந்திப்பில்,
கடந்தகாலத்தின் பசுமையான பக்கங்களைப்
புரட்டிக்கொண்டே - என்வீட்டில்
நாம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
பேச்சினூடே...
நான் உன்னிடமிருந்து சற்றும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினாய்.
திகைப்பாய் உணர்ந்தேன் நான்.
இலேசான மனதோடு புன்னகைத்துப் புறப்பட்டாய் நீ.
உதைவண்டியில் ஒன்றாய் பயணித்தபோதும்,
அலைநீரடித்து கடற்கரையில் விளையாடியபோதும்
நாம் உணர்ந்ததில்லையே...
நட்பு தவிர்த்த உணர்வுகள்!
நம் தூரஇடைவெளிகளிலும், கால எல்லைகளிலும் உணர்ந்தாயா?
உலாபேசியின் உரையாடல்களில் உணர்ந்தாயா?
உறவின் வெற்றிடங்களை நிரப்ப
அன்பாகவும், ஆறுதலாகவும்
ஒரு நட்பு போதுமென்று நீயேன் உணரவில்லை??
நட்பைத் தவிர்த்து வேறொன்றும்
உணர்ந்ததில்லை உன்னிடம் நான்.
என்றென்றும் உன் நட்பு போதுமெனக்கு...
என்றாலும்,
இருவேறு உணர்வுக்குவியலாய் நாம்.
நட்பின் பாதையில் இனி நமக்கு -
முட்கள் மட்டுமே அதிகதிகமாய்த் தென்படும்.
மிக அழ்ந்த யோசனைக்குப் பின்னும்,
உன்னில் உணர்ந்த சுதந்திரத்தை
இனி யாரில் பெறுவோம் என்ற கவலையையும் மீறி -
நட்புக்காலத்தின் 15 -ம் கவிதையை
மெய்யாக்கவே முனைகிறேன் நான்.
நம் நட்பின்
கடைசிப் பகிர்தலாய் இருக்கட்டும் இந்தக்கடிதம்.
ஏனென்றால்...
நட்புசொல்லி நெருங்கிப் பழகி
ஒருவரையொருவர் புரிந்துகொண்டாலும்...
காதலைக் குறிவைத்தே
முன்னகர்த்தப்படும் நட்பும்
நம்பிக்கைத் துரோகமே...!
என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,
@
#
$
%
&...
(கொஞ்சம் பெரிய க(வி)தை தான்...பொறுத்துக்கொள்ளுங்கள். நண்பர்களே...)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
எதிர்பார்ப்புக்கள் எல்லாமே நிறைவேறுவதில்லை தானே .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: அன்புள்ள தோழனுக்கு...
வாவ்... 100 % உண்மை !!காதலைக் குறிவைத்தே
முன்னகர்த்தப்படும் நட்பும்
நம்பிக்கைத் துரோகமே...
இது கொஞ்சம் கனக்கிறது...! காதலை குறிவைத்து நட்பு இருக்கக்கூடாது தான்...! ஆனால் ஒரு உண்மை நட்பு காதலாவதில் தவறில்லை என நினைக்கிறேன்...!என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,
கவிதை வாவ் சொல்ற மாதிரி சூப்பராக இருக்குது தல...! கலக்குங்க...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்புள்ள தோழனுக்கு...
//என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,//
பாராட்டுக்கள் நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு கவி மழை அதில் நான் நனைந்தேன் உணர்வுகளுடன்
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,//
பாராட்டுக்கள் நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு கவி மழை அதில் நான் நனைந்தேன் உணர்வுகளுடன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள தோழனுக்கு...
nilaamathy wrote:எதிர்பார்ப்புக்கள் எல்லாமே நிறைவேறுவதில்லை தானே .
நிச்சயமாக...
ஆமா.. நீங்க யாரோட எதிர்பார்ப்பை சொல்றீங்க அக்கா...???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
சங்கவி wrote:
நன்றி சங்கவி....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,//
பாராட்டுக்கள் நண்பரே நெடு நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு கவி மழை அதில் நான் நனைந்தேன் உணர்வுகளுடன்
யூஜின்
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
[quote]
சரிதான் கவிக்கா... இந்தக் கடிதத்திற்கான தோழனின் பதில் மடலுக்கு காத்திருக்கிறேன் நான்....
ரொம்ப நன்றி மக்கா...
கவிக்காதலன் wrote:என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,இது கொஞ்சம் கனக்கிறது...! காதலை குறிவைத்து நட்பு இருக்கக்கூடாது தான்...! ஆனால் ஒரு உண்மை நட்பு காதலாவதில் தவறில்லை என நினைக்கிறேன்...!
சரிதான் கவிக்கா... இந்தக் கடிதத்திற்கான தோழனின் பதில் மடலுக்கு காத்திருக்கிறேன் நான்....
கவிதை வாவ் சொல்ற மாதிரி சூப்பராக இருக்குது தல...! கலக்குங்க...!!!
ரொம்ப நன்றி மக்கா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
யார் அந்த தோழி சேக்காளி
உண்மையில் எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு அந்த தோழியின் நட்பு
ஒரு ஆண் பெண் நட்பை கணமும் நிறுத்தும் அழகான வரிகள் பாராட்டுக்கள்
உண்மையில் எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு அந்த தோழியின் நட்பு
ஒரு ஆண் பெண் நட்பை கணமும் நிறுத்தும் அழகான வரிகள் பாராட்டுக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: அன்புள்ள தோழனுக்கு...
எடுத்துக் கொண்ட கருத்தை நளினமாகவும்,
ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது...
கவிதை நல்லா இருக்கு..
--
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறிய பின் சொல்லிய உண்மை,
ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது...
கவிதை நல்லா இருக்கு..
--
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறிய பின் சொல்லிய உண்மை,
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: அன்புள்ள தோழனுக்கு...
அருமையான கவிதை பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: அன்புள்ள தோழனுக்கு...
செய்தாலி wrote: யார் அந்த தோழி சேக்காளி
உண்மையில் எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு அந்த தோழியின் நட்பு
ஒரு ஆண் பெண் நட்பை கணமும் நிறுத்தும் அழகான வரிகள் பாராட்டுக்கள்
ஆமால்ல... எனக்கும் ரொம்பவும் புடிச்சிருக்கு....
தோழனின் பதில்மடல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்...
பாராட்டுகளுக்கு நன்றி சேக்காளி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
அ.இராமநாதன் wrote:எடுத்துக் கொண்ட கருத்தை நளினமாகவும்,
ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது...
கவிதை நல்லா இருக்கு..
--
காதல் ஒன்றும் தவறே இல்லை,
காதல் இன்றி மனிதனும் இல்லை,
நண்பர்களும் காதலர் ஆக,
மாறிய பின் சொல்லிய உண்மை,
மனந்திறந்த பாராட்டுகளுக்கு சிரந்தாழ்ந்த நன்றிகள் ஐயா...
சினேகனின் பாடல் வரிகள் இதற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது.
பார்க்கலாம் பதில்மடலில்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: அன்புள்ள தோழனுக்கு...
பட்டாம்பூச்சி wrote:அருமையான கவிதை பாராட்டுக்கள்
நன்றி பட்டாம்பூச்சி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» அன்புள்ள அம்மாவிற்கு!
» அன்புள்ள சகோதரனுக்கு !!!
» அன்புள்ள அப்பா...
» அன்புள்ள அம்மாவுக்கு
» அன்புள்ள அம்மா
» அன்புள்ள சகோதரனுக்கு !!!
» அன்புள்ள அப்பா...
» அன்புள்ள அம்மாவுக்கு
» அன்புள்ள அம்மா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|