தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
எழுதுகிறேன் ஒரு கடிதம்.
3 posters
Page 1 of 1
எழுதுகிறேன் ஒரு கடிதம்.
என் நண்பனுக்கு, நான் எழுதிய கடிதம் உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.
அன்பு நண்பனுக்கு, என்றும் மறவாத நினைவுகளுடன் சேதுராமன் வரையும் மடல். அம்மாவும் அப்பாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் அலுவல் சார்ந்த பணிகளில் எந்தவித தொய்வுமின்றி நடந்து கொண்டு இருக்கின்றது, உந்தன் புது வேலை எவ்வாறு உள்ளது என்பதனைப் பற்றி தெரிவிக்கவும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "Team Everest" நண்பர்கள் சிலருடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லம் சென்று வந்தேன். அந்த அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இக்கடிதத்தை எழுதுகின்றேன். அந்த இல்லத்தில் கிட்டத்தட்ட இருபத்தியெட்டு(28) பாட்டிமார்கள் இருக்கின்றனர், நான் உடன் சென்ற நண்பர்களில் சிலர் அடிக்கடி சென்று வருவதால் , எங்களது வருகையை எதிர்நோக்கி இருந்தனர். நம்மோடு நேசம் கொள்ள குழந்தைகள் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது என்பதனை உணர முடிந்தது. முறையான அறிமுகம் செய்து கொண்டோம். சென்ற நண்பர்கள் இரு குழுவாகப் பிரிந்து சிறு சிறு போட்டிகள் நடத்தி பாட்டிமார்களை புத்துணர்வுடன் இருக்கச்செய்தோம். பாட்டிமார்களுக்கும் சிறு விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒரு மகிழ்வான தருணமாய் அமைத்தோம். குடிப்பழக்கத்தின் தீமையையும், தாய்மையின் மேன்மையும் உணர்த்தும் வண்ணம் குறு நாடகமும் அரங்கேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவித்யா என்ற எங்கள் தோழிக்கு பாட்டிமார்களுடன் இணைந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, பாட்டிமார்களிடம் இருந்து விடை பெற்றோம்.
இல்லத்தில் நடந்த நிகழ்வுகளை சிந்தித்தவாறே எனது அறைக்கு வந்து சேர்ந்தேன். அறைக்கு வந்து சேர்ந்த பின்பும் என் மனம் ஏனோ அவர்களது(பாட்டிகளது) வாழ்க்கை சூழலையே சுற்றி வந்தது. நாங்கள் எங்களது விளையாட்டுகளாலும், வேடிக்கைகளாலும் மகிழ்வித்தபோதும், பெரும்பாலானவர்களின் சிரிப்பில் முழுமை இல்லை என்பதனைத் தான் என் மனம் இடையிராது சொல்லிக்கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக பெரும்பாலான பாட்டிகளுக்கு மகனோ, மகளோ இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அன்னை, தந்தையினரை விடுதியில் விட்டு வாழவேண்டிய நிலைக்கு நம் சமூகம் வந்து விட்டதோ என்ற அச்சம் தோன்றிவிட்டது.
நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து இன்று வரைக்கும் , நமது அன்னையரும், தந்தையரும் நம்மைப்போற்றி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது , நான் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது , இரவு பகல் பாராது, அயராது கண்விழித்து பார்த்துக்கொண்ட அம்மாவையும், தமது வியாபாரத்தில் தொடர்ந்து இழப்புகளையே சந்தித்த போதும் கலங்காத என் தந்தை, எனக்காக சிந்திய துளிகளையும் மறக்க கூடுமா?. ஏன் இந்த நொடிப்பொழுதில் அவருக்கு விக்கல் எடுத்தாலும், எனக்கும் தங்கைக்கும் அலைபேசியில் அழைத்து, "சாமி நல்ல இருக்கியாப்பா, விக்கல் வந்தது நீ நெனைச்சுக்கிட்டாயோனு கூப்பிட்டேன் என்பார்" என்று நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றவர்கள். ஏன் உனக்கும் அண்ணனுக்கும் இல்லை என்று சொல்லாமல், பார்த்து பார்த்து செய்கின்றனரே, உமது தாயும் தந்தையும்.
நமது வாழ்வுதன்னில் இழையோடி இருக்கும், இந்த பிணைப்புகள் ஒவ்வொரு மகனின், மகளின் வாழ்விலும் இருக்கும் என்பது திண்ணம். இவ்வாறு இருக்க, ஏன் முதியவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி என்னில் எழுகின்றது, ஏன் உன்னிலும் எழக்கூடும். எந்தவொரு பெற்றோரும் வெறும் உடல் சுகத்திற்க்காக மட்டும் பிள்ளைகளை ஈன்று எடுப்பதில்லை. இல்லையெனில் பத்து(10) மாதம் வரைக்கும் சுமந்து மறு பிறப்பெடுத்து நம்மை பெற வேண்டியதும் இல்லை, வளர்க்கவும் தேவையில்லை தானே. பெற்றோர்களின் அன்பைப் பற்றிய பிள்ளைகளின் மதிப்பீடுகள் வெவ்வேறானதாய் இருந்தாலும், பெற்றோர்களது அன்பு சுழியமாய் இருந்து இருக்க வாய்ப்பில்லை என்பது தானே உண்மை. ஒரு வேளை தனது பெற்றோரைப் பற்றிய ஒருவனது மதிப்பு சுழியமே என்றாலும் கூட,அவன் இந்த உலகத்தில் உயிர் பெறக்காரணமாய் இருந்த, அந்த இரண்டு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது தானே, தர்மம்.
ஆறறிவு பெற்றிருக்கும் மனிதராய் பிறந்ததன் மேன்மையைப் பெற்றோரைப் பாதுகாத்தலின் மூலம் நிறைவு செய்வோம். இனியும் புதியதாய் முதியோர் இல்லங்கள் முளைக்காமல் தடுக்கப்பட வேண்டும். ஒரு நண்பனாய் உம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் பெற்றோரை அலைக்களியவிடாமல் என்னுடன் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக்கொள். மற்றைய நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். இனி வரும் காலங்களில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்குவோம்.
அன்பு நண்பனுக்கு, என்றும் மறவாத நினைவுகளுடன் சேதுராமன் வரையும் மடல். அம்மாவும் அப்பாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் அலுவல் சார்ந்த பணிகளில் எந்தவித தொய்வுமின்றி நடந்து கொண்டு இருக்கின்றது, உந்தன் புது வேலை எவ்வாறு உள்ளது என்பதனைப் பற்றி தெரிவிக்கவும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "Team Everest" நண்பர்கள் சிலருடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லம் சென்று வந்தேன். அந்த அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இக்கடிதத்தை எழுதுகின்றேன். அந்த இல்லத்தில் கிட்டத்தட்ட இருபத்தியெட்டு(28) பாட்டிமார்கள் இருக்கின்றனர், நான் உடன் சென்ற நண்பர்களில் சிலர் அடிக்கடி சென்று வருவதால் , எங்களது வருகையை எதிர்நோக்கி இருந்தனர். நம்மோடு நேசம் கொள்ள குழந்தைகள் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது என்பதனை உணர முடிந்தது. முறையான அறிமுகம் செய்து கொண்டோம். சென்ற நண்பர்கள் இரு குழுவாகப் பிரிந்து சிறு சிறு போட்டிகள் நடத்தி பாட்டிமார்களை புத்துணர்வுடன் இருக்கச்செய்தோம். பாட்டிமார்களுக்கும் சிறு விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒரு மகிழ்வான தருணமாய் அமைத்தோம். குடிப்பழக்கத்தின் தீமையையும், தாய்மையின் மேன்மையும் உணர்த்தும் வண்ணம் குறு நாடகமும் அரங்கேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவித்யா என்ற எங்கள் தோழிக்கு பாட்டிமார்களுடன் இணைந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, பாட்டிமார்களிடம் இருந்து விடை பெற்றோம்.
இல்லத்தில் நடந்த நிகழ்வுகளை சிந்தித்தவாறே எனது அறைக்கு வந்து சேர்ந்தேன். அறைக்கு வந்து சேர்ந்த பின்பும் என் மனம் ஏனோ அவர்களது(பாட்டிகளது) வாழ்க்கை சூழலையே சுற்றி வந்தது. நாங்கள் எங்களது விளையாட்டுகளாலும், வேடிக்கைகளாலும் மகிழ்வித்தபோதும், பெரும்பாலானவர்களின் சிரிப்பில் முழுமை இல்லை என்பதனைத் தான் என் மனம் இடையிராது சொல்லிக்கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக பெரும்பாலான பாட்டிகளுக்கு மகனோ, மகளோ இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அன்னை, தந்தையினரை விடுதியில் விட்டு வாழவேண்டிய நிலைக்கு நம் சமூகம் வந்து விட்டதோ என்ற அச்சம் தோன்றிவிட்டது.
நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து இன்று வரைக்கும் , நமது அன்னையரும், தந்தையரும் நம்மைப்போற்றி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது , நான் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது , இரவு பகல் பாராது, அயராது கண்விழித்து பார்த்துக்கொண்ட அம்மாவையும், தமது வியாபாரத்தில் தொடர்ந்து இழப்புகளையே சந்தித்த போதும் கலங்காத என் தந்தை, எனக்காக சிந்திய துளிகளையும் மறக்க கூடுமா?. ஏன் இந்த நொடிப்பொழுதில் அவருக்கு விக்கல் எடுத்தாலும், எனக்கும் தங்கைக்கும் அலைபேசியில் அழைத்து, "சாமி நல்ல இருக்கியாப்பா, விக்கல் வந்தது நீ நெனைச்சுக்கிட்டாயோனு கூப்பிட்டேன் என்பார்" என்று நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றவர்கள். ஏன் உனக்கும் அண்ணனுக்கும் இல்லை என்று சொல்லாமல், பார்த்து பார்த்து செய்கின்றனரே, உமது தாயும் தந்தையும்.
நமது வாழ்வுதன்னில் இழையோடி இருக்கும், இந்த பிணைப்புகள் ஒவ்வொரு மகனின், மகளின் வாழ்விலும் இருக்கும் என்பது திண்ணம். இவ்வாறு இருக்க, ஏன் முதியவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி என்னில் எழுகின்றது, ஏன் உன்னிலும் எழக்கூடும். எந்தவொரு பெற்றோரும் வெறும் உடல் சுகத்திற்க்காக மட்டும் பிள்ளைகளை ஈன்று எடுப்பதில்லை. இல்லையெனில் பத்து(10) மாதம் வரைக்கும் சுமந்து மறு பிறப்பெடுத்து நம்மை பெற வேண்டியதும் இல்லை, வளர்க்கவும் தேவையில்லை தானே. பெற்றோர்களின் அன்பைப் பற்றிய பிள்ளைகளின் மதிப்பீடுகள் வெவ்வேறானதாய் இருந்தாலும், பெற்றோர்களது அன்பு சுழியமாய் இருந்து இருக்க வாய்ப்பில்லை என்பது தானே உண்மை. ஒரு வேளை தனது பெற்றோரைப் பற்றிய ஒருவனது மதிப்பு சுழியமே என்றாலும் கூட,அவன் இந்த உலகத்தில் உயிர் பெறக்காரணமாய் இருந்த, அந்த இரண்டு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது தானே, தர்மம்.
ஆறறிவு பெற்றிருக்கும் மனிதராய் பிறந்ததன் மேன்மையைப் பெற்றோரைப் பாதுகாத்தலின் மூலம் நிறைவு செய்வோம். இனியும் புதியதாய் முதியோர் இல்லங்கள் முளைக்காமல் தடுக்கப்பட வேண்டும். ஒரு நண்பனாய் உம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் பெற்றோரை அலைக்களியவிடாமல் என்னுடன் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக்கொள். மற்றைய நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். இனி வரும் காலங்களில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்குவோம்.
sethuezhil- புதிய மொட்டு
- Posts : 11
Points : 17
Join date : 24/11/2010
Age : 38
Location : கருவூர்/சென்னை
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
அருமையான பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
அருமையான, அக்கறையானப் பதிவு. எனக்கும் மிகப்பெரிய வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. எந்தக் காரணத்திற்காகவும் பெற்றோர்களை முதியோர், அனாதை இல்லத்தில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்திய அரசு,நீதிமன்றம் கூட கண்டிப்பாக ஏதாவது சட்டம் இயற்றியே ஆகவேண்டும் என்பது எனது சமூக அக்கறையாகவே இருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
நன்றி நண்பரே, சட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படுவது மேலும் பல இன்னல்களைத் தான் உண்டாக்கும், மனதளவில் நாம் மாறாதவரை மாற்றங்கள் சாத்தியமில்லை. மாற்றங்களுக்காய் விதை விதைப்போம், அது விருட்சமாய் வளர துணை நிற்போம்.
sethuezhil- புதிய மொட்டு
- Posts : 11
Points : 17
Join date : 24/11/2010
Age : 38
Location : கருவூர்/சென்னை
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
இல்லை நண்பரே சட்டம் இருந்தால் கண்டிப்பாகச் சகித்துக்கொண்டாவது முதியவர்களுக்கு அடைக்கலம் தருவார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
நல்ல கருத்து தான் நண்பரே, மனதளவில் நாம் நினைத்தாலே போதும் சட்டம் கூட அவசியம் இல்லை என்பது எனது கருத்து
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
நண்பர் ரமேஷ் அவர்களுக்கு. சகித்துக்கொண்டு செய்வதை விடக் கொடுமை ஏதும் இல்லை நண்பரே. நாம் குழந்தையாய் இருந்த போது, சகித்துக் கொண்டா நம்மை வளர்த்து இருப்பர். முதியவர்களும் குழந்தை தான், அவர்களை கவனித்துக் கொள்வது தானே நமது முதற்கடமை.
sethuezhil- புதிய மொட்டு
- Posts : 11
Points : 17
Join date : 24/11/2010
Age : 38
Location : கருவூர்/சென்னை
Re: எழுதுகிறேன் ஒரு கடிதம்.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்...
» என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
» கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
» தண்ணியோடு.......... எழுதுகிறேன்...
» உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
» என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்
» கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
» தண்ணியோடு.......... எழுதுகிறேன்...
» உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|