தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

5 posters

Go down

ஓணம் பண்டிகை  திருநாள் வாழ்த்துக்கள் Empty ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 09, 2011 9:32 am

ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]


இந்த பூமியில், தன்னால் எல்லாம் செய்ய முடியும் என, நினைக்கிறான் மனிதன்; ஆனால், இறை சக்தியின் முன், அவனது எண்ணங்கள் தவிடு பொடியாகி விடுகிறது. அப்படியானால், வாழ்வில் வெற்றி பெற என்ன செய்வது என்றால், இறைவனின் திருவடிகளில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் பணிந்து விடுவதுதான். முழு நம்பிக்கையுடன் இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவனுக்கு, வெற்றி மேல் வெற்றி தான்.மகாபலி சக்கரவர்த்தி, மலைநாட்டை ஆண்டு வந்தான். அவனைப் போல் நல்லவர் யாருமில்லை. என்ன கேட்டாலும் கொடுப்பான்; வாக்கு தவறாதவன். ஆனால், இந்த நற்குணங்களாலேயே, தனக்கு நிகர் யாருமில்லை என கர்வம் கொண்டான்.


இப்படி ஒரு நல்லவன், சொர்க்கத்தில் வாழ வேண்டும் என பெருமாள் நினைத்தார்; ஆனால், ஆணவம் பிடித்தவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அந்த ஆணவத்தை நீக்குவதும் பெருமாளால் மட்டுமே முடியும். எனவே, குள்ள வடிவில் அந்தணராக வடிவெடுத்து மகாபலியிடம் வந்தார். மூன்றடி நிலம் கேட்டார். “ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன்…’ என்று அப்போதும் அவன் ஆணவத்துடன் தான் பேசினான்.

பெருமாள், திரிவிக்ரமனாக வடிவெடுத்து, இரண்டடிகளால் உலகை அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்றார். அவன் தலையை நீட்டினான்; தலையில் திருவடி பதித்தார். அவனுக்கு, வைகுண்ட பதவி கிடைத்து விட்டது. அதை விட பெரிய பதவி உலகில் வேறு ஏதுமில்லை.

இப்படிப்பட்ட ஒரு நல்லவன், தங்களைக் காண ஆவணி திருவோண நாளில் வர வேண்டுமென மக்கள், பெருமாளிடம் வரம் கேட்டனர்; பெருமாளும் வரமளித்தார். அதனால் தான், தங்கள் மன்னனை வரவேற்க, சகல பதார்த்தங்களுடன் மலைநாட்டு மக்கள் தயாராக இருக்கின்றனர்.

பெருமாளின் திருவடி, மகிமையி<லும் மகிமை மிக்கது. அவர், கோகுலத்தில் கண்ணன் எனும் சிறுவனாக வந்த போது, கோபிகைகளிடம் வெண்ணெய் கேட்டு கெஞ்சுவார். “கண்ணா… நீ நர்த்தனமாடினால் வெண்ணெய் தருவோம்…’ என்பர்; அவனும், சலங்கை குலுங்க நாட்டியமாடுவான். அப்போது, அவனது திருவடிகளை ரசித்துப் பார்த்த கோபிகைகள் எல்லாருமே அவனோடு கலந்தனர்.
பெருமாள் கோவிலுக்குப் போனால், முதலில் அவரது திருவடியைத் தான் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு, அங்க தரிசனம் செய்து முகத்தைப் பார்க்க வேண்டும். பெருமாளின் திருமந்திரங்களிலும் அவரது திருவடியின் சிறப்பே சொல்லப்பட்டுள்ளது. “ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே…’ என்பது ஒரு மந்திரம்.

“சரணௌ’ என்றால், “இரண்டு திருவடிகள்’ – “பிரபத்யே’ என்றால், “சரணடைதல்’ – “நாராயணனின் திருவடிகளில் சரணடைகிறேன்…’ என்பது மந்திரத்தின் பொருள். இவ்வாறு, யார் ஒருவர் ஆத்மார்த்தமாக பெருமாளிடம் சரணடைகிறாரோ, அவருக்கு எந்த துன்பமும் வாழ்க்கையில் இல்லை.

தெய்வங்களுக்கு எத்தனையோ தலைகள், கைகள் என்றெல்லாம் பார்க்கிறோம்; ஆனால், திருவடிகள் மட்டும் இரண்டு தான் இருக்கும். இதில், எந்த தெய்வத்திற்கும் மாறுபாடில்லை. அது மட்டுமல்ல… நமக்கு இரண்டு கை. அந்தக் கைகளால் இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொள்வது எளிது. அதனால் தான், மகாபலி சக்கரவர்த்தி பெருமாளின் திருவடியை விரும்பி ஏற்றார்.

பெருமாள் உலகளந்த போது, அவரது பாதம் விண்ணை நோக்கிச் சென்றது; அது, பிரம்மாவின் பார்வையில் பட்டது. காணற்கரிய காட்சி தேடி வருகிறதே என்று மகிழ்ச்சியடைந்த பிரம்மா, அந்தப் பாதங்களை புனிதநீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர் அருவி போல் பூமியிலுள்ள அழகர் மலையில் (மதுரை) விழுந்து ஆறாய் ஓடியது. அதற்கு, “நூபுர கங்கை’ என பெயர் வைத்தனர். “நூபுரம்’ என்றால், “சிலம்பு!’ “சிலம்பணிந்த திருப்பாதங்களை அபிஷேகம் செய்ததால் ஏற்பட்ட ஆறு…’ என்று இதற்கு பொருள் கொள்ள வேண்டும். நூபுர கங்கையில் நீராடுவது பெரும் நன்மையைத் தரும்.

திருவோணத்தன்று, நம் இல்லங்களில் அழகான மலர்க்கோலம் இட வேண்டும். பல வகை பாயசம், உணவு தயாரித்து பெருமாளுக்கு நிவேதனம் செய்த பிறகு, குழந்தைகளோடு மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும். எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும், பெருமாளின் திருவடிகளை மனதார நினைத்த பிறகு துவங்க வேண்டும். அனைவருக்கும் பெருமாளின் அருளாசி கிடைக்கட்டும்.

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஓணம் பண்டிகை  திருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 09, 2011 1:03 pm

ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ஓணம் பண்டிகை  திருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

Post by பட்டாம்பூச்சி Fri Sep 09, 2011 3:37 pm

ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ஓணம் பண்டிகை  திருநாள் வாழ்த்துக்கள் Empty ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

Post by vickramhx111 Mon Aug 27, 2012 12:17 pm

ஓணம் பண்டிகை கொண்டாடும் நண்பர்களுக்கு என் "இனிய ஓணம் திருநாள்" நல் வாழ்த்துக்கள்.


[You must be registered and logged in to see this image.]
vickramhx111
vickramhx111
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 2
Join date : 27/08/2012
Age : 35
Location : Coimbatore

Back to top Go down

ஓணம் பண்டிகை  திருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

Post by அ.இராமநாதன் Mon Aug 27, 2012 12:24 pm

அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்..
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ஓணம் பண்டிகை  திருநாள் வாழ்த்துக்கள் Empty Re: ஓணம் பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum