தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எழிலி!

3 posters

Go down

எழிலி! Empty எழிலி!

Post by thaliranna Fri Sep 23, 2011 10:15 pm


எழிலி! பாப்பா மலர்!



[You must be registered and logged in to see this link.]






எழிலி!


[You must be registered and logged in to see this link.]
பவளபுரி
என்ற ஊரில் பொன்னன் என்ற ஏழை விவசாயி வசித்துவந்தான். அவனது ஒரேமகள்
எழிலி. எழிலி பெயருக்கேற்றபடி அழகானபெண். அழகிருக்கும் இடத்தில்
அறிவிருக்காது என்பர். ஆனால் அழகும் அறிவும் இணைந்த ஆரணங்கு எழிலி.

பொன்னனுக்கு
தெரிந்த ஒரே தொழில் விவசாயம். அவனுக்கு சிறிதளவு நிலம் இருந்தது. அந்த
நிலத்தில் பயிரிட்டு வாழ்க்கை நடத்திய அவனுக்கு கஷ்டகாலம் பிடித்துக்
கொண்டது. அந்த வருடம் மழைப் பொய்த்தது. கதிரவன் காய்ந்தான். பயிர்களும்
காய்ந்தன. ஏழை விவசாயி பொன்னனின் வயல்களும் காய்ந்து போயிற்று.

அவன்
சாப்பாட்டிற்கு என்ன செய்வான் பாவம்!அந்த ஊரில் பெரிய மனிதரான
மகேந்திரனிடம் சென்று கடனுதவி கேட்டான். பெரிய மனிதர் என்ற போர்வையில்
வாழும் மிருகம் மகேந்திரன். அவனுக்கு எழிலியை மணக்க வேண்டும் என்ற
விருப்பம் வெறியாக மாறிக்கொண்டு இருந்த நேரமது.

தூண்டிலில்
விழுந்த மீனை விட்டுவிடுவானா மகேந்திரன். பொன்னா! நீ நேர்மையானவன் தான்
எனக்குத் தெரியும் ஆனால் நான் அடமானம் இல்லாமல் கடன் தருவது இல்லையே?பாவம்
உன்னை போன்ற நல்லவர்களுக்குத்தான் கடவுள் சோதனை செய்கிறார். உனக்கு உதவ
வேணுமெனில் ஏதாவது அடமானம் வேண்டுமே! எனவே எதையாவது அடமானமாக எழுதிக் கொடு!
கடன் தருகிறேன் என்றான்.

பொன்னனுக்கு
அடமானம் வைக்கக் கூடிய பொருள் எது என்று தெரியவில்லை! ஐயா! எனக்கு
அடமானமாக வைக்கக் கூடிய பொருள் ஏதும் இல்லையே? என்றான். மகேந்திரன்
உன்னுடைய வீடு இருக்கிறதே என்றான்.சரி வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டு
கடன் தாருங்கள் என்றார்.

மகேந்திரனும்
அவ்வாறே வீட்டை அடமானம் வைத்துக்கொண்டு பணம் தந்தான். அந்த வருடமும்
கடவுள் பொன்னணுக்கு கை கொடுக்கவில்லை! மீண்டும் வானம் பொய்க்க வயல்
காய்ந்தது. பணம் கேட்டு மகேந்திரன் வந்தான். பொன்னன் வீட்டை தந்துவிட்டு
வெளியேறும் நிலை ஏற்பட்டது.

தன்னுடைய
வயலிலேயே சிறு குடிசை போட்டு வசிக்கலானான் பொன்னன். மீண்டும் பிழைப்புக்கு
என்ன செய்வது மகேந்திரனிடம் சென்றான். இச்சமயம் அடமானமாக எதை வைப்பாய்
என்றான் மகேந்திரன்.

வயலை
வைத்துக் கொண்டு பணம் தரும்படி கேட்டான் பொன்னன். மகேந்திரனும் கொடுத்து
அனுப்பினான். மறுநாள் பொன்னண் வயலில் ஏர் உழும் சமயம் மகேந்திரன் வந்து
தடுத்தான். என்னிடம் அடமானமாக வைத்த பொருள் இது. இதில் நீ ஏர் உழக் கூடாது.
இது இப்போது என் பொருள். என்று தடுத்தான்.

பொன்னனோ
ஐயா இது தான் என் ஜீவனமே! இதையும் தடுத்தால் நான் பிழைக்க என் செய்வேன்
என்றான். அதெல்லாம் எனக்குத்தெரியாது அடமானம் வைத்த பொருளில் அனுபவம் செய்ய
விடமுடியாது என்றான். ஆனால் உன் கஷ்டம் தீர வேறு வழி கூறுகிறேன். உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்துவிடு உன் கடன் எல்லாம் தீர்ந்துவிடும் உனக்கு மேலும் பணமும் கொடுக்கிறேன் என்றான்.

ஐயா தங்கள் வயது என்ன? என் மகள் வயது என்ன? அவள் சிறியவள் இதை தவிர வேறு வழியே இல்லையா? என்றான் பொன்னன்.
உன் மகளை திருமணம் செய்து கொடுத்தால் கொடு இல்லையேல் இடத்தை காலி பண்ணு என்றான் மகேந்திரன்.
அப்போது
அங்கு உடலெல்லாம் புண்ணாக தள்ளாடியபடி வயோதிகன் ஒருவன் வந்தான்.
இருவருக்கும் நடக்கும் விவாதத்தை கவனித்த அவன்,பொன்னனை அழைத்தான். ஐயா
உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்.என்றான். இருவரும் அவனை வினோதமாக
பார்த்தனர்.

நீ
யார் எங்கள் விஷயத்தில் குறுக்கிட என்றான் மகேந்திரன். நான் யாராக
இருந்தால் என்ன? உனக்குத் தேவை பணம் தானே பொன்னன் வாங்கிய பணம் எவ்வளவு
வட்டியோடு அதை திருப்பி தருகிறேன் என்றான் வயோதிகன்.

இந்த
எதிர்பாரா திருப்பத்தால் பேசமுடியாமல் பணத்தை வாங்கிக் கொண்டு இடத்தை காலி
செய்தான் கிழவன். பொன்னன் வயோதிகரின் கால்களில் விழுந்து ஐயா உங்களுக்கு
நான் என்ன கைமாறு செய்வேன் என்றான்.

பின்னர்
அந்த வயோதிகனை தன் இல்லத்தினுள் அழைத்துச் சென்றான். எழிலி வயோதிகணின்
புண்களுக்கு மருந்திட்டு விசிறியால் விசிறி உபசாரம் செய்து உணவிட்டாள்.
அப்போது பொன்னன் ஐயா தாங்கள் செய்த உதவியை மறக்கமுடியாது தாங்கள் யார்?
என்றான்.

நான்
யார் என்பதை இப்போது சொல்ல இயலாது. உன் மகள் செய்த பணிவிடைகள் எனக்கு
பிடித்து விட்டது எனக்கு கைமாறாக உன் மகளை திருமணம் செய்து கொடுக்கிறாயா?
என்றான் வயோதிகன்.

இது
என்ன புது பூதம் புறப்பட்டுவிட்டதே என்று பொன்னன் தயங்க அப்பா கவலைப்
படாதீர்கள் இவரை நான் மணந்து கொள்கிறேன். அந்த வஞ்சகனை விட இந்த வயோதிகர்
மேல்! மேலும் அழகு நிலையில்லாதது. அன்பே நிலையானது நான் மணப்பூர்வமாக இவரை
மணக்க சம்மதிக்கிறேன் என்றாள்.

இருவருக்கும்
திருமணம் ஒரு கோயிலில் எளிமையாக முடித்து வழி அனுப்பினான் பொன்னன். இதை
கேள்விப் பட்ட மகேந்திரன் என்னை மணக்காமல் அந்த கிழவனையா மணந்தாள் இப்போதே
போய் அவனை அடித்துப் போட்டு அவளை தூக்கி வருகிறேன் பார் என்று கிளம்பினான்.

எழிலியும்
முதியவரும் சென்ற பாதையில் குறுக்கிட்டான் மகேந்திரன். ஏய் கிழவா அவளை
மரியாதையாக என்னிடம் ஒப்படைத்தால் உயிர் பிழைப்பாய் என்று மிரட்டினான்.
இவள் என் மணைவி முடிந்தால் தொட்டுப் பார் என்று வீரம் பொங்க கூறினான்
வயோதிகண். நீ என்ன ஒப்படைப்பது நானே எடுத்து கொள்கிறேன் என்று எழிலியின்
கரம் பிடித்து இழுத்தான் மகேந்திரன். மறுகணம் அவன் தாடையை பலமாக தாக்கியது
ஒரு கரம். அது வயோதிகணின் கரம் தான். அவன் இப்போது வாலிபனாக
மாறியிருந்தான்.

அவனது
மந்திர உச்சரிப்பில் சேனைகள் குவிய மகேந்திரன் திக்கு முக்காடிப் போனான். ஆ
இதென்ன மாயம் என்று தலை தெறிக்க ஓடிப் போனான். எழிலி வியந்து நிற்க எழிலி
திகைக்காதே! நான் வனங்களின் அரசன் வனமாலிகாவின் புதல்வன் முகிலன். ஒரு
சாபத்தால் கிழவனானேன். எவள் ஒருவள் என்னை மணப்பூர்வமாக மணக்க
சம்மதிக்கிறாளோ அப்போதுதான் என் சாபம் விலகும். உன்னை மணக்க ஆசைப் பட்டேன்.
நீயும் என்னை மணப்பூர்வமாக விரும்பியதால் இந்த சாபம் நீங்கியது என்றான்.
உன் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. என் சாபமும் விலகியது
என்றான் முகிலன்.

அதன் பின் முகிலனும் எழிலியும் பல்லாண்டு காலம் சுகமாக வாழ்ந்தனர்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

எழிலி! Empty Re: எழிலி!

Post by ARR Fri Sep 23, 2011 10:36 pm

விட்டலாச்‌சார்யா மேட்டர்..!
ARR
ARR
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 45
Location : மன்னார்குடி

Back to top Go down

எழிலி! Empty Re: எழிலி!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 23, 2011 10:41 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எழிலி! Empty Re: எழிலி!

Post by thaliranna Sat Sep 24, 2011 9:23 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Yesterday at 9:06 pm
விட்டலாச்‌சார்யா மேட்டர்..!

இது குழந்தைகளுக்கான கதை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

எழிலி! Empty Re: எழிலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum